Jump to content

நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா?

அனுதினன் சுதந்திரநாதன்

இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும்.  

இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத்தி, தொழில் முயற்சி, சட்டரீதியான வர்த்தகப் பரிமாற்றம் மூலமாக மக்களுக்கு வந்தடைகிறது. அவ்வாறு நம் கைகளில் வரும் பணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படித்தான் நமக்கான சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அந்தப் பணம் நம் கைகளுக்கு வருவதற்கு முன்பதாக அதன்நிலை என்ன என்பது தொடர்பில் எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?   

கறுப்புப் பணம் (Black Money)  

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணம் அழுக்கு பணம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் பணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படாது பதுக்கப்படுமாயின் அவை கறுப்பு பணமாக இனங் காணப்படும். எனவேதான் பெரும்பாலான செல்வந்தர்கள் முறையற்ற விதத்தில் உழைத்த பணத்தை சட்டரீதியில் உபயோகிக்க முடியாத நிலையில் கறுப்பு பணமாகப் பதுக்கி வைக்கிறார்கள். அவர்களுக்கான சந்தர்ப்பம் அமையும்போது அவற்றை சட்டங்களுக்கு அமைய பயன்படுத்தக்கூடிய பணமாக மாற்றிக்கொண்டு, தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.  

பணமோசடி (Money laundering)  

நாம் பயன்படுத்தும் துணி அழுக்கானவுடன், நாம் எப்படி அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம்? எப்படியும் அந்த அழுக்குத் துணிகளை சலவை செய்து சுத்தமாக்கியதன் பின்புதானே பயன்படுத்துவோம். அதுபோலத்தான் ஒருவரிடத்திலுள்ள கறுப்புப் பணத்தை சட்டரீதியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதநிலையில், அதனை வெள்ளையாக்கும் செயன்முறை அல்லது சட்டரீதியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடியவாறு முன்னெடுக்கும் அனைத்துச் செயன்முறையும் சலவை செயற்பாட்டுக்கு ஒப்பான பணமோசடி செயன்முறையாக இனங்காணப்படுகிறது.  

பணமோசடி செயற்பாடுகள் பிரதானமான மூன்று வகைகளைக் கொண்டு இருக்கின்றன.  
1. Placement- கறுப்புப் பணத்தை சட்டரீதியான நிதி செயன்முறைகளின் வழியாக சட்ட அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய பணமாக அல்லது நிதி உபகரணங்களாக (காசோலை, திறைசேரி முறி) மாற்றிக்கொள்ளும் முறை. அதாவது சட்டரீதியில் பயன்படுத்த முடியாத பணத்தை சட்டரீதியில் பயன்படுத்தக்கூடிய வேறுவகை நிதி உபகரணங்களில் முதலீடு செய்தல்.   உதாரணம் - இலஞ்சமாக பணத்தை பெறாமல், அதற்குச் சமமான பெறுதியில் பங்குகளை அல்லது பரிசுகளை பெற்றுக்கொள்ளல்   

2. Layering - கறுப்புப் பணத்தை அதனது வருமான மூலத்திலிருந்து மறைத்து வெவ்வேறு வகை பரிமாற்றங்கள் மூலமாக சட்டரீதியான பணமாக மாற்றியமைத்தல்.  

3. Integration - சட்டவிரோத பணத்துக்கு சட்டரீதியான வருமான மூலங்களைக் காட்டி, வெள்ளைப் பணமாக மாற்றும் செயன்முறை.  

பெரும்பாலும் கறுப்புப் பணமானது, சட்டரீதியான பணமாக நிதி செயன்முறைக்குள் கொண்டுவரப்படும் பிரதான மூன்று வழிமுறைகளாக மேற்கூறியவை இருக்கிறது. இந்த வழிமுறைகளை அடிப்படையாகக்கொண்டுதான், நிதி வல்லுநர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கி அவற்றில் கொடுக்கல் வாங்கல் செயன்முறை இடம்பெறுவதாகக் காட்டி, கறுப்புப் பணத்தை சட்டரீதியான பணமாக மாற்றிக்கொள்கிறார்கள். அண்மைக்காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த “பனாமா விவகாரம்” கூட இதனை ஒத்த ஒரு விடயமே ஆகும்.   

