Jump to content

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார்


Recommended Posts

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார்

Kamal   / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0      - 67

 

அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். 

மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

யுத்தத்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு தமிழ் வேடிக்கை பார்க்கும் நிலைமை வேண்டாம் எனவும், தமிழ் மக்களுக்கும் சகல சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்றார். 

தமிழர்களின் வாக்குகளை பெற்றுகொடுத்துவிட்டுத்த  தமிழர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்காதிருப்பதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் சண்டையிட்டாவது சலுகைகயை பெற்றுகொடுப்போம் என்றார். 

அதேபோல் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையை பொருத்தே மாகாணத்துக்கான ஆளுநரை அமைச்சர் சஜித் நியமிப்பார் எனவும், கிழக்கு மக்கள் இழந்தவைகளை ஈடு செய்து சுபீட்சமான வாழ்வாதாரத்தை உருவாக்கிகொடுக்க வேண்டும் என்றார். 

அதேபோல் அண்மையில் கூறியதுபோன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயார் நிலையில் உள்ளதெனவும், தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தான் அமைச்சராக இருக்க போவது உறுதியெனவும் அந்த அரசாங்த்தில் மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு தமிழ் அமைச்சர் ஒருவரை தெரிவு செய்யபோவதாகவும் வாக்குறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசயல-கதகள-வடதல-அமசசரவ-பததரம-தயர/150-240858

Link to comment
Share on other sites

பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஜூட் அந்தோனிக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

jude.jpg

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பந்தமான வழக்கில் ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந் நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளதுடன், அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

ஜானதிபதி கையெழுத்திட்ட இந்த ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் ஜூட் அந்தோணி ஜயமஹாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/68610

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

16 hours ago, ampanai said:

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் இன்று விடுதலையானார். ஆனால், நல்லடசியால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை வைத்து அரசியல் செய்யும் ஈனர்கள். 

Link to comment
Share on other sites

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு - சர்ச்சையில் சிக்கிய மைத்திரிபால சிறிசேன

இவோன் ஜோன்சன்படத்தின் காப்புரிமைCAROLINE JONSSON-BRADLEY FACEBOOK

சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.

 

இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

இவோன் ஜோன்சன் கொலை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு

ரோகர் ஜோன்சன் என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், ஷமல்கா ஜோன்சன் என்ற இலங்கையைச் சேர்ந்த தாய்க்கும் மகளாக பிறந்தவரே இவோன் ஜோன்சன்.

இவோன் ஜோன்சன் லண்டனில் கல்வி கற்றதுடன், தனது சகோதரியுடன் கொழும்பின் புறநகர் பகுதியான ராஜகிரிய பகுதியிலுள்ள ரோயல் பார்க் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், 19 வயதான இவோன் ஜோன்சன் 2005ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

விருந்து உபசாரமொன்றிற்கு ஜோன்சன் சகோதரிகள் இருவரும் சென்றிருந்தபோது, அவர்களுடன் சென்றிருந்த நண்பரான ஜுட் ஷரமந்த ஜெயமஹா, இவோன் ஜோன்சனின் சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, இவோன் ஜோன்சன் தலையீடு செய்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனையின் பின்புலமாகவே இவோன் ஜோன்சன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

ஆடையொன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு, இவோன் ஜோன்சனின் தலையை தரையில் மோதி இந்த கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜுட் ஷரமந்த ஜெயமஹா Image captionஜுட் ஷரமந்த ஜெயமஹா

இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஜுட் ஷரமந்த ஜெயமஹா கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு இந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பு 2012ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது.

இதன்படி, ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

குற்றவாளி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் தேதி உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், 2016ஆம் ஆண்டு ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 

ஜுட் ஷரமந்த ஜெயமஹா பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

குற்றவாளியாக உயர் நீதிமன்றத்தினாலும் அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் நேற்றைய தினம் ( நவம்பர் 09) விடுதலை செய்யப்பட்டார்.

 

அவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கப் பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

இதன்படி, ஜுட் ஷரமந்த ஜெயமஹா இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையின் சிறை வைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

 

இவோன் ஜோன்சன் சகோதரியின் கேள்வி

தனது சகோதரி கொலை செய்யப்பட்ட விதத்தை அறிந்தும், குற்றவாளியான ஜுட் ஷரமந்த ஜெயமஹாவை மன்னிக்க தகுதியானவரா என அவரது சகோதரியான கேரோலின் ஜோன்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரி கொலை செய்யப்பட்ட விதத்தையும் அவர் இந்த பதில் விவரித்துள்ளதுடன், அந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

கொலையாளி தனது சகோதரியை கொலை செய்ததன் பின்னரும், இவோன் ஜோன்சனின் தலையை தரையில் 64 தடவைகள் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் இரத்த சாட்சியங்களை நீச்சல் தடாகத்தில் கழுதி, சாட்சியங்கள் அனைத்தையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

குற்றவாளி தப்பிச் செல்லும் நோக்குடன் விமான டிக்கெட் ஒன்றையும் அப்போதே கொள்வனவு செய்திருந்ததாக கேரோலின் ஜோன்சன் கூறியுள்ளார்.

தனது சகோதரி மது அருந்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், பிரேத பரிசோதனைகளில் அந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் நினைவுக்கூறினார்.

