Jump to content

சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த


Recommended Posts

சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த

mahinda-rajapaksha-300x200.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள  மக்களை  ஏமாற்றி  தமிழ் மக்களுக்கு  சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று,  பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலகெதரவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக்  கூட்டத்தில்  உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

“ புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர்  சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை ஒருதலைபட்சமானது.

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளருக்கு ஆதரவு  வழங்கவுள்ளதாக  இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம். ஏ  சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஊடகங்களுக்கு  சிங்கள மொழியில்   ஒரு விதமாகவும், தமிழ் மொழியில்  பிறிதொரு விதமாகவும் கருத்துரைத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில்,   சிங்கள மொழியில் ஒருமித்த  நாடு  என்று  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் மொழியிலும்,  ஆங்கில மொழியிலும் சமஷ்டி  முறைமையினை தோற்றுவிப்பதற்கான  வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.   இது ஒரு   இனத்தினை ஏமாற்றும் செயற்பாடாகும்.

நாடு மீண்டும் பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது ” என்று அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/11/06/news/40987

Link to comment
Share on other sites

நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.