Jump to content

சத்தியாக்கிரகத்தில் குதிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியாக்கிரகத்தில் குதிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம்

நீண்­ட­ கா­ல­மாக சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி எதிர்­வரும் 6ஆம் திகதி ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக சத்­தியாக் கிரகப் போராட்­டத்தில் ஈடு­படப் போவ­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார். யாழ்ப்­பாணம் ஊடக அமை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

Sivajilingam.jpg

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் நம்பி வாக்­க­ளித்­தனர். எனினும் அவர் ஆட்­சிக்கு வந்தும் இன்­று­ வரை தமி­ழர்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களில் பல­வற்றை நிறை­வேற்­ற­வில்லை. குறிப்­பாக தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்தில் எவ்­வித முன்­னேற்­றமும் இல்லை. இதனை வலி­யு­றுத்தி நாம் கடந்த காலங்­களில் பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்தோம்.

தற்­போது நாட்டில் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் நலன் சார்ந்து நானும் போட்­டியில் கள­மி­றங்­கி­யுள்ளேன். ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பதவிக்காலம் முடி­வ­டைய இன்னும் சொற்ப நாட்­களே உள்­ளன. அவ­ருக்கு தமிழ் மக்­கள் மீது செய்நன்றி இருக்­கு­மாயின் தனது காலம் முடி­வ­டை­வ­தற்கு  முன் அர­சியல் கைதி­களில் ஒரு பகு­தி­யி­ன­ரை­யேனும் விடு­தலை செய்ய வேண்டும். நீண்­ட ­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்­வ­துடன் மிகுதிப் பேரை புனர்­வாழ்­வ­ளித்து கட்டம் கட்­ட­மா­க­வேனும் விடு­தலை செய்ய வேண்டும்.

இதனை வலி­யு­றுத்­தியே  நான் கொழும்பிலுள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக எதிர்­வரும் 6ஆம் திகதி காலை 9 மணிக்கு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன். அத்துடன் அன்றைய தினம் மதியம் அலரி மாளிகைக்கு முன்பாகவும் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன் என்றார்.
 

https://www.virakesari.lk/article/67903

Link to comment
Share on other sites

குதிக்கும் போது கால் உடையாமல் பார்த்துக் கொண்டால் அடுத்த தேர்தலிலும் குதிக்கலாம். 😂

Link to comment
Share on other sites

"இதனை வலி­யு­றுத்­தியே  நான் கொழும்பிலுள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக எதிர்­வரும் 6ஆம் திகதி காலை 9 மணிக்கு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன். அத்துடன் அன்றைய தினம் மதியம் அலரி மாளிகைக்கு முன்பாகவும் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன் என்றார்" 

சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்குள், பலம் இல்லாதவர்கள் நடாத்தும் போராட்டம் இது.

எம்மால் ஹாங்கோங் மாதிரி போராட்டத்தையோ இல்லை அப்படி போராடி அதை ஏற்று பதில் தரும் நிலையில் இவர்கள் லெபனானோ இல்லை. 

இருந்தாலும் காந்தி வழி தனி வழி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.