Jump to content

கியார் புயல்: கரை திரும்பாத 120 தமிழக மீனவர்கள் - கலக்கத்தில் உறவினர்கள்


Recommended Posts

ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர் குடும்பத்தினர்.

அரபிக்கடலில் புயல்சின்னம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பல விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத், கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரைசேர்ந்துவிட்டனர்.

கரைதிரும்பாத 120 மீன்வர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியாத நிலையில், அவர்களை தேடுவதற்காக 'ஏரியல் சர்வே' எனப்படும் வான்வழித் தேடல் செய்து கண்டறியவேண்டும் என தூத்தூர் பகுதி பங்குதந்தைகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளரான பங்குதந்தை சர்ச்சில் மீனவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான பகுதியை ஈட்டி தருகிறார்கள் என்றாலும், அவர்களின் நலனில் மத்திய மாநில அரசாங்கங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுகிறார்.

''கியார் புயலுக்கு முன்பே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் இதுவரை கரை சேராதது மீனவர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கியார் புயலின் தாக்கத்தில் மீனவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியப்படாத வகையில், தற்போது ஏற்படக்கூடிய புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் மீனவர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து வான்வழி அறிவிப்பை ஆழ்கடலில் உள்ள இந்த ஆறு விசைப்படகு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் மீனவர்கள் கரை சேர்வதற்கு இயலாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக இருந்தால் அவர்களை உடனடியாக மீட்டு கரை சேர்க்க வேண்டும், ''என இந்திய மீன்வள துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சர், இந்திய கடலோர காவல்படை மேற்கு மண்டல அதிகாரி அவர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக சர்ச்சில் கூறினார்.

''கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 25 மீனவர்கள் கடலில் காணாமல் போகிறார்கள். ஒரு சிலர் கடலில் விபத்து ஏற்பட்டு இறந்துபோகிறார்கள். ஒருசிலர் இயற்கை சீற்றம் அல்லது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடுகிறார்கள். இவர்களை மீட்பதற்கு முக்கியதேவை நவீன தொலைத்தொடர்பு மையம். இதனை கன்னியாகுமரியில் அமைத்தால், மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்கிறார் சர்ச்சில்.

இதனிடையே, தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது என்பதால், புயல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவித்துள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மீட்கும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன் இதுவரை இரண்டு படகுகளில் உள்ள மீனவர்களோடு பேசி அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். ''தகவல் அளிக்கப்பட்ட மூன்று படகுகளில் உள்ள மீன்வர்களை தேடி, தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறோம். காணாமல் போனவர்கள் எத்தனை நபர்கள் என்பது தெளிவாக தெரியாத நிலையில் இருக்கிறோம். தகவல் தரும் நபர்களை தேட மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள்,'' என்றார்.

மீனவளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது ஆழ்கடல் மீனவர்களுக்கு அரசு அளித்துள்ள சாட்டிலைட் ஃபோனை பயன்படுத்தி இரண்டு படகுகளிலிருந்த மீனவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது என தெரிவித்தார். மீனவர்கள் காணாமல்போனால் அவர்களை தொடர்புகொள்ள நவீனவசதிகள் கொண்ட மையத்தை கன்னியாகுமரியில் அமைக்கவேண்டும் என கோருவது குறித்து கேட்டபோது, ''கன்னியாகுமரியில் மையம் அமைக்கவேண்டும் என்பதை ஆலோசித்துவருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் அதிகம் உள்ளதால், அங்கு மையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனை விரைவில் பரிசீலிப்போம்,'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-50235059

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.