Jump to content

தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்காதவர்களை நிராகரியுங்கள் – சிவாஜி


Recommended Posts

M.K.Sivajilingam.jpg

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா்.

மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும்  நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளா்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளா் ஒருவரை நிறுத்துவது தொடா்பாக பேசினாா்கள்.

ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்த தோ்தலில் போட்டியிடுகிறேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே.

இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்

 

http://athavannews.com/தமிழர்களின்-அடிப்படை-அரச/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு எங்கேயோ...உதைக்கிறதே?

உதாரணமாக உங்களுக்கு 500,000 தமிழ் வாக்குக்கள் விழுகின்றன என்று ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம்!

இந்த வாக்குகளை உங்களூக்குப் போடாமல்...இருந்தால்...அனேகமானவர்கள்...சஜித்துக்குத் தான் போட்டிருப்பார்கள்!

சிங்கள ஜனநாயகத்தில்.....மூன்று ..நான்கு த்டவைகள் வாக்குகள் எண்னப்பட்ட பின்னர்...கோத்தபாயா 480,000 வாக்குகளினால் வெற்றி பெறும் நிலை வருமாயின்....அதன் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

உங்களூக்கு விழும் வாக்குகளை உலகத்துக்குக் காட்டி....அதனால் என்ன பயன் எமது மக்களுக்கு வரப் போகின்றது?

Link to comment
Share on other sites

நானும் மகிந்த & கோவிடம் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு ஜனாதிபதித்தேர்தலில் தனித்து களமிறங்கினால் எனக்கும் வாக்குப்போட பலர் முன்வருவார்கள். 😂

Link to comment
Share on other sites

6 hours ago, புங்கையூரன் said:

உங்களூக்கு விழும் வாக்குகளை உலகத்துக்குக் காட்டி....அதனால் என்ன பயன் எமது மக்களுக்கு வரப் போகின்றது?

நியாயமான கேள்வி. அவர் தரும் பதில் இது : "இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்".

சிவாஜி விலகி, அந்த வாக்குகளால் சஜித் வென்று விட்டால் கோத்தாவின் ஆட்சியை என்ன வித்தியாசமாக இருக்கும் என்பதும் ஒரு ஊகமே. 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

நியாயமான கேள்வி. அவர் தரும் பதில் இது : "இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்".

அவர்களை நிராகரிக்கிறோம் என சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் காட்டி அதனால் என்ன பயன் தமிழர்களுக்கு கிடைக்கும்?

4 hours ago, ampanai said:

சிவாஜி விலகி, அந்த வாக்குகளால் சஜித் வென்று விட்டால் கோத்தாவின் ஆட்சியை என்ன வித்தியாசமாக இருக்கும் என்பதும் ஒரு ஊகமே. 

கோத்தாவின் ஆட்சியை விட சஜித்தின் ஆட்சியில் ஓரளவு மக்கள் மூச்சு விடுவார்கள்.

கடந்த கால மகிந்த & கோவின் செயற்பாடுகளிலிருந்து தமிழர்கள் சிலர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை.

Link to comment
Share on other sites

ஒரு முறை அல்ல பல முறை பட்டும் திருந்தாத ஒரு இனம் என்றால் நாங்கள் தான் என மீண்டும் மீண்டும் உலகுக்கு காட்ட சிவாஜி சொல்கின்றார். 

விடுதலைப் புலிகளின், இயக்கங்களின் வளர்ச்சியும் போராட்டமும் சொல்லாத ஒன்றை உலகுக்கு காட்ட எத்தனை முறை இப்படி செய்ய போகின்றாராம்?

கோத்தா + மகிந்த  + சவீந்திர சில்வா வின் கூட்டின் விளைவை நேரிடையாக அனுபவித்தவற்றை விட மோசமாக இன்னொரு கூட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவினர் என நான் எண்ணவில்லை. சஜித்தின் வெற்றி தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா என கேட்டால், இல்லை என்பேன். அதே நேரம் கோத்தாவின் வெற்றியால் தமிழ் மக்கள் மீண்டும் மிக மோசமான நிலைக்கு செல்வார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. சனனாயக ரீதியிலான போராட்டங்களுக்கான எல்லா வெளிகளையும் அடைத்து விடக்கூடிய மோசமான ஒரு கூட்டு கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வாவின் கூட்டு

(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யாழ் இணையத்தின் கருத்து அல்ல)

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

அவர்களை நிராகரிக்கிறோம் என சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் காட்டி அதனால் என்ன பயன் தமிழர்களுக்கு கிடைக்கும்?

