Jump to content

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.

court.jpg

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.

இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

https://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

நீதிபதி சமூக நலன் கொண்டவராகவும் தெரிகின்றார் !


“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்."

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனு

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்" பாடலைக்கேட்டு கணவன் குளிக்க மறந்து குடித்திருப்பார். 

Link to comment
Share on other sites

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பமில்லாது  வாழமுடியாது

அதிலும்  பிடிக்காத  குளிக்காதவருடன்????🤣

முடிவு  சரி  தான்

வெட்டிவிடவேண்டியது  தான்  இருவருக்கும்   நல்லது😥

Link to comment
Share on other sites

"கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்."

"யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். "

சட்டத்தரணிகள் வீட்டில் காசு மழை 🙂 

Link to comment
Share on other sites

51 minutes ago, விசுகு said:

விருப்பமில்லாது  வாழமுடியாது

அதிலும்  பிடிக்காத  குளிக்காதவருடன்????🤣

முடிவு  சரி  தான்

வெட்டிவிடவேண்டியது  தான்  இருவருக்கும்   நல்லது😥

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??  

விவாகரத்து கேட்பதானால் கண்ட கண்ட காரணங்களை கூறி விவாகரத்து கேட்க முடியாது.

வெளிநாடுகளில் குறட்டை விடுவதை முக்கிய காரணமாக காட்டி விவாகரத்து கேட்பது வழமை. குளிக்கவில்லை என்ற காரணத்தை கூறினால் இங்கும் விவாகரத்து கொடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

விவாகரத்து கேட்பவர்கள் என்னென்ன காரணத்தை கூறினால் விவாகரத்து கொடுப்பார்கள் என்ற விடயத்தை முன்கூட்டியே கேட்டறிந்து அதில் ஒன்றை குறிப்பிட்டு கேட்பது தான் வழமை.

சட்டத்தரணிகளுக்கு இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஊரில் சட்டத்தரணிகளுக்கும் பல விடயங்கள் தெரியாது.

2 hours ago, Paanch said:

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்" பாடலைக்கேட்டு கணவன் குளிக்க மறந்து குடித்திருப்பார். 

😀😀😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Maharajah said:

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

அதுவும்  யாழில்

ஒரு நாளைக்கு 2 தரமாவது  குளிக்கணுமே??😀

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

அதுவும்  யாழில்

ஒரு நாளைக்கு 2 தரமாவது  குளிக்கணுமே??😀

விசுகு அவர்களே நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்.....? இன்று யாழில் கருத்தெழுதுவோர் சிலர் தண்ணிக்குள் இருந்தே எழுதுவதுபோல் தெரிகிறது.! அவர்களுக்கு எதற்குக் குளியல்...?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.

 

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.

இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

https://www.virakesari.lk/

அசுத்தமானவரினால் நோய்கள் தொற்றினால் 
அதுக்கு நீதிபதி பொறுப்பு ஏற்பாரா?

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுக்கு 
சில பழக்கவழக்கங்களை பொதுவாகவே இருவரும் கடைபிடிக்க வேண்டும் 
அவ்வாறு இல்லாதவர்களை நீங்கி வாழ்வதுதான் சரியானது.

மனுவை தள்ளுபடி செய்தது தவறு என்றே நான் கருதுகிறேன் 
வேண்டுமானால் மேற்கொண்டு விசாரணைகள் செய்திருக்கலாம். 

சுகாதாரமற்ற ஒருவருடன் சென்று உடலுறவை வை எனும் நீதிபதியின் போக்கு 
சமூகத்தில் என்ன நீதியை கொண்டு வரும்? 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

அசுத்தமானவரினால் நோய்கள் தொற்றினால் 
அதுக்கு நீதிபதி பொறுப்பு ஏற்பாரா?

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுக்கு 
சில பழக்கவழக்கங்களை பொதுவாகவே இருவரும் கடைபிடிக்க வேண்டும் 
அவ்வாறு இல்லாதவர்களை நீங்கி வாழ்வதுதான் சரியானது.

மனுவை தள்ளுபடி செய்தது தவறு என்றே நான் கருதுகிறேன் 
வேண்டுமானால் மேற்கொண்டு விசாரணைகள் செய்திருக்கலாம். 

சுகாதாரமற்ற ஒருவருடன் சென்று உடலுறவை வை எனும் நீதிபதியின் போக்கு 
சமூகத்தில் என்ன நீதியை கொண்டு வரும்? 

