Jump to content

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள்

என்.கே. அஷோக்பரன்   / 2019 நவம்பர் 04 , மு.ப. 02:32

எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை.  

ஜே.வி.பி சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது; ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரித்து இருக்கிறது. கோட்டா, மேலோட்டமாகக் குறித்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார் என்று செய்திக்குறிப்புகள் மூலம் தெரிகிறது. சஜித், இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.  

இந்தச் சூழலில், குறித்த 13 அம்சக் கோரிக்கைகளைக் கையளித்த ஐந்து தமிழ்க் கட்சிகளில் ஒன்றான, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், தபால்மூல வாக்களிப்புக்கு முன்னதாகத் தம்முடைய இறுதி நிலைப்பாட்டை, அறிக்கையொன்றில் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.   

அந்த அறிக்கையில் அவர், ‘ஒற்றை ஆட்சி முறைமையை நிராகரித்து, இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கை, இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அத்துடன், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொருளாதார, மனிதாபிமான நடவடிக்கைகளையும் இந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட, இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என்றும், அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவர்களுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் நாம் அறிவித்திருந்தோம். ஆனால், எந்தப் பிரதான கட்சிகளின் முக்கிய சிங்கள ஜனாதிபதி வேட்பாளருமே, இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் எம்முடன் பேசுவதற்கு முன்வரவில்லை’ என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.   

குறித்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில், தெற்கில் முன்வைக்கப்படும் எதிர்மறைப் பிரசாரம் பற்றித் தனது அறிக்கையில் கருத்துரைத்த நீதியரசர் விக்னேஸ்வரன், ‘எமது கோரிக்கைகள் தொடர்பில், இனவாதக் கருத்துகளை முன்வைத்து, பேரினவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தி, சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் குறுகிய அரசியலிலேதான், மற்றைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாகத் தென் இலங்கையின் தேர்தல் இயக்கவியலும் முற்றுமுழுதாக மகாவம்ச மனோநிலைக்கு உட்பட்டுள்ளது என்று காண்கின்றோம்’ என்று, தனது மன ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.   

மேலும், ‘அத்துடன் நேற்றுத் திங்கட் கிழமை வரை, குறிப்பிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட, ஒரு பொது முடிவுக்கு இதுவரை வரவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்’ என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.   

13 அம்சக் கோரிக்கையை, முதன்மை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்த பின்னர், அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் பின்னர், என்ன செய்வதென்று முடிவெடுப்பதில், ஒன்றிணைந்த ஐந்து கட்சிகளால் ஒன்றுபட முடியவில்லை என்பது, இந்த அறிக்கையின் மூலம் வௌிப்பட்டு நிற்கிறது.   

ஜனாதிபதித் தேர்தலில், யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாடு பற்றித் தனது அறிக்கையில், ‘தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாகப் பிரதான சிங்களக் கட்சிகள் எம்முடன் பேசக் கூடத் தயாராக இல்லாத சூழ்நிலையில், எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி, எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை, எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியினதும் நிலைப்பாடாகும்’ என்று நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.   

‘ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை, நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை, எம்மக்கள் பயன்படுத்த விரும்பின், எமது கடந்த கால வரலாறு, தற்போதுள்ள அகப்புற சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு, மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். எம்மால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை, பிரதான சிங்கள வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளாத இத்தகைய சூழ்நிலையில், அவற்றை நாமே கைவிட்டுவிட்டு, எமது சகோதரக் கட்சிகள், எந்த ஒரு முக்கிய கட்சி வேட்பாளருக்கேனும் களம் அமைத்து, கூட்டங்கள் கூட்டி, வெளிப்படையாக வாக்குக் கேட்க மாட்டார்கள் என நம்புகின்றோம். எமது நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடக் கூட விரும்பாத வேட்பாளருக்கு, வாக்களிக்குமாறு கேட்கும் தார்மீக உரிமை, எந்த ஒரு கட்சிக்கும் இல்லை என்பதே, எமது நிலைப்பாடாகும்’ என்றும் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.   