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்க்கும் : 'பாருங்கள், தமிழர்கள் ஒற்றுமையாக இந்த தீவில் வாழ விரும்புகிறார்கள். இனப்பிரச்சனையும் இல்லை, மொழி பிரச்சனையும் இல்லை, போர்குற்றமும் இல்லை' 

Link to comment
Share on other sites

37 minutes ago, ampanai said:

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்க்கும் : 'பாருங்கள், தமிழர்கள் ஒற்றுமையாக இந்த தீவில் வாழ விரும்புகிறார்கள். இனப்பிரச்சனையும் இல்லை, மொழி பிரச்சனையும் இல்லை, போர்குற்றமும் இல்லை' 

சிங்களம் இப்படி கூறினாலும் சர்வதேசத்துக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியும்.

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்ப்பதால் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

சிவாஜிலிங்கத்துக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. சிறு தொகை வாக்குகளை பிரிப்பார். அதனால் நட்டமே தவிர இலாபம் எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல போராளி இயக்கங்களின் இடையே தமிழரின் இராணுவ பலம் சிதறிக்கிடந்ததும் ஆயுதப்போரில் நாங்கள்  தோல்வியடைய காரணமானது. அது போலவே இன்று எமது வாக்குப் பலமும் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குள் பிரிந்து அந்த கட்சிகளின் விருப்பின்படி அவை அனைத்தும் இனவாதத்தை முன்னிறுத்தி  அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களையே சென்றடையப்போகிறது.

சிவாஜிலிங்கம் அதிபர் தேர்தலில் களமிறங்கி நிற்பதை நாம் பல்வேறு கோணங்களில் நோக்கமுடியும். அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் சென்று சிவாஜி சொல்வதில் என்ன உண்மையை இருக்கிறது அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்  என்பதையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எதிர்வரும் அதிபர் தேர்தலை முற்று முழுதாக பகிஸ்கரியுங்கள் என்று அரசியல் நாகரிகமுள்ள எந்த ஒரு தமிழ் கட்சியும் மக்களுக்கு அறிவுறுத்தப்போவதில்லை. சரி ஒட்டு மொத்த தமிழரும் தேர்தலை புறக்கணித்து பகிஷ்கரிப்பார்கள் என்றே வைத்துகொண்டலும் அப்போதும் கூட தமிழ் மக்களுக்கு என்ன நன்மையா நடக்கும்?

தமிழரின் வாக்குகள் கிடைத்தால் என்ன விட்டால் என்ன ஒரு வேட்பாளர், இந்த முறையும் தனது இனத்தின் அபிலாசைகளை மட்டுமே மதிக்கும் ஒரு சிங்களவர்தான் வெல்லப் போகிறார். அவரிடமும்  எமது அரசியல்வாதிகளை அனுப்பி பழைய குருடி கதவை திறவடி என்று பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்தத்தான் போகிறோம்.

எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளில் நாங்கள் பங்கெடுக்கும் போது சிங்கள தலைமைகளும் உலக நாடுகளும் தமிழ் தரப்பை மதித்து உண்மையான ஈடுபாட்டுடன் நடந்து கொள்ளவேண்டுமாயின் தமிழரின்  அரசியல் பலம் என்ன என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். அதை எப்படி நிரூபிப்பது?

அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை வீணடிக்காமல் சிவாஜிக்கே போடவேண்டும். இப்படி செய்வது அவரை அதிபர் தேர்தலில் வெற்றியடைய செய்வதற்காக அல்ல. அது முடியக்கூடிய காரியமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் வேறு எதற்காக?

தமிழரின் ஒட்டுமொத்த வாக்கு பலம் என்ன என்பதை காட்ட! உரிமை போராட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல! ஓன்று திரண்ட இந்த வாக்குப் பலம் தான் ஈழத்தமிழரின் அதி உச்ச அரசியல் சக்தி. இதுதான் ஈழத்தமிழனின் பேரம்பேசும் அரசியல் பண்டம். இதன் பின்னணியில் தான் எதிர்காலத்தில் எந்த தீர்வுத்திட்டமும் வரையறை செய்யப்படும். இது நாடு முழுவதற்குமான தேர்தல் இதில் தான் எமது பலத்தை ஒன்றிணைந்து காட்ட முடியும்.

இந்த அதிபர் தேர்தலை நாங்கள் எமது அரசியல் பலத்தை நிரூபிக்கும்  ஒரு களமாக மாற்ற தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி அணிதிரளவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் அதிபர் தேர்தலில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் எமது சொல் உள்வாங்கப்படும்.

