Jump to content

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை  ; எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை  ; எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

தென்மராட்சியின் தொகுதிகளை மற்றும் வட்டாரக் கிளையினருடனான சந்திப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார்  கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று. சஜித் பிரேமதாசவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக்ஷாக்கள் தான்.

ஆகவே நாம் நிதானமாகச் செயற்படவேண்டும். சிலவேளைகளில் நாம் வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது. இந்த இடத்தில் நாம் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும். தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தா உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவு செய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம்.

பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறிவிட்டு விலகிவிட்டது. மற்றைய கட்சி ஊடகங்களில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது நாம் எந்த வேட்பாளரையும் சுட்டிக்காட்ட முடியாது என்று. அந்தக் கட்சி ஒரு பதியப்படாத கட்சி. அவர்களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்பாளருக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதாகும்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு கிழக்கில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்.

மைத்திரியை நாம் கொண்டுவந்து எதுவும் நடைபெறவில்லை என்கின்றார்கள். அது முழுக்க முழுக்கப் பொய்எதுவும் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஏராளமான அபிவிருத்திகள் நடைபெற்றன பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஏன் பாராளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசமைப்பு நகல் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு பல செயற்பாடுகள் நடைபெற்றன எனவே குறித்த விடையங்களை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நாம் சிந்தித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.
 

https://www.virakesari.lk/article/67906

Link to comment
Share on other sites

மறந்து போய் சில உண்மைகளை கூறிவிட்டார் : 

  1. ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார்  கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான்
  2. சிலவேளைகளில் நாம் வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது
Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை  ; எம்.ஏ.சுமந்திரன்

தாங்கள் உண்மையான பிரதிநிதிகள் இல்லை என ஒத்துக்கொண்டுள்ளார் சுமந்திரன்!

சுமந்திரன் போன்ற போலிகள் எப்பிடி உண்மையான பிரதிநிதிகளை அடையாளம் காட்டமுடியும்?  

Link to comment
Share on other sites

On 10/31/2019 at 8:01 AM, கிருபன் said:

பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறிவிட்டு விலகிவிட்டது.

அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. 😀

On 10/31/2019 at 8:01 AM, கிருபன் said:

மற்றைய கட்சி ஊடகங்களில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது நாம் எந்த வேட்பாளரையும் சுட்டிக்காட்ட முடியாது என்று. அந்தக் கட்சி ஒரு பதியப்படாத கட்சி. அவர்களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்பாளருக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதாகும்.

விக்னேஸ்வரனின் கட்சி. 😀

https://yarl.com/forum3/topic/233583-எந்த-ஒரு-சிங்கள-வேட்பாளருக்கும்-வாக்களிக்கும்-படி-எமது-விரலால்-சுட்டிக்-காட்ட-முடியாது-விக்கி/

 

Link to comment
Share on other sites

On 10/31/2019 at 12:31 PM, கிருபன் said:

அவர்களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்பாளருக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதாகும்.

கடைந்தெடுத்த முட்டாள் கூட இப்பிடி சுமந்திரனைப் போல ஒரு ஆதாரமற்ற மோசமான கற்பனையை அவிழ்த்துவிடமாட்டார்!

சுமந்திரன் என்ன பாடுபட்டும் ரணிலுக்குத் தான் கூத்தாடுவன் என்ட நிலைப்பாட்டின் வெளிப்பாடு தான் இந்தக் கற்பனைகள்! இது போல இன்னும் பல வரலாம்.

Link to comment
Share on other sites

உண்மையான பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் உயிருடன் இல்லையே ஐயா.  பரட்டைக் காட்டுக்கு கறட்டை ஓணான் ராஜா என்பதுபோல் தான் எமது நிலை. 

Link to comment
Share on other sites

On 10/31/2019 at 12:31 PM, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார்  கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று. சஜித் பிரேமதாசவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக்ஷாக்கள் தான்.

ஐந்து கட்சிகள் உடன்பாடு செய்து கொண்டதிலிருந்து நித்திரையில்லாமல் சிரமமப்படும் ஒருவர் சுமந்திரன். எப்படி தன்னுடைய எசமானும் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை கனகச்சிதமாக அரங்கேற்றிவரும் ஐக்கிய தேசியக் கட்சி எனும் பயங்கரவாதக் கும்பலுக்கு தமிழரை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம் என்று நாய்படாதபாடா அலைந்து திரிகிறார் சுமந்திரன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.