Jump to content

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு


Recommended Posts

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு
Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0      - 121


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான அந்த அறிக்கையில்-

இலங்கைக்கு சனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2919 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதக) சொல்லப்பட்ட தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.

இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் – சஜித்பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் – அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர்.

தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி (1) உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும், (2) அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், (3) அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், (4) நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்போந்தவை உயரிய வேணவாக்களாகும் என்பதோடு, இப் பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும்.இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் ஈடுபட்டிருந்துள்ளதோடு, அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களாவர். அவர்களுடைய கடந்தகால செயலாற்றுகை எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும். அவர்களது கொள்கைகளை விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் எம்மிடம் உள்ளன.

அவற்றின் அடிப்படையில், எதேச்சாதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிடுவதாக உறுதியளித்தல் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாட்டில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தல் அடங்கலாக அனைத்துப் பிரசைகள் மத்தியிலும் நீதியையும் சமத்துவத்தையும் ஊக்குவித்தல் உள்ளிட்ட அவர்களது ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பாக ஒரு கணிப்பை மேற்கொள்ள முடியும்.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் அபேட்சகர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும்.

அரசியலமைப்பிற்கான 17வது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையை (நாடாளுமன்றத்தை) ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டமை ஆகியன ஆட்சிமுறையின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியான ஒரு தனி மனிதரின் எதேச்சாதிகாரமானதும் தான்தோன்றித்தனமானதுமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின. அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.

இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபரில் கடத்தியமை; பதவி வழங்குவதான வாக்குறுதி, இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் தூண்டப்பட்ட கட்சி மாறல் வாயிலாக நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற ;றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆகியன அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன.

எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காகப் நாடாளுமன்றத்தில் உறுதியாக நின்றது.

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள ;ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.

மற்ற முக்கிய அபேட்சகரான சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் புதிதாக தெரிவு செய்யப்படும் சனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிச நலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின்  சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டும்.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இரா.சம்பந்தன்,

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உததயகபபரவ-தரமனதத-அறவததத-கடடமபப/150-240779

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.

எழுதிச்  செல்லும் விதியின் கைகள் !

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

யாழ் நூலகம் எரிப்பு, 1983 கலவரங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், அப்பாவிகளை சிறைகளில் அடைத்து வைத்திருத்தல், வடமாகாணசபை செயற்பட முடியாது முடக்கி வைத்திருந்ததை, பல வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை நீண்டகாலமாக ஏமாற்றியமை, ... போன்றவை எல்லாமே ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பேணும் நல்ல செயற்பாடுகள் என்று சம்மந்தன், சுமந்திரன்  நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

Link to comment
Share on other sites

கோரிக்கையை நிரகாரித்த இருவரும் எவ்வாறு தமிழர்களிடம் வாக்களிக்குமாறு கோருவார்கள் - சிவசக்தி ஆனந்தன் 

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அதனால் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , மதத் தலைவர்கள் , சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட 13 அம்ச கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை. 

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளாகவே உள்ளது. அதாவது அரசியல் கைதிகளின் விடுதலை , காணி விடுவிப்பு , பயங்கரவாத தடைசட்டம் நீக்குதல் , அபிவிருத்தி , வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மீதான இன படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம்.

 ஆனால் பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாகவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் எங்களை  சந்திக்க தயார் இல்லையென கூறிவிட்டார். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று யாருடைய  நிபந்தனைகளுக்கும் கட்டுப்படப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/68471

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மக்களே கடவுள் மேல் பாரத்தை போட்டு வாக்களியுங்கள்.

Link to comment
Share on other sites

On 11/7/2019 at 3:04 PM, ampanai said:

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

என்ன தான் கூட்டமைப்பில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் கூட்டமைப்பு சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களை கோரியது மகிழ்ச்சி.

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

Link to comment
Share on other sites

image_a4c8188f50.jpg

On ‎11‎/‎7‎/‎2019 at 6:41 AM, ampanai said:

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல.   தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ,  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.  - ஏகலைவா

  1. ஆறுகட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையின் பின், அதில் ஐந்து கட்சிகளின் கூட்டணி, 13 அம்சக் கோரிக்கை என்ற அனைத்து நாடகங்களும் அரங்கேறி, இறுதியில் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற முடிவைத் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோரில் ஒருபகுதியினர் எட்டியுள்ளனர்.   

