Jump to content

பாரிசில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரனின் இரகசியக் கூட்டம்!


Recommended Posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.

தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவித்திருப்பதே சர்ச்சைகளை கிளப்பியுள்ளன

மக்கள் சந்திப்புக்கான பொதுஅழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி, பாரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் எனும் இடத்தில் இரகசியமான முறையில் சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் ஊர் மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில், அப்பகுதி மக்கள் மட்டும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்சை சேர்ந்த வெளிச்சம் எனும் அமைப்பு சந்திப்புக்கான ஏற்பாட்டை கடந்த வாரம் இரகசியமான முறையில் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட்டுடன் புலம்பெயர் அமைப்புக்களுக்கான சந்திப்பு என்ற பெயரில் சனிக்கிழமை கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது.

கூட்டம் நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியன தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என அமைப்புக்களுக்கு தெரிவித்திருந்த ஏற்பாட்டாளர்கள், பின்னராக தேர்வு செய்த அமைப்பினருடன் சந்திப்பினை செய்து முடித்துள்ளனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கமோ, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ பங்கெடுக்கருக்கவில்லை.

கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி டன்ரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா ஒருங்கிணைப்பாளர் வின் மகாலிங்கம் உட்பட, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கருத்தியலில் எம்.ஏ.சுமந்திரனிடம் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே பல அமைப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, யாழ். மேயருடன் ஊர் மக்கள் சந்திப்பு இரகசியமாக இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொது மக்களுக்கான பொது அழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி நடந்த இச்சந்திப்பில், 1 மணி நேரத்துக்கு பின்னராக வருகை தந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் எம்பி, தனது கருத்துரையினை வழங்கியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவினை தமிழ் மக்கள் ஒரு பெருங்கொலையாளியாகவே பார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர், இருக்கின்ற பேய்களில் நல்ல பேயை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஒரு சிலரது கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.ஏ.சுமந்திரன், கேள்விகள் கூர்மைப்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்களால் 1 மணி நேரத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்டத்தினை யாழ்.மேயர் நடத்தியுள்ளார்.

மேயர் என்ற வகையில் யாழில் முதற் குடிமகனாகிய நீங்கள், யாழ் மக்கள் அனைவரையும், யாழ். ஊர் சங்கங்களையும் அழைத்து பேசாமல், இவ்வாறு உங்களின் ஊர் மக்களோடு மட்டும் சந்திப்பினை நடத்துவது பொருத்தமா என ஒருவர் கேட்டதற்கு, நிலைமை அவ்வாறு இல்லை. காலப்போக்கில் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஒன்றினைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படுவோர், பொதுமக்களையும், ஊடகங்களையும் வெளிப்படையாக சந்திக்காமல் இரகசியமான முறையில் பின் கதவுகளால் கூட்டங்களை நடத்துவது என்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதோடு, மக்களுக்காக அல்லாமல் யாருக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/politics/01/229982?ref=archive-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எசமான் ரணிலுக்காக ஐந்து கட்சி கூட்டணியை உதறிவிட்டு நாடு நாடாகப் பிரச்சாரம் பண்ணும் தமிழரசுக்கட்சி.தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வாக்களிக்கத் தகுதியான தாயாக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கத் தைரியமில்லாமல் வாக்களிக்கத்தக்க தகுதியற்ற(வெளிநாட்டு வதிவிட உரிமம்பெற்ற)மக்களிடம் பிரச்சாரம் செய்வதை அதுவும் இரகசியமாக ஒரு ஊர்மக்களிடம் மட்டும் பிரச்சாரம் செய்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது?

Link to comment
Share on other sites

தமிழ்வின்னின் சேதியை நம்பி கடுத்துக்கூற முடியாது. செய்தியை பொறுப்பற்ற முறையில்,  தெளிவற்ற,  பிழையான தலைப்புடன் வெளியிட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டம் சிறு சச்சரவு  வாக்குவாதங்களுடன் முடிவுற்றதாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த கூட்டம் சிறு சச்சரவு  வாக்குவாதங்களுடன் முடிவுற்றதாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியவில்லை.