அழுக்கான பணம் (Dirty Money)  

பணத்தின் இருபெரும் கூறாக நாணயங்களையும் பணத்தாள்களையும் சொல்லலாம். இதில் நாணயங்கள் பயன்பாட்டின் விளைவாக அழுக்காவதில்லை. மாறாக, பணத்தாள்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் விளைவாக அழுக்கடைந்து பயன்பாட்டுக்கு உதவாதநிலையை அடையக்கூடும். அழுக்கான பணம் என்பதில் மேற்கூறியதைத்தான் சொல்லப் போகிறோம் என்றால் உங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

அழுக்கான பணம் என்பது பயன்பாட்டில் கறைபடியும் பணத்தைக் குறிப்பது அல்ல. ஏதேனும் சட்டவிரோதமான முறைகளின் ஊடாகக் கிடைக்கப்பெறும் வருமானம் அல்லது பணமாகும். உதாரணமாக, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல், இலஞ்ச ஊழல் மூலம் பெறப்படும் பணம் இந்தவகைக்குள் உள்ளடக்கப்படுகிறது. 

அழுக்கு பணமானது, எந்தவொரு சட்டரீதியான வருமான மூலத்தை கொண்டிருக்காததுடன், அவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கணக்குகளுக்குள் உட்கொணரப்படுவதில்லை. எனவே, அரசினால் சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட எந்தவொரு நிதிநிறுவனங்களிலும் இந்தவகை பணத்தைப் பெறவும் முடியாது. வைப்பு செய்யவும் முடியாது. ஆனால், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி இவற்றை சட்டரீதியான பணமாக மாற்றியமைக்க முடியும்.  

பணமோசடியைத் தடுக்கும் இலங்கையின் சட்டம்  

இலங்கையில் பணமோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணமோசடி தடுப்பு சட்டமானது மேம்படுத்தப்பட்ட வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், “ஏதேனும் பரிவர்த்தனை அல்லது ஏதேனும் சொத்தொன்று சட்டத்துக்கு புறம்பானவகையில் இலங்கைக்குள் உருவாக்கப்பட்டு இருப்பின், ஏதேனும் பரிவர்த்தனை அல்லது ஏதேனும் சொத்தொன்று சட்டத்துக்கு புறம்பானவகையில் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு இருப்பின் அல்லது இலங்கைக்கு வெளியே முதலீடு செய்யப்பட்டிருப்பின் அவை அனைத்துமே பணமோசடியாக இனங்காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது”.  

இலங்கையில் பணமோசடி சட்டத்தின் தேவை ஏற்பட காரணமே, இலங்கை போன்ற நாட்டை இங்குள்ளவர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது கறுப்புப் பணத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக பயன்படுத்த ஆரம்பித்தமைதான். இதனைத் தவிர்க்கவும், நிதிகொள்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.

சட்ட உருவாக்கத்தின் பின்பும் காலகாலமாக, பணமோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதும், அவை கண்டறியப்பட்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதும் வாடிக்கையாகவும் இருந்தே வந்திருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பணமோசடி விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.   

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறி ஊழல் விவகாரத்தில், இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்புபட்டுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்ததும், அதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததும் நாம் அறிந்ததே.

இதன்போது, இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் நிதி அமைச்சரின் நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் கணக்காளர் சாட்சியமளிகையில், ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு இருந்தார். அது, பணமோசடி தடுப்பு சட்டத்தின் பிரகாரம், ஒரு பணமோசடி நிகழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்ட ஒரு நிகழ்வாகும். நிதி அமைச்சர் மேற்கூறிய ஊழலுடன் தொடர்புடைய ஆடம்பர வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான பணம் வந்த முறை தொடர்பானதாகும்.

