Jump to content

சுமந்திரனே பாராளுமன்றத்தில் யாரை கேட்டு பௌத்தத்துக்கு முதலிடம் கொடுத்தீர் - காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்


Recommended Posts

தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதன்போது அவர்களது கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

DSC_0377_1.JPG

 

DSC_0379_1.JPG

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல்  ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள்  2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது  ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

DSC_0405_1.JPG

சம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?

DSC_0410_1.JPG

சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/68098

Link to comment
Share on other sites

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

காணமல் போனோருக்கும், மோடிக்கு இலங்கை பெள்த்த நாடு என்று குறிப்பிட்டதுக்கும் என்ன சம்பந்தம் ..... கணக்கு எங்கேயோ இடிக்கிதே....

 மண்ட மேல இருக்கிற கொண்டையை மறைக்க முடியவில்லையே காட்சி தான் ஞாபகம் வருது ...!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

கனவுகளே, கனவுகளே! காலமெல்லாம் வாரீரோ! 😃

இந்த காணாமல் போனோரின் உறவுகள் விடும் கண்ணீரை பார்த்து இதுவரையும் நான் உண்மையிலேயே ஏமாந்து போய் விட்டேன்.

இவர்கள் அப்படியே தெளிவாக கூலிக்கு மாரடிக்கும் அரசியல் வியாபாரிகள்! நாம் பிறந்த நாடு இப்படி முன்னேறி அமெரிக்காவில் உள்ளது போல அரசியல் வியாபாரம் கூட கனகச்சிதமாக செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

 

2 minutes ago, Jude said:

கனவுகளே, கனவுகளே! காலமெல்லாம் வாரீரோ! 😃

இந்த காணாமல் போனோரின் உறவுகள் விடும் கண்ணீரை பார்த்து இதுவரையும் நான் உண்மையிலேயே ஏமாந்து போய் விட்டேன்.

இவர்கள் அப்படியே தெளிவாக கூலிக்கு மாரடிக்கும் அரசியல் வியாபாரிகள்! நாம் பிறந்த நாடு இப்படி முன்னேறி அமெரிக்காவில் உள்ளது போல அரசியல் வியாபாரம் கூட கனகச்சிதமாக செய்கிறார்கள்.

சம்மந்தனும் சுமந்திரனும் ஒழுங்காக இருந்து இருப்பின் சிறையில் இருந்தவர்களை என்றாலும் விடுவித்து இருக்கலாம் 
அவர்கள் இருவரும் புறோம்போக்கு அரசியலைத்தான் செய்கிறார்கள். இலங்கை பௌத்த நாடு என்று சொல்ல சம்மந்தன் யார்? எப்போதிருந்து இலங்கை பௌத்த நாடு?

அவர்கள் யாரை இருந்தால் என்ன? கேள்விக்கு பதில் என்ன?

நீங்கள் என்ன எதிர்பாக்கிறீர்கள்?
இவர்கள் சுமந்திரனுக்கு சம்மந்தருக்கும் எமது உறவுகள் காணாமல் ஆக்கபட்டுளார்கள் என்று பாதாதையில் எழுதி அதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர்கள் இருவருக்கும் அதை 2019இல் தெரிய படுத்த வேண்டும்  என்றா? 

இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு கட்சியும் இல்லை .... எடுப்பப்பார் பிள்ளைபோல இவர்களை யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் ..... இவர்களுக்கு ஆதர்வாவு தருவதாக வருபவர்கள் இவர்கள் மூலமாக தங்கள் சொந்த விடயங்களை முன் எடுக்கலாம்........... அதெல்லாம் வாசித்து புரிந்துகொள்ளும்  நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம் .... யார் வந்தாலும் அவர்களை பிடித்து தொங்கும் நிலையில்  இவர்களை விட்ட கூத்தமைப்பு பற்றி உங்கள் விளக்கம் என்ன? 

