Jump to content

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்


Recommended Posts

நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். 

இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன்.

(1872ஆம் ஆண்டு தொடக்கம் 1964ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்த இவர் செல்லப்பாச் சுவாமிகளின் சீடராவார். சுவாமிகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம்.அறியாதோர் பின்வரும் இணைப்பில் அவரது சுருக்கமான வரலாற்றை அறியலாம்:

https://ourjaffna.com/cultural-heroes/யோகர்-சுவாமிகள் )

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

நற்சிந்தனை: " பகலில் பார்க்க முடியாதபடியினால் நட்சத்திரங்களை இல்லையென்று சொல்ல முடியுமோ? அது போல் எங்கள் ஒவ்வொருவரிடத்தும் உள்ள இருட்டை நீக்கிப் பார்த்தால் கடவுளிருக்கிறார்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பகிர்வுகள். தொடர்ந்து பகிருங்கள். யோகர் சுவாமிகள், குடைசாமியார் போன்றவர்கள் நல்லூரில் உலாவித் திரிந்தவர்கள். நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடையிற்சுவாமியார் கோவில் உள்ளது.ஒருவேளை அவர்தான் யோகர் சுவாமிகளின் குருவாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் நல்லதொரு  பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள். 
தொடருங்கள்.👍

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

Link to comment
Share on other sites

36 minutes ago, suvy said:

மிகவும் சிறப்பான பகிர்வுகள். தொடர்ந்து பகிருங்கள். யோகர் சுவாமிகள், குடைசாமியார் போன்றவர்கள் நல்லூரில் உலாவித் திரிந்தவர்கள். நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடையிற்சுவாமியார் கோவில் உள்ளது.ஒருவேளை அவர்தான் யோகர் சுவாமிகளின் குருவாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

சுவி அண்ணா, கடையிற் சுவாமிகள் யோகர் சுவாமிகளின் குருவான செல்லப்பாச் சுவாமிகளின் குரு ஆவார். 

நல்லூர் தேரடிக்கு எனது தந்தையாருடன் செல்லும் போதெல்லாம் சொல்வார் "யோகர் போன்ற பெரிய ஞானிகள் எல்லாம் இருந்த இடம். வடிவாய் சுற்றிக் கும்பிடு என்று". 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி அண்ணா. 😊

35 minutes ago, குமாரசாமி said:

மல்லிகை வாசம் நல்லதொரு  பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள். 
தொடருங்கள்.👍

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

நன்றி கு.சா அண்ணா, உங்கள் எல்லோரினதும் வாழ்த்துக்களுடன் கண்டிப்பாகத் தொடர்வேன். நன்றி 😊

Link to comment
Share on other sites

திருநெல்வேலியில் இருக்கும் எங்கள் இனத்தவரான, ஓய்வுபெற்ற தபால்கந்தோர் அதிபர் இராமலிங்கம் யோகர் சுவாமிகளுடைய அடியவர். யோகர் சுவாமிகள் அவர் வீட்டிற்கு வருவதுண்டு. சுவாமிகளை நேரில் கண்டுள்ளேன். தவிர எங்கள் பரமேசுவராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் எங்களை சிவானந்தா ஆச்சிரமத்திற்கு அனுப்பி அவர் போதனைகளைக் கேட்க வைப்பதுமுண்டு. விளையாட்டு வயதில் அவர் போதனைகள் அனைத்தும் எங்களிடம் ஆழமாகப் பதிந்ததில்லை. ஆனால் அவர்செய்யும் சில குறும்பு வேலைகள் எங்களை ஈர்த்து அவரை இன்றளவும் எங்கள் நினைவில் வைத்திருக்கிறது.