      2. ஒருவரைத் தோற்கடிப்பதற்காக இன்னொருவருக்கு ஆதரவு என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இது புதிதல்ல; இறுதிப்போரை நடத்திப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று தீர்த்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவரான, இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதரவளித்தபோதும், , இதே போன்றதொரு சாட்டையே சொன்னது. இப்போது அது வேறு வடிவங்களில் தொடர்கிறது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எதரபரததத-பலவ-நடநதத-அடதத-வலயப-பரககலம/91-240771

Link to comment
Share on other sites

27 minutes ago, Lara said:

 

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

Link to comment
Share on other sites

4 hours ago, நிழலி said:

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

ஜேவிபி உடைந்ததும் விமல் வீரவன்ச தரப்பு மகிந்த பக்கமும் சோமவன்ச அமரசிங்க தரப்பு (தொடர்ந்து ஜேவிபியாக இயங்கிய தரப்பு) ஐதேக பக்கமும் நின்றன. 2010 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. 2010 நாடாளுமன்ற தேர்தலில் சரத் பொன்சேகா தரப்புடன் இணைந்து போட்டியிட்டது. 

அநுர ஜேவிபியின் தலைவரானது 2014 இல். 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மைத்திரிக்கு ஆதரவளித்தது. 2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 543,944 வாக்குகளை பெற்றது. போன வருட உள்ளூராட்சி தேர்தலில் 710,932 வாக்குகளை பெற்றது. இத்தேர்தலில் 10 இலட்சம் வாக்குகள் பெறுவது அநுரவின் இலக்கு. ஜனாதிபதி வேட்பாளராக எவ்வளவு வாக்குகளை பெறுவார் என தெரியாது. ஆனால் அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் பெருமளவிலானவை சஜித்துக்கு கிடைக்கவிருப்பதிலிருந்து பிரிந்து வருபவை. அத்துடன் அவருக்கு வாக்களிக்கும் அனைவரும் இரண்டாம் விருப்ப தெரிவை இடுவார்கள் என்றில்லை.

இது 2015 நாடாளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஜேவிபி பெற்ற வாக்குகள்.

கொழும்பு - 81,391

கம்பஹா - 87,880

களுத்துறை - 38,475

கண்டி - 30,669

மாத்தளை - 10,947

நுவரெலியா - 5,590

காலி - 37,778

மாத்தறை - 35,270

அம்பாந்தோட்டை - 36,527

யாழ்ப்பாணம் - 247

வன்னி - 876

மட்டக்களப்பு - 81

அம்பாறை - 5,391

திருகோணமலை - 2,556

குருணாகல் - 41,077

புத்தளம் - 12,211

அநுராதபுரம் - 28,701

பொலநறுவை - 13,497

பதுளை - 21,445

மொனராகலை - 13,626

இரத்தினபுரி - 21,525

கேகாலை - 18,394

2018 உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளை தற்சமயம் என்னால் தனித்தனியாக இணைக்க முடியவில்லை.

வடக்கு கிழக்கில் சஜித் முன்னிலை வகிப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனாலும் பல வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியிருப்பதால் 2015 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளை போல் இம்முறை சஜித்துக்கு கிடைக்காது, குறைவாகவே கிடைக்கும் என நினைக்கிறேன். அதுவும் தேர்தல் இறுதி முடிவில் தாக்கம் செலுத்தலாம்.

