Jump to content

போட்டியை சமன் செய்த செல்சி பாசிலோனா அணிக்கு ஏமாற்றம்


Recommended Posts

Thursday, November 7, 2019 - 6:00am
spt01.jpg?itok=bCGuh9Ex
ஐரோப்பிய  சம்பியன்ஸ்  லீக் தொடர்:

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய குழுநிலை போட்டிகள் சில இலங்கை நேரப்படி நேற்று (06) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

கடந்த 46 போட்டிகளில் முதல் முறையாக தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் எந்த கோலையும் பெறாத பாசிலோனா அணி ஸ்லாவியா பரகுவேவுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.

கடந்த 2012 தொடக்கம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் முதல் முறை கோல் அல்லது கோல் உதவியை செய்யாத லியொனல் மெஸ்ஸி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது. முதல் பாதியில் மெஸ்ஸி இடது காலால் மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் ஒப்ட்ரேஜ் கோலர் சிறப்பாக தடுத்தார். எனினும், பார்சிலோனா அணி சம்பியன்ஸ் லீக் எப் குழுவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு ஸ்லாவியா பரகுவே கடைசி இடத்தில் உள்ளது.

வெஸ்ட்பலன்ஸ்டாடியோ அரங்கில் நடைபெற்ற போட்டியில் அச்ரப் ஹாகிமி இரண்டாவது பாதியில் பெற்ற இரட்டை கோல் மூலம் இன்டர் மிலானுக்கு எதிராக டோர்ட்முண்ட் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் இத்தாலியின் இன்டர் மிலான் இரட்டை கோல் பெற்று உறுதியான முன்னிலையை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே 21 வயதுடைய ஹாகிமி கோலொன்றை பெற்று நம்பிக்கை கொடுக்க 64 ஆவது நிமிடத்தில் ஜூலியன் பிரண்ட் பெற்ற கோல் மூலம் கோல் எண்ணிக்கையை டோர்ட்முண்ட் 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

தொடர்ந்து ஹாகிமி 77 ஆவது நிமிடத்தில் அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்று ஜெர்மனி கழகத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இதன்மூலம் எப் குழுவில் இன்டர்மிலானை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய டோர்ட்முண்ட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

மிகவும் பரபரப்பாக நடந்த எஜக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4- – 1 என்ற கோல் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்த செல்சி அணி போட்டியை 4- – 4 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்து தீர்க்கமாக புள்ளிகளை பெற்றுக் கொண்டது.

ஸ்டாம்போர்ட் அரகில் நடைபெற்ற இந்தப் போட்டியில் எஜக்ஸ் வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்றதால் இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரத்தை அந்த அணி ஒன்பது வீரர்களுடனேயே ஆடியது.

நெதர்லாந்து சம்பியனும் கடந்த பருவத்தில் அரையிறுதி வரை முன்னேறிய அணியுமாக எஜக்ஸ் போட்டியின் முதல் பாதி முடியும்போது 3- -– 1 என்ற கோல் வித்தியாசத்தில் வலுவான முன்னிலை பெற்றது.

போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே குவின்சி ப்ரோம்ஸ் உதைத்த ப்ரீ கிக் செல்சி முன்கள வீரர் டொம்மி அப்ரஹாமிடம் பட்டு எஜக்சுக்கு சார்பாக ஓன் கோலாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து பத்து நிமிடங்களில் எஜஸ் மற்றொரு கோலை பெற அந்த அணி 4- – 1 என முன்னிலை பெற்றது.

எவ்வாறாயினும் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய செல்சி 63 ஆவது நிமிடத்தில் சீசர் அஸ்லிகியுடா பெற்ற கோல் மூலம் நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில் 71ஆவது நிமிடத்தில் ஜேர்கின்ஹோ பெனால்டி மூலமும் ரீஸ் ஜேம்ஸ் 74 ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்களைக் கொண்டு செல்சி போட்டியை சமன் செய்தது.

இதன் மூலம் எச் குழுவில் இந்த இரு அணிகளும் தலா 7 புள்ளிகளுடன் இருப்பதோடு அந்தக் குழுவில் வெலன்சியா அணியும் 7 புள்ளிகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல், பெல்ஜியம் கழகமான கென்க் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 14 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்னால்டு நெருங்கிய தூரத்தில் உயர உதைத்து கோல் பெற்றதன் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

முதல் பாதி முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போது கென்க் அணியில் முன்கள வீரர் ம்பவானா சமட்டா கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் அந்த அணி பதிலடி கொடுத்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே அலக்ஸ் ஒக்லாடே–சம்பர்லைன் தாழ்வாக உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தியதன் மூலம் லிவர்பூல் வெற்றியை உறுதி செய்தார். சம்பியன்ஸ் லீக்கின் ஆரம்ப போட்டியில் நபோலியிடம் தோல்வியை சந்தித்த லிவர்பூர் அடுத்து வந்த நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வென்றதன் மூலம் ஈ குழுவில் நபோலியை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது.

https://www.thinakaran.lk/2019/11/07/விளையாட்டு/43428/போட்டியை-சமன்-செய்த-செல்சி-பாசிலோனா-அணிக்கு-ஏமாற்றம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.