Jump to content

போதை தெளிய உலகில் பின்பற்றப்படும் விசித்திரமான வழிகள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போதை தெளிவதற்கு உலகில் பின்பற்றப்படும் சில விசித்திரமான வழிகள்.!

hangover-1572699359.jpg

தற்போது விடுமுறை நாட்கள் வந்தாலே, பலர் பார்ட்டி அல்லது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுகிறேன் என்று மது அருந்துவார்கள். சிலர் உடல் அலுப்பு நீங்குவதற்கு சரக்கு அடிப்பதாக கூறுவார்கள். அப்படி ஒரு நாள் வார விடுமுறையில் வயிறு நிறைய மது அருந்திவிட்டு, மறுநாள் அலுவலகம் செல்ல முடியாதவாறு பலர் ஹேங்ஓவரால் கஷ்டப்படுவார்கள்.

பொதுவாக ஹேங்ஓவர் பிரச்சனை அல்லது போதை தெளிவதற்கு எலுமிச்சை ஜூஸ், ப்ளாக் டீ போன்றவற்றை குடிப்போம். இது அனைவருக்குமே தெரிந்த பொதுவான வழிகள். ஆனால் உலகின் சில பகுதிகளில் இந்த ஹேங்ஓவரில் இருந்து விடுபட பல வித்தியாசமான மற்றும் விசித்திரமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். உங்களுக்கு அந்த வழிகளைத் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

அமெரிக்கா

இது உங்களுக்கு விசித்திரமான ஒன்றாக தெரியலாம். ஆனால் இது உண்மை. அமெரிக்கர்கள் ஹேங்ஓவரில் இருந்து விடுபட பச்சை முட்டையைக் குடிப்பார்களாம். இதை ப்ரேரி ஆய்ஸ்டர் என்று அழைப்பார்களாம். இது போதையை சட்டென்று குறைக்க உதவும் பிரபலமான ஓர் வழி. ஒரு பச்சை முட்டை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் ஹாட் சாஸ், வொர்செஸ்டர்ஷைர் சாஸ், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதைக் குடிக்க வேண்டும். இது குடிப்பதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இதைக் குடித்தால், மதுவினால் உடலில் சேர்ந்த நச்சுக்கள் முழுமையாக வெளியேறிவிடுமாம்

கனடா

கனடா மக்களுக்கு ஹேங்ஓவரை கையாள்வது நன்கு தெரியும் என்பது அவர்களது பழக்கத்திலேயே தெரிகிறது. எப்படியெனில், இவர்கள் மது குடிக்கும் போது கடைசியாக சீஸ் தயிர் சேர்க்கப்பட்ட ப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுவார்களாம். இதைப் பார்க்கும் போது ஹேங்ஓவர் நிவாரணியாகத் தெரியாது. ஆனால், இது மிகவும் சுவையுடன் இருப்பதோடு, போதையை சட்டென்று இறக்கிவிடும்

போலந்து

போலாந்தில் வினிகர் மதுவின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்நாட்டு மக்கள் மது அருந்திய பின், ஹேங்ஓவரில் இருந்து விடுபட ஊறுகாய் ஜூஸ் குடிப்பார்களாம். இதனால் மதுவினால் ஏற்பட்ட அசௌகரியத்தில் இருந்து விடுபட உதவுவதோடு, மறுநாள் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுவிக்கும்

யேர்மனி

யேர்மனியில் katerfrühstück ஹேங்ஓவரில் இருந்து விடுபட உட்கொள்ளப்படுகிறது. இது ஒரு 'ஹேங்ஓவர் காலை உணவு'. இந்த காலை உணவில் ஒரு தட்டில் ரோல்மாப்ஸைச் சுற்றி வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் கெர்கின் என்னும் காய்கறி வைக்கப்பட்டிருக்கும். இதை காலை உணவாக உண்ண வேண்டும் என்பதற்கு காரணம் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது தான். அப்படி சாப்பிட்டால் தான், அது நல்ல பலனைத் தரும்.

யப்பான்

யப்பானில் ஹேங்ஓவரை சரிசெய்வதற்கு உமிபோஷி உட்கொள்ளப்படுகிறது. இது வேறொன்றும் இல்லை, உலர்ந்த உமி பழத்தின் ஊறுகாய் தான் இது. இந்த பழம் மிகவும் புளிப்ப்பாக இருப்பதால், இது ஹேங்ஓவரை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. சில மக்கள் இதன் புளிப்புச் சுலையைக் குறைக்க, க்ரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்வார்கள்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் ஹேங்ஓவரில் இருந்து விடுபட நெருப்புக்கோழி முட்டை ஒம்லெட் சாப்பிடுவார்களாம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை 24 கோழி முட்டைக்கு சமமான சத்தைக் கொண்டது.

