Jump to content

வாக்களிக்கும்போது புர்காவை அகற்றுமாறு உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

106792028_gettyimages-1065349410.jpg

வாக்களிக்கும்போது புர்காவை அகற்றுமாறு உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அல்லது நிகாப்பை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்க வரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா மற்றும் நிகாப் அணிவதை தங்களால் தடை செய்ய முடியாது என்றும் ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது, அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்பதால், அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எனினும் மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வாக்களிக்கும்போது-புர்க/

Link to comment
Share on other sites

"வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்பதால், அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்." 

இது ஒரு மனித உரிமை மீறல். சவூதியில் புர்க்கா அணிந்து பெண்கள் வாக்களிக்கவில்லையா ? 🤣

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

"வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்பதால், அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்." 

இது ஒரு மனித உரிமை மீறல். சவூதியில் புர்க்கா அணிந்து பெண்கள் வாக்களிக்கவில்லையா ? 🤣

Twitter இல் பகிரப்படும் கருத்துகள் இவ்வாறு உள்ளது. தமிழில் தலைகீழாக மொழிபெயர்த்துள்ளார்கள் என நினைக்கிறேன். 😀

Muslim women can wear either the #burqa or #niqab when they come for voting but should remove their face cover at the entrance to the polling center, @ECSriLanka, Director-General Saman Sri Ratnayake said.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முக மறைப்பை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா..... அவர் என்ன பாலினம் என்பதை எப்படி அறிவது.???

சவூதியில் பெரும்பாலும் பெண்கள் இப்படித்தான் தற்போது உடை அணிகிறார்களாம்.....

IMG_1319.JPG

Link to comment
Share on other sites

4 hours ago, Lara said:

Twitter இல் பகிரப்படும் கருத்துகள் இவ்வாறு உள்ளது. தமிழில் தலைகீழாக மொழிபெயர்த்துள்ளார்கள் என நினைக்கிறேன். 😀

ஒருவேளை மொழி பெயர்த்தவர் புரக்கா அணிந்திருந்ததால் தான் என்னவோ இவ்வாறு நடந்திருக்கலாம் 🙂 

2 hours ago, Paanch said:

சவூதியில் பெரும்பாலும் பெண்கள் இப்படித்தான் தற்போது உடை அணிகிறார்களாம்.....

இவர்கள் ரஷ்யாவில் உள்ள முஸ்லீம்கள் 🙂 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஒருவேளை மொழி பெயர்த்தவர் புரக்கா அணிந்திருந்ததால் தான் என்னவோ இவ்வாறு நடந்திருக்கலாம் 🙂 

இவர்கள் ரஷ்யாவில் உள்ள முஸ்லீம்கள் 🙂 

உருசிய முசுலீம் பெண்கள் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டுவிட்டார்களா? நான் சவூதிப் பெண்கள் என்று எண்ணிவிட்டேன் மன்னிக்கவும்.

ஆனால் சவூதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

 Yogaok.jpeg

 

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

வாக்களிக்கும்போது புர்காவை அகற்றுமாறு உத்தரவு

கள்ள வாக்குகளை தவிர்க்க உதவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.