இன்று எமது அரசியல் பலம் என்ன என்பது எவருக்குமே தெரியாது. தமிழர்கள் அனைவரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறார்களா என்பதும் தெரியாது. வெளியில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதில்லை. எமது இனத்துக்குள்ளும் பொது மட்டங்களில்  ஜனங்களுக்கு வேண்டிய புரிதல் இல்லை. கடந்த காலங்களில்  சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எமது மக்களை ஒரு வித அரசியல் விரக்தி நிலைக்கு செல்ல தூண்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சிங்களவன் தந்தாலும் சரி தராமல் போனாலும் சரி உள்ளதை வைத்துகொண்டு வாழ்ந்திட்டு போவோம் என்ற எண்ணம் பாமர மக்களின் கருத்தாக வெளிப்பட தொடங்கிவிட்டது. இது ஒருவித விரக்தியின் வெளிப்பாடு. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த அதிபர் தேர்தலில் செய்யப்போகும் மந்திர மஜா ஜாலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

18 minutes ago, vanangaamudi said:

பல போராளி இயக்கங்களின் இடையே தமிழரின் இராணுவ பலம் சிதறிக்கிடந்ததும் ஆயுதப்போரில் நாங்கள்  தோல்வியடைய காரணமானது. அது போலவே இன்று எமது வாக்குப் பலமும் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குள் பிரிந்து அந்த கட்சிகளின் விருப்பின்படி அவை அனைத்தும் இனவாதத்தை முன்னிறுத்தி  அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களையே சென்றடையப்போகிறது.

சிவாஜிலிங்கம் அதிபர் தேர்தலில் களமிறங்கி நிற்பதை நாம் பல்வேறு கோணங்களில் நோக்கமுடியும். அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் சென்று சிவாஜி சொல்வதில் என்ன உண்மையை இருக்கிறது அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்  என்பதையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எதிர்வரும் அதிபர் தேர்தலை முற்று முழுதாக பகிஸ்கரியுங்கள் என்று அரசியல் நாகரிகமுள்ள எந்த ஒரு தமிழ் கட்சியும் மக்களுக்கு அறிவுறுத்தப்போவதில்லை. சரி ஒட்டு மொத்த தமிழரும் தேர்தலை புறக்கணித்து பகிஷ்கரிப்பார்கள் என்றே வைத்துகொண்டலும் அப்போதும் கூட தமிழ் மக்களுக்கு என்ன நன்மையா நடக்கும்?

தமிழரின் வாக்குகள் கிடைத்தால் என்ன விட்டால் என்ன ஒரு வேட்பாளர், இந்த முறையும் தனது இனத்தின் அபிலாசைகளை மட்டுமே மதிக்கும் ஒரு சிங்களவர்தான் வெல்லப் போகிறார். அவரிடமும்  எமது அரசியல்வாதிகளை அனுப்பி பழைய குருடி கதவை திறவடி என்று பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்தத்தான் போகிறோம்.

எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளில் நாங்கள் பங்கெடுக்கும் போது சிங்கள தலைமைகளும் உலக நாடுகளும் தமிழ் தரப்பை மதித்து உண்மையான ஈடுபாட்டுடன் நடந்து கொள்ளவேண்டுமாயின் தமிழரின்  அரசியல் பலம் என்ன என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். அதை எப்படி நிரூபிப்பது?

அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை வீணடிக்காமல் சிவாஜிக்கே போடவேண்டும். இப்படி செய்வது அவரை அதிபர் தேர்தலில் வெற்றியடைய செய்வதற்காக அல்ல. அது முடியக்கூடிய காரியமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் வேறு எதற்காக?

தமிழரின் ஒட்டுமொத்த வாக்கு பலம் என்ன என்பதை காட்ட! உரிமை போராட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல! ஓன்று திரண்ட இந்த வாக்குப் பலம் தான் ஈழத்தமிழரின் அதி உச்ச அரசியல் சக்தி. இதுதான் ஈழத்தமிழனின் பேரம்பேசும் அரசியல் பண்டம். இதன் பின்னணியில் தான் எதிர்காலத்தில் எந்த தீர்வுத்திட்டமும் வரையறை செய்யப்படும். இது நாடு முழுவதற்குமான தேர்தல் இதில் தான் எமது பலத்தை ஒன்றிணைந்து காட்ட முடியும்.

இந்த அதிபர் தேர்தலை நாங்கள் எமது அரசியல் பலத்தை நிரூபிக்கும்  ஒரு களமாக மாற்ற தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி அணிதிரளவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் அதிபர் தேர்தலில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் எமது சொல் உள்வாங்கப்படும்.

