Jump to content

தேர்தல் பிரசாரத்துக்கு அதிகம் செலவிட்டவர் யார்?


Recommended Posts

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் கடந்த 05ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திபதி முதல் 31ஆம் திகதி வரையான செலவினங்களை அந்த நிலையம் வெளியிட்டது.

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 574 மில்லியன் ரூபாவை இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாச போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 372 மில்லியன் ரூபாவை குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், ஒளிபரப்பு ஊடகம், சமூக ஊடகம் மற்றும் ஏனைய செலவுகள்,கூட்டங்கள், ஊர்வலங்கள், காட்சிப் பொருட்கள், அரச சொத்துகளின் துஷ்பிரயோகச் செலவுகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இந்த செலவீன அறிக்கையை தயாரித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவினங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக 456 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 219 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஒளிபரப்பு ஊடகத்திற்காக 4 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கள ரீதியான பிரசாரத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 76 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ள அதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) கள ரீதியான பிரசாரத்திற்கு 85 மில்லியன் ரூபாவை செலவினம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி கள ரீதியான பிரசாரத்திற்காக 11 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளது.

அத்துடன், அச்சு ஊடக பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 68 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அச்சு ஊடகத்திற்காக 42 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) அச்சு ஊடகத்திற்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது.

சமூக ஊடகத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவிலான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணியும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை குறிப்பிடத்தக்களவு பயன்படுத்தியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 35 வேட்பாளர்கள் மூன்று பிரதான வேட்பாளர்களின் செலவினங்கள் இவ்வாறு இருக்க, ஏனைய வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக சுமார் 20 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் கணிப்பீடு செய்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளரான அஜந்த பெரேரா ஆகியோர் சுமார் நான்கு மில்லியன் ரூபாவும் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

ஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை செலவு செய்தே, தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ 60 வீதமான செலவினங்களையும், சஜித் பிரேமதாஸ 39 வீதமான செலவினங்களையும், அநுர குமார திஸாநாயக்க ஒரு வீதமான செலவினங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட செலவினங்கள் மற்றும் வானொலிகளில் பிரசாரத்திற்காக செலவிடப்பட்ட செலவினங்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

எதிர்வரும் சில தினங்களில் முழுமையாக செலவினங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் இந்த தேர்தல் காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 10 பில்லியன் ரூபா செலவீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில், பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லை என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது. இதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களில் செலவினங்கள் தொடர்பான வரையறையொன்றை வைக்க வேண்டிய வகையில் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்துகின்றது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இறுதியாக கேள்வியொன்றை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் தொடுக்கின்றது.இந்த நிதிகளுக்கான மூலங்கள் எவை? என்ற கேள்வியையே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தொடுக்கின்றது.

https://www.thinakaran.lk/2019/11/08/கட்டுரைகள்/43530/தேர்தல்-பிரசாரத்துக்கு-அதிகம்-செலவிட்டவர்-யார்

Link to comment
Share on other sites

தேர்தல் விளம்பரங்களை விடவும் தனியார் கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் அதிகம் !

Tuition posters are more than election posters: CEJ

While saying that the use of posters, banners and cut-outs during this election period has remarkably and considerably decreased by at least 80% in comparison to previous elections, the Centre for Environmental Justice (CEJ) said visibility of tuition posters and banners are more than elections posters and banners.

CEJ Executive Director Hemantha Withanage told Daily Mirror that all the political parties should be appreciated for their endeavour to carry out their election campaigns using fewer posters and banners.

“Several reasons must have led to the incidence where fewer posters and banners were being used by the respective presidential candidates,” Withanage said.

http://www.dailymirror.lk/breaking_news/Tuition-posters-are-more-than-election-posters-CEJ/108-177539

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.