Jump to content

புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்

 

புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக  தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­திலும்  பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை  முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான  தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை.  

ஜனா­தி­பதி  தேர்தல் பிர­சார பணி­க­ளுக்கு இன்னும் 4 நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­சா­ரங்கள் இறு­திக்­கட்­ட­மாக தீவி­ர­ம­டைந்­துள்­ள­துடன் பிர­தான வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளிவந்­து­விட்­டன. நாட்டு மக்கள்  விசே­ட­மாக தமிழ்ப்ேசும் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த இர­ண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள்  வெளியி­டப்­பட்­டுள்­ளன. மக்கள் தற்­போது குறித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை மதிப்­பிட்டு தமது தீர்­மா­னத்தை எதிர்­வரும் 16 ஆம் திகதி  எடுப்­ப­தற்கு தயா­ரா­கி­ வ­ரு­கின்­றனர். 

virakesari.jpg

ஆனால்  நவம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கு பின்னர் இந்த நாட்டில் புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள்  உள்­ளன என்­பது  உண்­மை­யானது.  விசே­ட­மாக   தமிழ்ப்பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்பு­க­ளுக்குத்  தீர்வு காண்­ப­திலும்   பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல.   பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி    தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு  சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை  முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான  தீர்­வு­களை எட்­டு­வது என்­பது  கடி­ன­மா­ன­தே. ஆனால்  புதி­தாக  ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­றவர் இந்த கடின பாதையைக் கடந்­தா­க­வேண்டும். 

இவ்­வா­றான பின்­ன­ணியில் அர­சியல், அபி­வி­ருத்தி, சமூக, பொரு­ளா­தார, கலா­சார  விட­யங்­களை  அடுத்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு எவ்­வாறு கையாள்­வது மற்றும்  அவற்­றுக்­கான  கொள்கை திட்­டங்கள் அணு­கு­மு­றைகள் என்ன என்­பது   தொடர்­பாக இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும்  தமது விஞ்­ஞா­ப­னங்­களில் கார­ணி­களை முன்­வைத்­துள்­ளனர். அது மட்­டு­மன்றி பிர­தான வேட்­பா­ளர்­களும் பிர­சாரக் கூட்­டங்­களில் தமது  கொள்­கை­களை விளக்­கிக்­கூ­றி­வ­ரு­வ­துடன் வாக்­கு­று­தி­களை அள்­ளித்தெளித்து ­வ­ரு­கின்­றனர். 

இவற்றில்  இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்­களை பொறுத்­த­வரை நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம்  மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் போன்­ற­வற்­றுக்­கான  இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் கொள்கை திட்­டங்கள்  மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமை­கின்­றன.  

பொது­வாக தமிழ்ப்பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரை,  அர­சியல் பிரச்­சினை முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.   தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் நோக்­கி­லான ஒரு தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு ஏது­வான யோச­னைகள் அடங்­கிய  விஞ்­ஞா­பனம் குறித்துத்  தமிழ்  மக்கள் கவனம் செலுத்­து­வார்கள். அத­னா­லேயே   பிர­தான வேட்­பா­ளர்கள் இந்த   தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான விடயம் குறித்து செலுத்­து­கின்ற அவ­தானம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. 

அதன்­படி தற்­போது  பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளி­வந்­துள்­ளன. இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­ன்  விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும்   தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும்  எவ்­வா­றான  கொள்­கைத்­திட்­டங்கள் உள்­ளன என்­பது தொடர்பில் மக்கள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். 

கோத்­தாவின் விஞ்­ஞா­பனம் 
ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­பனம்  கடந்த  25 ஆம் திகதி கொழும்பில் வெளியி­டப்­பட்­டது. அதில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களைப் பார்த்தால், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று மிக முக்­கி­ய­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

அதா­வது, “சர்­வ­தேச சமூகம் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் அபி­லா­ஷை­க­ளுக்கு உட்­ப­டாத வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்புக் கொண்டு வரப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும். 

புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை கலப்பு தேர்தல் முறை மாகா­ண­சபை முறை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப் ­ப­டுத்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும்.

 ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மத சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் பகு­தி­க­ளாக இருக்கும்.  ஜனா­தி­ப­தியின் தலை­மையில் சர்­வ­மத ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும். மாவட்ட மற்றும் பிர­தேச மட்­டத்­திலும் சர்­வ­ம­தக்­கு­ழுக்கள் நிறு­வப்­படும்.

