Jump to content

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்


Recommended Posts

17 hours ago, goshan_che said:

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

கோஷன்,

சுவாமிகள் பற்றிய உங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி.

இங்கு பகிர்வதற்கு உங்களிடம் ஏராளம் தகவல்கள் இருக்கும் என நினைக்கிறேன். 

ஞானிகளின் செய்கைகள் நீங்கள் இங்கு குறிப்பிட்டது போல சில சமயங்களில் விந்தையாக இருப்பதாகப் படித்திருக்கிறேன். 

மேலும் உங்கள் தகவல்களை வாசிக்க ஆவல். 😊

 

16 hours ago, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம்,  உங்கள் பகிர்தலை நானும் வரவேற்கிறேன். யோகர் சுவாமிகளின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அவரது பணிகள் பற்றி அறியவில்லை. இப்பகிர்வின் மூலம் தெரிந்து கொள்வேன்.

ஜெகதா,

சுருக்கமான வரலாற்று தொடர்பான இணைப்பை இத்திரியின் ஆரம்பத்தில் நானும், wiki இணைப்பை ஏராளனும் பகிர்ந்துள்ளோம். தவிரவும் இங்கு பாஞ்ச் அண்ணா, கோஷன் போன்றவர்கள் பகிரும் சுவாமிகள் பற்றிய நேரடி அனுபவங்களும் நமக்கு பயனுள்ளதாக அமையும்.

நற்சிந்தனைகள் பற்றிய உங்கள் எண்ணங்களையும் இங்கு பகிரலாம். நன்றி 😊

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
16 hours ago, Jude said:

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

ஜூட்,

இத்தளத்தை நேற்றுத் தான் முதன்முதலில் பார்த்தேன். சிவத்தமிழ்ச் செல்வி பற்றி அங்கு இணைக்காததன் காரணம் எனக்குத் தெரியவில்லை. 

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. 😊

Link to comment
Share on other sites

13 hours ago, uthayakumar said:

மன அழுக்குகளினால் மனிதன் அமைதி இழந்து படும் எரிச்சல் வேதனை துன்பம் பொறாமை இவை அனைத்து பற்றியும் தத்துவவியாளரர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவே மனதை கட்டி சும்மாய் இரு என்ற சூத்திரத்தை சொல்லி தந்தார் சுவாமி யோகர் சுவாமிகள்.ஆசையும் பாசமுமாக அலையும் எம் போன்றவர்களால் சும்மா இருக்கவும் முடியவில்லை மனதை கட்டவும் தெரியவில்லை .நல்ல பதிவு மல்லிகை வாசம் வாழ்த்துக்கள் .அன்பே சிவம் 

உதயன்,

உலகியல் போகங்களை முழுவதுமாகத் துறக்க முடியாத நமக்கு இவர்கள் போன்ற மகான்கள் தான் அவ்வப்போது மனத்தெளிவைத் தந்து வழித்துணையாக இருக்கிறார்கள். 

வாழ்வின் எல்லை வரையான பயணத்தில் இவர்களது தத்துவங்கள் நம்மைத் தொலையவிடாது காக்கின்றன.

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. 😊

அன்பே சிவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அவரா என்பது சரியாக நியாபகம் இல்லை. இவை எல்லாம் என் பாட்டனாரின் ஈசிச்சேரில் அருகே இருந்தபடி கேட்ட கதைகள். அவருக்கும் நியாபகம் மங்கத் தொடங்கிய, எனக்கும் கதை கேட்கும் சுவாரசியம் மட்டுமே இருந்த காலம் அது. ஆகவே தகவல்கள் பலதும் மங்கலாகவே நியாபகம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

   

 

 

 

 

அருமையான பாடல்கள்.இணைப்பிற்கு நன்றி  கோசான்.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

   

 

 

 

 

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் இப்பாடல்களைக் கேட்கிறேன். அதிகாலையில் கேட்பதற்கு அருமையாக இருக்கும். 

மீள்நினைவூட்டியமைக்கு நன்றி, கோஷன். 😊

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

மஹாராஜா,

கேள்விக்கு நன்றி. 😊காலங்காலமாக ஆதங்கங்களை வெளிப்படுத்தி என்ன பயன் கண்டோம் எனத் தெரியவில்லை, இது போன்ற கருத்துக்களங்களில். அது மக்களைப் பிரிப்பதற்கு வழி செய்கிறது. நியாயமான ஆதங்கங்கள்/கேள்விகளை நம் குடும்பத்தினருடன், நெருங்கிய நண்பர்கள், உறவுகளுடன், சரியாக வழிகாட்டக் கூடிய ஆசான்கள், ஆன்மீக ஞானிகள் போன்றோருடன் நேருக்கு நேர் உரையாடியே தெளிவு பெற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

ஆகக் குறைந்தது இது போன்ற நம்மில் பலரும் போற்றும் மகானுடைய நற்சிந்தனைகள் பற்றிய திரியிலாவது இவற்றைத் தவிர்த்தல் நலம் என எண்ணுகிறேன்.

ஊர்கூடித் தேர் இழுப்பதில் உள்ள ஆனந்தம் எதிர் எதிர் திசையில் கயிறிழுவைப் போட்டியில் பங்கேற்கும் பொழுது கிடைப்பதில்லை.

இங்கு ஏற்கனவே உறவுகள் ஆரம்பித்து விட்ட ஆரோக்கியமான உரையாடலே நாம் எல்லாம் கூடித் தேர் தான் இழுக்கப் போகிறோம் என்பதைக் கட்டியம் கூறுகின்றன.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நேரமிருக்கும் போது தொடருங்கள். 😊

நன்றி மல்லிகை, 

எனது கேள்விகள் சமயத்தின் நம்பிக்கை , கோட்பாடு சார்ந்ததல்ல.  சைவ சமயத்தின் தலைமை,   அதன் செயட்பாடு,  பண்பாட்டுப் படையெடுப்பு,  போராட்டம் சார்ந்து  அதன் பங்களிப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்டது.  

எனது கேள்விகள் திரியின் நோக்கத்தை குழப்பக் கூடாது என்பதால் அதனை இங்கு தவிர்க்கிர்றேன்.  