Link to comment
Share on other sites

39 minutes ago, Maruthankerny said:

 

சம்மந்தனும் சுமந்திரனும் ஒழுங்காக இருந்து இருப்பின் சிறையில் இருந்தவர்களை என்றாலும் விடுவித்து இருக்கலாம் 
.....

இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு கட்சியும் இல்லை .... எடுப்பப்பார் பிள்ளைபோல இவர்களை யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் ..... இவர்களுக்கு ஆதர்வாவு தருவதாக வருபவர்கள் இவர்கள் மூலமாக தங்கள் சொந்த விடயங்களை முன் எடுக்கலாம்........... அதெல்லாம் வாசித்து புரிந்துகொள்ளும்  நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம் .... யார் வந்தாலும் அவர்களை பிடித்து தொங்கும் நிலையில்  இவர்களை விட்ட கூத்தமைப்பு பற்றி உங்கள் விளக்கம் என்ன? 

இவர்கள் கூட்டமைப்பை கைவிட்டார்களா, அல்லது கூட்டமைப்பு இவர்களை கைவிட்டதா, அல்லது அரசியல் வியாபாரம் இவர்களுக்கு (கூட்டமைப்பு உட்பட) மிகவும் இலாபகரமாகி விட்டதா என்ற கேள்விகள், நியாயமான, பதில் தேவையான கேள்விகள். ஆனால், வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை இவர்களின் பாதகைகளும், அண்மைக்கால போராட்ட முறைகளும், கோரிக்கைகளும் ஐயத்துக்கு இடமின்றி எனக்கு காட்டி இருக்கின்றன.

தமிழரசு கட்சி ஆற்றலுள்ள நேர்மையான கட்சியாக இருந்து இருந்தால் 70களில் சிங்கப்பூர் ஏழை நாடாக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கை இன்றைய சிங்கப்பூரின் இடத்தில் இருந்திருக்கும். இந்த கட்சிதான் அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு என்பதில் அவர்களுக்கே மாற்று கருத்து இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

இவர்கள் கூட்டமைப்பை கைவிட்டார்களா, அல்லது கூட்டமைப்பு இவர்களை கைவிட்டதா, அல்லது அரசியல் வியாபாரம் இவர்களுக்கு (கூட்டமைப்பு உட்பட) மிகவும் இலாபகரமாகி விட்டதா என்ற கேள்விகள், நியாயமான, பதில் தேவையான கேள்விகள். ஆனால், வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை இவர்களின் பாதகைகளும், அண்மைக்கால போராட்ட முறைகளும், கோரிக்கைகளும் ஐயத்துக்கு இடமின்றி எனக்கு காட்டி இருக்கின்றன.

தமிழரசு கட்சி ஆற்றலுள்ள நேர்மையான கட்சியாக இருந்து இருந்தால் 70களில் சிங்கப்பூர் ஏழை நாடாக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கை இன்றைய சிங்கப்பூரின் இடத்தில் இருந்திருக்கும். இந்த கட்சிதான் அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு என்பதில் அவர்களுக்கே மாற்று கருத்து இருக்காது.

இவர்கள் இழந்து தவிப்பது குடும்ப துணை  சொந்த பிள்ளை 
அவர்கள்தான் உலகம் என்று இருந்த உறவுகள் ...
அவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியாது 

நீங்கள் சொலவதுபோல் 
இவர்கள் என்று எடுப்பர் பிள்ளையாகி இருப்பது என்பது வெளிச்சமானது 
இந்த நிலையில் இவர்களை கூட விட்வர்களிடம் .... ஒரு தமிழன் எதிர்பார்க்க என்ன இருக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் மக்களை சந்திப்பை தவிர்க்கும் பட்சத்தில் அவர்களது சந்திப்புக்களுக்கு மக்கள் தேடிச்செல்வது தவிர்க்க முடியாது அதையும் தடுக்கும் போது????