யுத்தம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்டு சிறையில் வாடு­கின்ற ரா­ணுவ மற்றும் புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக முறை­யான புனர்­வாழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு சுதந்­திர மனி­தர்­க­ளாக சமூ­க­ம­யப்­ப­டுத்­த­ப­டு­வார்கள்.  

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டில்  நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைவர் விட­யத்­திலும் மூன்று மாத ­கா­லத்தில் வழக்கு தொட­ரப்­படும் அல்­லது விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள். 

காணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் நோக்கில் காணி பயன்­பாட்டுத் திட்டம் ஒன்று தேசிய மற்றும் மாகாண மட்­டத்தில் உரு­வாக்­கப்­படும் அதற்­காக தேசிய காணி ஆணைக்­குழு நிறு­வப்­படும். 

ஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்பில் பொறுபபு மீறி செயற்­பட்­ட­வர்கள் குறித்து விசா­ரிக்க முழு அதி­காரம் கொண்ட சுயா­தீன ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும்

பிராந்­திய பாது­காப்­புக்­காக இந்­தியா உள்­ளிட்ட சார்க் அமைப்பு, பீம் செக் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற் ­ப­டுவோம்.  

தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். வற் வரி­யா­னது குறைக்­கப்­படும்  ஆகிய விட­யங்கள் முக்­கி­ய­மா­க­வுள்­ளன.  அது மட்­டு­மன்றி  மேலும் கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, இளைஞர், மகளிர், சிறுவர் விட­யங்கள், பொரு­ளா­தாரம், சுற்­று­லாத்­துறை,  வரிக்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக, கலா­சார அம்­சங்கள் குறித்து பல யோச­னை­களும் வாக்­கு­று­தி­களும்  ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.     

பொது­வாக பல்­வேறு விட­யங்கள் குறித்து இந்த விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டுள்­ள­போ­திலும்  இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விட­யங்கள்  தெளிவாக இல்லை என்ற விமர்­சனம்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் என்றும் அதில் ஒற்­றை­யாட்சி பேணப்­ப­டு­வ­துடன் பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை முறை, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை என்­பன   தொடர்பில்  ஆரா­யப்­படும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே  விஞ்­ஞா­ப­னத்தில் இந்த  விட­ய­தா­னத்­துக்குள்  தான்  நாம் தீர்வு குறித்த விட­யத்தை எதிர்­பார்க்க முடியும். ஆனால் அது தெளி­வாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. 

இதே­வேளை புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.  அதில்  உள்ள முக்­கிய விட­யங்­களைப் பார்க்­கலாம். 

சஜித்தின் விஞ்­ஞா­பனம் 

தேசத்தை பாது­காக்­கவும் அதன் அடுத்த பய­ணத்தில் அதை வலு­வாக வைத்­தி­ருக்­கவும்   புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும். இது எமது கட்­ட­மைப்பில் ஜன­நா­ய­க­மாக்­கலை நிறைவு செய்யும். புதிய அர­சியல் அமைப்பு தேர்தல் முறைமை சீர்­தி­ருத் தம், தேர்தல் முறைமை மாற்றம் என்­ப­னவை குறித்து ஆராயும்  இந்த  அர­சியல் அமைப்பு அர­சாங்கம் எவ்­வாறு செயல்­ப­டு­கின்­றது என்­ப­தையும் சீர்­தி­ருத்தும். பிள­வு­ப­டாத மற்றும் பிரிக்க முடி­யாத இலங்­கைக்குள் அதி­க­பட்ச அதி­கார பகிர்வு அமுல்­ப­டுத்­தப்­படும். அதி­கா­ரப்­ப­கிர்வு அர்த்­த­முள்­ள­தா­கவும் வினைத்­திறன் உள்­ள­தா­கவும் மாறும். வீண­டிப்­புகள் குறைக்­கப்­படும்.

மத்­தியு மாகா­ணங்­களும்   தங்­க­ளது  திறன்கள் அடிப்­ப­டையில் அந்­தந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடியும் என்­பதை உறுதி செய்­வ­தற்­காக மாகா­ண ­ச­பைகள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட இரண்­டா­வது சபை- செனட் சபை ஒன்று உரு­வாக்­கப்­படும். 