இன்று எமது அரசியல் பலம் என்ன என்பது எவருக்குமே தெரியாது. தமிழர்கள் அனைவரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறார்களா என்பதும் தெரியாது. வெளியில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதில்லை. எமது இனத்துக்குள்ளும் பொது மட்டங்களில்  ஜனங்களுக்கு வேண்டிய புரிதல் இல்லை. கடந்த காலங்களில்  சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எமது மக்களை ஒரு வித அரசியல் விரக்தி நிலைக்கு செல்ல தூண்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சிங்களவன் தந்தாலும் சரி தராமல் போனாலும் சரி உள்ளதை வைத்துகொண்டு வாழ்ந்திட்டு போவோம் என்ற எண்ணம் பாமர மக்களின் கருத்தாக வெளிப்பட தொடங்கிவிட்டது. இது ஒருவித விரக்தியின் வெளிப்பாடு. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த அதிபர் தேர்தலில் செய்யப்போகும் மந்திர மஜா ஜாலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

நல்ல கருத்துகள் வணங்கா முடி

நீங்கள் சொல்வதைப் போல தமிழ் மக்கள் நடந்து கொண்டால்

1. கோத்தா கண்டிப்பாக முதல் சுற்றிலேயே வென்று விடுவார்
2. உலகம் தமிழ் மக்கள் ஒரு அணியில் நின்று விட்டனர் என குறிப்பெடுக்கும்

அதன் பின்?

என் அறிவின் படி இவை நிகழக்கூடிய சாத்தியங்கள் தான் அதிகம்

1. கோத்தா வெல்லுவார்.


2. சீனாவையும் பகைக்காது அமெரிக்க இந்திய நலன்களையும் முன்னெடுத்துச் செல்வார்.

3. கடந்த 5 வருடங்களாக (2015 இன் பின்) இலங்கையில் உள்ல தமிழ் மக்கள் மத்தியில் உருவான சனாயக ரீதியிலான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்கியவர்கள், துணிச்சலான எழுத்தாளார்கள்/ பத்திரிகையாளர்கள் போன்றோ அடக்கப்படுவர் மற்றும் காணாமல் போகடிக்கபடுவர்

4. கோத்தாவால் திட்டமிடப்பட்டு பின் மகிந்தவின் தோல்வியால் கிடப்பில் போடப்பட்ட A9 வீதிக்கு சமாந்தரமாக வன்னியில் உருவாக்கப்பட இருந்த சிங்கள குடியேற்ற திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

5. கிடப்பில் போடப்பட்ட பலாலியைச் சுற்றி குடியமர்த்த திட்டமிடப்பட்டு இருந்த இராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்படும்.

6. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் ஒரு அங்குலம் தானும் விடுவிக்கபட மாட்டாது என்பதுடன் மேலும் கையகப்படுத்தப்படும்.

8. கருணா / பிள்ளையானின் தொடர்பின் மூலம் கிழக்கில் மேலும் தமிழர் முஸ்லிம் உறவு சீரழிக்கப்பட்டு ஒன்ரை ஒன்று போட்டுத் தள்ளும் நிலைக்கு செல்லும்.

7. மாவீரர் தினம், மே18 போன்ற நிகழ்வு அடியோடு தடை செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவர்.

8. தென்னிலங்கையில் மேலும் பத்திரைகையாளர்கள்/ மனித நேயமுள்ளவர்கள் விரட்டப்படுவர்

இவை எல்லாம் நடக்கும் போது வழக்கம் போல சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருக்கும். தமிழ் தலைமைகள் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும். தமிழர்கள் அரசியல் உரிமைகளும் இல்லாமல், பொருளாதார அபிவிருத்தியும் இல்லாமல் மேலும் சீரழிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நல்ல கருத்துகள் வணங்கா முடி

நீங்கள் சொல்வதைப் போல தமிழ் மக்கள் நடந்து கொண்டால்

1. கோத்தா கண்டிப்பாக முதல் சுற்றிலேயே வென்று விடுவார்
2. உலகம் தமிழ் மக்கள் ஒரு அணியில் நின்று விட்டனர் என குறிப்பெடுக்கும்

அதன் பின்?