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்த சம்பவம் யோகர் சுவாமிகளின் குரு செல்லப்பா சுவாமியால் நிகழ்த்தப்பட்டது.
சமையல் செய்ய சீடரை பணித்துவிட்டு அது நிறைவுறும் நேரம் கவிழ்த்து கொட்டியது செல்லப்பா சுவாமிகள்.

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. முன்பே சொன்னது போல சுமார் 30 வருடங்களுக்கு முன் மிக இளவயதில் வாய்வழி கேட்ட கதைகள்- தகவல்கள் பலவும் பிழையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை முதல் பார்த்த பொழுது எழுத எண்ணியது, நேரமின்மையால் இப்பொது சொல்கிறேன்.

இந்த கதையை கேட்டு அறிந்தேனா அல்லது வசித்து அறிந்தேனா என்பது நினைவில்லை.

கடையில் சுவாமிகள் பற்றியது.

கடையில் சுவாமிகள் ஆங்காங்கு, அவ்வப்போது , உணவை அடியவர்களிடமும், கடைகளிலும் கேட்டு, அவர்கள் கொடுத்ததை உண்டு வந்தார்.

கடையில் சுவாமிகள் என்பதால், அது அவருக்கு கேட்ட  பொழுது உணவு கிடைத்தது.

இதைப்பார்த்து, சிலர்,  உணவு தேவைக்காக, கடையில் சாமிகளிடம்  சீடராக சேர்ந்தனர். 

சேரும் போதே,   நீங்கள் இந்த சீடரக இருபாதை விடுத்தது, வேறு வேலை   பொருத்தம் என்று அப்படிப்பட்ட சீடர்களிடம் அறிவுரை கூறினார். ஆனால், காரணத்தையோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அந்த சீடர்களை வற்புறத்தவில்லை.

ஓர் நண்பகல், மிகுந்த வெய்யில் நேரம், எனக்கு பசிக்கிறது என்று சீடர்களையும் சேர்த்துக்கொண்டு, உணவை பெறுவதற்காக  ஓர் கொல்லர் (இதை சாதி பெயர் பாவிக்காமல் எழுத முடியாது, ஆனால் இறந்த வரியின் பின் தவிர்க்கப்படும்) பட்டடையை வந்தடைந்தார்.

இந்த பட்டடை, காங்கேசன் துறை வீதியில் இருந்ததாக நினைவு .

பட்டடையில், அப்போது இரும்பு காய்ச்சப்பட்டு, ஊற்றுமளவிற்கு, பாணித்தன்மைக்கு வந்திருந்தது. 

  பட்டடையில் இரும்பை காய்ச்சிக்கொண்டு நின்றவரிடம்,  பசிக்கிறது, நீ சமைத்த பாணியை (அல்லது பானத்தை, பாணக்கத்தை, கூழை என்று பொருள் படத்தக்கதாகவே கடையில் சாமிகள் கேட்டார்), கொஞ்சம் ஊற்று என்று சொல்லி, உள்ளங்கையை கோணி நீட்டினார். 

காய்ச்சியவருக்கு அதிர்ச்சியும், தயக்கமும், சாமிகள் ஊற்று என்று உறுக்கமாக அறிவுறுத்த, காய்ச்சியவரும் ஊற்றினார், கடையில் சாமிகள் சிவம் என்று சொல்லிக்கொண்டே, கோணிய கையில் தங்கிய, காய்ச்சிய இரும்பு பாணியை பருகினார்.

சீடர்களை பார்த்து, ஏன் பார்க்கிறீர்கள், நீங்களின் வந்து இந்த பானத்தை வாங்கி பருகுங்கள், பசி தீரும் என்று சொல்ல, சீடர்கள் ஓட்டமெடுத்தனர். 

Link to comment
Share on other sites

On 11/3/2019 at 5:20 PM, Jude said:

நீங்கள் தந்த இணைப்பில் சுவாமிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார் என்றிருக்கிறது. இந்த கத்தோலிக்க கல்லூரியில் அந்த காலத்து ஐரிஷ் நிர்வாகம் எப்படி சைவரான சுவாமிகளை மாணவராக ஏற்றுக் கொண்டது?

ஜூட்,

சுவாமிகளின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய உங்களின் கேள்விக்குப் பின்வரும் தகவல்கள் விடை தரலாம் என நினைக்கிறேன்:

"சரித்திரப்பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே சைவ வேளான் குலத்தில் அம்பலவாணர் என்னும் சைவப்பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது தர்மபத்தினி சின்னாச்சி அம்மையார். இவர்களது பூர்வ புண்ணிய விசேடத்தினாலே 29-05-1872இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். அம்பலவாணரின் சகோதரர் சின்னையா என்பவர் கொழும்புத்துறையைச்சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருவரை திருமணம்செய்து தமதுபெயரை யோசேப்பு என்றும் மாற்றிக்கொண்டார்.

அம்பலவாணர் மஸ்கெலியா என்ற மலைப்பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யேர்சேப்பு கவனித்து வந்தார். அதனால் யோகநாதன் மாவிட்டபுரத்தைவிட்டு கொழும்புத்துறையில் வாழவேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப்பாடசாலைகள் மிகமிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்கப்பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடையவராயும், புத்தி யுக்தி உள்ளவராயும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது எட்டாயிருக்கும்போது தாயார் இறந்துவிட்டார்.

சிறியதந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக்கல்வி கற்கும்பொருட்டு செம்பத்திரிசியார் கல்லூரியில் இணைக்கப்பட்டார். பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தந்தைவழி மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள்."

மூலம்: https://www.thejaffna.com/eminence/யோகர்-சுவாமிகள்

 

 

 

Link to comment
Share on other sites

On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

நன்றி மல்லிகை, 

எனது கேள்விகள் சமயத்தின் நம்பிக்கை , கோட்பாடு சார்ந்ததல்ல.  சைவ சமயத்தின் தலைமை,   அதன் செயட்பாடு,  பண்பாட்டுப் படையெடுப்பு,  போராட்டம் சார்ந்து  அதன் பங்களிப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்டது.  