சுருங்கக் கூறின், வாக்களிக்க விரும்பும் தமிழ் மக்கள், அனைத்து விடயங்களையும் கவனமாகக் கருத்திற்கொண்டு வாக்களிக்கவும்; ஆனால், தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த, அதைப்பற்றிப் பேசவே தயங்கும் வேட்பாளரைத் தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரிப்பது அபத்தமானது என்பதே, சீ.வி. விக்னேஸ்வரனின் நிலைப்பாடாகும்.  

மறுபுறத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மீண்டும் தனது தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற முடிவைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எடுத்துள்ளோம். இந்த முடிவை, மறுபரிசீலனை செய்யவேண்டும் என நினைக்கும் வல்லரசுச் சக்திகள், சமஷ்டித் தீர்வு பெற்றுத்தரல், போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறலை நடத்துதல் ஆகிய இரு விடயங்களுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுத்தர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முதன்மை வேட்பாளர்கள், தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள். அவர்களுடைய கருத்துகளைப் பார்த்தால், முக்கியமான மூன்று கட்சிகளின் வேட்பாளர்களின் நிலைப்பாடு, பொதுவானதாகவே உள்ளது. இலங்கை, சிங்கள பௌத்த நாடு என்ற விடயமும் அதற்கு மேலதிகமாக, முதன்மையான இரண்டு கட்சியும் இலங்கை என்ற நாடு, ஒற்றையாட்சி நாடாக மட்டும்தான் இருக்கமுடியும்; அந்த ஒற்றையாட்சித் தன்மையைப் பலப்படுத்துவதுதான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.   

அத்துடன், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. அரசியல் தீர்வு; அதில் சிறப்பாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கிகரிக்கப்படுகின்ற தமிழரின் இறைமை அடிப்படையில், ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடயம். அதனால் மட்டுமே, தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே, இடம்பெற்றிருந்த இனஅழிப்பு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு, நடந்த குற்றங்களுக்கு நாங்கள், பொறுப்புக்கூறலைச் செய்தே ஆகவேண்டும். அவ்வாறு செய்வதே, கடந்த காலத்தைப்போன்று எதிர்காலத்திலும் தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். இவை, இரண்டும்தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும். இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. ஆனால், இவை எதையும் கருத்தில் கொள்ளாது, சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளைத் தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள். இத்தகைய நிலையில், தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள், தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதால், எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்கமுடியாது. எங்களுக்குரிய தேர்தல் இதுவல்ல என்பதுதான் இன்றைக்குள்ள யதார்த்தம். இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. ஆனால், புறக்கணிப்பு என்ற விடயம், கடும் போட்டி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் மத்தியில், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற முடிவாக இருக்கலாம். தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றியடைய முடியாத நிலைமை என்ற முடிவைத் தேர்தல்ப் புறக்கணிப்பால் உருவாக்கமுடியும்” என்றும் தெரிவித்திருந்தார்.  

சுருங்கக் கூறின், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடானது, தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால், அது நிச்சயம், ஒரு பிரதான வேட்பாளருக்கேனும் பாதகமாக அமையும்; அந்தப் பாதக விளைவை, அவர்கள் தடுக்க நினைத்தால், தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு வேண்டுமென்றால், அவர்கள் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், தமிழ் மக்கள் எந்த நிபந்தனையுமின்றி, வாக்களிப்பதால் பயனில்லை என்பதாகும்.  

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதன் பிரதான பங்காளியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாடு பற்றித் தொடர்ந்து மௌனம் காத்துவருகிறது.   

பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துக் கையொப்பமிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஒன்றாகும். ஆயினும், இன்றுவரை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது, தேர்தல் புறக்கணிப்பு என, எந்த நிலைப்பாட்டையும் தமிழரசுக் கட்சி அறிவிக்கவில்லை.   

கோட்டாவினதும் சஜித்தினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து வருகிறோம் என்பதே, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இருந்துவந்த அண்மைய அறிக்கைகளாகும். 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் கூட, தேர்தல் பிரசாரக் கட்டத்தின் அந்தம் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது நிலைப்பாட்டை வௌிப்படையாக அறிவிக்கவில்லை. அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட, அதன் ஆதரவைப் பெறும் பிரதான வேட்பாளரின் தந்திரோபாயமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் இங்கு மறுக்க முடியாது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வௌிப்படையான ஆதரவு என்பது, தெற்கின் தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியைப் பாதிக்கலாம் என்ற அச்சம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வௌிப்படையான ஆதரவைப் பெறும் பிரதான வேட்பாளருக்கு இருக்கும் ஒன்று.   

