Jump to content

தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு?

 

ஐந்து தமிழ்க்­கட்­சிகள் கூடிக்கூடிப் பேசி ஒரு­வா­றாக ஒரு தீர்­மா­னத்தை எட்­டி­விட்­டன. வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முன்­மு­யற்­சியில் ஒன்று கூடிய ஆறு கட்­சி­களில் ஒரு கட்சி ஜனா­தி­பதி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டது.

ஆறு கட்­சி­களும் கூடி நிலை­மை­களை ஆராய்ந்து என்ன செய்­வது என்ற தீர்­மா­னத்தை எட்­டு­வ­தற்கு முன்பே பொன்­னம்­பலம் கஜேந்­ தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற தன்­னிச்­சை­யான முடிவை மேற்­கொண்டு அதனை அறி­வித்­தி­ருந்­தது.

அந்த அறி­வித்­தலை ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யிட்ட பின்­னரும் தேர்தல் தொடர்­பாக ஒன்­றி­ணைந்த ஒரு தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான கட்­சி­களின் கூட்­டத்தில் அது கலந்து கொண்டு கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்­களில் விவா­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தது. ஆயினும் அந்தக் கட்­சியைத் தவிர ஏனைய ஐந்து கட்­சிகள் கூட்­டத்தில் இனம் காணப்­பட்ட 13 அம்­சங்­களை ஏற்­றுக்­கொண்டு கையெ­ழுத்திட்­டி­ருந்­தன. ஆனால் தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தனது கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்தைக் குறிப்­பிட்டு அந்த ஆறு­கட்சி கூட்டில் இருந்து வெளி­யே­றி­யது.

மிஞ்­சிய ஐந்து கட்­சி­களும் முன்­வைத்த 13 அம்ச கோரிக்­கை­களை ஏற்­ப­தற்கு முன்­ன­ணியில் உள்ள மூன்று வேட்­பா­ளர்­களும் முன்­வ­ர­வில்லை. இரண்டு வேட்­பா­ளர்கள் அந்தக் கோரிக்­கை­களை முற்­றா­கவே நிரா­க­ரித்த போக்கைக் கடைப்­பி­டித்­தனர். ஜேவி­பியின் வேட்­பா­ள­ரா­ன அனுர குமார திசா­நா­யக்க அரை­கு­றை­யாக அந்த 13 அம்­சங்கள் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனாலும் அந்த 13 அம்­சங்­களின் அடிப்­ப­டையில் தமிழ்மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து தமிழ்க்­கட்­சி­க­ளுடன் பேச்சு நடத்­து­வ­தற்கு எவ­ருமே முன்­வ­ர­வில்லை. இதனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத 13 அம்­சங்­களின் அடிப்­ப­டை­யி­லான கோரிக்­கை­களை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டிய அவ­சியம் தமிழ்க்­கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

சுட்­டிக்­காட்டி கூற முடி­யாத நிலை 

தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களும், அவர்­க­ளு­டைய கட்­சி­களும் தமிழ் அர­சியல் கட்­சி­களை வேறா­கவும், வாக்­கா­ளர்­க­ளா­கிய தமிழ் மக்­களை வேறா­கவும் நோக்­கு­கின்ற போக்கைக் கடைப்­பி­டித்­த­தனால், தேர்தல் தொடர்பில் தீர்க்­க­மான ஒரு முடிவை மேற்­கொள்­வதில் ஐந்து தமிழ்க்­கட்­சி­க­ளுக்கும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.

அர­சியல் ரீதி­யாக வெறுத்து ஒதுக்­கப்­ப­டு­கின்ற தரப்­பாகத் தமிழ்த்­த­ரப்­பினர் இருக்­கின்ற ஒரு சூழலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரித்து வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது மிக மிக கடி­ன­மான விட­ய­மாக மாறி­விட்­டது. பேரின அர­சியல் நிலை­மை­களை அவ்­வாறு மாற்­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் ஐந்து கட்­களும் ஒன்­றி­ணைந்து விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்­கலாம் என்று திருவாய் மலர்ந்­தி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னத்தை ஒன்­றி­ணைந்து வெளி­யி­டு­வ­தற்கு முன்னர் முதல் நாளே தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மா­ன விக்­னேஸ்­வரன் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை மூல­மாக வெளிப்­ப­டுத்­தி­விட்டார்.  