எனது கேள்விகள் திரியின் நோக்கத்தை குழப்பக் கூடாது என்பதால் அதனை இங்கு தவிர்க்கிர்றேன்.  

புரிதலுக்கு நன்றி, மஹாராஜா. 😊 

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி உரையாடச் சுவாரசியமாக இருக்கும் தான். எனினும் எனது கூடுதல் கவனம் ஆன்மீகம் மற்றும் சமகால சைவம்/இந்து மத விடயங்களில் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி மிக விரிவாக ஆராய நேரம் போதுமானதாக இல்லை. தவிரவும் இவை பற்றிய உரையாடல்கள் முடிவற்றவை; பல நூற்றாண்டு/ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கால வரலாற்றை ஆராய்வதில் உள்ள சிக்கல் நீங்கள் அறிந்ததே.

இது போன்ற ஆய்வுகளில் அதீத கவனம் செலுத்தினால் எனது கவனம் சிதறிவிடுமோ என்ற ஒரு முன்னெச்சரிக்கையுடன் இவற்றைத் தவிர்க்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. 😊

Link to comment
Share on other sites

On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள். 

பலரும் அறிந்தபடி யோகர் சுவாமிகள் நல்லூர்க் கந்தன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பாடல்களும் பாடியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் கீழே:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி - கிளியே
இரவுபகல் காணேனெடி

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே
நல்லூரான் தஞ்சமெடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி - கிளியே
கவலையெல்லாம் போகுமெடி

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் - கிளியே
காவல் அறிந்திடெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமெடி

பரிதிகாயில் வாடாது
பவனம்வீசில் வீழாது
பரவைசூழில் ஆழாதெடி - கிளியே
படைகள் மோதில் மாயாதெடி

அந்தமாதி இல்லாத
ஆன்மாவே நாங்களென்று
சிந்தைதந்த செல்வனெடி - கிளியே
சீரார்நல்லூ ராசானெடி

வந்ததிலும் போனதிலும்
மனதைவை யாதேயென
விந்தையுடன் சொன்னானெடி - கிளியே
விளங்குநல்லூர் வாசனெடி

சாதனை செய்தபேர்கள்
சாகார் உலகிலெனக்
காதலுடன் சொன்னானெடி - கிளியே
கலங்காத வீரனெடி

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாடல்பத்தும்
பூமியிற் சொன்னாலெடி - கிளியே
பொல்லாங்கு தீருமெடி

Link to comment
Share on other sites

On 11/3/2019 at 9:55 PM, Maharajah said:

தயவு செய்து ஈழத்து சித்தர்களை குறிப்பிடும் பொழுது அவர்களின் வழிபாட்டு முறைகள்,  அவர்கள் சைவ சமயத்தின் எந்தெந்த கடவுளரை வழிபட்டனர் என்பதையும் முடிந்தால் அதட்கான மூலங்களையும் இணையுங்கள்.

நல்லூர்க் கந்தன் மீது ஈடுபாடு கொண்டவராயினும் சுவாமிகளின் நற்சிந்தனைகளைப் படித்த போது அவர் மதங்களையும் கடந்தவர் என்று எனக்குப் புலப்பட்டது.

உதாரணமாகச் சுவாமிகள் அருளிய பின்வரும் நற்சிந்தனைகளைப் பார்ப்போம்:

"எல்லாச் சமயங்களும் உண்மையைக் கூறுகின்றன. நீ இங்கிருந்து பெறலாம். அங்கிருந்து பெறலாம். அவையெல்லாம் ஒன்றே"

(சுவாமிகளுக்கு சைவர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மதங்களிலும் பக்தர்கள் இருந்தனர்.)

"மனிதனுக்கு ஒழுங்கு தான் பெரிது. நாஸ்திகரில் அநேகர் ஒழுங்காக இருக்கிறார்கள்."

என்னைப் பொறுத்தவரை யோகர் போன்ற சித்தர்கள் ஆன்மீக ஏணியின் உச்சியை எட்டிய பின்னர் மதம் என்ற பாதை தேவையாக இருக்கவில்லை. அதற்காக மதங்களை வெறுத்தார் என்பது அர்த்தமல்ல. உயரிய ஆன்ம ஞானத்தை அடைந்த இவர்கள் விருப்பு வெறுப்புக்களைக் கடந்தவர்கள். மதம் மீதான பற்று இவர்களுக்கு இல்லை; வெறுப்பும் இல்லை. அனைத்தையும் சமமாகப் பார்க்கும் பக்குவ நிலையில் இருந்தார்கள்.

இவ்வாறு இன்னும் நிறைய எழுதலாம். மீதியை இனிவரும் காலங்களில் தொடர்கிறேன். 😊

Link to comment
Share on other sites

6 hours ago, Kadancha said:

கடையில் சுவாமிகள் பற்றியது.

  பட்டடையில் இரும்பை காய்ச்சிக்கொண்டு நின்றவரிடம்,  பசிக்கிறது, நீ சமைத்த பாணியை (அல்லது பானத்தை, பாணக்கத்தை, கூழை என்று பொருள் படத்தக்கதாகவே கடையில் சாமிகள் கேட்டார்), கொஞ்சம் ஊற்று என்று சொல்லி, உள்ளங்கையை கோணி நீட்டினார். 

காய்ச்சியவருக்கு அதிர்ச்சியும், தயக்கமும், சாமிகள் ஊற்று என்று உறுக்கமாக அறிவுறுத்த, காய்ச்சியவரும் ஊற்றினார், கடையில் சாமிகள் சிவம் என்று சொல்லிக்கொண்டே, கோணிய கையில் தங்கிய, காய்ச்சிய இரும்பு பாணியை பருகினார்.

சீடர்களை பார்த்து, ஏன் பார்க்கிறீர்கள், நீங்களின் வந்து இந்த பானத்தை வாங்கி பருகுங்கள், பசி தீரும் என்று சொல்ல, சீடர்கள் ஓட்டமெடுத்தனர். 

