Jump to content

தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது.
.
 
தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
Image may contain: one or more people, beard and close-up
 
2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துபோனேன், மனைவியோடு இந்தியா போவதாக சொன்னார். நேரில் பார்க்க இந்தியா வருவதாக சொல்லிவிட்டு இக் கவிதையை எழுதினேன்.
*
கவிதை பிரசுரமானபோது ஒரு அலுவலாக வன்னிக்குப் போயிருந்தேன்., கவிதை வாசித்ததாக தயாமாஸ்ட்டர் சொன்னார். சரியன்றேன். ’எலோரும் வாசித்தார்கள்’ என மீண்டும் சொன்னார். பொதுவாக நான் விமர்சித்து விட்டு வன்னிக்குப் போகும்போது “எல்லோரும் வாசித்தோம்” என்பார்கள். கருணா பிரிந்தபோது ”கிழக்கு மாகாண போராளிகளை சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை. போராளிகளை வீடுகளுக்கு செல்ல சொல்லுங்கள்” என சர்வதேச ஊடக நண்பன்  குருபரன் (Nadarajah Kuruparan) மூலம் சூரியன் எப் எம்மிலும் ஞாயிறு வீரகேசரியிலும் அறிக்கை விட்டுவிட்டு நண்பர்கள் அழுது மண்டாடி மறிக்க மறிக்க வன்னிக்குப் போனேன். (https://www.facebook.com/nadarajah.kuruparan.33) அப்பவும் ”உங்கள் பேட்டியை எலோரும் கேட்டோம்” என்று சொன்னார்கள். பின்னர் முக்கியமான விடயங்கள் பேசினோம். ”தோழன் புஸ்பராசாவுக்கு” கவிதை நன்றாக இருப்பதாக தோழர் பாலகுமாரன் சொன்னார்,
****
தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
காத்திரு நண்ப
கட்டாயம் நான் வருவேன்.
.
பரிசில் வெய்யிலா.
இனி வசந்தம் ஆனாலும்
இங்கே துருவத்தில்
இன்னும் கொடுங்கூதிர்.
.
சன்னலின் வெளியே
பறவைகளும் பாடவில்லை.
புல்வெளியிலும்
இலையுதிர்ந்த தோப்புகளிலும்
வெண்பனியாய் வானம்
வெறுப்பை உமிழ்கிறது.
என்னுடைய பட்டாம் பூச்சி மனசும்
வீட்டுச் சிறையுள் முடங்கிச் சிடு சிடுக்கும்.
.
கழுத்துக்கு மேலோர் கத்தி
நூலிழையில் ஆட
எப்போது விசாரணையுள் வாழ்ந்தமடா.
வாழ்வை ஒருபோதும்
விசாரித்தோம் இல்லையடா.
துப்பாக்கி காவலர்கள் வந்து
எழடா இனி எல்லாம் முடிந்தது
என்றிட்ட போதெல்லாம்
எங்கிருந்தோ ஒருவன் வருவான்
இரு என்பான்
எம் கிண்ணத்தும் மதுவார்ப்பான்.
யார் அது
இந்த மதுக்கடையின் விதி என்ன
இன்னும் வருவானா?
.
கொண்டாட்டம் எப்பவோ முடிந்துவிட்டது.
மாலை தோரணங்களும் குப்பையில்.
பிரதம விருந்தாளி ஆயினும்
நண்பனே நாம்
விடைபெற்றே ஆகவேண்டும்.
.
முன்னொருநாள்
மானுடத்தைக் காதலித்ததாலே
கனவாளித் தோழர்களும் நாமும்
போராளிகளாய் முடிந்தோம்.
யாரும் வரலாற்றை ஆரம்பித்ததுமில்லை.
அது யாரோடும் முடிகிறதுமில்லை
ஆனாலும் வரலாற்றுப் பாதையிலோர்
சிறு சுவடாய் நாமும் இருந்தோம்.
இன்று புதியவர்கள்.
,
சிதறிவிட்டோம் நண்ப.
தோழர்பலர் தாய் மண்ணுள்.
தம்மிடையே கருத்துக்கள் முரண்பட்டு
காட்டாறாய்ப் பாய்ந்தாலும்
நட்பென்னும் பாலம் எப்போதும் உயர்ந்தபடி.
.
இந்தியா செல்கின்றேன் என்றாய்
மகிழ்ச்சி நண்ப.
தமிழ்நாடு நம்முடைய தாய்க்கும்தாய்.
தயவான சித்தத்தாள்.
அன்னைமடி இழந்த நமக்கெல்லாம்
வள் மடியே பொன்னம்பலமாகும்.
.
சென்னையில் உன் காதல் மனைவியுடன்
எஞ்சிய திருக்கள் அனைத்தையும் முழுசாக
வாழ்ந்துவிடு நண்பா.
விடை சொல்ல வருகின்றேன்.
- 2006.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 11/6/2019 at 11:15 PM, poet said:

நட்பென்னும் பாலம் எப்போதும் உயர்ந்தபடி.

இமயத்தை தொட்டுவிடுமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.