”தேர்தல் களத்தில் குதித்­துள்ள எந்த வேட்­பா­ள­ருக்குத் தமிழ்மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்டிக் கூற முடி­யாது. மக்கள் தாங்­க­ளா­கவே கடந்த கால நிலை­மை­க­ளையும் தற்­போ­தைய அகப் புறச் சூழ்­நி­லை­க­ளையும் கருத்திற் கொண்டு தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்த வேண்டும்” என்று அவர் கூறி­யுள்ளார்.

இந்தத் தேர்­தலில் வழ­மை­யை­விட இன­வாத அர­சியல் பிர­சாரம் தீவி­ர­மாக முனைப்புப் பெற்­றி­ருக்­கின்­றது. இந்தச் சூழலில் குறிப்­பிட்ட ஒரு வேட்­பா­ளரை தமிழ்மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று வெளி­ப­ப­டை­யான முடி­வெ­டுத்தால், களத்தில் எதிர்த்­த­ரப்பில் உள்ள வேட்­பா­ளர்கள் அதனைத் தமது இன­வாத பிர­சா­ரத்­துக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி சிங்­கள மக்­களைத் திசை­தி­ருப்பி விடு­வார்கள்.

அவ்­வாறு சிங்­கள மக்­களைத் திசை திருப்­பினால் தமிழ்மக்கள் ஆத­ரித்த வேட்­பாளர் தோல்­வியைத் தழுவ நேரி­டலாம். அதனால் தமிழ்மக்கள் தோல்­வி­ய­டைந்த ஒரு வேட்­பா­ள­ருக்கு தமது பெறு­மதிமிக்க வாக்­கு­களை அளித்து, அவற்றை வீணாக்­கி­விட்­டார்கள் என்ற நிலை­மைக்கு ஆளாக நேரிடும்.

தவ­றிய செயற்­பா­டுகள்

எனவே தேர்தல் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்று கூடிய ஐந்து தமிழ்க்­கட்­சி­களும் தமிழ்மக்­களை அந்த நிலை­மைக்கு ஆளாக்­கி­விட்­டன. தீர்க்­க­த்த­ரி­ச­ன­மற்ற முறையில் செயற்­பட்டு மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்­தி­விட்­டன என்ற பழிச்­சொல்­லுக்கு ஆளா­கவும் நேரி­டலாம். இதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே மக்கள் தங்­க­ளு­டைய தீர்­மா­னத்­திற்­க­மைய விரும்­பி­ய­வாறு வாக்­க­ளிக்­கலாம் என்று ஐந்து கட்­சி­களும் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்குப் பின்­ன­ரான அர­சியல் சூழலில் தமிழ்த்­த­ரப்பில் ஆளு­மையும் செயல் வல்­ல­மையும் கொண்­டதோர் அர­சியல் தலைமை உரு­வா­க­வில்லை. விடு­த­லைப்­பு­லி­க­ளினால் நாடா­ளு­மன்ற அர­சியல் தேவைக்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை உரு­வாக்கி இருந்­தனர். அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் தமிழ் அர­சி­யலின் தலைமைப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலையில் வந்­தி­றங்­கி­யது.

ஆனாலும் சிறு­பான்மை இன மக்­களை இரண்­டாந்­தரக் குடி­மக்­க­ளா­கவே வைத்­தி­ருக்க வேண்டும் என்ற ஆழ­மான பேரி­ன­வாத அர­சியல் சிந்­த­னை­யையும் அதன் வழி­மு­றை­யி­லான செயற்­பா­டு­க­ளையும் சரி­யாக இனங்­கண்டு, அதற்­கேற்ற முறையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் செயற்­பட முடி­ய­வில்லை.

தீர்க்­க­த­ரி­ச­னமும், ரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான செயல் வல்­ல­மையும், பேரி­ன­வாதப் போக்­கினால் எழுந்­துள்ள சவால்­களை தந்­தி­ரோ­பாய ரீதியில் எதிர்­கொண்டு முன்­னே­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் கூட்­ட­மைப்பு ஈடு­படத் தவ­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.

விடு­த­லைப்­பு­லிகள் என்ற கட்­ட­மைப்பின் பின்னால் அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்கள் அவர்­க­ளுக்குப் பிறகு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் கீழ் ஓர­ணியில் திரண்­டி­ருந்­தார்கள். மக்கள் ஒற்­று­மை­யாகி இருந்­தார்கள். ஆனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தமக்­கி­டை­யி­லான கட்சி நிலை வேறு­பா­டு­களைக் களைந்து தமிழ் மக்­க­ளுக்­கான ஓர் இறுக்­க­மான கட்­ட­மைப்பைக் கொண்ட அர­சியல் தலை­மையை உரு­வாக்கத் தவறி­விட்­டன.