அதிபர் இராமலிங்கம் வீட்டில் ஒருமுறை, சுவாமி தனது வயிற்றைத் தட்டிச் "சும்மா இரு உனக்கு எதுவும் தரமாட்டேன் தொந்தரவு செய்யாதே" என்று சொல்லியபோது எல்லோருக்கும் சிரிப்பாக இருந்தது. பசிக்கிறது என்ற தொல்லைகொடுத்த அவர் வயிற்றைக் கண்டித்து அடக்குகிறாராம்.... எவரையும் நீ, வா, வாடா, போடா என்றுதான் அழைப்பார்.

அவர் போதனைகளில் என்னில் பதிந்து இன்றவரை நினைவிலுள்ள ஒன்று..... கடவுளைத் தேடி இந்த உலகமெல்லாம் சுற்றி அலைந்தும் காணாமல் இறுதியில் வீட்டிற்குத் திரும்ப வந்தபின்புதான் கண்டாராம்.... 

கடவுள் தன்னுள்ளே இருப்பதை. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவதொண்டன் நிலையம் எனும் அமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் யோகர் சுவாமிகளால் உருவாக்கப்பட்டு அவருடைய சீடர் செல்லத்துரை சுவாமிகளால் (சமாதியடைந்துவிட்டார்) வழிநடத்தப்பட்டது.

தற்போதும் யாழில் காங்கேசன்துறை வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலும், மட்டக்களப்பு செங்கலடியிலும் சிவதொண்டன் நிலையம் செயற்படுகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

சுவாமிகளை நேரில் கண்டுள்ளேன். தவிர எங்கள் பரமேசுவராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் எங்களை சிவானந்தா ஆச்சிரமத்திற்கு அனுப்பி அவர் போதனைகளைக் கேட்க வைப்பதுமுண்டு. விளையாட்டு வயதில் அவர் போதனைகள் அனைத்தும் எங்களிடம் ஆழமாகப் பதிந்ததில்லை. ஆனால் அவர்செய்யும் சில குறும்பு வேலைகள் எங்களை ஈர்த்து அவரை இன்றளவும் எங்கள் நினைவில் வைத்திருக்கிறது.

 

1 hour ago, Paanch said:

அவர் போதனைகளில் என்னில் பதிந்து இன்றவரை நினைவிலுள்ள ஒன்று..... கடவுளைத் தேடி இந்த உலகமெல்லாம் சுற்றி அலைந்தும் காணாமல் இறுதியில் வீட்டிற்குத் திரும்ப வந்தபின்புதான் கண்டாராம்.... 

கடவுள் தன்னுள்ளே இருப்பதை. 🙏

பாஞ்ச் அண்ணா, 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. 

சுவாமிகளுடனான உங்கள் நேரடி அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

சுவாமிகள் பற்றி வாசித்து, கேட்டு அறிந்த எங்களுக்கே இனம் புரியாத பக்தியுணர்வு எழுகின்றது என்றால் நேரில் தரிசித்த உங்களைப் போன்றவர்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 

54 minutes ago, ஏராளன் said:

சிவதொண்டன் நிலையம் எனும் அமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் யோகர் சுவாமிகளால் உருவாக்கப்பட்டு அவருடைய சீடர் செல்லத்துரை சுவாமிகளால் (சமாதியடைந்துவிட்டார்) வழிநடத்தப்பட்டது.

தற்போதும் யாழில் காங்கேசன்துறை வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலும், மட்டக்களப்பு செங்கலடியிலும் சிவதொண்டன் நிலையம் செயற்படுகின்றது.

ஏராளன்,

செல்லத்துரைச் சுவாமிகள் யாழ்ப்பாணச் சிவதொண்டன் நிலையத்தில் தங்கியிருந்த நாட்களில் அவ்வப்போது எனது தந்தையாருடன் சென்றிருக்கிறேன். அவரது புன்னகை பூத்த முகமும், மென்மையான வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன. 2003ற்குப் பின் அங்கு போகும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. அவருடன் ஒரு சிஷ்யரைக் கண்ட ஞாபகம். பெயர் சரியாக ஞாபகமில்லை. 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி, ஏராளன். 😊

Link to comment
Share on other sites

4 hours ago, மல்லிகை வாசம் said:

சக உறவுகளுக்கு,

அவ்வப்போது இந்த நற்சிந்தனைகள் தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளேன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

நன்றி

 

Link to comment
Share on other sites

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

6 hours ago, மல்லிகை வாசம் said:

நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். 

இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன்.

(1872ஆம் ஆண்டு தொடக்கம் 1964ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்த இவர் செல்லப்பாச் சுவாமிகளின் சீடராவார். சுவாமிகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம்.அறியாதோர் பின்வரும் இணைப்பில் அவரது சுருக்கமான வரலாற்றை அறியலாம்:

https://ourjaffna.com/cultural-heroes/யோகர்-சுவாமிகள் )

 

1 hour ago, Maharajah said:

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

 

தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.

நன்றி Che.

Link to comment
Share on other sites

மல்லிகை வாசம்,  உங்கள் பகிர்தலை நானும் வரவேற்கிறேன். யோகர் சுவாமிகளின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அவரது பணிகள் பற்றி அறியவில்லை. இப்பகிர்வின் மூலம் தெரிந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லத்துரை சுவாமிகளை மௌனமணி பெட்டகம் என ஓய்வு பெற்ற விரிவுரையாளரான எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிடுவார்.
"பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவோமோடி கிளியே ஆறுமுகன் தஞ்சமடி"
இந்த யோகர் சுவாமியின் பாடல் வரிகளை தந்தையார் அடிக்கடி பாடுவார்.
தந்தையார் மூலமாகவே சிவதொண்டன் நிலையம் சென்று செல்லத்துரை சுவாமிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

 

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்..

பாடல்களை இணைத்து விடுங்கள், நன்றி.

நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கொழும்பு பிரமுகர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், இல்லையா?

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுக்குகளினால் மனிதன் அமைதி இழந்து படும் எரிச்சல் வேதனை துன்பம் பொறாமை இவை அனைத்து பற்றியும் தத்துவவியாளரர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவே மனதை கட்டி சும்மாய் இரு என்ற சூத்திரத்தை சொல்லி தந்தார் சுவாமி யோகர் சுவாமிகள்.ஆசையும் பாசமுமாக அலையும் எம் போன்றவர்களால் சும்மா இருக்கவும் முடியவில்லை மனதை கட்டவும் தெரியவில்லை .நல்ல பதிவு மல்லிகை வாசம் வாழ்த்துக்கள் .அன்பே சிவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

பாடல்களை இணைத்து விடுங்கள், நன்றி.

நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கொழும்பு பிரமுகர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், இல்லையா?

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

அவரா என்பது சரியாக நியாபகம் இல்லை. இவை எல்லாம் என் பாட்டனாரின் ஈசிச்சேரில் அருகே இருந்தபடி கேட்ட கதைகள். அவருக்கும் நியாபகம் மங்கத் தொடங்கிய, எனக்கும் கதை கேட்கும் சுவாரசியம் மட்டுமே இருந்த காலம் அது. ஆகவே தகவல்கள் பலதும் மங்கலாகவே நியாபகம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

   

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பப்பாடல். பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில்

https://www.himalayanacademy.com/view/antha-vaakkum_sl 

அந்த வாக்கும்

பல்லவி

அந்த வாக்கும் பொய்த்துப் போமோ
ஆசான் நல்லூர் வீதியி லருளிய

அநுபல்லவி

இந்த ஆன்மா நித்திய மென்ற

சரணங்கள்

மங்கைய ராடவர் மைந்தர்கள் கூடி
மகிழ்ந்தும் புகழ்ந்தும் வரதனைத் தேடி
வந்தனை புரிய வருவார் கோடி
செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன

தேங்கா யிளநீர் தீங்கனி கொண்டு
திருவடித் தொண்டு செய்வதைக் கண்டு
ஐம்புல னடங்கி நின்றவ ருண்டு
ஆரறி வாரென ஆசான் சொன்ன

கௌரிம னோகரி ஆனந் தாச்சி
கமல ஆச்சிசெல் லாச்சி ஐவரும்
உவந்து சேவடி கும்பிடு முத்தமன்
தவத்தைச் செய்திடத் தந்திடு மருளே

Link to comment
Share on other sites

"""பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில். """

தெய்வீகம் மட்டுமல்ல ராஜ கம்பீர குரலும் கூட.  