அதாவது, வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான பெறுமதியில் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய் ரவி கருணாநாயக்க அவர்களது நிறுவனத்தில் உரிமையைக் கொண்டுள்ள மற்றுமோர் உரிமையாளரால் 5,000 பணக்கட்டுக்களாகக் கொண்டுவரப்பட்டு நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தப் பணத்தை பயன்படுத்தியே வீட்டைக் கொள்வனவு செய்தாகும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் இப் பெருந்தொகைப் பணமானது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கணக்குகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், குறித்த பணம் வந்த மூலத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை என சாட்சியமளித்து இருந்தார். குறித்த கணக்காளர் நீண்டகாலமாக வங்கியொன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர் என்பது விசேட அம்சமாகும்.  

மேற்கூறிய உதாரணத்தில் கொண்டுவரப்பட்ட பணமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பதிவுகளைக் கொண்டிருக்கவில்லை. இது பணமோசடி தடுப்பு சட்டத்தின் 35ஆம் பிரிவின் உள்ளடக்கமான இலஞ்ச பிரிவு, பணபரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் கறுப்பு பணமாக உறுதிசெய்யப்பட்ட பணமாகும்.

இத்தகைய பெரிய தொகை நாட்டுக்குள் எவ்வித பதிவுகளும் இல்லாமல் கொண்டுவரப்பட்டதே தவறாகும். இது பணமோசடி தடுப்பு பிரிவு சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட நிதி நுண்ணறிவு பிரிவினால் (Financial Intelligence Unit) கண்டறியப்பட்டிருக்க வேண்டும் அல்லது அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை என்பதும், சட்டத்தின் பிடியில் இவ்வளவு பெரும்தொகை பணம் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்தான்!  

குறிப்பாக, இலங்கையின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் அவரது நிறுவனத்தின் (இந்த நிறுவனம் நிதி அமைச்சரின் பாரியார் மற்றும் அவரது மகள் ஆகியோரால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது) மூலமாக இந்த பெரும்தொகை பணமானது எவ்விதமான பரிசோதனைகளுமின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை நமது நாட்டின் சட்டதிட்டங்களையும், அதுசார் துறைகளின் வினைத்திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, குறித்த பணம் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு சட்டரீதியான பணமாக மாற்றப்படும்வரை எதையுமே கண்டறியாத நமது பொறுப்பு வாய்ந்த அமைப்புகள், வேறு ஒரு வழக்கின் விளைவாக இந்த செய்தி வெளிவந்தபின்பு அதுதொடர்பில் சிந்திக்கத் தொடக்கி இருக்கிறது. இல்லையேல், இத்தகைய பணவிவகாரம் முழுமையாகவே மூடி மறைக்கப்பட்டிருக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும்.  

மேலே கூறிய இவ் உதாரணம், நாம் பயன்படுத்தும் பணத்துடன் சட்டவிரோதமான பணம் சட்டரீதியாக ஒன்டறக்கலப்பது தொடர்பான சிறு உதாரணமாகும். தற்போது இலங்கையில் தேர்தல் காலமாக உள்ளதால், மீளவும் இந்தக் கறுப்புப்பணம் இலங்கையில் சர்வசாதாரணமாக வெளிவரத்தொடங்கியிருக்கும்.

குறிப்பாக, இலங்கையின் அரசியலில் உழைத்த கறுப்பு பணத்தை தமது அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள். இப்படியாக, நாம் அறியாமலே பல்வேறு கொடுக்கல்வாங்கல்கள் நடந்திருக்கக்கூடும் அல்லது நடக்கக்கூடும். அதன் விளைவாக்கம் வெளிக்கொண்டரப்பட்ட சட்டவிரோத பணம் சிலவேளைகளில் நம் கைகளில் புழங்கியிருக்கக்கூடும். 

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது கைகளில் பணம் புரளும்போது, அந்தப் பணத்தின் நம்பகத்தன்மையையும் அதன் மூலம் தொடர்பில் உறுதியாகவும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இல்லையெனில், இந்தப் பணம் உங்களை அறியாமலேயே, உங்கள் கைகளையும் அசுத்தப்படுத்தி விடக்கூடும்.    

 

http://www.tamilmirror.lk/வணிகம்/நம்-கைகளிலுள்ள-பணம்-தொடர்பில்-அறிவோமா/47-240485

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.