கடஞ்சா,

சித்தர்களின் இது போன்ற அற்புதங்கள் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் பேசமாட்டாதவர்களான இவர்கள் போன்ற ஞானிகளின் செயல்கள் விநோதமானவை; இங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிறருக்குப் பாடம் புகட்டுபவையும் கூட! 😊

ஈழத்து சித்தர் பரம்பரையில் முன்னையவராக நாம் அறிந்த கடையிற் சுவாமிகள் யாரிடமிருந்து இவ்வாறான சித்திகளைப் பெற்றார், இவரது குரு யார் என்ற விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள முடியுமா?

பகிர்வுக்கு நன்றி கடஞ்சா. 😊

Link to comment
Share on other sites

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"எல்லோரும் எனது ஆசான்களாகும். நான் எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் எனக்குத் தேவையானதை எடுத்து மேலும் செல்கிறேன். மற்றவர்களும் அவ்வாறே; நீ இதனை அனுபவத்தில் அறிய வேண்டும். அப்போது உண்மையை அறிவாய்."

இந்த நற்சிந்தனை தொடர்பான எனது புரிதல்:

இந்த நற்சிந்தனை ஓரளவுக்கு எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியது. "எல்லோரும் எனக்கு ஆசான்களாகும்" என்பது பற்றிய எனது புரிதல் 'நம் வாழ்வில் நாளாந்தம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் - சிறியவர் முதல் பெரியோர் வரை, அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், நமக்கு ஏதோ ஒரு வகையில் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது பேச்சு, செயல்கள் அவர்கள் அறியாமலே நமக்கு ஏதோ ஒரு பாடம் புகட்டும். எனவே எவரையும் தாழ்வாக எண்ணக்கூடாது என்றும் கொள்ளலாம். 

இங்கு "உண்மை" என்பது நமக்கு மேலான ஒரு சக்தியை - இறைவனை அறிவதைப் பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரிடமிருந்தும் பெற்ற அறிவுகளின் தொகுப்பால் பெற்ற உயரிய ஞானம் என்பதாகவும் இருக்கலாம்.

கள உறவுகளே, இந்த நற்சிந்தனை பற்றி உங்களுடைய புரிதலையும் இங்கு பதியலாம். 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' எனும் வள்ளுவன் வாக்கிற்கு அமைய உங்கள் விளக்கமும் இந்த நற்சிந்தனையின் தெளிவான பொருளை அறிய எங்கள் எல்லோருக்கும் உதவும். "எல்லோரும் எமக்கு ஆசான்களே!" 😊

Link to comment
Share on other sites

நற்சிந்தனையில் தொடங்கி  கொதித்து உருகி பாணி நிலையில் உள்ள இரும்பை கடையியல் சாமியார் உள்ளங்கையில் ஏந்தி பருகினார் என்ற மூடத்த‍னத்தை கூறும் வரைக்கும் நிலைமை உள்ளது. சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார்.  இது சாதாரணமாக அடிப்படை அறிவு உள்ள எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

நான் ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகம் என்ற அழகான வார்த்தையை முகமூடியாக போட்டுகொண்டு  மக்களுக்கு வடிகட்டிய முட்டாள்தனத்தை விதைப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  நானும் சிறு வயதில் இப்படிப்பட்ட  புலுடாக்களை நம்பியும் உள்ளேன். இது தான் அற்புதங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்கு சாமியார்களுக்கு உறுதுணையாக உள்ளது. 

நற்சிந்தனை என்பது  ஒரு  ஆன்மீக வாதி மக்களுக்கு தனது அனுபவ பாடங்களில் இருந்து மக்களுக்கு கொடுக்கும் அறிவுரை.  இதற்கு எந்த புனிதமோ அற்புதமே இல்லை. எந்த சாமியராக இருந்தாலும் 230 வோல்டேஜ் மின்சார கம்பியை தொட்டால் அந்த நிமிடமே அவரது கதி அதோகதி அவ்வளவு தான். இது தான் ஜதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார். 

விஞ்ஞானம், நான் அறிந்தது.

கேள்விப்பட்டதையே எழுதினேன்.

ஆனாலும், இயேசு உயிர்த்திருக்கிறார் என்பதை விஞ்ஞானம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

விஞ்ஞானத்தை  பாவித்து, விஞ்ஞானிகளின் அறிவு கண்களுக்கு புலப்படக்கூடியதையே அறிய முடியும்.

விஞ்ஞானம் கூட கற்றது கைம்மண்ணளவு என்பதற்கு விதிவிலக்கல்ல, இதுவரை அடைந்த பூரண விஞ்ஞான வளர்ச்சியை கருத்தில் எடுத்தாலும்.

விஞ்ஞானத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூகங்கள் கூட, அப்படி அடையாததவர்களில் இருந்து, அந்த வளர்ச்சிக்கு வேண்டிய நேரத்திலும் வளத்தாலும் மட்டுமே கடந்து நிற்கின்றன. 

மாறாக, விஞ்ஞானத்தை பாவிக்கக்கூடியவர்களின்  வளங்களும், நேரமும், தற்போது விஞ்ஞான வளர்ச்சி  அடையாதவர்களிடம் இருக்குமாயின், வளர்ச்சி அடைந்தவர்களின் அறிவு மட்டத்திலேயே  அப்படி வளர்ச்சி அடையாதவர்களின் விஞ்ஞான மதிக்கும், கண்களுக்கும் விஞ்ஞானம் புலப்படக்கூடியதாக இருக்கும். அறிவு மட்டம் ஒரு போதுமே வேறுபடாது.