(எனது favourite விருப்ப பாடல்,  அந்த வாழைமரம்... )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

"""பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில். """

தெய்வீகம் மட்டுமல்ல ராஜ கம்பீர குரலும் கூட.  

(எனது favourite விருப்ப பாடல்,  அந்த வாழைமரம்... )

இணைப்பைத் தருவீர்களா மகாராஜா ? (உங்கள் பெயரிலும் கம்பீரம் உள்ளது). 

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

இணைப்பைத் தருவீர்களா மகாராஜா ? (உங்கள் பெயரிலும் கம்பீரம் உள்ளது). 

 மன்னிக்கவும் Che,  அந்த ஆலமரம் என்பதுதான் சரியானது.  Youtube ல் உள்ளது youtube.com/watch?V=Jskv3zMAdrg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இந்த சம்பவம் யோகர் சுவாமிகளின் குரு செல்லப்பா சுவாமியால் நிகழ்த்தப்பட்டது.
சமையல் செய்ய சீடரை பணித்துவிட்டு அது நிறைவுறும் நேரம் கவிழ்த்து கொட்டியது செல்லப்பா சுவாமிகள்.

Link to comment
Share on other sites

8 hours ago, மல்லிகை வாசம் said:

சுவாமிகளது நற்சிந்தனைகள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான உரையாடலை மட்டும் செய்வதே நம் எல்லோருக்கும் பயன் தரும். 

நீங்கள் தந்த இணைப்பில் சுவாமிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார் என்றிருக்கிறது. இந்த கத்தோலிக்க கல்லூரியில் அந்த காலத்து ஐரிஷ் நிர்வாகம் எப்படி சைவரான சுவாமிகளை மாணவராக ஏற்றுக் கொண்டது?

Link to comment
Share on other sites

18 hours ago, Maharajah said:

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

மஹாராஜா,

கேள்விக்கு நன்றி. 😊காலங்காலமாக ஆதங்கங்களை வெளிப்படுத்தி என்ன பயன் கண்டோம் எனத் தெரியவில்லை, இது போன்ற கருத்துக்களங்களில். அது மக்களைப் பிரிப்பதற்கு வழி செய்கிறது. நியாயமான ஆதங்கங்கள்/கேள்விகளை நம் குடும்பத்தினருடன், நெருங்கிய நண்பர்கள், உறவுகளுடன், சரியாக வழிகாட்டக் கூடிய ஆசான்கள், ஆன்மீக ஞானிகள் போன்றோருடன் நேருக்கு நேர் உரையாடியே தெளிவு பெற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

ஆகக் குறைந்தது இது போன்ற நம்மில் பலரும் போற்றும் மகானுடைய நற்சிந்தனைகள் பற்றிய திரியிலாவது இவற்றைத் தவிர்த்தல் நலம் என எண்ணுகிறேன்.

ஊர்கூடித் தேர் இழுப்பதில் உள்ள ஆனந்தம் எதிர் எதிர் திசையில் கயிறிழுவைப் போட்டியில் பங்கேற்கும் பொழுது கிடைப்பதில்லை.

இங்கு ஏற்கனவே உறவுகள் ஆரம்பித்து விட்ட ஆரோக்கியமான உரையாடலே நாம் எல்லாம் கூடித் தேர் தான் இழுக்கப் போகிறோம் என்பதைக் கட்டியம் கூறுகின்றன.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நேரமிருக்கும் போது தொடருங்கள். 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.