குறிப்பாக, எழுத்துமூல உறுதிமொழிகளை வழங்குவதில், இந்த அச்சம் பெரும் தயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஏனெனில், மாற்றுப் பிரதான வேட்பாளர் தரப்பு, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கிக்கு முன்னால், இதைத் தமிழ் மக்களுக்கு ‘தனிநாடு’ வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையாகக் காட்ட முனைவது வழக்கமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல.   

ஆகவே, ஒன்றோடொன்று முரணாகக் கருதிக்கொள்ளும் இனத் தேசியங்களின் நலன்கள் இடையேயான போட்டியில், ஒரு சமநிலையை அடைந்துகொள்ளும் சவால், தமிழ் தலைமைகளுக்கு மட்டுமல்ல, சிங்களப் பௌத்த தலைமைகளுக்கும் பெருஞ்சிக்கலானதே! தற்போது, இந்தச் சிக்கல் முஸ்லிம்கள், சிங்களப் பௌத்த தலைமைகள் இடையேயும் ஏற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  இந்த நிலையில், தேர்தலுக்குச் சில நாள்கள் முன்பதாகத் தம்முடைய ஆதரவு யாருக்கு என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், அது ஒருபோதும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோராது என்பது நிச்சயமானது. தேர்தல்ப் புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைப்பதில், இன்னொரு சிக்கல் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சியானது, தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் போது, ஒருவேளை தமிழ் மக்கள் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளாது தேர்தலில் கணிசமானளவில் வாக்களித்தால், அது புறக்கணிப்புக் கோரிக்கையை விடுத்த குறித்த கட்சியின் செல்வாக்கை மட்டுமல்ல, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் அவர்களது ஏற்புடைமையையும் கடுமையாகப் பாதிப்பதாக அமையும்.   
ஆகவே, புறக்கணிப்புக் கோரிக்கை என்பது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று முன்வைக்கக்கூடியதொரு விடயமல்ல; தமிழரசுக் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தானே விரும்பினால் கூட, புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கத் தயங்கும். அதற்குக் காரணம், தாம் விடுதலைப் புலிகள் அல்ல; அத்தகைய செல்வாக்கோ, பலமோ தம்மிடம் இல்லை என்பதையும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிந்தே இருக்கிறது.   

ஆகவேதான், வாய்ச்சவடால் அரசியலை முன்னெடுப்பதில், தயக்கம் காட்டுகிறது. இந்தத் தயக்கத்தை நீதியரசர் விக்னேஸ்வரனின் அறிக்கையிலும் காணலாம். இதே காரணங்களுக்காகத்தான் அவர் கூட, புறக்கணிப்பு என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை; மாறாகத் தமிழ் மக்களை, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு வாக்களிக்கக் கோருகிறார்.  

ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில், யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்பது, தமிழ் மக்களை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ, ஏதோ ஒரு வகையில் பாதிக்கத்தான் போகிறது.  

தமிழ் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு தேர்தலும், அவர்களுக்கான தேர்தல்தான். இதில் எமக்கு நன்மை கிடைக்குமா, இல்லையா என்று பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு இதில் எமக்குத் தீமை விளையுமா, இல்லையா என்று பார்ப்பதும் முக்கியமானது.   

சில முடிவுகளால், எமக்குப் புதிய நன்மைகள் எதுவும் விளையாதுவிட்டாலும், புதிய தீமைகளை விளைவிக்காத முடிவானது, புதிய தீமைகளை விளைவிக்கக்கூடிய முடிவிலும் சிறந்ததாகவே கருதப்பட வேண்டும்.

ஆகவே, இந்தத் தேர்தல், தமிழ் மக்களைப் பாதிக்காத தேர்தல் என்ற கருத்து ஏற்புடையதொன்றல்ல; ஆகவே, தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான், தமிழ்த் தலைமைகள் எடுக்கத்தக்க உசிதமானதொரு நிலைப்பாடாகும். 

(இக்கட்டுரை தமிழரசுக் கட்சியின்  நேற்றைய தீர்மானத்துக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்)  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தல்-தமிழர்-தலைமைகளின்-நிலைப்பாடுகள்/91-240673

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.