 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நற்சிந்தனையில் தொடங்கி  கொதித்து உருகி பாணி நிலையில் உள்ள இரும்பை கடையியல் சாமியார் உள்ளங்கையில் ஏந்தி பருகினார் என்ற மூடத்த‍னத்தை கூறும் வரைக்கும் நிலைமை உள்ளது. சாதாரணமாக இரும்பு உருக தொடங்கும் வெப்பநிலை 1538  சென்றிகிரேட்.  அது உருகி பாணியாக வேண்டுமென்றால் 2862 சென்றிகிறேட் வெப்பநிலையை அடைய வேண்டும். அந்த வெப்பநிலையில் உள்ள இரும்பு பாணியை கடையியற் சாமியார் உண்மையில் பருகி இருப்பாரேயானால் அந்த நிமிடமே துடிதுடித்து அந்த இடத்திலேயே மண்டையை போட்டிருப்பார்.  இது சாதாரணமாக அடிப்படை அறிவு உள்ள எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

நான் ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகம் என்ற அழகான வார்த்தையை முகமூடியாக போட்டுகொண்டு  மக்களுக்கு வடிகட்டிய முட்டாள்தனத்தை விதைப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  நானும் சிறு வயதில் இப்படிப்பட்ட  புலுடாக்களை நம்பியும் உள்ளேன். இது தான் அற்புதங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்கு சாமியார்களுக்கு உறுதுணையாக உள்ளது. 

நற்சிந்தனை என்பது  ஒரு  ஆன்மீக வாதி மக்களுக்கு தனது அனுபவ பாடங்களில் இருந்து மக்களுக்கு கொடுக்கும் அறிவுரை.  இதற்கு எந்த புனிதமோ அற்புதமே இல்லை. எந்த சாமியராக இருந்தாலும் 230 வோல்டேஜ் மின்சார கம்பியை தொட்டால் அந்த நிமிடமே அவரது கதி அதோகதி அவ்வளவு தான். இது தான் ஜதார்த்தம். 

நற்சிந்தனை பற்றிய திரியில் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விவாத களமாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: 

"பூகம்பம் கெடுதி செய்தால் யாம் திருப்பிக் கெடுதி செய்கிறோமா? பேசாமல் இருப்போம். அதேபோல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; எல்லாங் கடவுளே."

 

Link to comment
Share on other sites

யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்:

***"மலையேறுவதற்கு உதவும் ஊன்றுகோலைப் போலவே ஒழுக்கத்தை ஆன்ம வளர்ச்சிக்கு அனுசரிக்க வேண்டும்."

***"தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனால் ஆவதென்ன?"

***"உங்களுக்கு ஒரு குறைவுமில்லை. உங்களை இன்னார் என்று அறியாதது தான் குறை."

 

Link to comment
Share on other sites

16 hours ago, மல்லிகை வாசம் said:

நற்சிந்தனை பற்றிய திரியில் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விவாத களமாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவும்.

நன்றி

நற்சிந்தனை பற்றிய திரியில் யதார்தமான ஆன்மீக அறிவுரைகளை மட்டும் இணைக்கவும். உண்மைக்கு புறம்பான எதிர்மறையான இட்டுக்கட்டப்பட்ட கேட்பவர்களை மடையனாக்க கூடிய கதைகள் வரும்போது அங்கு விவாதம் தவிர்கக முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நற்சிந்தனை பற்றிய திரியில் யதார்தமான ஆன்மீக அறிவுரைகளை மட்டும் இணைக்கவும். உண்மைக்கு புறம்பான எதிர்மறையான இட்டுக்கட்டப்பட்ட கேட்பவர்களை மடையனாக்க கூடிய கதைகள் வரும்போது அங்கு விவாதம் தவிர்கக முடியாதது. 

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

இங்கு யோகர் சுவாமியின் யோகாவால் சித்தி பெற்று முத்தி அடைந்த பலர் 
கிறிஸ்தவத்தையும் ஜேசுவையும் பற்றி முடிந்தளவுக்கு சேறடித்தவர்கள்தான் .... அந்த ஈரம் காயுமுன்பு
அதே  கையால்தான் இங்கு சுவாயின் ஞானத்தை தெளிக்கிறார்கள்.
அது பற்றி நிர்வாகத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியானதுதான்.

ஞானிகள் ... சித்தர்கள் ..... பக்தியிலே முத்தி கண்ட சுவாமிகள் எல்லோரும் கடவுளை தமுக்குள்ளே கண்டவர்கள்  அவர்கள் எந்த மூடங்களுக்கும் எப்போதும் துணைபோனது கிடையாது. யோகர் சுவாமிகளும் அப்படியான  ஒரு நிலையைத்தான் இறுதிக்காலத்தில் எட்டி இருக்கிறார். இவர்கள் எந்த கடவுளையும் குறிப்பது கிடையாது  மனிதர்களை பிரிப்பது கிடையாது ... அவர்களை பொறுத்தவரை கிறிஸதவர்கள்  முஸ்லிம்கள்  (இந்துக்கள் என்று பெயர் கொண்டு கடவுள் யார் கொள்கை குறிக்கோள் என்று தெரியாத கூட்டத்தினர்)   என்று யாரையும் பிரிப்பதில்லை. இப்படியானவர்கள் எமது மண்ணிலும் வாழ்ந்திருப்பது எமக்கும் பெருமைதான்  அவர்களை பற்றி நாம் அறிந்தவைகளை பகிர்வது மிகவும் நன்று. 

அவர்கள் சொல்லவந்த எதையும் காதில் போடாது அவர்களது பாடலை கேட்பதால் ....
பாடல்களின் வரிகளை கூட உள்வாங்காது திரும்ப திரும்ப கேட்பதால் தாமும் ஒரு 
புனித நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு சமூகம் ..... எவ்வாறு சாதி பிரிவினைகளுக்கு 
உடன்பட்டு மறைமுகமாக ஏற்ற தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு இன்னொரு சக மனிதனை துன்புறுத்த துணிந்தததோ .... கிட்டதட்ட அதே மனநிலையில்தான்.................  
நாம் யோகர் சுவாமி மற்ற இன்னபிற மூட சுவாமிகளையும் பற்றி பகிர்ந்து பக்தியிலே மூழ்க போகிறோம்.
கருத்துகளத்தில் கருத்து பதிய வருபவர்கள் மீது ஒரு கண் வையுங்கள் என்று நிர்வாகத்தை  நோக்கி எழுத்தில் எழுத தோன்றுகிறது. 

