Jump to content

திருநெல்வேலியில் பெல்ஜியம் வந்தது எப்படி?


Recommended Posts

157271076587215.jpg

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது. அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்? அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி...

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் பெயரை கொண்டுள்ளது அவ்வூர்.இந்த பகுதிக்கு ஏன் பெல்ஜியம் என்ற பெயர் வந்தது என விசாரித்தால், அப்பகுதியினர் சொல்லும் தகவல் நம்மை வியக்க வைக்கிறது...

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டொம்னிக் பியர், இரண்டாம் உலகப் போரினால் ஊனமுற்ற, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வீரர்களின் நல்வாழ்வு பணிக்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டார். உலக நாடுகளில் பலரிடமும் நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து நற்பணி செய்ததற்காக 1958-ம் ஆண்டில் டொம்னிக் பியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா வந்த அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகேயுள்ள இந்த இடத்தில் 54 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அமைதி பூங்காவை உருவாக்கினார்.

களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அமைதி பூங்காவில் வேளாண்மை தொழிலை மேம்படுத்தியது மற்றும் கடனுதவி வழங்கும் வகையில் அவர் உருவாக்கிய கூட்டுறவு சங்கம் இன்றளவும் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைதி பூங்காவில் வேளாண் துறை தலைவராக மறைந்த இயற்கை விஞ்ஞாணி நம்மாழ்வார் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்பது நம்மை ஆச்சர்யப்படுத்தும் மற்றொருமொரு தகவல். நம்மாழ்வாரால் நடப்பட்ட பல்வேறு நாட்டு மரங்களும், உருவாக்கிய வேளாண் தொழிலும் கைவிடப்பட்டு இன்று புதர் மண்டி கிடக்கிறது.

பெரியம்மை போன்ற நோய்களால் கொத்து கொத்தாக பலர் பலியான கால கட்டத்தில், டொம்னிக் பியர் பெல்ஜியம் நாட்டில் இருந்து 5 மருத்துவர் குழுவை வரவழைத்து ஒவ்வொரு கிராமமாக சென்று மருத்துவ சேவை வழங்கியுள்ளார். பின்னர் பிரிடா மோனியர் என்ற இலவச மருத்துவமனையை அமைதி பூங்காவில் கட்டி எழுப்பினார்.

இந்த மருத்துவமனைதான் அந்த பகுதிக்கு பெல்ஜியம் என்ற பெயர் வர காரணமானது. அப்பகுதியிலுள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களால் “பெல்ஜியம் மருத்துவமனை” என இன்றளவும் அழைக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனையை தமிழக அரசு கையகப்படுத்தி நடத்தி வருகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தி மேலும் சில வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் அப்பகுதியினரின் கோரிக்கை.

அதே வேளையில், பெல்ஜியம் நாட்டு அமைதி தூதர் டொம்னிக் பியரால் உருவாக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் அமைதி பூங்காவையும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அமைதி பூங்காவில் சிதலமடைந்து கிடக்கும் டொம்னிக் பியர் வாழ்ந்த குடியிருப்பு ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் பெல்ஜியம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.polimernews.com/dnews/87215/திருநெல்வேலியில்பெல்ஜியம்-வந்தது-எப்படி?வியக்க-வைக்கும்-தகவல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களக்காடு செல்லும் வழியில் இப்பெயர்ப் பலகை கண்டு நான் வியந்ததுண்டு. யாரோ பெல்ஜியம் சென்று வந்தவர் புதிதாகத் தோன்றிய தமது குடிமைப் பகுதிக்கு இப்பெயர் தந்திருக்கலாம் என்று எண்ணினேன். அறிந்து கொள்ள மெனக்கிடவில்லை.மெனக்கிட்டு என் நிலத்தின் ஒரு தகவலை எனக்களித்த Ampanai அவர்களுக்கு நன்றி. யாழுக்கு நன்றி. விரைவில் அவ்வூருக்குள் சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது இப்பதிவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.