Jump to content

கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Recovered-vehicles_Super_Portrait-720x430.jpg

கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.

விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் சென்று பழுதுபார்க்கும் நிலையங்களில் விடுவதற்கும் அங்கு கடும் போட்டி ஏற்படுகின்றது.

குறித்த சகோதரர்கள் இருவரும் பழுது பார்க்கும் நிலையங்களுக்கு முகவர்களாக செயற்படுகின்றனர். அந்த வகையில் ஸ்கார்பரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (வயது 24), நகுல் விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும், அவர்கள் இழுத்துச் செல்லும் விபத்துக்குள்ளான வாகனங்களை முறையாக பழுதுபார்க்கும் இடங்களில் சேர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கனடாவில்-கார்-திருட்டில்/

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

Recovered-vehicles_Super_Portrait-720x430.jpg

கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.

விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் சென்று பழுதுபார்க்கும் நிலையங்களில் விடுவதற்கும் அங்கு கடும் போட்டி ஏற்படுகின்றது.

குறித்த சகோதரர்கள் இருவரும் பழுது பார்க்கும் நிலையங்களுக்கு முகவர்களாக செயற்படுகின்றனர். அந்த வகையில் ஸ்கார்பரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (வயது 24), நகுல் விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும், அவர்கள் இழுத்துச் செல்லும் விபத்துக்குள்ளான வாகனங்களை முறையாக பழுதுபார்க்கும் இடங்களில் சேர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கனடாவில்-கார்-திருட்டில்/

ஒர் சம்பவத்தை எப்படியெல்லாம் திரிவு படுத்துகிறார்கள். பொறுப்பற்ற செயல். 

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

ஒர் சம்பவத்தை எப்படியெல்லாம் திரிவு படுத்துகிறார்கள். பொறுப்பற்ற செயல். 

சரியாகத்தானே செய்தி போட்டுள்ளார்கள்?  CTV யில் வந்த  செய்தி ஆங்கிலத்தில்

https://toronto.ctvnews.ca/stolen-luxury-vehicles-seized-following-search-warrant-at-scarborough-tow-truck-business-1.4666298

Link to comment
Share on other sites

18 minutes ago, நிழலி said:

சரியாகத்தானே செய்தி போட்டுள்ளார்கள்?  CTV யில் வந்த  செய்தி ஆங்கிலத்தில்

https://toronto.ctvnews.ca/stolen-luxury-vehicles-seized-following-search-warrant-at-scarborough-tow-truck-business-1.4666298

இல்லை நிழலி, 

ஆங்கில செய்திக்கும் தமிழ் செய்திக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது.  ஆங்கில சேதியை தமிழில்  மெருகூட்டி சோடித்து  பூசி மெழுகி கோலம் போட்டுள்ளனர்.  அதனால் செய்தியின் சாரம் மாறியுள்ளது. திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள்  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2019 at 4:39 AM, நிழலி said:

சரியாகத்தானே செய்தி போட்டுள்ளார்கள்?  CTV யில் வந்த  செய்தி ஆங்கிலத்தில்

இலங்கையில் ஒரு சேதி அடிபட்டது கனடாவில் ஈழத்தமிழ் இருகுழுக்கள் அடிபிடியென உன்மையோ அந்த செய்தி ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.