எனக்கு இந்த திரி போகும் போக்கை பார்க்கும்போது தற்போதைய அமெரிக்க அரசியலும் 
ட்ரம்மின் குளறுபடியும் ஒரே பாதையில் போவது கண்டு முதலில் சிரிப்பாக இருந்தது. 
சாட்ச்சிகளை சாட்ச்சி சொல்ல விடாமல் தடுத்துக்கொண்டு ....  அதுபற்றிய விவாதத்தை கூட நடக்காமல் குடியரசு கட்சி ஊடக பார்த்துக்கொண்டு ....... தான் ஒரு சுத்தவாளி என்று சொல்லிக்கொள்வதுபோலதான் இதுவும். 

பிரபாகரன் 
மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் 
ஜேசு கிறிஸ்த்து 
முன்னைநாள் இன்னைநாள் அரசியல்வாதிகள் 
அரசர்கள்  மன்னர்கள் 

யாருக்கும் இல்லாத ஒரு வரையறையை யாழ்ப்பாணத்தில் பிறந்த சுவாமிகளுக்கு தாருங்கள் என்பதும் 
அதை கொடுக்க நிர்வாகம் தலைப்படுவதும். இவர்கள் எல்லோருமே சாதி வெறியில் ஊறியவர்கள் என்பதையும்  அதை இன்னொரு வடிவில் சீர்ஆட்ட இந்தநிலைக்கு வந்திருப்பதுபோலவுமே இருக்கிறது.

இந்த லட்ஷணத்தில்தான் ..........
யோகர் சுவாமிகள் என்ற மகான் வாழவேண்டும் என்ற நிலை வரும் என்று தெரிந்திருந்தால் 
யோகர் சுவாமிகள் தற்கொலை செய்து செத்திருப்பார். 

Link to comment
Share on other sites

21 hours ago, Kadancha said:

விஞ்ஞானம், நான் அறிந்தது.

கேள்விப்பட்டதையே எழுதினேன்.

ஆனாலும், இயேசு உயிர்த்திருக்கிறார் என்பதை விஞ்ஞானம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

விஞ்ஞானத்தை  பாவித்து, விஞ்ஞானிகளின் அறிவு கண்களுக்கு புலப்படக்கூடியதையே அறிய முடியும்.

விஞ்ஞானம் கூட கற்றது கைம்மண்ணளவு என்பதற்கு விதிவிலக்கல்ல, இதுவரை அடைந்த பூரண விஞ்ஞான வளர்ச்சியை கருத்தில் எடுத்தாலும்.

விஞ்ஞானத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூகங்கள் கூட, அப்படி அடையாததவர்களில் இருந்து, அந்த வளர்ச்சிக்கு வேண்டிய நேரத்திலும் வளத்தாலும் மட்டுமே கடந்து நிற்கின்றன. 

மாறாக, விஞ்ஞானத்தை பாவிக்கக்கூடியவர்களின்  வளங்களும், நேரமும், தற்போது விஞ்ஞான வளர்ச்சி  அடையாதவர்களிடம் இருக்குமாயின், வளர்ச்சி அடைந்தவர்களின் அறிவு மட்டத்திலேயே  அப்படி வளர்ச்சி அடையாதவர்களின் விஞ்ஞான மதிக்கும், கண்களுக்கும் விஞ்ஞானம் புலப்படக்கூடியதாக இருக்கும். அறிவு மட்டம் ஒரு போதுமே வேறுபடாது.

 

கடஞ்சா 

நான் விஞ்ஞானத்தைப்பற்றி இங்கு கூற வரவில்லை. நான் கூறியது இந்த உலகில்  வாழும் மக்களின் பொதுஅறிவு ( common sense) எனப்படும்  அடிப்படை அறிவைப்பற்றியது. ஆன்மீக  நற்சிந்தனைகள் அதை எவர் கூறினாலும்  அது  பூமியில் வாழும் மனிதர்களின் அறிவு வளர்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். மனிதர்களின் பொது அறிவு ஏற்றுக்கொள்ளாத விடயங்களை நற்சிந்தனை என்ற பெயரில் கூறுவது மக்களின் ஆன்மீக அறிவை வளப்பதற்கு பதிலாக  எதிமறையான விளைவுகளை கொடுக்கும். 

எப் பொருள் யார் யார்  வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

இங்கு யோகர் சுவாமியின் யோகாவால் சித்தி பெற்று முத்தி அடைந்த பலர் 
கிறிஸ்தவத்தையும் ஜேசுவையும் பற்றி முடிந்தளவுக்கு சேறடித்தவர்கள்தான் .... அந்த ஈரம் காயுமுன்பு
அதே  கையால்தான் இங்கு சுவாயின் ஞானத்தை தெளிக்கிறார்கள்.
அது பற்றி நிர்வாகத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியானதுதான்.

ஞானிகள் ... சித்தர்கள் ..... பக்தியிலே முத்தி கண்ட சுவாமிகள் எல்லோரும் கடவுளை தமுக்குள்ளே கண்டவர்கள்  அவர்கள் எந்த மூடங்களுக்கும் எப்போதும் துணைபோனது கிடையாது. யோகர் சுவாமிகளும் அப்படியான  ஒரு நிலையைத்தான் இறுதிக்காலத்தில் எட்டி இருக்கிறார். இவர்கள் எந்த கடவுளையும் குறிப்பது கிடையாது  மனிதர்களை பிரிப்பது கிடையாது ... அவர்களை பொறுத்தவரை கிறிஸதவர்கள்  முஸ்லிம்கள்  (இந்துக்கள் என்று பெயர் கொண்டு கடவுள் யார் கொள்கை குறிக்கோள் என்று தெரியாத கூட்டத்தினர்)   என்று யாரையும் பிரிப்பதில்லை. இப்படியானவர்கள் எமது மண்ணிலும் வாழ்ந்திருப்பது எமக்கும் பெருமைதான்  அவர்களை பற்றி நாம் அறிந்தவைகளை பகிர்வது மிகவும் நன்று. 

