Jump to content

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை


Recommended Posts

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

Thursday, November 7, 2019 - 9:35am
 
57_06112019_SSF_CMY.jpg?itok=5c4MWdml

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால்  இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். 

பட்டிருப்பு தொகுதி சங்கர்புர த்தில்  நேற்றுமுன்தினம் (5)  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற நிலங்களை மீட்பதற்கும், பொருளாதார ரீதியாக தமிழர்கள் வலுவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு அரசியல் அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. 

அந்த வகையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு   வாக்களிக்க வேண்டும்.

அரசியல் பசப்பு வார்த்தைகளாலும்,வீர பேச்சுக்களாலும் தமிழர்களுக்கு என்றும் நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை கடந்த கால அரசியல் உணர்த்தி இருக்கின்றது. 

அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இருக்கின்ற போது எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அந்த காலத்திலேயே தமிழருக்கு எதிரான அதிக கூடுதலான குழப்பங்களும், வன்முறைகளும் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. அதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கின்ற போது கிழக்கில் தமிழர்களுக்கான நில, நிர்வாகம் இருப்புக்கள் மறுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி கூட ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கல்முனையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்தினை தரம் உயர்த்த முடியாத ஐக்கிய தேசிய கட்சி அரசு கிழக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்குமா அல்லது வடக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)  

https://www.thinakaran.lk/2019/11/07/அரசியல்/43478/கூட்டமைப்பு-கிழக்கு-தமிழரை-நேசிக்கவில்லை

Link to comment
Share on other sites

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களையும்...   கூட்டமைப்பு நேசிக்கவில்லை என்பதே... உண்மை.
சம்பந்தனும், சுமந்திரனும்... தமது சுயநலத்துக்காக,  
அரசியல் செய்ய வெளிக்கிட்டு, பத்து வருசமாகி  விட்டது.

Link to comment
Share on other sites

கிழக்கு மட்டுமல்ல , வன்னியயும் இவர்கள் கவனிப்பதில்லை. வன்னியில் ரிசார்டின் ஆட்சி , கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஆட்சி. கோத்த வந்தால் என்ன , சஜித் வந்தால் என்ன இவர்கள்தான் அங்கு அமைச்சர்கள். நம்மட மடையர்கள் அந்த ஆட்சிக்கு முண்டு கொடுப்பாங்க , இவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழனுக்கு அரசியல் உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. எந்த நாளும் பிச்சைக்காரனாகவே இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

கிழக்கில் தற்போது உள்ள தமிழ் தலைவர்களை குறிப்பிடுங்கள் பார்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

ததேகூடட்டமைப்பு கிழக்குத்தமிழர்  என்றில்லை

எந்த  தமிழரையும்  நேசிப்பதில்லை

ஆனால் இவரது  நோக்கம்  வேறு

கோத்தபயவை ஆதரிக்கவேண்டும்  என்பது  ஒட்டுமொத்த  தமிழர்களின்  முடிவல்ல

அப்படியானால்  தேர்தலின்  பின் கோத்தபயவுக்கு  எதிராக  தமிழர்கள்  வாக்களித்தால்

கூட்டமைப்பு கிழக்குத்தமிழரை ஒதுக்கியது  சரி  என்று  இவர்  எடுத்துக்கொள்ளவேண்டி  வருமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

7553-E464-A8-D9-42-E1-A74-C-4-A4511-B217

சம்பந்தன் ஐயாவின், கழுத்தில் உள்ள மாலை... நல்ல, வடிவாக இருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

18 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே. வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

சம்பந்தன் திருகோணமலை (கிழக்கு) தானே?

சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தாலும் கொழும்பில் வளர்ந்தவர். அவர் 2010 இல் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். அப்படி ஆரம்பித்து இப்பொழுது சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து கூட்டமைப்பையே ஆட்டிப்படைக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் எம்மாத்திரம்?

பிள்ளையானின் கட்சி கோத்தாவை ஆதரிப்பதற்காக கூட்டமைப்பும் கோத்தாவை ஆதரிக்க வேண்டுமென்றில்லை. கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பது சரியான முடிவு.

இலங்கை அரசு பிள்ளையான், கருணா போன்றவர்களை எப்படி பயன்படுத்தியதோ அதே போல் முஸ்லிம்களை பயன்படுத்துகிறது. முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது இலகு.

கூட்டமைப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிய வியாழேந்திரனும் இப்பொழுது கோத்தாவுக்கு ஆதரவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.