 

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சம்பந்தரின் அரசியல் இங்கு உறவுகளை தொலைத்த உறவுகளுக்கு   அவரால் விளங்க முடியாத நிலை இருக்கலாம். 😎

மோடி ஒரு இந்துத்துவா முகவர். அவரை இப்படி கூறி இங்கு நீங்கள் இந்து மதத்தை ( சைவத்தை ) காப்பாற்ற வேண்டும் என நாசூக்காக கூறி உள்ளார் 🔍

10 hours ago, ampanai said:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள்  2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது  ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

கோலையும் போட முடியவில்லை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற விருப்பும் இல்லை. 

எனவே, நிலைத்திருக்க கோல் போஸ்ட்டை நகர்த்திய வண்ணம் உள்ளார் :LOL:

Link to comment
Share on other sites

8 hours ago, பெருமாள் said:

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

பெருமாள், 

உங்களிடம் ஒரு கேள்வி. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக சைவ,  வேளாளர் தவிர்ந்த வேறு ஒருவர் வர முடியுமா ????  (கவனிக்க - நான் இங்கு சாதியையோ மதத்தயோ ஒரு பிரச்சனையாக குறிப்பிடவில்லை. எனவே அதனை ஒரு பிரச்சனை ஆக்காமல் யதார்த்தமான பதிலை எதிர்பார்க்கிறேன் ) இல்லையல்லவா ?  அதுபோலதான் இதுவும்.  எங்கள் விருப்பங்கள் எதுவுமாக இருக்கலாம்.  ஆனால் யதார்த்தத்தை நாங்கள் புறக்கணிக்க முடியாது.  அதுவும் நாங்கள் மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் சிலவற்றை விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.  உங்கள் கருத்தை நிதானமாக குறிப்பிடவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maharajah said:

பெருமாள், 

உங்களிடம் ஒரு கேள்வி. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக சைவ,  வேளாளர் தவிர்ந்த வேறு ஒருவர் வர முடியுமா ????  (கவனிக்க - நான் இங்கு சாதியையோ மதத்தயோ ஒரு பிரச்சனையாக குறிப்பிடவில்லை. எனவே அதனை ஒரு பிரச்சனை ஆக்காமல் யதார்த்தமான பதிலை எதிர்பார்க்கிறேன் ) இல்லையல்லவா ?  அதுபோலதான் இதுவும்.  எங்கள் விருப்பங்கள் எதுவுமாக இருக்கலாம்.  ஆனால் யதார்த்தத்தை நாங்கள் புறக்கணிக்க முடியாது.  அதுவும் நாங்கள் மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் சிலவற்றை விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.  உங்கள் கருத்தை நிதானமாக குறிப்பிடவும். 

இந்த அறுந்த ரீலையே இவ்வளவுகாலமும் உங்கடை தலைகள் சொல்லியது புதிதாக ஒன்றுமில்லை உங்களிடமும் நாங்கள் பலவீனமான நிலைதான்   ஓகே குறைந்த பட்சம் முஸ்லீம் அரசியல் தலைவர்களை போல் தன்னும் தமிழ்மக்களுக்கு விசுவாசமாய் இருங்கள் என்றமே அப்படி கூட இருக்கமுடியவில்லை உங்கள் ஆட்களுக்கு அதுசரி வாலன்றியாக தலையை குடுக்கிறிங்கள் நீங்கள் பெரிய டான் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

அவர்களின் இழப்பின் வலி உங்களுக்கே நக்கலாக தெரிகிறது உங்கள் தலைவர்கள் பற்றி சொல்லதேவையில்லை அவர்களின் கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா ?

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

இந்த அறுந்த ரீலையே இவ்வளவுகாலமும் உங்கடை தலைகள் சொல்லியது புதிதாக ஒன்றுமில்லை உங்களிடமும் நாங்கள் பலவீனமான நிலைதான்   ஓகே குறைந்த பட்சம் முஸ்லீம் அரசியல் தலைவர்களை போல் தன்னும் தமிழ்மக்களுக்கு விசுவாசமாய் இருங்கள் என்றமே அப்படி கூட இருக்கமுடியவில்லை உங்கள் ஆட்களுக்கு அதுசரி வாலன்றியாக தலையை குடுக்கிறிங்கள் நீங்கள் பெரிய டான் போல் உள்ளது .