என் அறிவின் படி இவை நிகழக்கூடிய சாத்தியங்கள் தான் அதிகம்

1. கோத்தா வெல்லுவார்
2. சீனாவையும் பகைக்காது அமெரிக்க இந்திய நலன்களையும் முன்னெடுத்துச் செல்வார்
3. கடந்த 5 வருடங்களாக (2015 இன் பின்) இலங்கையில் உள்ல தமிழ் மக்கள் மத்தியில் உருவான சனாயக ரீதியிலான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்கியவர்கள், துணிச்சலான எழுத்தாளார்கள்/ பத்திரிகையாளர்கள் போன்றோ அடக்கப்படுவர் மற்றும் காணாமல் போகடிக்கபடுவர்
4. கோத்தாவால் திட்டமிடப்பட்டு பின் மகிந்தவின் தோல்வியால் கிடப்பில் போடப்பட்ட A9 வீதிக்கு சமாந்தரமாக வன்னியில் உருவாக்கப்பட இருந்த சிங்கள குடியேற்ற திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
5. கிடப்பில் போடப்பட்ட பலாலியைச் சுற்றி குடியமர்த்த திட்டமிடப்பட்டு இருந்த இராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்படும்.
6. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் ஒரு அங்குலம் தானும் விடுவிக்கபட மாட்டாது என்பதுடன் மேலும் கையகப்படுத்தப்படும்.
7. மாவீரர் தினம், மே18 போன்ற நிகழ்வு அடியோடு தடை செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவர்
8. தென்னிலங்கையில் மேலும் பத்திரைகையாளர்கள்/ மனித நேயமுள்ளவர்கள் விரட்டப்படுவர்

இவை எல்லாம் நடக்கும் போது வழக்கம் போல சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருக்கும். தமிழ் தலைமைகள் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும். தமிழர்கள் அரசியல் உரிமைகளும் இல்லாமல், பொருளாதார அபிவிருத்தியும் இல்லாமல் மேலும் சீரழிவர்.

பெரிய வீட்டுடன் பகைக்காது சின்ன வீடு வைத்தருக்க நான் ஆசைப்படலாம் 
சின்னவீடு வைத்தருக்கும் என்னை எந்த வீட்டில் வைப்பது என்று முடிவெடுப்பது 
பெரிய வீடுதான். அப்படி ஒரு நிலையில் என்னை வைத்திருப்பதில் என்ன லாபம் என்றுதான் 
சின்ன வீடும் யோசிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்திற்கு வாக்குப்போட்டுத்தான் தமிழர்கள் தமது அரசியல் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும் என்றால் அதைப் போல பெரிய பகடி ஒன்றுமில்லை.

அரசியல் கருத்தாக்கிகள் நிலாந்தன் போன்றோர் தமிழர் தரப்பு ஒற்றுமையாக தமது அரசியல் பலத்தைக் காட்ட ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிற்கவைக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் தமிழ்க்கட்சிகள் அவர்களை ஆட்டுவிக்கும் மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் ஆலோசனைகளை மட்டுமே கேட்பதால் ஒற்றுமையாக தமிழரின் அரசியல் பலத்தைக் காட்ட முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பு சஜித்தோடும் ரணிலோடும் எந்த டீலையும் வைக்காமலேயே சஜித்துக்கே வாக்களிக்கும்படி நிச்சயம் கேட்பர்.

அரசியல் கோமாளியாக சிவாஜிலிங்கம் கட்டுப்பணத்தை தனது கட்சிக்குக்கூட சொல்லாமல் செலுத்தி தேர்தலில் நிற்கின்றார். இவருக்கு வாக்குப்போட்டு தமிழரின் பலத்தைக் காட்டுவதைவிட கோத்தாவுக்கு வாக்குப்போடலாம்!

கோத்தா கொம்பனி தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் முதல் சுற்றிலேயே வெல்வதைத்தான் தமது நோக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேர்தலில் நிற்பதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் செய்து பிரித்துவிட்டால் கோத்தாவுக்கு சாதகமே. அத்தோடு ஜேவிபிக்கு விழும் வாக்குகளும் கோத்தாவுக்கு எதிரான வாக்குகள்தான். இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதற கோத்தா இலகுவாக வெல்லுவார்!

 

Link to comment
Share on other sites

2015 நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளை பெற்றது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் வாக்குகளை பெறுவது அநுரவின் இலக்கு. 

இறுதியில் எவ்வளவு பெறுவார் என தெரியவில்லை. எனினும் முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அவர்களில் எத்தனை பேர் இரண்டாம் விருப்பத்தெரிவை இடுவார்கள் என்பதிலும் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

சஜித்தின் அமைச்சின் கண்காணிப்பில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதை இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.