தமிழர் தரப்­புக்கு அவ­சி­ய­மான உறு­தி­யான கட்­ட­மைப்பைக் கொண்ட ஓர் அர­சியல் தலை­மையை உரு­வாக்க தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் முடி­யாமல் போய்­விட்­டது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற கூட்­டுக்குள் இணைந்த தமிழ்க்­கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்த அதி­கா­ர­பூர்­வ­மான அந்­தஸ்தைக் கொண்ட ஒரு கூட்­ட­மைப்பைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் போய்­விட்­டது.

65.jpg

நிலை­மைகள் மோச­ம­டை­வ­தற்­கான அறி­கு­றிகள்

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான பத்­து­வ­ருட காலப்­ப­கு­தியில் தேர்­த­லுக்­காகக் கட்டுண்ட ஒரு நிலை­யி­லேயே பங்­காளிக் கட்­சிகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் கூட்­டி­ணைந்­தி­ருந்­தன. தேசிய முக்­கி­யத்­துவமிக்க சந்­தர்ப்­பங்­க­ளிலும், இக்­கட்­டான சூழல்­க­ளிலும் தமிழ்­மக்­களின் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­திலும் கூட்­ட­மைப்பு தவ­றி­விட்­டது. கூட்­ட­மைப்­பு மேற்­கொண்ட அர­சியல் நட­வ­டிக்­கைகள் அரச தரப்பின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், சிக்­கல்­களில் இருந்து அதனை மீட்­ப­தற்­குமே உத­வி­யி­ருந்­தன.

தீர்க்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய தமிழ்மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளைக்­கூட கூட்­ட­மைப்­பினால் தீர்க்க முடி­யாமல் போய்­விட்­டது. அவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாமல் போய்­விட்­டது. இத்­த­கைய ஒரு பின்­பு­லத்­தில்தான் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் எந்தத் தரப்­பையும் வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்க முடி­யாத கையறு நிலை­மைக்குத் தமிழ் மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

அர­சியல் ரீதி­யாக அவர்­களை வழி­ந­டத்த வேண்­டிய தலை­மைகள், மக்­களை நோக்கி இந்தத் தேர்­தலில் நீங்­களே ஆரோக்­கி­ய­மான ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொண்டு உங்­க­ளு­டைய வாக்­க­ளிக்கும் உரி­மையைப் பயன்­ப­டுத்­துங்கள் என்று கூறு­கின்ற நிலை­மைக்கு ஆளாகி இருக்­கின்­றன.

இது வாக்­க­ளிப்­ப­தற்கு முந்­திய நிலைமை. தேர்தல் முடிந்த பின்­ன­ரான நிலை­மைகள் இன்னும் மோச­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன. இந்தத் தேர்­தலில் முன்­ன­ணியில் இருக்­கின்ற மூன்று வேட்­பா­ளர்­க­ளுமே, யுத்­த­கா­லத்தில் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­களைக் குற்றச் செயல்­க­ளாக ஏற்­றுக்­கொள்­கின்ற அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

ரா­ணுவ நலன்கள் சார்ந்த அர­சியல் கொள் ­கையே அவர்­க­ளிடம் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. அதே­நேரம் நாட்டில் யுத்தம் ஒன்று மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­ பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற தேசிய ரீதி­யி­லான அர­சியல் மனப்­பாங்கும் அவர்­க­ளிடம் இல்லை.

இணை அனு­ச­ரணை உறு­தி­மொ­ழியை மேவிய நிலை

போர்க்­குற்­றங்கள் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்ற பொது­வான நிலைப்­பாட்­டையே அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் ரா­ணு­வத்தின் நலன்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அவைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­க­ளையும், வர­லாற்று ரீதி­யான நில உரித்­தையும், மதம்­சார்ந்த பாரம்­ப­ரிய கலை­க­லா­சார உரித்­து­க்க­ளையும் படிப்­ப­டி­யாக இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற சிங்­கள பௌத்த தேசியக் கொள்­கை­யே இந்த வேட்­பா­ளர்­க­ளிடம் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் எதுவும் நாட்டில் இடம்­பெ­ற­வில்லை என்று பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­ன கோத்­தா­பாய ராஜ­பக்ஷ தனது தேர்தல் பரப்­பு­ரை­க­ளின்­போது அடித்துக் கூறி­யி­ருக்­கின்றார். இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்பும் அந்த நிலைப்­பாட்­டையே அவர் கொண்­டி­ருந்தார். அவ­ரு­டைய சகோ­த­ர­ரரும் பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ருமான, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜ­பக்ஷ இந்த நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருந்து வரு­கின்றார்.

