Jump to content

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம்கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா


Recommended Posts

Published by R. Kalaichelvan on 2019-11-08 21:00:28

 

(எம்.நியூட்டன்)

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

sarath_fonseka.jpg

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று எனக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம்.

 இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்காது தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று பிரிவினை இல்லை ஒரு தாய் மக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம் இனிமேலும் இப்படியான யுத்தம் இந்த நாட்டில் இடம்பெறமாட்டாது அதற்கு இந்த இடத்தில் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

யுத்த்தின் பிற்பாடு நீங்கள் சுதந்திரமடைந்தீர்கள் இப்பொழுது இருக்கின் ராஜபக்ச யுகம் இந்த இடத்தில் எதையும் செய்யவில்லை பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கையூட்டுக்களைப் பெற்றதுதான் அவர்கள் செய்த காரியம். 

ஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம். இங்கு சிலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள் ராஜபக்சவிடம் பணத்தை பெற்று வாக்குகளை சிதறடிப்பதற்கு அந்த முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தெ ளிவுடன் செயற்படவேண்டும்.

தெற்கிலுள்ள மக்களை ராஜபக்ச குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளார்கள் மக்களிடம் இருக்கும் பணங்களை சூறையாடுவதுதான் அவர்களின் வேலையாகும். வடக்கு கிழக்கு தெற்கை பிரிவினை இன்றி ஒரு தாய் மக்களாகவே பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாட்டை முன்கொணரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுத்து உதவவேண்டும்.

நாங்கள் ஒரு போதும் பொய்கூறமாட்டோம் முடியுமானதை முடியும்என்று சொல்லுவோம் நல்ல விடையங்கள் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார் நான் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன். அதனைப் பெறுப்பேற்ற பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு தாய் மக்களாக இன மத மொழி கட்சி பேதங்கள் இன்றி ஒரே அமைப்பாக பாதுகாப்பு வழங்குகின்ற நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.

இந்த நாட்டில் இறமை ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக சகல முயற்சிகளையும் எடுப்போன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது. இளைஞர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மது பாவனையை முற்றாக ஒழித்து இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல முயற்சிப்போம் மது பாவனை தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் இல்லாது ஒழிப்போம்.

ஊழல் மோசடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் இதனை இல்லாது செய்வதற்காக அனைத்து வித நடவடிக்கைளையும் எடுப்போம். எந்த விதத்திலும் இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை கொல்வதற்கோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

 கோத்தாபய ராஜபக்ச தண்ணீர் கேட்பவர்களுக்கும், ஊழியர் சேமலாப நிதியைக் கேட்பவர்களையும் மண்ணெண்ணை கேட்பவர்களையும் துப்பாக்கியால் பதில் கூறினார்கள் அத்தகயை சம்வங்கள் எங்களுடைய ஆட்சியில் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 

அவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் மேலும் யுத்தத்தை நடாத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/68556

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

ஒரு போர்க்குற்றவாளியின் வாக்குமூலம்,

சிங்களம் தனது இராணுவ வீரர்களை தமிழ் மக்களை கொல்லவும், ஒரு ஆக்கிரமிப்பின் கீழே வைத்திருக்கவும் பயன்படுத்துகிறது,

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.