Jump to content

ஜப்பான் ஒழித்த சாதி


Recommended Posts

ஜப்பான் ஒழித்த சாதி

100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது...

large.38B6C95B-8EF1-4652-97D8-EE2E025B48A7.jpeg.21ba9d889cbd9ac177b380f85813bb45.jpeg

கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். 

இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்... அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது...

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது...இனி ஜப்பான் அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது..

  காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ'  (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்... அவருக்கு பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக  தூக்கிலிடப்பட்டார்...(அப்பவும் மன்னர்களே தப்பினர் அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)  

பின்னர் வந்த மக்களாட்சி முறை  ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது...ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லை தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது...

பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது..விடுமுறைகளை குறைத்தது...புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது...ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது...சாதிய புனைப்பெயர்களை அழித்தது...உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது...அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது...

"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan)  என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை...நாடு மெல்ல மெல்ல முன்னேறியது...இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைதி செய்து கடுமையாகக் தண்டித்தது...ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது...

கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாயமாக்கியது..சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி?  சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது...சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன் 
இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும்  அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு...??

இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌..

 "புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌ ......

நன்றி - வசந்தன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது...

 

முதலாளித்துவமாக வெளியே தெரிவது மட்டுமல்ல உண்மையிலே முதலாளித்துவ நாடுதான் ஜப்பான். தனது மக்களை உயர்நிலையில் வாழவைக்கிறது அது தான் முக்கியம்.
மக்களுக்கு நன்மை தராத சோசலிசம் பேசுவதால் பயன் இல்லை.

இந்தியாவில் பள்ளிகூடத்தில் சேரும் போது மாணவர்களது சாதி குறிப்பிட வேண்டும். சாதிசான்றிதழ்களும் உண்டு மற்றும் திருமாளவன் பட்டாளி கட்சி ராமதாசு சாதி கட்சிகள் நடத்துகின்றனர் அங்கே சாதிகள் வேறுபாடு மேலும் மோசமாகும்.

Link to comment
Share on other sites

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 

 

முதலாளித்துவமாக வெளியே தெரிவது மட்டுமல்ல உண்மையிலே முதலாளித்துவ நாடுதான் ஜப்பான். தனது மக்களை உயர்நிலையில் வாழவைக்கிறது அது தான் முக்கியம்.
மக்களுக்கு நன்மை தராத சோசலிசம் பேசுவதால் பயன் இல்லை.

இந்தியாவில் பள்ளிகூடத்தில் சேரும் போது மாணவர்களது சாதி குறிப்பிட வேண்டும். சாதிசான்றிதழ்களும் உண்டு மற்றும் திருமாளவன் பட்டாளி கட்சி ராமதாசு சாதி கட்சிகள் நடத்துகின்றனர் அங்கே சாதிகள் வேறுபாடு மேலும் மோசமாகும்.

உங்கள் கருத்தை மேலும்  தெளிவாக கூறுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

 

முதலாளித்துவமாக வெளியே தெரிவது மட்டுமல்ல உண்மையிலே முதலாளித்துவ நாடுதான் ஜப்பான். தனது மக்களை உயர்நிலையில் வாழவைக்கிறது அது தான் முக்கியம்.
மக்களுக்கு நன்மை தராத சோசலிசம் பேசுவதால் பயன் இல்லை.

இந்தியாவில் பள்ளிகூடத்தில் சேரும் போது மாணவர்களது சாதி குறிப்பிட வேண்டும். சாதிசான்றிதழ்களும் உண்டு மற்றும் திருமாளவன் பட்டாளி கட்சி ராமதாசு சாதி கட்சிகள் நடத்துகின்றனர் அங்கே சாதிகள் வேறுபாடு மேலும் மோசமாகும்.

சாதிகளுக்கென தனிக்கட்சிகள் இருக்கும் போது  எப்படி சாதி பேதங்களை ஓழிக்க/அழிக்க முடியும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.