Jump to content

சமஷ்டிக்கு எதிரன எழுத்து மூல உறுதிப்பாட்டை மாநாயக்கர்கள் முன்னிலையில் சஜித்திடம் பெற வேண்டும் - மஹிந்த


Recommended Posts

(எம்.மனோசித்ரா)

ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்து மூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் பிரதமரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/68370

Link to comment
Share on other sites

 

இனவாதத்தைப் பரப்பி வாக்குகளை திசை திருப்ப முயற்சி - ரவி கருணாநாயக்க

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு குடும்பத்தை மாத்திரம் ஆட்சி பீடம் ஏற்றுவதா அல்லது நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களும் ஆட்சியாளர்களாக மாறுவதா என்பதை தீர்மானிப்பது உங்களுடைய கைகளிலே உள்ளது என்று அமைச்சர் ரவி கருநாணாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (5) வாழைச்சேனை - செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இனவாதத்தை தோக்கடிப்பதற்காக எதிர்வரும் பதினாறாம் திகதி அன்னப்பறவைக்கு முன்னால் புள்ளடியிட்டு சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

எஞ்சியுள்ள நாட்களில் நாம் அனைவரும் வீடுவீடாகச் சென்று ஒவ்வொருவருடைய மனங்களையும் தொட்டுப் பேசி அத்தனை வாக்குகளையும் நாங்கள் எங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும். இது இலகுவான விடயமல்ல இவர்கள் இனவாதத்தைப் பரப்புகின்றார்கள். வாக்குகளை திசை திருப்புவதற்காக முயற்சி செய்கின்றார்கள். ஆகவே நாங்கள் ஓயாமல் உழைத்து வெற்றி பெற்ற பின்னர்தான் ஓய்வெடுக்க வேண்டும். சுதந்திரக் கட்சியினர் எங்களோடு இனைந்து கொண்டு ஒரு சஜித் அலையினை உருவாக்கியுள்ளார்கள்.

அன்று சர்வாதிகார ஆட்சி எங்களுக்கு வேண்டாம் அதனை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்காக நீங்கள் அளித்த வாக்குப் பலம்தான் இவ்வாறு செய்யத் தோன்றியது.

அவ்வாறு நாங்கள் அந்த மாற்றத்தை செய்தாலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலே எங்களுக்கு முழுமையான பலத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அதனால் ஒரு கூட்டு ஆட்சி உருவானது அதனால் பல குழப்பங்கள் தோன்றின உங்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அது எவ்வாறாக இருந்தாலும் உங்களுக்கு அச்சமின்றி வாழக் கூடிய ஒரு சூழ்நிலையை எங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

ஜனநாயக வழியில் நாங்கள் முன்செல்ல வேண்டும். நாங்கள் ஜனநாயகத்தை மாத்திரமல்ல நாட்டிலே வீழ்ச்சியடைந்து கிடந்த பொருளாதாரத்தையும் சீர்படுத்தியுள்ளோம். 2015 ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் இருந்த வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது.

எங்களுடைய ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, பெற்றோல், மண்ணெண்ணெய், எரிவாய்வு போன்ற பொருட்களுக்கு விலைகளை குறைத்துள்ளோம்.

அவ்வாறு எங்களால் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்து ஒரு மாவட்டத்திற்கு மாத்திரமிருந்த அபிவிருத்தியை நாடு பூராகவும் எங்களால் மேற்கொள்ளக் கிடைத்துள்ளது.

அவர்களுடைய அபிவிருத்தி ஒரு குடும்பத்திக்கு எங்களுடைய அபிவிருத்தி அனைத்து குடும்பங்களுக்கும். நாங்கள் இனவாதத்தை இல்லாமல் செய்கின்றோம் அவர்கள் இனவாதத்தினால் வாழ்கின்றார்கள் நாங்கள் அச்சத்தைப் போக்குகின்றோம். அவர்கள் அச்சத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்கின்றார்கள்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சி இனபேதம் அற்ற கட்சியாக ஆட்சியில் இருந்து வந்திருக்கின்றது.

நாங்கள் கொழும்பில் சொல்வதைத்தான் மட்டக்களப்பிலும் சொல்கின்றோம் யாழ்ப்பாணத்தில் சொல்வதைத்தான் ஹம்பாந்தோட்டையிலும் சொல்கின்றோம். எங்களுடைய எதிர் தரப்பினர் போல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விடயங்களைப் பேசி நாட்டைக் குழப்புகின்ற வேலை எங்களிடம் கிடையாது.

ஆகவே பயப்பட வேண்டாம் நாம் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் பதினாறாம் திகதி சஜித்தை ஜனாதிபதியாக்கி ரணிலை பிரதமராக்கி உங்களுக்கும் எங்களுக்குமான அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/68354

Link to comment
Share on other sites

" நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் கூறினார்."

இது உண்மையோ இல்லை பொய்யோ. ஆனால், இந்த பொருள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விவாதப்பொருளானால் தமிழர் தரப்பிற்கு நீண்ட கால அடிப்படையில் நன்மை பயக்கும்.

அந்த பாதையில் நாம் பௌத்த பீடாதிபதிகளை கடந்தாக வேண்டும்.

"நாங்கள் கொழும்பில் சொல்வதைத்தான் மட்டக்களப்பிலும் சொல்கின்றோம் யாழ்ப்பாணத்தில் சொல்வதைத்தான் ஹம்பாந்தோட்டையிலும் சொல்கின்றோம். எங்களுடைய எதிர் தரப்பினர் போல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விடயங்களைப் பேசி நாட்டைக் குழப்புகின்ற வேலை எங்களிடம் கிடையாது."

இதைத்தான் இரு பிரதான கட்சிகளும் செய்து வருகின்றன.

Link to comment
Share on other sites

மகிந்த மாமா , உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தமிழ் வாக்குகளையும் நீஙகள் இழந்துவிடடீர்கள். எப்போதான் இந்த இனவாத செயல்களை நிறுத்துவீர்களோ , அந்த புத்தனிடம்தான் கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் மகா நாயக்கர்களிடம் பாட்டைக் கொடுத்து விட்டு... நீங்கள் சிறைக்குள் போனால்... எல்லாம் சரி. வரும் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.