இதை நாங்கள் எதிர்பார்க்காவிட்டால் பிழை எங்களுடையதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

datastore?id=5032979042664448

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள்

ஒரு  பாராளுமன்ற  உறுப்பினர்

தமிழரின்  மாநகர  மேயர்

இவர்கள்  கலந்து கொண்ட  கூட்டம்??

ஒரு  ஊர்ச்சங்க  கூட்டம்  என விளம்பரப்படுத்தப்பட்டு

செயற்பாட்டாளர்களைத்தவிர்த்து

முகநூலில்  அவர்களுக்கு சார்பாக  எழுதுபவர்களை  இனம் கண்டு

தனி  அழைப்பு விடுக்கப்பட்டு  நடாத்தப்பட்டிருப்பதே 

இவர்களின்  உள் நோக்கத்தையும் 

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

புலம்பெயர் தமிழ் மக்களை நேரில் சந்தித்தால் பிறகு tom ஜெர்ரி கதையாகியிடும் சுமத்திர னுக்கு. இழுத்து வைச்சு கும்மி போட்டு விடுங்கள் .

ஈழத்தை பெற்று கொடுங்கள் என்றா கேட்டம் குறைந்த பட்சம் தம் இனத்தை நேசிக்கும்  முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போல் கொஞ்சமாவது தமிழ் இனத்துக்கு விசுவாசமாய் இருங்கள் என்று தானே கேட்கிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

புலம்பெயர் தமிழ் மக்களை நேரில் சந்தித்தால் பிறகு tom ஜெர்ரி கதையாகியிடும் சுமத்திர னுக்கு. இழுத்து வைச்சு கும்மி போட்டு விடுங்கள் .

ஈழத்தை பெற்று கொடுங்கள் என்றா கேட்டம் குறைந்த பட்சம் தம் இனத்தை நேசிக்கும்  முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போல் கொஞ்சமாவது தமிழ் இனத்துக்கு விசுவாசமாய் இருங்கள் என்று தானே கேட்கிறம் .

இவர்களை விட்டால் வேறு  வழியில்லை  என்றநிலையில்

தாயகத்தை  வைத்திருப்பது.....???

அதற்கு முன்னேற்பாடாக ஏதாவது செய்பவர்களை

செய்ய  முற்படுபவர்களை 

போர் மீது நாட்டம்  கொண்டோர்  என  வசைபாடுவது....??

இவர்களால் தமிழினம் தன்னை  இழந்து

மரத்தை  சுற்றிப்படர்ந்த  சிறு  கொடியாக......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இவர்களை விட்டால் வேறு  வழியில்லை  என்றநிலையில்

தாயகத்தை  வைத்திருப்பது.....???

அதற்கு முன்னேற்பாடாக ஏதாவது செய்பவர்களை

செய்ய  முற்படுபவர்களை 

போர் மீது நாட்டம்  கொண்டோர்  என  வசைபாடுவது....??

இவர்களால் தமிழினம் தன்னை  இழந்து

மரத்தை  சுற்றிப்படர்ந்த  சிறு  கொடியாக......???

தமிழ்மக்கள் மீது கரிசனை உள்ள விக்கியர்போன்றவையளையும் இல்லாத பழியெல்லாம் சொல்லி அரசியலையே வெறுக்கபண்ணியே ஒதுக்க வைத்தவர்கள்  அதுக்குத்தான் இங்கு வர செருப்பால் அடிக்கணும் .

கொஞ்சம் எல்லைமீறினால் அடுத்த பிரபாகரன் என்று இவர்களே சிங்களவருக்கு உசுப்பிவிட்டு குளிர் காய்வது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

தமிழ்மக்கள் மீது கரிசனை உள்ள விக்கியர்போன்றவையளையும் இல்லாத பழியெல்லாம் சொல்லி அரசியலையே வெறுக்கபண்ணியே ஒதுக்க வைத்தவர்கள்  அதுக்குத்தான் இங்கு வர செருப்பால் அடிக்கணும் .

கொஞ்சம் எல்லைமீறினால் அடுத்த பிரபாகரன் என்று இவர்களே சிங்களவருக்கு உசுப்பிவிட்டு குளிர் காய்வது 

 

மாகாணசபையை செயற்படவிடாது தடுத்ததில்

அரசைவிட  இவர்களது  பங்கு  மிகமிக  அதிகம்..

