Jump to content

கார்த்திகை 11, உலக போர்வீரர் நினைவு தினம்


Recommended Posts

இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

   
அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க  உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூரியது தெரிந்ததே.

முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.

Why might you want to consider wearing a poppy? Possibly to recognize the personal bravery, honour, loyalty and determination of veterans, Roy Green says.

Link to comment
Share on other sites

பெர்லின் சுவர் கட்டப்பட இரண்டாம் உலகப்போர் காரணமானது எப்படி?

பெர்லின் சுவர் விழுந்தது 20ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வாகும். கம்யூனிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சியை இது குறித்தது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை போலவே, கட்டப்பட்டதும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அங்கு கட்டி எழுப்பப்பட்டிருந்த வலுவான சுவர் பெர்லினை மட்டும் பிரிக்கவில்லை. 30 ஆண்டுகளாக இரண்டு வேறுபட்ட அரசியல்-சமூக-பொருளாதார  கொள்கைகளைப் பிரித்தது.  20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

எதற்காக இந்த பெர்லின் சுவர்?

இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து தோல்வியுற்ற ஜெர்மனியை இரண்டாக பிரிக்க முடிவு செய்தன.  பெர்லின் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பெர்லின் தலைநகரமாக இருந்ததால், தலைநகரத்தையும் பிரிக்க வேண்டிய சூழல் உண்டானது.

முதலாளித்துவ நாடுகள் ஜெர்மனியின்  மேற்கு பகுதியையும், கம்யூனிஸ்ட் நாடுகள் கிழக்கு பகுதியையும் கைப்பற்றின.

ஐரோப்பிய கண்டம் சர்வதேச அரசியல் சண்டைக்கான இடமானது. பனிப்போர் துவங்கியது.

மேற்கில், ஜெர்மனி பெடரல் குடியரசு உருவானது, கிழக்கில் ஜெர்மனி ஜனநாயக குடியரசு உருவாக்கப்பட்டது. 

இது சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாக இருந்தது. பெர்லின் முதலாளித்துவ நாடுகளின் செயல்பாட்டுகளின் மையமானது.

நாளடைவில், கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு இது பெரும் சிக்கலானது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  இந்த நகரத்தை உளவு பார்க்கும் தளமாக பயன்படுத்தின.

1949 மற்றும் 1961ம் ஆண்டுக்கு இடையில்,  மேற்கு ஜெர்மனியில் நல்ல வாய்ப்புகளைத் தேடி சுமார் 25 லட்சம் மக்கள் கிழக்கு ஜெர்மனிக்கு தப்பிச் சென்றனர்

இந்த சூழலை நிறுத்த, நகரத்திற்கு இடையே சுவர் எழுப்ப வேண்டுமென கம்யூனிஸ்ட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எனவே, 1961ம் ஆண்டு  ஆகஸ்ட் 13ம் நாள் இரவு,  ஒரு சில மணி நேரத்தில் பெர்லின் சுவர் கட்டியமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இந்த சுவர், வலிமைமிக்கதாக நின்றது. 3.5 மீட்டர் உயரத்தில், எஃகு கம்பிகள் கொண்டு கட்டப்பட்டது.

155 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மேற்கு பெர்லின் முழுவதும் இந்த சுவர் சூழ்ந்திருந்தது. கிழக்கு பெர்லினை சேர்ந்த 5000 பேர் தப்பித்து சென்றனர். தப்பிக்க முயன்ற பலர் எல்லையில் கைது செய்யப்பட்டனர். பலர் உயிரிழந்தனர்.

இந்த சுவர் பெர்லினை முப்பது ஆண்டுகள் பிரித்துவைத்தது.

இது கட்டப்பட்டதைப் போலவே பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  

https://www.bbc.com/tamil/global-50352301

 

Link to comment
Share on other sites

உலகப்போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரிட்டனில் உள்ள போர் நினைவுச்சின்னத்தின் மீது மலர்கள் தூவப்பட்டன.

பிரிட்டனின் கடற்கரை நகரமான டோவர் பகுதியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தின் மீது உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானத்தின் மூலம் பாப்பி மலர்கள் தூவப்பட்டன.

இரண்டு உலகப்போர்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரிட்டன் வீரர்கள் உயிரிழந்த நிலையில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அங்கீகரிப்பதற்கான சின்னமாக பாப்பி மலர்களை காமன்வெல்த் நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இதேபோல், உலகப் போரில் உயிழந்தவர்களுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ், பிரிட்டன் பிரதமர் போரி ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களும் பாப்பி மலர்களை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

https://www.polimernews.com/dnews/88260/உலகப்போரில்-உயிரிழந்தராணுவ-வீரர்கள்-மற்றும்பொதுமக்களுக்கு-அஞ்சலி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.