இவர் பிற்போக்கான நீதிபதி. கணவனும் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்டுள்ள நிலையில் இந்த 

தீர்ப்புக்கு எதிராக கணவனும் மனைவியும் ஒற்றுமையாக மேன்முறையீடு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maharajah said:

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

ஒரு பெண்ணிடம்...சில அபூர்வமான ஆயுதங்கள்...படைத்தவனால்...அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன!

அவற்றை அவள் சரியாக உபயோகித்தால்...தண்ணியைக் காணாதவனே....தண்ணீரில் மிதப்பான்!

இவர்களுக்கிடையில்  வேறு பிரச்சனைகள் இருக்க வேண்டும்!

;குளிக்காதது ஒரு வெளிக்காரணமாகக் காட்டப் படுகின்றது எனநினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை தண்ணி பாவிப்பவரா,  என்று திருமணத்தின் போது கேட்கப்பட்டு அவர் இல்லை என்று கூறி இருக்கலாம். அந்த நேர்மையை காப்பாற்ற அவர்  அப்படி நடந்திருக்கலாம்.  அல்லது தண்ணி பாவிக்காதீர்கள் என று மனைவி கூறியதை அவர் தப்பாக விளங்கி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maharajah said:

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??

விவாகரத்து, திருமண உறவை முறித்தல்  மற்றும் கலைத்தல், இவற்றை தவிர்து சட்ட அடிப்படையில் பிரிந்து வாழுதல் (legal separation) என்பவற்றின்  European தலைநகரமாகிய  UK இல் கூட,  5 சட்ட அடிப்படையிலான காரணங்களே (grounds) உள்ளது.

தன் துணை தவிர்ந்து பிறனை நயத்தல் (Adultery) 
நடத்தை (Behaviour), 
கைவிடல் (Desertion), 
2 வருடங்கள் இருவரும் ஒத்து பிரிந்து வாழ்ந்தமை (Separated for 2 years and consent ), 
5 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தமை (Separated for 5 years )

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/800140/d8-eng.pdf

சட்டத்தின் அடிப்படையில், குளிக்காமல் இருப்பது, பொது (common law) சட்டத்தை, வெகுசன சட்டத்தையோ (public law), நீதிமன்ற தீர்ப்பினால் உருவாகும்  சட்டத்தையோ (case law)   மீறவில்லை.

பொது சட்டம் என்பது, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் அதன் அடிப்படையில் நீதித்துறையால் மாறும் மன்றத்தால் எடுக்கப்படும் முடிவுகளும், தீர்ப்புகளும்.

பொது (common law) சட்டத்தை மூலமாகவே, எமது கோயில்களில் (குறிப்பாக இலங்கையில் உள்ள சைவ கோயில்களில்) நடைபெறும் திருமணம் சட்ட வலுவுடையதாகிறது. UK  யிலும் தேவாலயத்தில் நடந்த விவாகங்கள் ஷட்டவுழுவுடையதாக இருந்தது, ஆனால், அதை UK நீக்கி விட்டது.

(பிறர்) அனுபவத்தில் நான் நேரடியாக அறிந்தது, விவாகரத்து , முறித்தல் அல்லது கலைத்தல் என்பதற்கு, விவாகம் மீட்கப்பட முடியாத அளவிற்கு முறிந்து இருக்க வேண்டும்.

சிலவேளைகளில், உரிய காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவை விவாகத்தை மீட்கப்பட முடியாத அளவிடற்கு இட்டு சென்றுள்ளது  என்பதை நிரூபிக்க வேண்டும். 

மேலே சொல்லப்பட்ட 5 வது காரணத்தை, UK இல் no fault divorce ground என்று, அதாவது இருவரிலும் ஓர் தவறுகளோ அல்லது காரணங்களோ இல்லை. அதில் கூட, விவாகம்  மீட்கப்பட முடியாத அளவிடற்கு இட்டு சென்றுள்ளது  என்பதை நிரூபிக்க வேண்டும். 

முக்கியமான பிரச்னை என்னவென்றால், அவ்வாறு நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பினும், நிரூபணத் தன்மையானது வழக்கை விசாரிக்கும் Judge இன் perception உம் செல்வாக்கு செலுத்தும்.

 இதுவும்,ஒரு காரணம், ஒரே அடிப்படை காரணங்கள்  கொண்ட இரு விவாக இரத்துகள், வெவ்வேறு தீர்ப்பு வருவதற்கு.     

நான் சட்ட வல்லுநர் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.