தமிழர்கள் இவர்கள் சார்ந்து சரியான  முடிவு  எடுக்கவில்லையெனில்

தமிழினம் பெரும்பான்மையுடன்  சாய்ந்துவிடும்

அநேகமாக  கிழக்கு  இன்று  அந்த  நிலைக்கு  வந்துவிட்டது

புலத்திலும்  இவர்களை  வெருட்டத்தொடங்கி  விட்டார்கள்

முடிவு?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

 

மாகாணசபையை செயற்படவிடாது தடுத்ததில்

அரசைவிட  இவர்களது  பங்கு  மிகமிக  அதிகம்..

தமிழர்கள் இவர்கள் சார்ந்து சரியான  முடிவு  எடுக்கவில்லையெனில்

தமிழினம் பெரும்பான்மையுடன்  சாய்ந்துவிடும்

அநேகமாக  கிழக்கு  இன்று  அந்த  நிலைக்கு  வந்துவிட்டது

புலத்திலும்  இவர்களை  வெருட்டத்தொடங்கி  விட்டார்கள்

முடிவு?????

இவர்களின் விருப்பங்களுக்கு தமிழ்மக்கள் கட்டுப்படும் நிலை வராதபோது சவுத்புளக்கும்  . கொழும்பும் கையை விட்டு விடும் ஒருவேளை சம்பந்தனுக்கு கொடுக்கபட்ட வீடு கூட திருப்பி எடுக்கபட்டாலும் அதிசயம் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இவர்களின் விருப்பங்களுக்கு தமிழ்மக்கள் கட்டுப்படும் நிலை வராதபோது சவுத்புளக்கும்  . கொழும்பும் கையை விட்டு விடும் ஒருவேளை சம்பந்தனுக்கு கொடுக்கபட்ட வீடு கூட திருப்பி எடுக்கபட்டாலும் அதிசயம் இல்லை .

அது நடக்கும்போது

தமிழர்கள்  முழுமையாக சிங்களவர் வசமாகி   இருப்பார்கள்

இவர்களது  தெவை  சிங்களத்துக்கு  இராது

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

பாருங்கள்

ஒரு  பாராளுமன்ற  உறுப்பினர்

தமிழரின்  மாநகர  மேயர்

இவர்கள்  கலந்து கொண்ட  கூட்டம்??

ஒரு  ஊர்ச்சங்க  கூட்டம்  என விளம்பரப்படுத்தப்பட்டு

செயற்பாட்டாளர்களைத்தவிர்த்து

முகநூலில்  அவர்களுக்கு சார்பாக  எழுதுபவர்களை  இனம் கண்டு

தனி  அழைப்பு விடுக்கப்பட்டு  நடாத்தப்பட்டிருப்பதே 

இவர்களின்  உள் நோக்கத்தையும் 

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

100க்கு 100 உண்மை!

சுமந்திரன், ஆர்னால்ட் இருவருமே கைதேர்ந்த சதிகாரங்கள்!

இந்த சதிகாரர்கள் வெளிச்சம் சதிகாரர்களோட சேர்ந்து மேற்கொள்ளவிருந்த பாரிய அரசியல் சதிமுயற்சி வெற்றி பெறவில்லை.

ஆனாலும், போன கையோட கிடைத்த காசை எல்லாம் சுருட்டிக்கொண்டுள்ளதாக சொல்றாங்க!

Link to comment
Share on other sites

13 hours ago, Rajesh said:

ஆனாலும், போன கையோட கிடைத்த காசை எல்லாம் சுருட்டிக்கொண்டுள்ளதாக சொல்றாங்க!

இதுக்கு கணக்கு வழக்கு காட்டுற பழக்கம் இல்லையோ?

எல்லாம் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முகநூல் செம்புகள் இதில் யாழ் கள முன்னைய உறுப்பினரும் இருக்கிறமாதிரி இருக்கு 

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின்  ஊடக பேச்சாளராக இருக்கும் ஒருவர் ஏன் பொட்டுக்கால் ஒழித்து கூட்டம் நடாத்த வேண்டும். மடியில் கனம் இருப்பதால் என எடுக்கலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தமிழ் மக்களின்  ஊடக பேச்சாளராக இருக்கும் ஒருவர் ஏன் பொட்டுக்கால் ஒழித்து கூட்டம் நடாத்த வேண்டும். மடியில் கனம் இருப்பதால் என எடுக்கலாமா??