கொவிக்காதீர்கள் பெருமாள்.  நான் இதை ஒர்  உதாரணமாகத்த்தான்  குறிப்பிட்டேன்.  உங்களை சீண்டுவதட்காக அல்ல.  தமிழ் தலைமைகள் என கூறப்படுவோர் தொடர்ப்பில் எனக்கும் மிகப்  பெரும் அதிருப்தி (கோபம் )உண்டு.  ஆனால் அவர்களை திட்டி தீர்ப்பதால் பயனொன்றும் இல்லை.  குறைந்தபட்சம் நாங்கள் யதார்த்ததை உணர்ந்தாலே நாங்கள் எமது தாயகத்திலுள்ள மக்களை பலப்படுத்தலாம். இப்போது இதுதான் மிக மிக அவசரமானது.  சரியோ பிழையோ தற்போதைய நிலையில் தமிழ் தலைமைகள் எனக் கூறப்படுவோரை நாம் பலவீனப் படுத்தாமலிருப்பது தான் சிறந்தது. - பலப்படுத்தாவிட்டாலும். இதுதான் தற்போது நாம் தயக்கத்திலுள்ளோருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. 

3 hours ago, பெருமாள் said:

அவர்களின் இழப்பின் வலி உங்களுக்கே நக்கலாக தெரிகிறது உங்கள் தலைவர்கள் பற்றி சொல்லதேவையில்லை அவர்களின் கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா ?

நான் அவைகளின் கேள்வி பிழை என்கிறேன்.  இவ்வாறான கேள்விகள் அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மழுங்கடித்துவிடும். இவர்களின் போராட்டம் முக்கியமான நியாயமான ஒன்று.  ஆனால் அவர்கள் நோக்கம் திசை திரும்பக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maharajah said:

நான் அவைகளின் கேள்வி பிழை என்கிறேன்.  இவ்வாறான கேள்விகள் அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மழுங்கடித்துவிடும். இவர்களின் போராட்டம் முக்கியமான நியாயமான ஒன்று.  ஆனால் அவர்கள் நோக்கம் திசை திரும்பக் கூடாது. 

இவ்வளவு வருடம் அவர்கள் சரியாகத்தான் கோரிக்கைகளை வைத்தார்கள்  யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை  கூட்டமைப்பினர் பெயருக்கு கூட கண்டு கொள்ளவில்லை இப்ப அவர்கள் கேட்க்கும் கேள்வியில் என்ன பிழை கண்டு பிடித்து கொண்டு உள்ளார்கள் சில கேள்விகள் இன்னார்தான் கேட்கணும் எனும் விதிமுறை உள்ளதா ? அல்லது கூத்தமைப்பு என்ன அநியாயமும் செய்யும் தமிழ் மக்கள் பார்த்து கொண்டு இருக்கனுமா ? 

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

இவ்வளவு வருடம் அவர்கள் சரியாகத்தான் கோரிக்கைகளை வைத்தார்கள்  யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை  கூட்டமைப்பினர் பெயருக்கு கூட கண்டு கொள்ளவில்லை இப்ப அவர்கள் கேட்க்கும் கேள்வியில் என்ன பிழை கண்டு பிடித்து கொண்டு உள்ளார்கள் சில கேள்விகள் இன்னார்தான் கேட்கணும் எனும் விதிமுறை உள்ளதா ? அல்லது கூத்தமைப்பு என்ன அநியாயமும் செய்யும் தமிழ் மக்கள் பார்த்து கொண்டு இருக்கனுமா ? 

மன்னிக்கவும் பெருமாள்,  நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்திருக்கொள்வீர்களென எதிர்பார்த்தேன்.  பிழைத்துப்போனது.  சரி விடுங்கள்.  நான் தப்பித்து ஓடுகிறேன். நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.