அவர்கள் சொல்லவந்த எதையும் காதில் போடாது அவர்களது பாடலை கேட்பதால் ....
பாடல்களின் வரிகளை கூட உள்வாங்காது திரும்ப திரும்ப கேட்பதால் தாமும் ஒரு 
புனித நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு சமூகம் ..... எவ்வாறு சாதி பிரிவினைகளுக்கு 
உடன்பட்டு மறைமுகமாக ஏற்ற தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு இன்னொரு சக மனிதனை துன்புறுத்த துணிந்தததோ .... கிட்டதட்ட அதே மனநிலையில்தான்.................  
நாம் யோகர் சுவாமி மற்ற இன்னபிற மூட சுவாமிகளையும் பற்றி பகிர்ந்து பக்தியிலே மூழ்க போகிறோம்.
கருத்துகளத்தில் கருத்து பதிய வருபவர்கள் மீது ஒரு கண் வையுங்கள் என்று நிர்வாகத்தை  நோக்கி எழுத்தில் எழுத தோன்றுகிறது. 

எனக்கு இந்த திரி போகும் போக்கை பார்க்கும்போது தற்போதைய அமெரிக்க அரசியலும் 
ட்ரம்மின் குளறுபடியும் ஒரே பாதையில் போவது கண்டு முதலில் சிரிப்பாக இருந்தது. 
சாட்ச்சிகளை சாட்ச்சி சொல்ல விடாமல் தடுத்துக்கொண்டு ....  அதுபற்றிய விவாதத்தை கூட நடக்காமல் குடியரசு கட்சி ஊடக பார்த்துக்கொண்டு ....... தான் ஒரு சுத்தவாளி என்று சொல்லிக்கொள்வதுபோலதான் இதுவும். 

பிரபாகரன் 
மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் 
ஜேசு கிறிஸ்த்து 
முன்னைநாள் இன்னைநாள் அரசியல்வாதிகள் 
அரசர்கள்  மன்னர்கள் 

யாருக்கும் இல்லாத ஒரு வரையறையை யாழ்ப்பாணத்தில் பிறந்த சுவாமிகளுக்கு தாருங்கள் என்பதும் 
அதை கொடுக்க நிர்வாகம் தலைப்படுவதும். இவர்கள் எல்லோருமே சாதி வெறியில் ஊறியவர்கள் என்பதையும்  அதை இன்னொரு வடிவில் சீர்ஆட்ட இந்தநிலைக்கு வந்திருப்பதுபோலவுமே இருக்கிறது.

இந்த லட்ஷணத்தில்தான் ..........
யோகர் சுவாமிகள் என்ற மகான் வாழவேண்டும் என்ற நிலை வரும் என்று தெரிந்திருந்தால் 
யோகர் சுவாமிகள் தற்கொலை செய்து செத்திருப்பார். 

மருது,

1. இங்கே சாதி எங்கே வருகிறது என்று புரியவில்லை. எனது யோகர் பற்றிய துணுக்கில், அவர் சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காய் அடைப்புக் குறியை பாவித்து ஒரு சாதிய விளிப்பை எழுதினேன். அதை அப்படி எழுதாமல் அந்த சொற்றொடரை எழுத முடியாதது என்பதால்.

இதையா நீங்கள் சுட்டுகிறீர்கள்?

தவிரவும் விபுலாநந்தர், சித்தானைக்குட்டி போல யாழிற்கப்பால் இருந்து வந்தவர்கள் பற்றியும் திரி துவங்கலாம், துவங்க வேண்டும் என்பதே என் அவா. (கடையிற் சாமி இந்தியர். கன்னடர்?).

2. நான் ஒரு அக்னோஸ்டிக் என்பது தெரிந்ததே - ஆகவே எனக்கு யோகரின் ஆன்மீகத்தில், மத மாச்சரியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் அன்னம் நீரை விலக்குவதை போல, ஆன்மிக்கத்தை விலக்கி விட்டு யோகரின் நிலையாமை தத்துவங்கள், இலகு தமிழ், குழப்படி கதைகளை ரசிப்பதில் எனக்கு ஒரு நெருடலும் இல்லை.

3.சாக்ரடீஸ்- பிளேட்டோ-அரிஸ்டாடில்- அலக்சாண்டர் போல எமது ஞானமரபினர் கடையிற்-செல்லப்பா-யோகர். எப்படி அவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றாகாதோ, அப்படித்தான் இவர்கள் சொன்னதும். தமது காலத்துக்கு ஏற்ப, தமது அறிவுக்கு ஏற்ப, தம்மை சூழ உள்ள உலகை விளங்க அவர்கள் எடுத்த முயற்சி நம் எல்லோரதும் கூட்டுப் பாரம்பரியம் - அதில் பலதை இப்போது நான் ஏற்காவிடிலும் கூட, அதை வரலாறாக பேண வேண்டியது எம் கடமை.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

மேலே நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து மூட பிரச்சாரத்துக்கு வழி சேமித்து தாருங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது பல கருத்துக்களை தூக்கும்போது நிர்வாகம் அதையும் சேர்த்து தூக்கிவிட்டது.

"யாழ் கருத்து களம்"
இதுக்கு என்ன வரைவிலக்கணம் என்றே எனக்கு புரியவில்லை.
மற்றவர்களை நேரடியாக பாதிக்கும் அல்லது அவதூறு கூறும் பாணியிலான  சொற்பிரயோகங்களை 
இப்போது எல்லா சோசியல் மீடியாவும் தணிக்கை செய்கிறது. யாழ் களமும் அதை செய்வது நன்று.
ஆனால் கருத்துக்கள் பதிவத்துக்கே தடையை போடுவது என்பது மூடத்தனமான திரிகளை வளர்க்கும் பிரச்சாரத்துக்கு நாம் துணைபோகிறோம் என்ற நிலையையே நிர்வாகத்தின்பால் உண்டுபண்ணுகிறது.

