Jump to content

இரகசிய கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது டெலோ


Recommended Posts

Published by T Yuwaraj on 2019-11-06 23:04:59

 

 

 

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். 

telo_s.jpg

வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின்  உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். 

இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/68387

Link to comment
Share on other sites

செல்வம் அடைக்கல நாதன் ஆரம்பத்துல இருந்தே ரணில்ட வாலில் தொங்கிக் கொண்டிருந்தவர்.

அவருக்கு குழுத்தலைவர் மூலம் கிடைத்த சொகுசுகள் தமிழர்ற்ற, தனக்கு வாக்களிச்ச மக்களின்ட  உரிமைகளை விட பெரிசா தெரிஞ்சது என்டு மன்னார் மக்கள் நிறைய காலம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

Link to comment
Share on other sites

நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Vankalayan said:

நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம். 

என்னப்பன்.....வங்காலையும் ...அந்தப் பக்கம்...போகுதா?

அந்தக் காலத்தில்.....வங்காலை தந்த இனிய நினைவுகளின்  ஈரம்....இன்னும் காய்ந்து போய் விடவில்லை!

குறிப்பாக.. உங்கள் பகுதி  மக்களின்  எளிமையும்....விருந்தோம்பும் பண்பும்...!

Link to comment
Share on other sites

இவர் மன்னார் மக்களுக்கு என்ன செய்தார்? ரிசார்ட் சோனிகளை குடியேற்றியபோது கஞ்சா அடிச்சுக்கொண்டு இருந்தார். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு மக்களை பிரதிநிதித்துக்குவப்படுத்த. துவக்கு தூக்கினவன் எல்லாம் இப்போது பெரிய அரசியல்வாதி. இந்த கொலைகார துப்புக்கெடட அரசியல்வாதிகள் எல்லோரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். பணத்துக்காக எல்லாவற்றியும் விற்கும் பச்சோந்திகள். 

Link to comment
Share on other sites

16 minutes ago, புங்கையூரன் said:

என்னப்பன்.....வங்காலையும் ...அந்தப் பக்கம்...போகுதா?

அந்தக் காலத்தில்.....வங்காலை தந்த இனிய நினைவுகளின்  ஈரம்....இன்னும் காய்ந்து போய் விடவில்லை!

குறிப்பாக.. உங்கள் பகுதி  மக்களின்  எளிமையும்....விருந்தோம்பும் பண்பும்...!

வங்காலையான் நல்லவனுக்கு நல்லவன் , கெடடவனுக்கு கெடடவன். நமது மக்களுக்கு உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. இப்போது நமக்கு இருந்ததையும் இழந்து கொண்டிருக்கிறோம். வன்னியும் கிழக்கும் இப்போது சிங்கள , முஸ்லீம் மயமாகிக்கொண்டு போகிறது. இப்போது தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்கள் எண்டால் யாழ்ப்பாணம் எண்டு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வன்னி கிழக்கு தமிழ் மக்களை பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. விரைவில் நாங்கள் இதுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.