நமீ்பியா

நமீபிய மக்கள் மது அருந்திய பின் எருமை மாட்டுப் பாலைக் குடிப்பார்களாம். சில சமயங்களில் அவர்கள் எருமைப் பாலை மசாலா ரம், டார்க் ரம், கெட்டியான க்ரீம், முழு க்ரீம் மற்றும் திரவ க்ரீம் போன்றவற்றுடன் கலந்து குடிப்பார்களாம். இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இதன் சுவை அற்புதமாக இருக்குமாம்.

கிரேக்கர்கள்

பழங்காலத்தில் கிரேக்க மக்கள் ஹேங்ஓவரில் இருந்து விடுபட ஆந்தை முட்டை மற்றும் செம்மறி ஆட்டு நுரையீரலை காலை உணவாக உண்பார்களாம்.

https://tamil.boldsky.com/health/tips/crazy-cures-for-hangover-from-around-the-world-026816.html

டிஸ்கி:

இது ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை .. கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து கொள்ளலாமே..? 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிச்சுட்டு பார்க்கிற வைத்தியத்தை வாசித்தாலே 
குடிக்க இருந்த மனமும் மாறிவிடும். 
பச்சை தண்ணியை குடித்துவிட்ட்டு நிம்மதியா இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி:

இது ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை .. கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து கொள்ளலாமே..? 👍

கொஞ்ச உப்பு வாயிலை போட்டால் முழு வெறி அரை வெறிக்கு இறங்கும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

கொஞ்ச உப்பு வாயிலை போட்டால் முழு வெறி அரை வெறிக்கு இறங்கும். :cool:

ஒரு தேசிக்காயைத் தலையில் தேய்ச்சு விட....மிச்ச வெறியும் இறங்கும்....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாயகண்ட பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க சுடுதண்ணியை ஊற்றிவிட்டு அதில் ஒருவிரல் அளவு விக்ஸை  போட்டு கலக்கி விட்டு தலைமேல் ஒரு தடிமனான துணியை போட்டுக்கொண்டு  ஆவி பிடிக்க போதை காலியாகி விடும்......!    👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2019 at 1:01 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி:

இது ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை .. கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து கொள்ளலாமே..? 👍

Ähnliches Foto

வாழைப் பழம்  சாப்பிட்டால்.... வெறி  முறியும்,  என்று சொல்வார்கள்.
காசு குடுத்து.... ஏத்தின  வெறியை.... ஏன் முறிப்பான், என்று முயற்சி பண்ணி பார்க்கவில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

வாழைப் பழம்  சாப்பிட்டால்.... வெறி  முறியும்,  என்று சொல்வார்கள்.
காசு குடுத்து.... ஏத்தின  வெறியை.... ஏன் முறிப்பான், என்று முயற்சி பண்ணி பார்க்கவில்லை. :grin:

மரபணு கலக்காத சுத்தமான..ஒரு தமிழனின் சிந்தனை...அனேகமாக இவ்வாறு தான் இருக்கும் எனநினைக்கிறேன்!😀

Link to comment
Share on other sites

இவை எல்லாவற்றை விடவும் சிறந்த வழி.... பச்சைத் தண்ணி. தலைக்கு ஊத்திவிட்டால், போதை, புலம்பல். தள்ளாட்டம் அனைத்தும் பறந்துவிடும்.

Link to comment
Share on other sites

 

3 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

வாழைப் பழம்  சாப்பிட்டால்.... வெறி  முறியும்,  என்று சொல்வார்கள்.
காசு குடுத்து.... ஏத்தின  வெறியை.... ஏன் முறிப்பான், என்று முயற்சி பண்ணி பார்க்கவில்லை. :grin:

காசு குடுத்து ஏத்தின  வெறியை முறிக்க காசு குடுத்துத்தான் வாழைப்பழமும் வாங்கவேண்டும்.... 😲

புத்திசாலிகள் வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் வெறி ஏத்துவார்கள். ஏனெனில் அந்தநாளில்தான் பின்நேரப் பொழுதில்.... கோவில் வாழைப்பழம், ஓசியில் கிடைக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

காசு குடுத்து ஏத்தின  வெறியை முறிக்க காசு குடுத்துத்தான் வாழைப்பழமும் வாங்கவேண்டும்.... 😲

புத்திசாலிகள் வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் வெறி ஏத்துவார்கள். ஏனெனில் அந்தநாளில்தான் பின்நேரப் பொழுதில்.... கோவில் வாழைப்பழம், ஓசியில் கிடைக்கும். 🤣

இதுக்குப்பிறகும்  அந்த மானஸ்தன் ஓசி வாழைப்பழத்திலை கை வைப்பார் எண்டுறீங்கள்? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.