Link to comment
Share on other sites

சஜித் ஆட்சியில் ஒருமித்த நாட்டுக்குள் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன்

சஜித் பிரேமதாஸ தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எனவே சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அன்னம் சின் னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை சுயேட்சையாக கள மிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒரு போதும் தமிழர்களுக்குச் சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். எனவே அப் படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=19771&ctype=news

Link to comment
Share on other sites

9 hours ago, Lara said:

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

ஈழ மண்ணின் மீது  காதல் இன்றி வாழ முடியுமா ? 😅

Link to comment
Share on other sites

இவருக்கு வாக்களியுங்கள்... ஆனால் தீர்வு கிடையாது

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் தத்தம் கடமைக்காக ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என அறிக்கை விடுக்கின்றனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது எனத் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, 13 அம்சக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் தமது நிலைப்பாட்டை அறிவிக்காத காரணத்தால், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவைத் தமிழ் மக்கள் தாமாக எடுக்க வேண்டும் எனத் தனது கட்சி நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதேபோல ஏனைய   தமிழ் அரசியல் கட்சி களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி யுள்ளன.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ் கரிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை சரி யாக எடுப்பர் என்பதில் ஐயம் கிடையாது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வைத் தரப்போவதில்லை என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற தமிழ் மக்களின் நினைப்புக் குப் பின்னால், தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவிக்கு வருகின்றவர் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுவார் என்றோ அல்லது அவர் வந்தால் தமிழினம் தலை நிமிரும் என்றோ தமிழ் மக்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்த உண்மையை தமிழ் அரசியல்வாதிகள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தவர்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

எனவே கோடிகளை கை நீட்டி வாங்கி விட்டோம் என்பதற்காக பொய்யான வாக்குறுதி களை தமிழ் அரசியல்வாதிகள் வழங்கக் கூடாது.

ஆம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் சுதந்திரம். அதைச் செய்யுங்கள்.
அதைவிடுத்து, அவர் ஜனாதிபதியாக வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் கூறு வீர்களாயின் உங்களை விட்ட வடிகட்டினவர்கள் வேறு எவருமாக இருக்க முடியாது.

ஆகையால் தமிழ் மக்களை நம்பவைத்து ஏமாற்றாதீர்கள். சிங்களவர் யாரும் தீர்வு தரமாட்டார்கள். இருந்தும் இவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்வதுதான் ஓரளவுக் கேனும் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19776&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் ஊருக்கு கதைத்தேன் குத்தைப்பு சொல்ல முன்பே பலர் சஜித்துக்கே ஆதரவு நிலை எடுத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

அதியுச்ச அதிகார பகிர்வு தீர்வை நாம் பெறுவோம்

Monday, November 11, 2019 - 6:00am
NW03.jpg?itok=ZcTypDhI

சஜித் பிரேமதாச  துவேஷமில்லாதவர்

நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களது கடந்தகால அனுபவங்களை சிந்தித்து, ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதி உச்ச அதிகாரப் பகிர்வுடன், எமது மக்கள் கௌரவத்துடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வை பெறுவோம்.

கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையினால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து 98 வீதமான வாக்குகளை அளித்து எமக்கு ஆதரவு

வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் ரவிராஜின் 13வது நினைவு தினம் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதான போட்டி முக்கியமாக இரண்டு வேட்பாளர்களுகிடையில் நடைபெறுகின்றது. சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் வெற்றி பெறுவார். ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்கு பெற்றுவதா இல்லையா என்பது முதல் கேள்வி.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. பங்குபற்றாத காரணத்தினால் தான் மகிந்த தெரிவு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சியின் கீழ் 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றிக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தெரியும். அந்தத் தேர்தலில் நாங்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால், அன்று வாக்களித்திருந்தால், அந்த நிலமை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர் யாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அந்தப் பங்களிப்பு எமக்கு சாதகமான முடிவாக எம்மைப் பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கும். பாதகமான ஒரு முடிவைத் தவிர்ப்பதற்கும், நாங்கள் பங்களிப்பைச் செய்ய முடியுமாக இருந்தால், அந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் நினைக்கின்றோம்.

சஜித் பிரேமதாசவை துவேசவாதியாக நான் கருதவில்லை. அவரை நீண்டகாலமாக தெரியும். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, அனைத்து மக்களும், சமத்துவமாக வாழ வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளதுடன், இதுவே எனது திடமான நிலைப்பாடு என கூறியிருக்கின்றார். அதி உச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென கூறியிருக்கின்றார்.

கோட்டா வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை. நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துக்கொள்ளுங்கள். இனியும் செய்யமாட்டோம் என கூறவில்லை.

