Jump to content

அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

CHINESE IN ALLAIPITI (JAFFNA) - V.I.S.JAYAPALAN
அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
941424350.jpg
.
 
அல்லைபிட்டி அகழ்வாரட்ச்சி புலத்தில் புதிதாக சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. எங்கள் மண்ணின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். எனினும் பலர் நினைப்பதுபோல 1980ல்தான் அல்லைப்பிட்டியில் சீன மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன என்கிற கருத்து தப்பானதாகவும். அதற்க்கு முன்பே மணல் கிள்ளைக்காரர்களுக்கு இவ்விடாம் தெரிந்திருக்கிறது.
 
நான் யாழ்பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராக இருந்த சமயம் (1976-78) தற்செயலாக மண் அள்ளுகிறவர்களால் முதல் சீன மண்பாண்டம் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதற்க்கு முன்பே மண் ஏற்றிச் செல்பவர்கள் அவற்றை கண்டிருக்கக்கூடும். ஆனால் 1970பதுகளில் மிழகாய் வெண்காய தடையால் யாழ்ப்பாணத்தில் பணம் குவிந்ததால் தனியார் அரசு கட்டிடப் பணிகள் திடீரென உயர்ந்தது. மணல் தட்டுபாடு ஏற்பட்டதால் மணணல் பெரும் வியாபாரப் பொருளானது. அல்லைபிட்டி மண்கும்பிகள் வெட்டி ஏற்றப்பட்டனன. ஆனைக்கோட்டை மணல்காடு போன்ற இடங்களில் இருந்த தொன்மையான நில அடையாளங்களான மணம் கும்பிகளும் வெட்டி ஏற்றபட்டன. அக்காலக்கட்டத்தில்தான் மிழகாய் செய்கைக்கும் யாழ்பாண கட்டிட தேவைகளுக்குமாக வன்னிக் காடுகள் பெருமளவில் அழிக்கபடுவதும் ஆரம்பமானது.
 
1976-78 காலப்பகுதியில் மணல் கொள்ளைக்காரர்கள்தான் சீன பாண்டங்களை முதலில் கண்டெடுத்து வெளியில் வைத்திருக்கிறார்கள். இதுபற்றிய தகவல் யாழ்பொலிசுக்கு கிடைத்தது அப்போதைய யாழ்ப்பாணம் பெலிஸ் சுபிரீண்டன்ற் சம்பவ இடத்தைப் பார்வையிட வரும்படி என்னையும் அழைத்தார். - சிங்கள இனவாதத்துக்கு எதிரான அந்த சிங்கள அதிகாரியின பெயர் நினைவில் இல்லை. அவர் மனைவி பொருளாதார விரிவுரையாளராக கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தார். - அதனால் முதன்முதலில் கண்டெடுக்கபட்ட உடைந்த சீன மண்பாண்டத்தை முதல் ஆளாகப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் தொடற்ச்சியாக அல்லைபிட்டியிலும் வெளியிலும் வளங்கும் செவிவழி வரலாற்று கதைகளையும் சேதிகளையும் திரட்ட முனைந்தேன். எனினும் எனது பணி ஒருசில நாட்களுக்கு மேல் தொடரவில்லை. ஆனையிறவு அகழ்வாராட்ச்சிக்குப் பிறகு இத்தகைய ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வேறெங்கும் கானப்படாத ‘பரம்பர்’ என்கிற ஒரு சிறு சாதிக் குழுவினர் அழிவின் விழிம்பில் இருப்பதை கண்டுபிடித்தேன். அவர்களும் ஆனைக்கோட்டை முன்னோர்போல இறந்தவர்களை எரிக்காது உட்கார்ந்த நிலையில் புதைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். உண்மையில் தமிழர் ஆய்வு துறைகள் செவிவழி வரலாற்றில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த மாபெரும்தவறை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
 
ஆனையிறவில் தற்செயலாக மணல் கொள்ளைக்காரர்களால் மட்பாண்டங்கள் சில கண்டுபிடிக்கபட்ட பின்னர் சில வருடங்கள் கழித்துத்தான் 1980 களில்தான் சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் அல்லைபிட்டிக்கு வந்தனர்.
 
