Jump to content

`வெறுப்பு, அவதூறு பரப்ப முடியாது!'- `மஸ்டொடோன்' வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்


Recommended Posts

கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'.

 

 

இதற்கு என்ன காரணம்?

இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்தான். சமீபத்தில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ட்விட்டர் அக்கவுன்ட் இடைநீக்கம் செய்யப்பட்டது. இவருடைய இரண்டு பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டதால் ட்விட்டர் இதைச் செய்திருக்கிறது. ``hateful or sensitive” என்று அதை வரையறுத்தது ட்விட்டர். ஆனால், அவை எதுவும் அப்படியாக அமையவில்லை. அதனால் இவருக்கு ஆதரவாகவும் ட்விட்டரின் நடவடிக்கைக்கு எதிராகவும் பலரும் குரல் கொடுக்கத்தொடங்கினர். இதன்பின், அவரது அக்கவுன்ட் மீண்டும் ஆக்டிவ்வானது. ஆனால், அடுத்த நாளே மீண்டும் அவரின் அக்கவுன்ட்டை இடைநீக்கம் செய்தது ட்விட்டர்.

மேலும், மக்களின் அக்கவுன்ட்களை வெரிஃபை செய்து ப்ளூ டிக் கொடுக்கும் ப்ராசஸில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும் பட்டியலின மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் ட்விட்டர் மேல் எழுந்துள்ளன. இதன்பின் சஞ்சய் ஹெக்டே, `ட்விட்டரில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. நான் மஸ்டொடோன் தளத்துக்கு மாறப்போகிறேன்' என்று கூறினார். ட்விட்டர்போல அல்லாமல் இந்தத் தளம் மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்தார் அவர். ட்விட்டரின் எந்த பாலிசியையும் தான் மீறவில்லை என சட்டபூர்வமாக நோட்டீஸ் ஒன்றையும் ட்விட்டருக்கு அனுப்பியுள்ளார் சஞ்சய். இதற்குப்பின்தான் ட்விட்டரை எதிர்த்து பலரும் மஸ்டொடோன் தளத்துக்கு மாறிவருகின்றனர்.

மஸ்டொடோன், அதன் பயன்பாட்டாளர்களை ஏற்கெனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் நேரடியாக சர்வர் மூலம் சேர வழிகள் அமைத்துத் தருகிறது. வேண்டுமென்றால் நாமே ஒரு புதிய கம்யூனிட்டியை இதில் உருவாக்கமுடியும். நாம் தேர்ந்தெடுக்கும் சர்வரில் சேர்ந்தவுடன் நமக்கென்று ஒரு username தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதிலும் ட்விட்டரைபோல ஒரு பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பு உண்டு. ஆனால், ட்விட்டரைப்போல அல்லாமல் (280 கேரக்டர்கள்) இதில் லிமிட் 500 கேரக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் யார் எதற்கு வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பதால் நிறையவே தேவையற்ற வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் பதிவுகள் பலவும் பதிவாகிவந்தன. ஆனால், மஸ்டொடோனில் நிலை அப்படி இருக்காதாம்

பொதுமக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் கூட `மஸ்டொடோன்' தளத்தில் அக்கவுன்ட் தொடங்கியுள்ளனர்.

https://www.vikatan.com/technology/tech-news/indians-leave-twitter-to-join-mastodon

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.