Jump to content

சிங்கப்பூரில் சரித்திரம் படைத்த கடையநல்லூர் ஸ்ட்ரீட்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kadayanallur-1-data-720x450.jpg

சிங்கப்பூரில் சரித்திரம் படைத்த கடையநல்லூர் ஸ்ட்ரீட்!

சிங்கப்பூரின் முக்கிய பகுதியான தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள கடையநல்லூர் வீதி வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. எனினும் இந்த வீதியின் தொன்மை பற்றி சிலர் மாத்திரமே அறிந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கடையநல்லூர் என்ற ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் வீதியாக கடையநல்லூர் ஸ்ட்ரீட் விளங்குகின்றது.

அவர்கள் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் குடியேறிய பின்னர் இந்தியாவின் கடைய நல்லூரிலிருந்து தங்கள் குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைத்துக்கொண்டனர்.

தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் அவர்கள், தமிழ்ப் பாடசாலையொன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்றன.

1936 ஆம் ஆண்டு 26 மாணவர்களுடன் ஒரு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு, தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. தஞ்சோங் பகாரில் அமைந்திருந்த டிராஸ் ஸ்ட்ரீடில் (Tras Street) குறித்த தமிழ் மொவகுப்பு செயல்பட்டது.

1946 ஆம் ஆண்டு தஞ்சோங் வீதியின் 72 ஆம் இலக்க வர்த்தக கட்டடத் தொகுதி வீட்டில் உமறுப்புலவர் தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ்ப் புலவரின் பெயரில் பாடசாலை செயற்பட்டது.

1960 ஆம் ஆண்டு புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு உமறுப்புலவர் உயர்நிலை தமிழ்ப் பாடசாலை என்று பெயர் மாற்றம் கண்டது. 1982ஆம் ஆண்டு வரை குறித்த பாடசாலை செயற்பட்டு வந்தது.

http://athavannews.com/சிங்கப்பூரில்-சரித்திரம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி.

இந்த உமறுப் புலவர் பள்ளியை செரங்கோன் சாலையின் அண்மித்த பகுதியில் நான் பார்த்த நினைவு உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.