 

மருது, குற்றம் குறை கூற முற்படும் முன்  திரியை மீண்டும் ஒழுங்காக வாசிக்கவும். திரியில் இடப்படும் / இடப்பட்ட கருத்துகளுக்கு விதிகளுக்கு இணங்க எழுதப்பட்ட எந்த பதில் கருத்தும் / விமர்சனமும் நீக்கப்படவில்லை. அத்துடன் ஒரு திரியை திறந்த பின் அதற்கான எதிர் விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படல் தவிர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை யாழ் இணையம் ஏற்பதும் இல்லை.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மருது,

1. இங்கே சாதி எங்கே வருகிறது என்று புரியவில்லை. எனது யோகர் பற்றிய துணுக்கில், அவர் சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காய் அடைப்புக் குறியை பாவித்து ஒரு சாதிய விளிப்பை எழுதினேன். அதை அப்படி எழுதாமல் அந்த சொற்றொடரை எழுத முடியாதது என்பதால்.

இதையா நீங்கள் சுட்டுகிறீர்கள்?

தவிரவும் விபுலாநந்தர், சித்தானைக்குட்டி போல யாழிற்கப்பால் இருந்து வந்தவர்கள் பற்றியும் திரி துவங்கலாம், துவங்க வேண்டும் என்பதே என் அவா. (கடையிற் சாமி இந்தியர். கன்னடர்?).

2. நான் ஒரு அக்னோஸ்டிக் என்பது தெரிந்ததே - ஆகவே எனக்கு யோகரின் ஆன்மீகத்தில், மத மாச்சரியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் அன்னம் நீரை விலக்குவதை போல, ஆன்மிக்கத்தை விலக்கி விட்டு யோகரின் நிலையாமை தத்துவங்கள், இலகு தமிழ், குழப்படி கதைகளை ரசிப்பதில் எனக்கு ஒரு நெருடலும் இல்லை.

3.சாக்ரடீஸ்- பிளேட்டோ-அரிஸ்டாடில்- அலக்சாண்டர் போல எமது ஞானமரபினர் கடையிற்-செல்லப்பா-யோகர். எப்படி அவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றாகாதோ, அப்படித்தான் இவர்கள் சொன்னதும். தமது காலத்துக்கு ஏற்ப, தமது அறிவுக்கு ஏற்ப, தம்மை சூழ உள்ள உலகை விளங்க அவர்கள் எடுத்த முயற்சி நம் எல்லோரதும் கூட்டுப் பாரம்பரியம் - அதில் பலதை இப்போது நான் ஏற்காவிடிலும் கூட, அதை வரலாறாக பேண வேண்டியது எம் கடமை.

உங்களுடைய கருத்துக்களையோ அல்லது மற்றவர்களின் கருத்துளையோ வைத்து சாதிய 
மேலாதிக்க எண்ணம் இருக்கிறது என்று நான் எண்ணவில்லை.
திரிக்குள் விமர்சனம் வேண்டாம் ..... அல்லது வேறு திரிகளில் சிலர் வந்து திரியை பூட்டுங்கள் 
என்ற மேலாதிக்க சிந்தனை எங்கிருந்து வருகிறது? என்பதை வைத்தே நான் அப்படி எழுதினேன் 
இப்படியான திரிகள் எமக்கு நிற்சயம் தேவை .... இவரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் 
ஆனால் இந்த பாடல்கள் எல்லாம் இந்த திரியின்மூலமே நான் அறிந்து இருக்கிறேன் ... எனக்கு கூட ஒரு koodiya  தகவல் அறிய உதவி இருக்கிறது. 
யோகர் சுவாமி வேறு யாரும் அவரைப்போல கடவுளை தேடி பின்பு தமக்குள்ளே கடவுளை கண்ட எந்த 
சுவாமிகளும் மதங்களை முன்னிறுத்துவதில்லை ...... ஆனால் திரி எப்போதோ அழிந்துபோன சைவசமயம் 
இருப்பதுபோல மாஜாஜாலாம் காட்டவே தொடருகிறது. 
யோகர் சுவாமி மீது யாருக்கும் விமர்சனம் இருந்தால் கருத்து களத்தில் மற்றவர்கள் எழுதத்தான் செய்வார்கள் 
எப்படி யோகர் சுவாமி மட்டும் விமர்சனம் இல்லாமல் போகலாம்?
யோகர் சுவாமியின்  கடைசி கால பகுதியை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் ... அதே நேரம் ஆரம்ப கால நிலையில் சிலருக்கு முரண்பாடு இருக்கலாம்.
புத்தன் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு போனது சரியா? என்ற கேள்வியும் ...
புத்தர் முதன் முதலில் திரும்பவும் வீடு வந்த போது மனைவி கேட்ட .... இந்த ஞானத்தை இங்கிருந்து பெற்றிருக்க முடியாதா? என்ற கேள்விகளும் இப்போதும் இருக்கும் கேள்விகள்தான் .. ஒவ்வருவரும் அவரவர் நிலைப்பாட்டை வைத்து ஒரு பதிலில் சாய்ந்துகொள்ளலலாமே தவிர .. மற்றவர்களும் அதில் சாய்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
யோகர் சுவாமியின் வாழ்க்கை சமூகத்துக்கு உதவுமா? என்ற கருத்தாடலை ஏன் இங்கு செய்ய முடியாது?
யோகர் சுவாமி சாய்ந்திருந்த மதம் சரியானதா? யோகர் சுவாமிபோல நாமும் போய் நல்லூரில் இருக்க முடியுமா? என்ற கேள்விகளும் பதில்களும் .... ஒரு ஆதிக்க சிந்தனையின் வடிவில்தான் இங்கு திரிக்கு சம்மந்தம் இல்லாதவை  என்ற மாயையால் போர்த்தப்படுகிறது. இந்த ஆதிக்க எண்ணத்துக்கு முன்னைநாள்  சாதிய ஆதிக்க சிந்தனை காரணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
எங்களுடையது எல்லாம் புனிதம்  நாம் தான் தலைசிறந்த சுத்தவாளிகள் உயர்ந்தவர்கள் போன்ற எண்ணத்தை  கொடுப்பது அதுதான்.

திரியை திசை திரும்புகிறோம் என்று மீண்டும் ஒரு குற்றசாட்டு இங்கு வராலாம் ...
நாம் வேறு ஒரு திரியில் இது பற்றி பேசுவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.