Jump to content

ஜனாதிபதியானதும் பெரும்பான்மை உள்ளவரை பிரதமராக நியமிப்பேன் - சஜித்


Recommended Posts

(எம்.மனோசித்ரா)

தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும் கூறினார்.

சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன்  ஊழல் மோசடிகாரர்களுக்கும், போதைக் பொருள் விற்பனையாளர்களுக்கும் , மத அடிப்படைவாதிகளுக்கும் எவ்வித மன்னிப்பும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பிரபுக்கள் அரசியல் முறைமையை முழுமையாக இல்லதொழிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். 

ஒப்பந்தம் செய்பவர்களுக்கும், அடிப்படைவாதிகளுடனும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பைப் பேணுபவர்களுக்கும் அரசியல் ரீதியான ஒத்துழைப்பு கிடைக்ப் பெறுகின்றமையை அறிவேன். இந்த முறைமைகளை மாற்றியமைப்பதற்கு இளம் , நிபுணத்துவம் மிக்கவர்களுடன் இணைந்து நேரடியாக செயற்பட தயாராக இருக்கின்றேன். 

அத்தோடு பாராளுமன்ற வரையரைக்குள் மாத்திரமல்லாது மக்கள் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்படுப்பதற்கு பாடுபடுவேன். மக்களின் விருப்பம் இன்றி அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் புதிய நாட்டை கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்ல இணைந்து பயணிப்பதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் இதன்போது அவர் கூறினார். 

https://www.virakesari.lk/article/68441

Link to comment
Share on other sites

ஒரு பெருந்தமையுடன் ஒரு சிறுபான்மை தலைவரை பிரதமராக  நியமிக்கலாம். நாடு  ஒற்றுமைப்பட வழி வகுக்கும். ஆனால், சிங்கள பேரினவாதம் சிங்களவர் மட்டும்தான் ஆளவேண்டும் என எண்ணும் சாபக்கேடு. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

ஒரு பெருந்தமையுடன் ஒரு சிறுபான்மை தலைவரை பிரதமராக  நியமிக்கலாம். நாடு  ஒற்றுமைப்பட வழி வகுக்கும். ஆனால், சிங்கள பேரினவாதம் சிங்களவர் மட்டும்தான் ஆளவேண்டும் என எண்ணும் சாபக்கேடு. 
 

 நம்ம ஆள் சுமந்திரன் பிரதமராய் வந்தால் எப்பிடியிருக்கும்? :cool:

Link to comment
Share on other sites

சஜித் ஜனாதிபதி, மகிந்த பிரதமர் என்றால் எப்படியிருக்கும்? 😀

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

ஒரு பெருந்தமையுடன் ஒரு சிறுபான்மை தலைவரை பிரதமராக  நியமிக்கலாம். நாடு  ஒற்றுமைப்பட வழி வகுக்கும். ஆனால், சிங்கள பேரினவாதம் சிங்களவர் மட்டும்தான் ஆளவேண்டும் என எண்ணும் சாபக்கேடு. 

சிறுபான்மை தலைவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற மாட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.