Jump to content

கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார்

அகிம்சா விக்கிரமதுங்க

தமிழில் ரஜீபன் 

இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர்.

ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன்.

தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன்.

கண்டிக்கத்தக்க -  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன்.

தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன்.

இதன் மூலம் நான் சஜித் என்ற வேட்பாளர் எப்படி உருவானார் என்பதை சொல்கின்றேன்.

அவரது வேதனை அவரது போராட்டங்கள் அவரது பயணம் ஆகியன எப்படி என்னுடைய போராட்டங்கள் பயணம் வேதனை ஆகியவற்றை ஒத்தவையாக காணப்படுகின்றன என்ற உணர்வு எனக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இன்றைய சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன,இன்று உள்ள  என்னை இந்த சவால்களும் அனுபவங்களுமே உருவாக்கின.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எனது சொந்த ஆத்மாவை வடிவமைத்த அதே தீயினால் உருவாக்கப்பட்டவர்.

மற்றைய மாற்றீடான வேட்பாளர் எனது தந்தையின் மரணத்தை தொலைக்காட்சியில் கொண்டாடியவர்.

ஜனாதிபதி பிரேமதாசாவின் அர்த்தமற்ற கொலை குறித்து பிரபாகரன்கூட தம்பட்டமடிக்கவில்லை.

ஆனால் கொலைகார கும்பலொன்று எனது தந்தையை கொலை செய்தவேளை கோத்தபாயவினால் தனது மகிழ்;ச்சியை மறைக்கமுடியவில்லை.

எனது தந்தையின் கொலைக்கும் படையினருக்கும் இடையிலான  தொடர்புகள்குறித்து தெரியவந்தவேளை அவர் விசாரணைகளை மேற்கொள்வேன் என்றோ அல்லது  பத்திரிகையாளர்களை பாதுகாப்பேன் எனவோ வாக்குறுதி வழங்கவில்லை.

அவர் குற்றவாளிகளை நீதியின் பிடியிலிருந்து காப்பாற்றுவேன்  என சூளுரைத்தார்.

mahinda-rajapaksa-gotabaya-rajapaksa.jpg

கோழைகள் மாத்திரமே இரத்தகளறியை வார்த்தைகளால் எதிர்கொள்வார்கள்.

எனது வாழ்க்கையில் கோத்தாபய எந்த சவாலையும் எதிர்கொண்டதை நான் காணவில்லை.அவருக்கு எதிராக பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் , அவர் தான் குற்றமற்றவர் என்பதை ஒருபோதும் நிருபிக்கவில்லை.

மாறாக அவர் தாமதங்கள் சட்டசிக்கல்கள் மூலம் தப்பிவெளியேறியுள்ளார்.

அவர் அதிகாரத்திலிருந்தவேளை  அவரை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர்,கொலை செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது அவர் தனது எதிர்வேட்பாளர்களை எதிர்கொள்வதையோ அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்துக்கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினால் அவர் பதிலிற்கு ஏனையவர்களை நாடுகின்றார்.

நீதியுடனான தங்களின் போராட்டங்களில் இருந்து தப்புவதற்காக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்பும் ஊடக முதலாளிகள் அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உருவாக்குகின்றனர்- தயாரிக்கின்றனர்.

நெருக்கடியான காலத்தின் போது அவர் அமெரிக்காவிற்கு தப்பியோடிவிட்டு தனது குடும்பத்தவர்கள் செங்கம்பளத்தை விரித்தவேளையே அவர் இலங்கைக்கு திரும்பிவந்தார்.

சஜித் பிரேமதாசாவை நான் பார்த்ததில்லை- அவருடன் நான் பேசியதில்லை ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போதே அவர் வித்தியாசமானவராக தெரிகின்றார்.

sajith.jpg

அவர் 2000 மற்றும் 2001 இல் அனைத்து தடைகளையும் முறியடித்து அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2003 ஜனவரி 31 ம் திகதி சஜித் பிரேமதாச பதில் சுகாதார அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையை முன்னோக்கி  நகர்த்திக்கொண்டிருந்தவேளை கோத்தபாய ராஜபக்ச இலங்கையை கைவிட்டுவிட்டு  அமெரிக்க கொடிக்கு விசுவாம் வெளியிட்ட பின்னர் அமெரிக்க கனவில் திளைத்திருந்தார்.

நீதிக்காக போராடிய எங்களை போன்ற பலரை கைவிட்டுள்ள இந்த அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போதிலும்,அவர் தனது நடவடிக்கைகள் மூலம் தன்னை வித்தியாசமானவராக காண்பிப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.

கடந்த வருடம் ராஜபக்ச சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயன்ற சதி முயற்சியின் போது தனது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு அரசமைப்பை காப்பாற்ற சஜித்பிரேமதாச போராடியதை  நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அவர் தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்காக போராடி புதிய பாதையொன்றை வகுத்தார்.

அவர் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கவில்லை.அரசியல்வாதிகள் விலகியிருக்கும் நிலையை உருவாக்கி பொலிஸாரும் தொழில்சார் வல்லுனர்களும்  தங்கள்கடமைகளை நிறைவேற்றக்கூடிய சூழலை ஏற்படுத்த முனைகின்றார்.

எங்களால் இதனைமாத்திரம் கேட்க முடியும்.

நேர்மையான, அச்சமற்ற, அர்ப்பணிப்பு மிக்க அவரை போன்ற ஒருவர் மிகச்சிறந்த ஜனாதிபதியாக விளங்க முடியும் என எனது மனதில் நான் எண்ணுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் தங்கள் பணியின் போது கோத்தபாய ராஜபக்சவுடன் மோதிய பல துணிச்சலான காவல்துறை அதிகாரிகள் , சட்டவாளர்கள், சாட்சிகள் , நீதிபதிகள் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நான் கடுமையான அச்சம்கொண்டுள்ளேன்.

கோத்தபாய ராஜபக்சவினால் தீவிரவாதத்தை தூண்டி நாட்டை தீமூட்ட முடியும்.அதன் பின்னர் அதனை தன்னால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவிப்பார்.

பத்து வருடங்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச குறித்து எனது தந்தை நாட்டை எச்சரிக்க முயன்றார்.அதற்காக அவர் மரணத்தை தழுவினார்.

நாளை கோத்தபாயவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் தந்தை, சகோதரன்,தந்தை தாய் அல்லது கணவன் மனைவி- காணாமல் போகலாம்,அல்லது மரணிக்கலாம்.

அந்த நபர் உங்களை காப்பாற்றுவார் என நம்புவதன் ஆபத்து என்னவென்றால் அவரிடமிருந்து உங்களை யாராலும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. 

 

https://www.virakesari.lk/article/68600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ கூட தன்ட சொந்த பகையை வைச்சு கொண்டே எழுதுகிறா tw_lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.