இப்ப சீனர்கள் மீண்டும் அல்லைப்பிட்டியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 800 வருட பழைமையான சீன மட்பாண்டமொன்று கண்டெடுக்கப்பட்டதாக யாழ்பல்கலைக்கழக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் தெரிவித்திருக்கிறார். சீனர்கள் 600 ஆண்டு பழையது என்கிறார்கள். அது யாழ்பாண அரசு தோற்றம்பெற்றிருந்த காலக்கட்டமாகும். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
 
.
 
1970பதுகளில் அல்லைபிட்டியில் சீன மட்பாண்டங்கள் கிடைத்தபோது அல்லைபிட்டியில் சீனகப்பல்கள் தங்கி இளைப்பாறி உணவு நீர் ஏற்றிச் சென்றதாகக் கருதப்பட்டது. சீன மாலுமிகள் பெரிசு சின்னன் வரிசையில் ஒன்றுள் ஒன்றாக அடுக்கி வைத்த மண்பாண்ட தொகுதிகளுள் எதாவது உடைந்திருந்தால் அந்த தொகுதிகளை கரைக்கு கொண்டுவந்து பிரித்துப் பார்த்து உடைந்தவற்றை அகற்றியிருக்கிறார்கள் என்கிற முடிவு அன்றைக்கு எட்டப்பட்டிருந்தது. இவை பற்றிய புதிய கருத்துக்களை புஸ்பரட்ணம் சொல்லவேண்டும்.
 
,
 
மாணவனாக இருக்கும்போதே பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் தேடலையும் உழைபையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நம் மண்ணின் வரலாற்றை செம்மை செய்ய அவசியமான ஆதாரங்களை புஷ்பரட்ணத்தின் தேடலும் உழைப்பும் கண்டெடுத்து தந்திருக்கிறது. போர்க் காலமா சமாதான காலமா என்று கவலைப் படாமல் தொடர்ந்து வடகிழக்கில் உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர் வைத்தியர்கள் என அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன். அவர்களுள் கர்மஜோகியான பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் பங்கு முக்கியமானது. உண்மையில் புஷ்பரட்ணத்துக்கு தான் நம் மண்ணுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது தெரியாது. அதுதான் அவரது தனிதன்மையும் பலமும். நண்பா அல்லைப்பிட்டி மண்ணைப்போலவே நீயும் நிச்சயமாகக் கவிஞர்களால் பாடப்பட வேண்டியவன் .
Link to comment
Share on other sites

On 11/2/2019 at 8:24 PM, poet said:
சீனர்கள் 600 ஆண்டு பழையது என்கிறார்கள். அது யாழ்பாண அரசு தோற்றம்பெற்றிருந்த காலக்கட்டமாகும். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்
---
மாணவனாக இருக்கும்போதே பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் தேடலையும் உழைபையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நம் மண்ணின் வரலாற்றை செம்மை செய்ய அவசியமான ஆதாரங்களை புஷ்பரட்ணத்தின் தேடலும் உழைப்பும் கண்டெடுத்து தந்திருக்கிறது. போர்க் காலமா சமாதான காலமா என்று கவலைப் படாமல் தொடர்ந்து வடகிழக்கில் உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர் வைத்தியர்கள் என அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன். அவர்களுள் கர்மஜோகியான பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் பங்கு முக்கியமானது. உண்மையில் புஷ்பரட்ணத்துக்கு தான் நம் மண்ணுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது தெரியாது. அதுதான் அவரது தனிதன்மையும் பலமும். நண்பா அல்லைப்பிட்டி மண்ணைப்போலவே நீயும் நிச்சயமாகக் கவிஞர்களால் பாடப்பட வேண்டியவன் .

எமது மண்ணில் நாம் உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களைத் தேடுபவர்களின் சேவை பாராட்டத்தக்கது. துரதிஷ்டவசமாக அதிகமானோர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆதாரமற்ற கட்டுக் கதைகளாலும் சிங்களத்தின் சோடிக்கப்பட்ட வரலாற்றுத் திரிபுகளாலும் எமது தொன்மையான வரலாறு அழிந்துகொண்டிருக்கின்றது. அறிவியல் ஆதாரங்களே முக்கியமானவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.