சகோதரியின் கொலைக்கான நீதியை கோரி தொடர்ந்தும் போராடுவதாகவும் இவோன் ஜோன்சன் சகோதரியான கேரோலின் ஜோன்சன் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50366627

Link to comment
Share on other sites

 

Sri Lanka's president has pardoned a death-row prisoner who murdered a Swedish teenager just a week before he leaves office, officials said Sunday, in a move that sparked national outrage.
 
Convicted killer Jude Jayamaha, from a wealthy, high-profile family, walked out of Welikada prison Saturday following the highly unusual amnesty granted by President Maithripala Sirisena.
   
Sirisena, who is stepping down after Saturday's presidential election at which he is not a candidate, announced last month he was considering a request to grant Jayamaha a pardon.
   
Victim Yvonne Jonsson, who was holidaying in Sri Lanka, was beaten to death at a high-rise apartment in Colombo in 2005 after she and Jayamaha had an argument. The court had been told her skull was fractured into 64 pieces
   
Jayamaha was initially sentenced to 12 years in prison. He appealed to a higher court, which rejected his plea and instead sentenced him to death, which was reaffirmed by the Supreme Court in 2014.
   
Jonsson's sister Caroline wrote in a Facebook post about her concerns over Jayamaha's pardon before the amnesty announcement.
   
"He showed and continues to show absolutely no remorse for what he has done," she wrote. "We've worked hard to rebuild our lives and here we are, going into 15 years, still fighting for justice. Unfortunately, we now have to prepare ourselves for the worst possible outcome, the pardon of my sister's murderer."
 
   
Many Sri Lankans took to social media to condemn Sirisena.
Link to comment
Share on other sites

யார் தடுத்தாலும் மரண தண்டனையை அமுல் படுத்துவேன் என்று முழக்கமிட்ட இந்த மைத்திரி, ஒரு மரணதண்டனை கைதியையே விடுதலை செய்துள்ளார். 

இப்படியான சிங்கள தலைவர்கள், குற்றவாளிகள் மத்தியில் நீதியை எதிர்பார்க்க முடியாது. 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் மாட்டார்கள். 

 

Link to comment
Share on other sites

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னனி என்ன ? - பணப் பரிமாற்றமா ? ராஜபக்ஷவினருக்கான நன்றிக்கடனா?  : பிமல்

ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணியின் பண பரிமாற்றலா உள்ளது? அல்லது ராஜபக்ஷவினருக்கு செய்யும் நன்றிக்கடனா? அல்லது அந்த குற்றவாளி ஜனாதிபதியின் உறவினரா? என சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக ஜனாதிபதி செய்த காரியமானது அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது சட்டம் நீதியை மீறும் செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

BIMAL.jpg

பாராளுமன்றத்தில் இன்று தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் கூறுகையில். 

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிறைக் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார். இளம் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரையே இப்பொது ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் நாடாக நாம் பாரிய பின்னடைவை சந்திக்கின்றோம். நாட்டின் சட்ட- நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளமை  மட்டும் அல்லாது சர்வதேச ரீதியிலும் நாம் பாரிய அழுத்தங்களை சந்திக்க நேரும்.

ஏனெனில் கொல்லப்பட்ட அந்த பெண்  ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண் என்பதால் இது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விடயமாகவும் உள்ளது. ஆகவே ஜனாதிபதி முன்னெடுத்த இந்த செயற்பாடு காரணமாக  சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய அவமானமான செயற்பாடாகும். 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையினால் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்த கடிதத்தை வாசித்தால் இதயமே வெடித்து சிதறுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

ஜனாதிபதி ஏன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்தார். விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் ஜனாதிபதியின் உறவினரா? அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு செய்யும் நன்றிக்கடனா? அல்லது வேறு பண பரிமாற்றல்கள் உள்ளனவா? பண பரிமாற்றல் இதில் இடம்பெற்றதாக கதைகள் வெளிவருகின்றது.

பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய பலர் இன்னும் சிறையில் உள்ளனர் அவர்களை விடுத்து ஏன் இவ்வாறான கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார். தூக்கு மேடை கொண்டுவருவதாக கூறும் ஜனாதிபதி இறுதியாக நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விசாரணைகளை நடத்தி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நபரை ஏன் விடுவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஏன் எதிர்ப்பை விடுவிக்கவில்லை. அனுரகுமார திசாநாயக மட்டுமே இது குறித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கேவலப்படுத்தும் வேலையையே நீங்கள் அனைவரும் செய்கிறீர்கள். 

உண்மையில் இது பெண்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு. நீதிமன்றமே குற்றவாளி என அடையாளபடுத்திய ஒரு குற்றவாளியை விடுவிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன. தாரிமீக உரிமை என்ன. சட்டத்தில் என்ன இருந்தாலும் மனிதாபிமாம் இல்லாது கீழ்த்தரமாக ஜனாதிபதி செயற்படுவது மோசமானது என்றார்.   

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் அஜித் பி.பெரேரா கூறுகையில் :- ஜனாதிபதி மூலமாக கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் போது அரசியல் அமைப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளது. குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சரின் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தே விடுவிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி செய்தது தவறான முன்னுதாரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றார். 

https://www.virakesari.lk/article/68719

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.