Jump to content

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது


Recommended Posts

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும், ஓராண்டில் இந்த நடவடிக்கை நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசு போன்றவற்றை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் உருவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார்.

ஆனால் புவியின் வெப்பம் அதிகரித்து பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுவதை ஏற்க மறுத்துவிட்ட டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிடும் திறன் அமெரிக்காவுக்கு இருக்காது என்று குற்றம் சாட்டியது. 

https://www.polimernews.com/dnews/87623/பாரீஸ்-பருவ-நிலைஒப்பந்தத்தில்-இருந்துஅமெரிக்கா-வெளியேறியது

Link to comment
Share on other sites

தண்ணீர் பிரச்சனை: ஐந்து ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம்

ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் - உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை

ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

கொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிகின்றன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர் மக்கள். இதுதான் இப்போதைய தென் ஆப்ரிக்க நகரங்களின் நிலை.

தென் ஆப்ரிக்காவில் உள்ள க்ராஃப் ரெயினெட் நகரத்திலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ அங்கு மழை பெய்து ஐந்து வருடமாகிறது என்கிறார். அணைகள் எல்லாம் வற்றிய பிறகு சில ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே அம்மக்களின் தாகத்தைத் தணிக்கின்றன.

ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. உண்மையில் இது மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்கின்றனர் சூழலியலாளர்கள்.

அதாவது தென் ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட இந்த பகுதி சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வெப்பமடைவதாகக் கூறுகிறார்கள். புவி வெப்பமயமாதலை மற்ற நாடுகள் தடுக்கவில்லை என்றால் இந்த நிலை பிற இடங்களிலும் ஏற்படலாமென எச்சரிக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-50312100

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.