Jump to content

கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை

(நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3.25 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

theepika_mahajana.jpg

இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

p_thanusankavi_arunodhanya.jpg

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாதனைகள் புதுப்பிக்கப்படடன.

மேலும் இருபாலாருக்கும் இரண்டு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாணம் சார்பாக பங்குபற்றியவர்களில் தீப்பிகாவுடன் மூவர் புதிய சாதனைகளை நிலைநாட்டியதுடன் நால்வர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். போட்டியின் முதலாம் நாளன்று 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஏ. புவிதரன் (4.82 மீற்றர்), இரண்டாவம் நாளன்று 20 பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் என். டக்சிதா (3.35 மீற்றர்.) ஆகியோர் புதிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர். இவர்கள் இருவரும் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 45.88 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் நேற்றுமுன்தினம் குண்டெறிதல் போட்டியில் 15.95 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

mithunraj.jpg

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுஜீபன் 1.95 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

s_subeejan.jpg

நேற்றைய தினம் மாலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். வானுசன் 51.12 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

s_vanusan_velanai.jpg

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் இளவாலை கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையைச் செர்ந்த ஏ. மேரி லக்ஷியாவுக்கு அதி சிறந்த தலைமைத்துவக்கான வீராங்கனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/68053

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.