போர்க்­குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன எனச் சுட்­டிக்­காட்டி, அவற்­றுக்குப் பொறுப்பு கூற வேண்டும். யுத்தம் மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கொண்­டு­வ­ரப்­பட்டு, நீக்­கப்­ப­டாமல் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி, அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வான ஒரு சட்­டத்தை உரு­வாக்க வேண்டும் என்று ஐநாவும் சர்­வ­தேச நாடு­களும் கோரி­யி­ருக்­கின்­றன.

இவற்றை நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இரு­கட்சி அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அந்த உறு­தி­மொ­ழி­யையும் மேவி, அந்தத் தீர்­மா­னங்­களை ஏற்க முடி­யாது. சர்­வ­தே­சத்தின் வலி­யு­றுத்­தல்­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று சூளு­ரைத்து தேர்­தலில் வெற்றி பெற்­றதும் அமைக்­க­வுள்ள புதிய அர­சாங்­கத்தில் அவற்­றுக்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று உறு­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார்.

அவ­ருக்குப் பின்னால் இருந்து அவரை இயக்­கு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற தென்­னி­லங்­கையின் வலிமைமிக்க அர­சி­யல்­வா­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற மகிந்த ராஜ­பக்ஷவும் இந்த நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளார். ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த போதே இங்கு போர்க்­குற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என அடித்­துக்­கூறி ஐநா மனித உரிமைப் பேர­வை­யையும் சர்­வ­தே­சத்­தையும் அவர் புறந்­தள்­ளி­யி­ருந்தார் என்­பது நினை­வூட்­டத்­தக்­கது.

ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­போன்று இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இன­வாதப் போக்கு தீவி­ர­மாகத் தலை­நிமிர்ந்துள்­ள­தால், ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் தேர்­தலில் வெற்­றி­பெற நேர்ந்தால் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டைக் கருத்தில் கொண்­டி­ருக்­க­மாட்டார் என்றே உறு­தி­யாகத் தெரி­கின்­றது.

தேர்தல் விஞ்­ஞா­பன கொள்­கை­க­ளுக்கே அங்­கீ­காரம்

அது மட்­டு­மன்றி தேர்­தலில் எவர் வெற்­றி­பெற்­றாலும், அவரும், அவ­ரு­டைய கட்சி உட்­பட அவரைச் சார்ந்­த­வர்­களும் இந்த நிலைப்­பாட்­டையே கொண்­டி­ருப்­பார்கள் என்­ப­தற்­கான அறி­கு­றி­களே காணப்­ப­டு­கின்­றன.

தேர்­தலில் வெற்றி பெற்­றதன் பின்னர், தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கை­க­ளுக்­கா­கவே மக்கள் வாக்­க­ளித்­தார்கள். அந்தக் கொள்­கை­களை தமிழ்மக்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் என்று நிச்­ச­ய­மாக வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி கூறுவார். அதனை சர்­வ­தே­சத்­திற்கும் அவர் சுட்­டிக்­காட்டத் தவ­ற­மாட்டார்.

குறிப்­பாக இத்­த­கைய வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்­றொரு பிரச்­சினை இல்லை. விடு­த­லைப்­பு­லிகள்; பயங்­க­ர­வா­திகள். அவர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளு­டைய பிடியில் கேட­ய­மாக இருந்த தமிழ்மக்­களை ரா­ணு­வமே தனது மனி­தா­பி­மான  ரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் மீட்­டெ­டுத்­தது. அந்த மக்­க­ளுக்கு பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே உள்­ளது.