ஆகவே, முதன்மை வேட்ப்பாளர்கள் இருவருமே தமிழன எதிரிகள். யார் வந்தாலும் அழிவு தொடரும். ஒருவரால் வெளிப்படையாக நடாத்தப்படும் மற்றயவர், அமைதியாக நடத்துவார். 

நெஞ்சில் குத்துபவனை விட முதுகில் குத்துபவன் பரவாயில்லை என்ற நிலையில் எம்மக்கள் வாக்களிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சிவாஜிலிங்கத்திற்கு வாக்குப்போட்டுத்தான் தமிழர்கள் தமது அரசியல் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும் என்றால் அதைப் போல பெரிய பகடி ஒன்றுமில்லை.

அரசியல் கருத்தாக்கிகள் நிலாந்தன் போன்றோர் தமிழர் தரப்பு ஒற்றுமையாக தமது அரசியல் பலத்தைக் காட்ட ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிற்கவைக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் தமிழ்க்கட்சிகள் அவர்களை ஆட்டுவிக்கும் மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் ஆலோசனைகளை மட்டுமே கேட்பதால் ஒற்றுமையாக தமிழரின் அரசியல் பலத்தைக் காட்ட முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பு சஜித்தோடும் ரணிலோடும் எந்த டீலையும் வைக்காமலேயே சஜித்துக்கே வாக்களிக்கும்படி நிச்சயம் கேட்பர்.

அரசியல் கோமாளியாக சிவாஜிலிங்கம் கட்டுப்பணத்தை தனது கட்சிக்குக்கூட சொல்லாமல் செலுத்தி தேர்தலில் நிற்கின்றார். இவருக்கு வாக்குப்போட்டு தமிழரின் பலத்தைக் காட்டுவதைவிட கோத்தாவுக்கு வாக்குப்போடலாம்!

கோத்தா கொம்பனி தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் முதல் சுற்றிலேயே வெல்வதைத்தான் தமது நோக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேர்தலில் நிற்பதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் செய்து பிரித்துவிட்டால் கோத்தாவுக்கு சாதகமே. அத்தோடு ஜேவிபிக்கு விழும் வாக்குகளும் கோத்தாவுக்கு எதிரான வாக்குகள்தான். இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதற கோத்தா இலகுவாக வெல்லுவார்!

 

அத்துடன்....வீர சிவாஜி நின்று விடவில்லை...!

இன்னுமொரு  செய்தியையும்.....வெளி உலகத்துக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்!

சிங்கள  தேசத்தில்.....ஒரு தமிழனும்.....ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடும் சுதந்திரம் உள்ளது என்றும் சர்வதேசத்துக்குக் காட்டுகிறாராம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மக்களுக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் - சிவாஜிலிங்கம்

நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. கடிதம் கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா வாடி வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரசசாரங்கள் தென்னிலங்கையில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 7 ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. இது எட்டாவது தேர்தல்.

சிங்கள கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை. ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை, சுயாதீன அமைப்புக் குழு, திருகோணமலை மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர், தென்கைலை ஆதினம், யாழ்ப்பாணம் சின்மியா மிசன் சாமியார் உட்பட பலர் பல்வேறு தமிழ் தலைவர்களை சந்தித்தார்கள்.

sivajilingam.jpg

இதன்போது பொது வேட்பாளர் குறித்து பேசப்பட்ட போது இந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் எவருமே இவ்வாறு போட்டியிட்டால் வாக்குகள் பிளவுபடும் என்ற கருத்தை கூறவில்லை. அவர்களால் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலைமை ஏற்பட்ட பொழுது தான் திருமதி அனந்தி சசிதரன் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வைக்க பேசியிருந்தேன். கனடாவில் இருந்து வழக்கறிஞர் கரிகாலன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுடன் பேசியிருந்தார். எவையும் சரிவராத நிலையில் தான் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.


தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். ஆறு கட்சிகள் கூடிய நிலையில் இடைக்கால அறிக்கையை நாங்கள் நிராகின்றோம் என்ற வசனம் குறிக்கப்படாமை காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியிருந்தது. ஏனைய 5 கட்சிகளும் கையெழுத்திட்டு 13 அம்சக் கோரிக்கைளை முன் வைத்திருந்தார்கள். பிரதான வேட்பாளர் மூவருக்கும் அனுப்பப்பட்டது.

அந்தக் கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து அதனை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் 5 தமிழ் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியிருந்தேன். இதைவிட இரண்டு கோரிக்கைகைளை ஒருவராவது ஏற்றுக் கொண்டால் விலகுவதாக தெரிவித்திருந்தேன்.