தேவை­யான நிதியை திரட்­டவும், அவற்றில் பர­வ­லாக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­தவும் மாகா­ணங்­க­ளுக்கு தேவை­யான அதி­கா­ரங்கள் இருக்கும். 

மலை­யக மக்­க­ளுக்கு ஏழு பேர்ச் காணி­யுடன் வீட்­டுத்­திட்டம் நடை­   ­முறைப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் மலை­ய­கத்தின் பல்­க­லைக்­க­ழ­க­மாக ஹைலண்ட் பல்­க­லைக்­க­ழகம்  உரு­வாக்­கப்­படும். 

குற்­ற­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விடு­விக்­கப்­ப­டுவர். காணாமல் போனோர் அலு­வ­லகம் ஊக்­கு­விக்­கப்­படும்.  பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­படும் போன்ற பல்­வேறு விட­யங்கள்   சஜித் பிரே­ம­தா­சவின்  கொள்கை பிர­க­ட­னத்தில்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

மேலும் பெண்கள், சிறு­வர்கள்,  இளை­ஞர்­களுக்­கான திட்­டங்­களும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி,  சமூக மற்றும்  கலா­சார  அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

அந்­த­வ­கையில் இரண்டு தரப்­பி­ன­ரதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் முக்­கிய பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச  பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் அதி­க­பட்ச அதி­காரப் பகிர்வை வழங்­கு­வ­தா­கவும் புதிய அர­சி­­யல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும்  உறு­தி­ய­ளித்­துள்ளார். அதே­போன்று  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி  வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும்  அதில் மாகாண சபை தேர்தல் முறை உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து  அதில்  ஆராய்­வ­தா­கவும்   குறிப்­பிட்­டுள்ளார்.  

இவ்­வாறு இரு­வரும் தேசிய பிரச்­சி­னைகள் குறித்த தமது கொள்­கை­க­ளையும்  அணு­கு­மு­றை­க­ளையும் யோச­னை­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர். எனவே  தற்­போது பொது மக்கள் சிந்­தித்து  வாக்­க­ளிப்­பது  குறித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. 

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும்    இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட  இந்த நாட்டின்  தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்டும். யார்  ஜனா­தி­ப­தி ­யாக வந்­தாலும் இந்தப் பிரச்­சினை விட­யத்தில்  அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. தற்­போது  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்   சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பல சிறு­பான்மை கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன.  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும்  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்,  தமிழ் முற்­போக்கு கூட்­டணி,  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல­உ­று­மய உள்­ளிட்ட பிர­தான சிறிய கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு  ஆத­ரவு வழங்­கு­கின்­றன.  

அதே­போன்று தற்­போது  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும்  சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன் சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா தரப்பும்   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு வழங்க முன்­வந்­தி­ருக்­கி­றது.  ஸ்ரீ­­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிரி­வி­னரும்  இவ்­வாறு சஜித்­துக்கு ஆத­ரவு வழங்க   முன்­வந்­துள்­ளனர். 

இதே­வேளை கோத்­த­பாய  ராஜ­ப­க்ஷ­வுக்கும் பல்­வேறு கட்­சிகள் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்,   ஈ.பி.டி.பி.,  ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ்,  தேசிய காங்­கிரஸ்,     கருணா அம்மான், பிள்­ளையான் தரப்­புக்கள்,   லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி,   கம்­யூனிஸ்ட் கட்சி,   உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள்   ஆத­ரவு வழங்­கு­கின்­றன. 

இவ்­வாறு பார்க்­கையில்,  இருதரப்­பி­னரும்   பல்­வேறு கட்­சி­க­ளு­டனும்  கூட்­டணி அமைத்­துக்­கொண்டு தேர்­தலை சந்­திக்­கின்­றனர்.  இந்தச் சூழலில் இந்த இரண்டு தரப்­பி­லுமே தமிழ்ப் பேசும்  மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு  மற்றும் ஏனைய அடிப்­படை பிரச்­சி­னைகள்   விரை­வாக   தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யங்­களை வலி­யு­றுத்­து­ப­வர்கள் இருக்­கின்­றனர்.  எனவே தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னையின் ஆழம், அதன் அவ­சியம்  அந்த பிரச்சி­னையின் தாற்­ப­ரியம் என்­ப­வற்றை இரண்டு பிர­தான  வேட்­பா­ளர்­களும்   புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­யமாகிறது.   தென்­னி­லங்­கையில் வாக்­குகள் கிடைக்­காமல் போய்­விடும் என்ற சந்­தே­கத்துக்குள் சிக்கி  தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னையை மூடி மறைத்­து­ விட முடி­யாது. இந்த மக்கள் நீண்­ட ­கா­ல­மாக  ஒரு அர­சியல் தீர்வைக் கோரி வரு­கின்­றனர்.    அதுவும் நியா­ய­மான முறையில் அந்தப் பிரச்­சினை தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வேண்டும். 

