Jump to content

சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ – ரிசாத் அணியினரிடையே முறுகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ – ரிசாத் அணியினரிடையே முறுகல்

November 8, 2019

manoganesha-and-risath.jpg?zoom=3&resize

மன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாத் பதூதீன் ஆகியோரது அணியினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

மன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதூதீனின் சகோதரர் ரிஸ்கான் பதூதீனுக்கும், அமைச்சர் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

நேற்றிரவிலிருந்து மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து, மேடையில் ஜனகன் விநாயகமூர்த்திக்கு அமர இடம் ஒதுக்க முடியாது என அமைச்சர் ரிசாட் அணியினர் மறுத்ததை அடுத்து மேடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

தமது உரையில் அமைச்சர் மனோ கணேசன், சஜித்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்தார். தம்மால் ஏறுபாடு செய்யப்பட்ட மேடையில் அமைச்சர் மனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிலாகித்து பேசியமையும், அமைச்சர் ரிசாட் பதூதீனின் அணியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாகவும் தெரிய வருகிறது.  #சஜித் #பிரசாரமேடை # மனோகணேசன் #ரிசாத்பதூதீன்

 

http://globaltamilnews.net/2019/132909/

Link to comment
Share on other sites

ரிசார்ட் வன்னியில் ஆட்சி செய்ய நினைக்கிறான். இதைப்பற்றி டி என் எ சிந்திப்பதில்லை. அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்களாக மாறுவதையே சம்பந்தர் விரும்புகிறார் போலும். இவர்கள் சரியாக இருந்தால் தமிழர்களுக்கு இப்படியான நிலைமை ஏட்பட்டிருக்காது. கொழும்பிலிருந்து ஒரு தமிழன் வந்து இங்குள்ள தமிழனுக்காக போராட வேண்டி உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் இங்குள்ள மக்களெல்லாம் ரிசார்டின் அடிமைகளாகத்தான் இருக்க நேரிடும். 

Link to comment
Share on other sites

23 minutes ago, Vankalayan said:

ரிசார்ட் வன்னியில் ஆட்சி செய்ய நினைக்கிறான். இதைப்பற்றி டி என் எ சிந்திப்பதில்லை. அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்களாக மாறுவதையே சம்பந்தர் விரும்புகிறார் போலும். இவர்கள் சரியாக இருந்தால் தமிழர்களுக்கு இப்படியான நிலைமை ஏட்பட்டிருக்காது. கொழும்பிலிருந்து ஒரு தமிழன் வந்து இங்குள்ள தமிழனுக்காக போராட வேண்டி உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் இங்குள்ள மக்களெல்லாம் ரிசார்டின் அடிமைகளாகத்தான் இருக்க நேரிடும். 

இவங்களை அப்படியே வங்கக் கடலில் தத்தளிக்க விடமுடியாதா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.