அரசியலமைப்பில் 13 வது திருத்தம் உட்பட அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பு வருகின்ற போது ஒற்றையாட்சி, பௌத்தம் என்ற முன்னுரிமை இல்லாமல் அரசாங்க தரப்பு பேச வேண்டும். அதுபோல் எங்கள் தரப்பும் பேச வேண்டும். அதற்கும் எவரும் பதிலளிக்கவில்லை. ஆகையால் இனி போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என கருதவில்லை. 

 

புதிய ஜனநாயக முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர் விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எவையும் இல்லை. அனுரகுமார திசாநாயக்காவும் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கூற தவறிவிட்டார். அதனால் தான் 5 கட்சிகளும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு நாங்கள் கைகாட்ட முடியாது. நீங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் அவ்வாறு கூறியிருக்கிறார்.

இனி தமிழ்  தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றைய தமிழ் கட்சிகளோ புதிய ஜனநாயக முன்னனிக்கு அடையாளம் காட்ட மாட்டடார்கள் என நம்புகிறோம். ஏனெனில் அடையாளம் காட்டினால் அந்தக் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்கள் மறைமுகமாக வேலை செய்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெற் செய்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

 

எது எப்படியோ தமிழ் மக்களது வாக்குகள் தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் சொல்ல மாட்டோம் என மூன்று வேட்பாளர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே எங்களுடைய மக்கள் நவம்பர் 16 ஆம் திகதி தீர்மானம் எடுக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்பில் கணிசமானோர் பிரதான கட்சிகள் இரண்டையும் நிராகரித்து வாக்களித்ததாக பல்வேறு இடங்களில் இருந்து கூறுவது உற்சாகத்தை தருகிறது. மக்களுக்கும் இந்த நிலைமைகள் தெரியவரும்.

கோத்தாபய அல்லது சஜித் தான் ஜனாதிபதியதக வரப்போகிறார்கள். இந்த நிலையில் தான் நாங்கள் சர்வதேசத்திற்கும், தென்னிலங்கைக்கும் தெளிவான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பாடாத நிலையில் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு சென்று போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் நீதி கோருவோம். புதிய ஜனாதிபதி 3 மாத காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டு வராத நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுசன வாக்கெடுப்பை கோருவோம். இவற்றை உள்ளடக்கியதாக என்னுடைய தேர்தல் பிரகடனம் வெளியிடப்படும். பெரும்பாலும் எதிர்வரும் 9 ஆம் திகதி திருகோணமலைளில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் இணைந்து வெளியிடுவேன்.

எனவே 16 ஆம் திகதி வாக்குகளை அளிக்கும் போது கவனம் செலுத்தவும். நான் ஒரு அடையாளம் மாத்திரம் தான். இந்த வாக்குகளுக்கு நான் தனித்து உரிமை கோரமாட்டேன். எனக்கு ஒரு லட்சம் வாக்குகளை அளிக்கும் பட்சத்தில் சர்வதேசம் திரும்பி பார்க்கும். நான் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தவுடனேயே பல வெளிநாட்டு தூதரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். எங்களுக்கு இவர், அவர் வெல்ல வேண்டும் என்றல்ல. பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மத்தியஸ்தம் வகித்து பெற்றுத் தாருங்கள் போட்டியில் இருந்து விலகுகிறேன் எனக் வெளிநாட்டு துர்துவராலயங்களுக்கு கூறியுள்ளேன். எனவே மக்கள் எங்களுக்கு பேராதரவு தரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. அவர்கள் தீர்மானித்துள்ளார்கள். அதை நான் மறுக்கவில்லை. 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நான் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னர் கடந்த 13 ஆ ம் திகதி அவர்களுடைய தலைமைக்குழு கூடி ஒருவார கால அவகாசம் விதித்திருந்தது. மீண்டும் 26 ஆம் திகதி கூடி 3 ஆம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். என்னுடைய தன்னிலை விளக்கத்தை நவம்பர் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்குமாறு கேட்டுள்ளார்கள். எனக்கு இன்னும் கடிதம் கிடைக்கவில்லை. கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். 

