Jump to content

கிருபானந்த வாரியாரின்... நகைச்சுவை பேச்சு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

 
“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்”

வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.

இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்
*திருநீறு இட்டார் கெட்டார்..*
*திருநீறு இடாதார் வாழ்ந்தார்*
என்று எழுதி இருந்தார்கள்.

உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.

அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.

“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார்.

அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார்.

“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது,

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.

அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை. 🙏

Mparameshwari

Link to comment
Share on other sites

தமிழ்சிறி சிரித்து மகிழ நல்ல நகைச்சுவை. கிருபனந்த வாரியார் சிறந்த திறமையான மேடைப்பிரசங்கங்களை நடத்துபவர். தனது இனிமையான இசையுடனான ஆனமீக பிரசங்கள்  மூலம் பெரும் கூட்டத்தையே தன்னுள் ஈர்ககும் வல்லமை படைத்த ஒரு சிறந்த வித்தகர். சிறு வயதில் அவரது பிரசங்கங்களை மிக ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன் . இவரின் தமிழ் அற்றல் குறித்து பல விடயங்களை வாசித்திருக்கிறேன். 

ஆனால் ஒரு வருத்தமான உண்மை

திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது,

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” 

இந்த கூற்றின் வரலாற்று உண்மையை பாருங்கள். திருநீறு இடாதவர்களிடம் 400 வருங்களுக்கு முன்பு அரசுசுரிமையை பறி கொடுத்து கெட்டுப்போன திரு நீறு இட்ட எம்மால் இன்றுவரை அந்த அரசுரிமையை மீள பெற முடியாமலும்  சொந்த மண்ணில் கெளரவத்தோடும் வாழ முடியாமலும்  உள்ளதே 

கூற்று எம்முள் சிரிக்க தமிழில்  நல்ல நகைச்சுவை என்றாலும் வேறு மொழியில் மொழியில்  பெயர்த்தால் அதன்   அர்த்தத்தை இழந்து  எம்மை பார்த்து மற்றவர்  நகையாடும் விதத்தில் மாறி  முரண் பாடாக உள்ளதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ்சிறி சிரித்து மகிழ நல்ல நகைச்சுவை. கிருபனந்த வாரியார் சிறந்த திறமையான மேடைப்பிரசங்கங்களை நடத்துபவர். தனது இனிமையான இசையுடனான ஆனமீக பிரசங்கள்  மூலம் பெரும் கூட்டத்தையே தன்னுள் ஈர்ககும் வல்லமை படைத்த ஒரு சிறந்த வித்தகர். சிறு வயதில் அவரது பிரசங்கங்களை மிக ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன் . இவரின் தமிழ் அற்றல் குறித்து பல விடயங்களை வாசித்திருக்கிறேன். 

ஆனால் ஒரு வருத்தமான உண்மை

திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது,

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” 

இந்த கூற்றின் வரலாற்று உண்மையை பாருங்கள். திருநீறு இடாதவர்களிடம் 400 வருங்களுக்கு முன்பு அரசுசுரிமையை பறி கொடுத்து கெட்டுப்போன திரு நீறு இட்ட எம்மால் இன்றுவரை அந்த அரசுரிமையை மீள பெற முடியாமலும்  சொந்த மண்ணில் கெளரவத்தோடும் வாழ முடியாமலும்  உள்ளதே 

கூற்று எம்முள் சிரிக்க தமிழில்  நல்ல நகைச்சுவை என்றாலும் வேறு மொழியில் மொழியில்  பெயர்த்தால் அதன்   அர்த்தத்தை இழந்து  எம்மை பார்த்து மற்றவர்  நகையாடும் விதத்தில் மாறி  முரண் பாடாக உள்ளதே. 

ஓம்.....இருக்கட்டும். இந்தப்பிரச்சனை *****. எங்கையும் முட்டுதே? கடவுளே இல்லை எண்டவருக்கு இந்த திரியிலை என்ன வேலை? 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓம்.....இருக்கட்டும். இந்தப்பிரச்சனை ***** எங்கையும் முட்டுதே? கடவுளே இல்லை எண்டவருக்கு இந்த திரியிலை என்ன வேலை? 😡

கடவுள் இல்லை என்பவர்கள் நிஜமாகவே பாக்கியசாலிகள்......சதாசர்வ காலமும் கடவுளையே தியானித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவாதத்துக்காக வேனும் இதிகாசம் புராணம் எல்லாவற்றையும் ஆழ்ந்து வாசிக்கின்றார்கள்.  நானெல்லாம் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு ஒப்புக்கு சப்பாணியாக காலையில் ஒருதரமும், மாலையில் ஒரு முறையும் ஏதோ ....யாருக்கோ அட்டன்டன்ஸ் குடுக்கிற மாதிரி வாழுறன் .....சே என்ன வாழ்க்கை இது......!  🤔

இரணியன், இராவணன், சிசுபாலன் போன்றவர்களுக்கு கிடைத்த பெரும் பேறு  வசிஷ்டர், விஷ்வாமித்திரர் , குமாரசுவாமி(முருகன்) போன்றவர்களுக்கு கூட கிடைக்கவில்லை.......! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.