Jump to content

மொழி-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


மொழி-பா.உதயன் 


காற்றுக்கும் மொழி உண்டு 
கடலுக்கும் மொழி உண்டு 
காலையில் தினம் பாடும் 
பறவைக்கும் மொழி உண்டு 

மலை கூடி மொழி பேசும் 
மௌனமாய் கவி பாடும் 
அழகான நதி வந்து 
அதனோடு கதை பேசும் 

அமுதான தமிழ் போல 
அந்த குருவிக்கும் மொழி உண்டு 
மலர் கூட மொழி பேசும் 
மனதோடு இசை பாடும் 

அழகான கிளி எல்லாம் 
அமுதமாய் தமிழ் பேசும் 
அருகோடு குயில் வந்து 
அதனோடு சுரம் பாடும் 

மழை கூடி தினம் வந்து 
மலரோடு கதை பேசும் 
இரவோடு இது பேசும் 
மொழி எல்லாம் தனி ராகம் 

சிற்பியின் உளியோடு 
சிலை கூட மொழி பேசும் 
அவனோடு தனியாக 
அது பேசும் மொழி வேறு 

அழகான பாவங்கள் 
அசைந்து ஆடும் ராகங்கள் 
மனதோடு அது பேசும் 
மனிதர்க்கு மட்டும் தான் 
மொழி என்று எவன் சொன்னான் 

இயற்கையின் மொழி எல்லாம் 
இறைவனின் படைப்பாகும் 
இது பேசும் மொழி எல்லாம் 
இதயத்தின் கனவாகும் .

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, uthayakumar said:

அமுதான தமிழ் போல 
அந்த குருவிக்கும் மொழி உண்டு 
மலர் கூட மொழி பேசும் 
மனதோடு இசை பாடும் 

உதயன்,

உங்கள் கவிதை பேசும் தமிழ் அழகு. 

3 hours ago, uthayakumar said:

சிற்பியின் உளியோடு 
சிலை கூட மொழி பேசும் 
அவனோடு தனியாக 
அது பேசும் மொழி வேறு 

அழகான பாவங்கள் 
அசைந்து ஆடும் ராகங்கள் 
மனதோடு அது பேசும் 
மனிதர்க்கு மட்டும் தான் 
மொழி என்று எவன் சொன்னான் 

கலைகளை ரசிப்பவர் நீங்கள் என உரைக்கும் இந்த வரிகள் அழகு. 👍😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கையும் கலையும் இல்லாமல் ஏது வாழ்வு மல்லிகை வாசம் 
அருமையான கருத்துக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 2:18 PM, uthayakumar said:

மனிதர்க்கு மட்டும் தான் 
மொழி என்று எவன் சொன்னான் 

அருமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Gowin said:

அருமை!

நன்றி Gowin.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான கவிதை உதயன். நாம் வளர்க்கும் விலங்குகள், தாவரங்கள் கூட எம்மோடு உரையாட முயல்கின்றன எமக்குத்தான் அதையெல்லாம் கவனிக்க நேரம் இருப்பதில்லை.......!   🦜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அசத்தலான கவிதை உதயன். நாம் வளர்க்கும் விலங்குகள், தாவரங்கள் கூட எம்மோடு உரையாட முயல்கின்றன எமக்குத்தான் அதையெல்லாம் கவனிக்க நேரம் இருப்பதில்லை.......!   🦜

இயற்கையோடு எப்பவுமே நீங்கள் கதைத்து கொண்டு தான் இருக்கிறீர் சுவி.
அழகை பார்க்கும் போது எல்லாம் அதனோடு காதல் கொள்கிறான் கதைக்கின்றான் மனிதன் நன்றி சுவி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.