நடந்தது நடந்துவிட்டது. நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள் ஒன்றாக பயணிப்போம் என சொல்கின்றார்கள். எங்கு கூட்டிச் செல்லப் போகின்றார்களோ தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

https://www.thinakaran.lk/2019/11/11/உள்நாடு/43665/அதியுச்ச-அதிகார-பகிர்வு-தீர்வை-நாம்-பெறுவோம்

Link to comment
Share on other sites

இவர்கள் சொல்லும் முன்பே மக்கள் சில தீர்மானகளை எடுத்து விடடார்கள். நிச்சயமாக தமிழ் மக்களால் கோத்தாவிட்க்கு வாக்களிக்க முடியாது. பகிஷ்கரித்தல் கோட்டா வர சந்தர்ப்பம் உண்டு. எனவே மக்களுக்கு வேற தெரிவு இல்லை. இருந்தாலும் சிங்கள மக்களில் எழுபது வீதமளவில் கோடாவிட்க்குத்தான் சான்ஸ் இருக்கிறது. எனவே வெற்றி தோல்வியை கணிப்பது மிகவும் சிரமம்.

எனக்கு தெரிந்த அநேகமான சிங்களவர்கள் கோடவுட்குத்தான் வாக்களிப்பதாக கூறினார்கள். கடந்த காலத்தில் யு என் பி இட்கு வாக்களித்தவர்களும் இம்முறை மாறி விடடார்கள்.

தமிழ் தலைமைகள் வன்னி , கிழக்கு தமிழர் பற்றி சிந்திப்பதில்லை. இம்முறை சுமந்திரன் மன்னருக்கு வந்திருந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் கேடட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி விடடார். வன்னி கிழக்கு மக்கள் கோதாவிட்கு போட விரும்பினாலும் அவருடைய கடந்த கால செயல்களினால் அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை. மத்தபடி இவ்ரகள் சொல்லித்தான் சஜித்திட்கு தமிழர்கள் வாக்களிக்கிறார் என்று என்ன வேண்டாம்.

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

Link to comment
Share on other sites

17 hours ago, Vankalayan said:

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

இதுவும் ஒரு சாத்தியமான எதிர்வுகூறலாக தெரிகின்றது. 

மொத்தத்தில், எமது மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்கைக்குள்ளேயே வாழ நேரிடப்போகின்றது.  

எமது தலைமைகள் மத்தியில் ஒரு தீர்வும் இல்லை அது பற்றி சிந்தித்து அரங்கேற்றகூடிய திறமையும் இல்லை. 

Link to comment
Share on other sites

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்

1. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்குப் புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும் பழக்கி வைத்திருக்கின்றன.  

2. அரசியலை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கே, அநேகமானோர் பழகியிருக்கின்றனர்; பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மக்கள் அப்படியிருப்பதுதான் தமக்கு நல்லது என்று, பெரும்பாலான அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர். அரசியலை, அறிவு ரீதியாக மக்கள் அணுக முற்பட்டால், பல அரசியல்வாதிகள் தமது ‘கடைகளை’ இழுத்து, மூட வேண்டியேற்படும்.  

3. அறிவு ரீதியாக அணுகுதல் என்பதை, முதலில் விளங்கிக் கொள்ளுதல்  அவசியமாகும். உண்மையைத் தேடுவதே, அறிவுரீதியான அணுகுதலின் அடிப்படையாகும். நமக்குப் பிடித்த அரசியல்வாதியொருவர் கூறுகின்றார் என்பதற்காக, அவர் சொல்லும் விடயங்களைக் கண்களை மூடிக்கொண்டு நம்பாமல், அந்த விடயம் உண்மையானதா என்று ஆராய முற்படுவதே அறிவுரீதியான அணுகுமுறையாகும்.  

மறுபுறம், நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகள் குறித்து வரும் மோசமான செய்திகளை, உடனடியாக நம்பி விடாமல், அதிலும் உண்மையைத் தேடுவதற்கு முற்படுதல் வேண்டும்.  

4. கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் கணிசமானவை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதே வாக்குறுதிகளைத் தற்போதைய ஆளுந்தரப்பு ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் மத்தியில் வழங்கி விட்டுச் செல்கின்றார்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உணரசசககம-அறவககம-இடயல-சககத-தவககம-தரதல/91-240931

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.