போரினால் சீர­ழிந்­துள்ள வடக்­கையும் கிழக்­கையும் மட்­டு­மல்­லாமல் அழி­வுக்கு உள்­ளா­கிய நாட்டின் ஏனைய பகு­தி­க­ளையும் அபி­வி­ருத்­தியின் மூலம் பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­ யெ­ழுப்­பு­வ­தற்கே மக்கள் வாக்­க­ளித்து புதிய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்கள் என்று வெற்றி பெறு­கின்ற ஜனா­தி­பதி அரச தலைவர் என்ற ரீதியில் நிலை­மை­களை எடுத்துக் கூறி, தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு மற்றும் அன்­றாடப் பிரச்­சி­னை­களை அதி­கா­ர­ பூர்­வ­மாகப் புறந்­தள்­ளக்­கூ­டிய நிலை­மையும் இப்­போதே காணப்­ப­டு­கின்­றது.

 போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற பொறுப்பைத் தட்­டிக்­க­ழித்து, இழுத்­த­டித்துக் காலம் தாழ்த்­தி­ய­தனால் ஏற்­க­னவே தமிழ்மக்­களின் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட ஏனைய பிரச்­சி­னைகள் நீர்த்துப் போகத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தத் தேர்­தலின் பின்­ன­ரான அர­சியல் சூழலில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பி­லான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பே அர­சுக்குள்­ளது என்ற ரீதியில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைப் புறந்­தள்ளி பேரி­ன­வா­தத்­துக்கு இசை­வான அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடிய வாய்ப்­புக்­களும் இப்­போதே தென்­ப­டு­கின்­றன.

புதுப்­புனல் பாயுமா?

இத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து நடத்­தப்­ப­ட­வுள்ள பொதுத் தேர்­தலும் வழி­வ­குக்கும் என்று எதிர்­பார்க்­கலாம். தமிழ்மக்­களின் வாக்­கு­களே ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெ­று­ப­வரைத் தீர்­மா­னிக்­கின்ற ஜன­நா­யக சக்­தி­யாகத் திகழ்­கின்­றது. ஆனால் பேரின அர­சியல் கட்­சி­களின் தேர்­தல்­கால அணு­கு­மு­றையின் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய அந்த ஜன­நா­யக சக்தி வலு­வி­ழந்துள்ளது.

இந்தத் தேர்தலைப் பின்பற்றி பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற உத்தியை அல்லது இதற்கும் மேலாக வலிமையுள்ள அரசியல் உத்தியைப் பயன்படுத்தி தமிழ்த்தரப்பின் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்துவதற்கு சிங்கள பௌத்த தேசியம் முயற்சிக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை.

இத்தகைய பின்புலத்தில் தமிழ்த்தரப்பில் ஏற்பட்டுள்ள ஆளுமையும் செயல்வல்லமையும் உடைய அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும். அந்தத் தலைமையானது தென்னிலங்கையில் உருவாகியுள்ள புதிய அரசியல் போக்கைப் போன்ற புதுப்புனல் பாய்ந்ததாக அமைந்திருத்தலும் அவசியம்.

தமிழ்த்தரப்பு அரசியலின் பலவீனமான தலைமைக்குப்பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே முன்னணியிலுள்ள அரசியல் தலைமைகளைப் பயன்படுத்தி புதிய தலைமையை உருவாக்குவதாக அமைந்திருந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண சபையின் அரசியல் தலைமைக்குப்  புதிய வரவாகக் கொண்டுவரப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் அரசியல் நிலைமைகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாவல்களுக்கு உறுதியாக முகம் கொடுத்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற ஒருவராகத் தன்னை அவர் நிரூபிக்கவில்லை. மாற்றுத்தலைமைக்கான தலைமை நிலையில் அவரை வைத்துச் செயற்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சக்திகளை ஓரணியில் திரட்டி, உறுதியானதோர் கட்டமைப்பை உருவாக்க அவரால் முடியாமல் போய்விட்டது.

அவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கில் பயணிக்கின்ற ஒரு தலைவராகவே தன்னை இதுவரையில் இனம் காட்டியுள்ளார்.

இத்தகைய பின்னணியில் தமிழ்த்தரப்பில் ஆளுமையும் செயல்வல்லமையும் தீர்க்க தரிசனச் செயற்பாட்டையும் கொண்ட புதிய தலைமையொன்று எழுச்சி பெற வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவையாகி உள்ளது. அத்தகைய தலைமை உருவாகுமா? எவ்வாறு உருவாகும்? இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி.மாணிக்­க­வா­சகம்

 

https://www.virakesari.lk/article/68048

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.