Jump to content

கையும் - மொட்டும் ஒரு தாய் பிள்ளைகள் : மஹிந்த ராஜபக்ஷ


Recommended Posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோகாலை மாவட்மத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் , 

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது. 

இவ்விரு கட்சிகளும் ஒரு தாய் மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார். 

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்தது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு கட்சியொன்றை உருவாக்கினோம். அந்த கட்சியூடாக போட்டியிட்டு உள்ளுராட்சி தேரதலில் நூற்றுக்கு 71 வீதத்தில் வெற்றி பெற்றோம். 

உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சி தனித்தனியே போட்டியிட்டது. அதே எல்பிட்டி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். 

எனினும் இருகட்சிகளினதும் முடிவை இணைத்த போது 70 வீத வாக்கினைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளோம். எனவே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68479

Link to comment
Share on other sites

என்மீது நம்பிக்கை கொள்ளுங்கள் : சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாட்டை மீண்டும் -கோத்தபய

Published by J Anojan on 2019-11-07 19:54:23

 

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் பல்துறையில் எழுந்துள்ள அனைத்து  சவால்களையும் வெற்றிக் கொள்வேன். என்மீது  நம்பிக்கை கொள்ளுங்கள்    அனைவரும் சுதந்திரமாக வாழும் பாதுகாப்பான  நாட்டை மீண்டும் பெற்றுக் கொடுப்பேன் என  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல்  பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து  வாக்குறுதிகளையும் பதவி காலத்திற்குள் முழுமையாக  நிறைவேற்றுவேன். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தியவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள். எமது ஆட்சியில்   தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

இராணுவத்தினரையும், பொலிஸாரையும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கிற்கும் பயன்படுத்தினோம். ஆனால் நல்லாட்சி அரசாங்கம்  பாதுகாப்பு தரப்பினரை தங்களின் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டமையினால் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் தலைதோங்கியுள்ளது.

சர்வதேச அமைப்புகளுக்கு  அடிபணிந்துள்ள  அமைச்சரவையினால் ஒருபோதும் தேசிய பாதுகாப்பினை   பலப்படுத்த முடியாது.  இதன் காரணமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.   இதன் பாதிப்பினை இன்று நாட்டு  மக்கள் எதிர்க் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/68477

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.