 

அவர்களுடைய கோரிக்கையை ஏற்று 3 ஆம் திகதி விலகக் கூடிய நிலமையில் நான் இல்லை. அவர்கள் விரும்பிய நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. யாப்பு கட்சிக்கு தேவை என உருவாக்கி 10 தேசிய மாநாடுகளை நடாத்தி காட்டிய எனக்கு அவர்கள் அந்த யாப்பின் அடிப்படையில் கூடியது இடைநிறுத்த முடியும். விசாரணையின் பின்னர் நிரந்தரமாகவும் நீக்க முடியும். எதையும் செய்யட்டும். நான் என்னுடைய மக்களுக்காக தான் போட்டியிடுகின்றேன். அவர்கள் என்னை நீக்கினால் பொது வேட்பாளர் என்ற பலம் அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/67981

Link to comment
Share on other sites

தமிழில் கோமாளிக்கு எதிர்ச்சொல் என்ன ?

சிவாஜிலிங்கம் கோமாளி அரசியல்வாதி என்றால், யாரை அவருக்கு எதிரான தராதரங்களை கொண்டவர் என பார்க்கலாம்?  

 

Link to comment
Share on other sites

பலர் கோத்தபாய பூச்சாண்டி காட்டி திட்டமிட்ட தமிழின அழிப்பை சத்தமின்றி செய்துவரும் ரணில்-சஜித் கும்பலுக்கு மக்களை வாக்களிக்க வைக்கமுடியும் முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் யார் என்றால்
(1) றணில், சுமந்திரன் கூட்டில் தமிழர் உரிமையை அடகுவைச்சு சுயலாபம் பெற்றுபவர்கள்
(2) அப்பப்ப ஊருக்கு விசிட் அடிச்சு சோ காட்டிவாற ஆக்கள்
(3) கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் ஆக்கள்
(4) தங்கட உறவுகளை கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் மேட்டுக்குடி மக்கள்
(5) ஆனந்தசங்கரி,  டக்ளஸ் போல முற்போக்குவாதிகள் என்டு நெச்சுக்கொண்டு இருக்கும் பிற்போக்குவாதிகள்
(6) சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆட்களின் விசிறிகள்

இதைப்போன்ற ஆக்கள் தான் கோத்தபாய வந்தால் அவ்வளவு தான் என்டு பூச்சாண்டி காட்டி திரியினம்.

16 hours ago, ampanai said:

சஜித்தின் அமைச்சின் கண்காணிப்பில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதை இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.

ஆகவே, முதன்மை வேட்ப்பாளர்கள் இருவருமே தமிழன எதிரிகள். யார் வந்தாலும் அழிவு தொடரும். ஒருவரால் வெளிப்படையாக நடாத்தப்படும் மற்றயவர், அமைதியாக நடத்துவார். 

நெஞ்சில் குத்துபவனை விட முதுகில் குத்துபவன் பரவாயில்லை என்ற நிலையில் எம்மக்கள் வாக்களிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

இந்த உண்மைகள் மக்கள் மேல அக்கறை உடையவர்களுக்கு மட்டும் தானே புரியும்!

சுயநலன்களுக்காக ஒரு கொலைகாரனை விட மற்ற கொலைகாரன் திறம் என்டுற ஆட்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் செவிடன் காதுல ஊதின சங்கு போலத் தான்.

Link to comment
Share on other sites

இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் ; ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஒருமித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு எனக்கு வாக்ளிக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Sivajilingam.jpg

யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்குமேலும் தெரிவிக்கையில்

பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை

ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதை உரத்துச் சொல்லவேண்டும்

தற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கேத்தாபய மற்றும் மகிந் தராஜபக்ஷ தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் கூட தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்களாக இருந்து விட்டு இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள் 

இவர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்ற சாரப்பட தமது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை இரு பிரதான கட்சிகளும் தெரிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இங்கு வந்து பிரச்சாரங்களைச் செய்ய வருகின்றார்கள். ஒருவர் தான் யுத்தத்தை நடத்தியவர் என்றும் மற்றொருவர் யுத்தத்தை நாங்களே நடாத்தி முடித்தோம் என்றும் கூறுகிறார்கள் அது மட்டுமன்றி இவ்வாறு கூறியவர்கள் இருதரப்பிலுமாக நின்று எங்கள் மக்களை அழித்தவர்கள் தான் அப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை முறைப்படியாகத் தெரிவிக்காது வாக்குகளுக்காக எம்மை நோக்கி வருகின்றார்கள். 

இது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் காலங்காலமாக எங்களை ஏமாற்றி வருகின்ற சிங்களத் தலைமைகள் எம்மை அழித்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிப்பதற்காகவும் சர்வதேச சமூகத்திற்கு இன அழிப்புச் செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்காகவும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை அடக்கி ஆள்வதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இத்தகையவர்களுக்கு நாங்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியானதகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு வரை இனப்படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள். 

இவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/67797

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.