Jump to content

புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Thangadurai’s Tharkolai Jokes Book released at Singapore

புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு.

கலக்கப்போவது யாரு புகழ் புளியந்தோப்பு தங்கதுரை தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.

புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்ற ஒரு அர்த்தம் புரியாத ஜோக்கை சொல்லி வேற லெவலில் ரீச் ஆன காமெடி நடிகர் யார் தெரியுமா. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவின், முதல் சீசன் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமாகி இன்று வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாக மாறிய டைகர் கார்டன் தங்கதுரை தான் அது.

இவர் சென்னை வாசி, அதுவும் வடசென்னை வாசி என்பதால் கானா பாடல்கள் பாடுவதிலும், ஸ்டாண்டப் காமெடி செய்வதிலும் திறமையானவர். அதிலும் இவரும் கிரியும் சேர்ந்து கொண்டு, காந்திமதி, சிவகுமார், வீராசாமி, நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் குரலில் மிமிக்ரி செய்வதற்கு பாடம் நடத்தும் காமெடி காட்சிகளை இன்றைக்கும் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும்.

விஸ்வாசம்னா தூக்குதுரை காமெடினா தங்கதுரை என எதுகை மோனை காமெடி மூலம் அதிகம் பிரபலமானவர் தங்கதுரை. சின்னத் திரையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு வெள்ளித் திரையிலும் கிடைத்தது. இவர் சொல்லிய புளியமரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே என்ற காமெடி ஐடி கம்பெனி முதல் நைட்டி கம்பெனி வரை இளைஞர்களிடம் பரவி இன்று பட்டி தொட்டி எங்கும் வேடிக்கையாக சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

எதுகை மோனையில் வசனம் பேசி நம்மை கலக்குபவர் T.R. அவரின் ஸ்டைலில் காமெடி செய்து மக்களின் பேராதரவை பெற்றவர் தங்கதுரை. விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி இன்று வெள்ளி திரையில் வெற்றி நடை போட்டு வரும் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் திரைப்படங்களில் ஏற்கனவே தங்கதுரை நடித்துவிட்டார்.

விஜய் டிவியில் எந்த ஒரு காமெடி ஷோ என்றாலும் அதில் தங்கதுரை நிச்சயம் ஆஜராவார். இவர் சொல்லிய ஜோக்குகள், எதுகை மோனை காமெடிகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வந்து பிரபலமடைந்தன. அதுமட்டுமில்லாமல் இவருடைய ஜோக்குகள் காமெடி பஞ்ச்கள் டிக்டாக்கில் இன்றும் பல மில்லியன் மக்களால் நடிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

சிலர் ஜோக் சொன்னால் வெறுப்பு ஏற்படும். ஆனால் இவர் ஜோக் சொன்னால் சிரிப்பு ஏற்படும். இவர் ஜோக் சொல்லும் விதம், உடல்மொழி ரசிக்கும்படியாக இருக்கும் என்று நீயா நானா கோபிநாத் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். ஆதி காலத்து ஜோக்குகளையும் இந்த காலத்து மக்களுக்கு ஏற்றார்போல் சொல்வதில் இவர் வல்லவர். இதனால் இவரை நிகழ்ச்சியில் பழைய ஜோக் தங்கதுரை என்று அழைப்பார்கள்.

தங்கதுரையின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான். கானா பாடல் பாடி வந்த இவர் தனக்குள் இருக்கும் திறமையை அறிந்து, அதை மேலும் வளர்த்துக் கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள தங்கதுரை மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம். இந்த ஆண்டுக்கான விஜய் டிவியின் சிறந்த காமெடியன் விருதையும் பெற்றுள்ளார் தங்கதுரை

Thangadurai’s Tharkolai Jokes Book released at Singapore

இவர் தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் 'தற்கொலை ஜோக்குகள்' என்ற புத்தகமாக சிங்கப்பூரில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை நடிகை வாணிபோஜன் வெளியிட்டார். பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.

இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய தங்கதுரை, இதனை படித்தால் தற்கொலை பண்ற எண்ணமே தோன்றாது ஏனென்றால் புத்தகத்தை எழுதிய நானே உயிரோடு இருக்கும்போது நம்ம ஏன் சாகணும் என்று தோணும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் என அனைவரும் படிக்கும் வகையில் எளியமுறையில் புத்தகத்தை எழுதியுள்ளார் தங்கத்துரை இந்த புத்தகம் தமிழ் மட்டும் தங்கிலீஷில் அச்சடிக்கப்பட்டு உள்ளது

சமீபத்தில் வெளிவந்த A1, ஜாக்பாட், ஜீவி, அண்ணனுக்கு ஜே , பப்பி ஆகிய படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் தங்கதுரை. தற்போது யோகி பாபுவுடன் பன்னிகுட்டி, பார்ட்னர், டிக்கிலோனா மற்றும் ரியோ, ஜிவி பிரகாஷ் படங்களில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை என்பது அவ்வளவு எளிதான ஒரு கலை அல்ல. ஒருவரை எளிதில் அழவைக்க முடியும். ஆனால் சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமானது. ஒருவர் முகத்தில் இருக்கும் இறுக்கத்தையும், மனதில் இருக்கும் கவலையையும் மறக்கடித்து அவர்களின் மனதை இளகவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் என்றும் போற்றப்பட வேண்டும். அந்த வரிசையில் டைகர் கார்டன் தங்கதுரையும் இணைந்ததற்கு வாழ்த்துக்கள், சினிமா இயக்குநர்கள் தங்கத்துரையின் நகைச்சுவையை பயன்படுத்திக்கொண்டால் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.filmibeat.com/news/thangadurai-s-tharkolai-jokes-book-released-at-singapore-064495.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.