அதே­போன்று யுத்தம் கார­ண­மாக  ஏற்­பட்ட  பிரச்­சி­னைகள்  குறித்து   இது­வரை தீர்வு கிடைக்­காமல் இருக்­கி­றது.  யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்தும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்குத்

 தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.   இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சியல் கைதிகள் விவ­காரம், காணா­மற்­போனோர் பிரச்­சினை, காணி விடு­விப்பு, வடக்கு–கிழக்கு பொரு­ளா­தார அப­வி­ருத்தி, தொழில் வாய்ப்­புக்கள் உரு­வாக்கம், பொறுப்­புக்­கூறல், நெருக்­கடி, மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சினை, அபி­வி­ருத்தி விட­யங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள், தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் உள்­ளிட்ட  பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்னும்  தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. 

எனவே  இந்த விட­யங்கள்  தொடர் பில்  இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும்   பாரி­ய­ பொறுப்புக்கள் இருக்­கிறன.  மிக முக்கியமாகத்  தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் யாரும்   பொறுப்பின்றி  அல்லது  அலட்சியப்போக்கில் செயற்பட முடியாது.  ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்  மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை  ஒரு பொருட்டாக  மதிக்காமல் செயற்பட எந்த வேட்பாளரும் முயற்சிக்கக்கூடாது. இது தொடர்பில்  தெளிவான ஒரு பார்வை அவசியம்.  

 தற்போதைய நல்லாட்சியில் தீர்வுத்திட்டத்தையும் அடைய முடியவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் முழுமையாகத்  தீர்க்கவில்லை. இந்நிலையில்   மீண்டும் ஓர் ஆட்சிமலரவுள்ளது. 2020 ஆம் ஆண்டிலாவது   தமிழ்ப்பேசும் மக்களின் நீண்டகால  பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? மக்களின்  அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் அவசியம். தற்போது மக்க ளின் கைகளிலேயே  தீர்மானம் இருக்கின்றது. யார் ஜனாதிபதி என்பதனை  16 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் புதிய ஜனாதிபதிக்கு பல சவால்கள் உள்ளன. 

குறிப்பாக  தமிழ்ப்பேசும் மக்களின்   அரசியல் தீர்வு பிரச்சினைக்கு  தீரவுகாண வேண்டிய முக்கிய தேவை உள்ளது. அது இலகுவான பயணமாக  அமையாது. நீண்ட கடின பாதையைக் கடந்தே  அதற்கு  சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய   தீர்வைக்காண முடியும்.  அதே போன்று   யுத்தத்தினால்   தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை அவசியம்.  அவை  குறித்தும் புதிய ஜனாதிபதி  கவனம் செலுத்தவேண்டும். எனவே  புதிய  ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கும்  பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விடயத்தில் பல சவால்கள் உள்ளன என்பதே யதார்த்தம்.

 ரொபட் அன்­டனி

 

https://www.virakesari.lk/article/68593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

திய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக  தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­திலும்  பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும்.

எங்கடை தமிழ் அரிசியல்வாதிகள் இருக்கும் வரை உந்தப்பிரச்சனை சிங்களவருக்கு வரவே வராது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எங்கடை தமிழ் அரிசியல்வாதிகள் இருக்கும் வரை உந்தப்பிரச்சனை சிங்களவருக்கு வரவே வராது.:cool:

உண்மைதான்... குமாரசாமி அண்ணை,
தமிழ் அரசியல்வாதிகளே... அவர்களுக்கு, யோசனை சொல்லி கொடுப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... குமாரசாமி அண்ணை,
தமிழ் அரசியல்வாதிகளே... அவர்களுக்கு, யோசனை சொல்லி கொடுப்பார்கள். 

இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ பொன்னம்பலம் சம்பந்தன் சுமந்திரன் வரைக்கும் உதுதானே நடக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.