அதான் இன்றைக்கு வவுனியாவில் செருப்ப எடுத்துட்டு போனா ஓர் அம்மா தமிழரசுக்கட்சிக் காரர்களுக்கு எறிய  காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதான் இன்றைக்கு வவுனியாவில் செருப்ப எடுத்துட்டு போனா ஓர் அம்மா தமிழரசுக்கட்சிக் காரர்களுக்கு எறிய  காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய்

செருப்பு எறி வாங்கின சம்பந்தன் சுமத்திரன் கூட்டத்துக்கு கூட ரோசம் வரவில்லை வழக்கமான இணைய செம்புகளுக்கு மட்டும் ரோசம் பிச்சுகிட்டு ஓடுது இன்னும் விளக்கம் கெட்டதுகளா இருக்கினம். இன்றைய இந்த வெறுப்பு எப்பவோ தமிழ்மக்களிடம் உருவாகிவிட்டது என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை இணைய செம்புகளால் .

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

மிகவும் சுவாரசியமான தத்துவம். இலங்கை தமிழரசு கட்சி விடுதலை புலிகளுக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தது, இன்றும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

மிகவும் சுவாரசியமான தத்துவம். இலங்கை தமிழரசு கட்சி விடுதலை புலிகளுக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தது, இன்றும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

புலிகளுக்கு இலட்ச கணக்கான தமில் மக்கள் இங்கு வீதிகளில் இறங்கி போராடினார்கள் கடைசி நேரத்தில் பல  முன்னணி  மாற்று கருத்தாளர்கள் கூட குடும்பம் குடும்பமாய் மனம் மாறி வீட்டுக்கு கூட போகாது லன்ட ன் போராட்ட களத்தில் இருந்தார்கள் காரணம் புலியின் அப்பழுக்கற்ற தியாகமும் இறுதிக்கணம் வரை மாறாத நெறிமுறைகள்  நீங்கள் அப்படியா முப்பதுவருட போராட்டத்தை ஒரு கொழும்பு வீட்டுக்கும் பஜிரோ இறக்குமதி செய்வதுக்கும்  காட்டிகொடுத்தும் இல்லாமல் அந்த காலத்தில் காணமல் போனவர்களை பார்த்து நக்கலடிப்பது செம்புகள் உங்களுக்கே இப்படி என்றால் தலைகள் பற்றி சொல்லவே தேவையில்லை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

செருப்பு எறி வாங்கின சம்பந்தன் சுமத்திரன் கூட்டத்துக்கு கூட ரோசம் வரவில்லை வழக்கமான இணைய செம்புகளுக்கு மட்டும் ரோசம் பிச்சுகிட்டு ஓடுது இன்னும் விளக்கம் கெட்டதுகளா இருக்கினம். இன்றைய இந்த வெறுப்பு எப்பவோ தமிழ்மக்களிடம் உருவாகிவிட்டது என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை இணைய செம்புகளால் .

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

அண்ணை கவனம் 
செருப்பெடுத்து ஏறியப்போன அம்மாவை எல்லாம் பெரிசா எடுக்காதீங்கோ ,அவா அடுத்த தேர்தலிலும் 
கூத்தமைப்பிற்கு கீறிப்போட்டு தெருக்கோடியில் நின்று கத்தப்போறது தான் நடக்கப்போகுது , 
முடிஞ்சவரை தொழில்தகுதி கொண்ட  ,வெளிநாடுகளில் தொழில் எடுக்கக்கூடிய தமிழர்கள் அங்கிருந்து கிளம்பி விடுங்கள், இலங்கையில் இனி புடுங்க எதுவுமே இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அத்தனையும் முகநூல் செம்புகள் இதில் யாழ் கள முன்னைய உறுப்பினரும் இருக்கிறமாதிரி இருக்கு 

ம்ம்ம்

அதிலும் தமக்கு  தனி  அழைப்பு வந்தே  தாம் கலந்து கொண்டதாக 

முகநூலில் தமக்குத்தாமே  புகழாரம்  வேறு  செய்கிறார்கள்

முகநூல் போராளிகள்  அல்லவா??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.