Jump to content

விசித்திரத்தின்மேல் விசித்திரம்: அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தும் கணவன்… விவாகரத்து கோரிய மனைவி; யாழில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் முன்னிலையாகினார். கணவன் சார்பில் சட்டத்தரணி செல்வி இராயப்புவின் அனுசரணையில், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய சட்டத்தரணி எஸ்.தியாகேந்திரன் முன்னிலையாகினார்.

இரு தரப்பு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, பகிரங்க மன்றத்தில் அந்தரங்க விவகாரங்கள் பேசப்படுவதால், விசாரணையை இடைநிறுத்தி, சமாதான அறையில் வழக்கை விசாரித்தார் நீதிவான்.

பெண் சார்பில் பிரிமனை பங்கு ஆரம்பத்தில் கோரப்பட்டபோதும், பின்னர் சமாதானமான விவகாரத்தை மட்டும் கோரினார். இரு தரப்பு வாதத்தின் பின்னர், விவாகரத்து வழங்கப்பட்டது.

https://www.pagetamil.com/85637/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாகதின்  முக்கிய அம்சமான உடல் உறவை ஒரு சாரார் (மனைவி) சகித்து கொள்ளமுடியாத நிலையை அடைந்திருக்கிறார் , அந்த உடல் உறவே மறு  சாராருக்கு  (கணவன்) வேண்டி இருப்பதால், இதில் விவாகம் மீட்கப்பட முடியாத நிலையை அடைந்திருக்கிறது என்பது இலகுவாக நிரூபணம் ஆகிறது.

இதில் நீதிபதியின் perception உம் முக்கியமானது, உணர்வுகளோடு வாதாடும் உள்ள வழக்கை, sensitive ஆக நடத்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையின் மனதை புரிந்துகொள்ளாத உறவு வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சின்ன வெங்காயம்

Ähnliches Foto

இதுக்குத்தான்... சின்ன வெங்காயம், முருங்கைக் காய்... போன்றவற்றை,
வீட்டில்,  அடிக்கடி சமைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.

சொந்தக் காசிலை.... சூனியம் வைத்து விட்டு... 
நீதிமன்றத்துக்கு எல்லாம் போக வேண்டி வந்திராது  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையலில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..☺️

Bhagyarajs_famous.jpg

Link to comment
Share on other sites

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

முன்புதான் வழி சொல்லுவது சிரமம் பாஞ்ச் ...... இப்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி கே.கே. எஸ் வீதியால் இரண்டெட்டு விசுக் விசுக்கென்று  எட்டி நடந்தால்  மல்லாகம் கோர்ட்தான்.......!  🏃‍♀️

பி.கு: அவசியம் போகத்தான் வேண்டுமா....அந்தாள் ஏதோ ஆடி அமாவாசை மாதிரி ஆண்டுக்கு ஒருக்காத்தானே வந்து போறார்.சும்மா வந்துட்டு போகட்டுமே......!   🤔

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

பி.கு: அவசியம் போகத்தான் வேண்டுமா....அந்தாள் ஏதோ ஆடி அமாவாசை மாதிரி ஆண்டுக்கு ஒருக்காத்தானே வந்து போறார்.சும்மா வந்துட்டு போகட்டுமே......!   🤔

சும்மா எங்கடை பண்பாட்டைக் கெடுக்கக்கூடாது சுவியரே! ஆடிக்கழைப்பது எங்கள் மரபுவழி. அதனை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை சொல்வதுதான் நல்வழி. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

மாரியத்தின்  பிள்ளை கணக்கு ..... உணவு கணக்கு .... கணவரின் வருகை கணக்கு 
ஒன்றுமே ஒன்றோடு ஒன்று பொருந்துது இல்லையே?
எனக்கு என்னமோ உள்ளூரில் ஒரு மைனர் குஞ்சு வாழ்ந்து வருகிறார் என்றுதான் தோன்றுகிறது. 

சரியான கல்வி அறிவு 
பொது அறிவு 
என்பது இல்லாமையால்  காமம்   பெண்  வாழ்க்கை என்பது பல ஆண்களால் புரியப்படாமலே போய்விடுகிறது.

நீங்கள் ஒரு நாளைக்கு 3 தரம் உடல் உறவு வைத்து காணும் இன்பத்தைவிட 
300 மடங்கு மேலான இன்பத்தை ஒரு வாரத்தில் 3 முறை வைத்தே காணலாம்.

இயந்திரதனத்துக்கும் இச்சைக்கு உள்ள இடைவெளி தெரியாமல் ஒரு சமூதாயம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

12 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

 

12 hours ago, புங்கையூரன் said:

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

 

23 minutes ago, tulpen said:

 

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

வந்துட்டான்யா வந்துட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

 

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

அதைத்தானே இப்ப எங்கடையள் செய்ய வெளிக்கிட்டினம். ஆறுமாதம் ஒரு வரிசமெண்டு ஒண்டாய் இருந்து யோனிப்பொருத்தம் பாப்பினம். சரி வரேல்லையெண்டால்  வெட்டிவிட்டுட்டு  வேறை ஒராளோடை யோனிப்பொருத்தம் பாத்துக்கொண்டு திரிவினம்.😜

யோனிப்பொருத்தம் பாத்து செய்யிற கலியாணங்கள் விவாகரத்து வரைக்கும் வாறது வலு குறைவு.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதைத்தானே இப்ப எங்கடையள் செய்ய வெளிக்கிட்டினம். ஆறுமாதம் ஒரு வரிசமெண்டு ஒண்டாய் இருந்து யோனிப்பொருத்தம் பாப்பினம். சரி வரேல்லையெண்டால்  வெட்டிவிட்டுட்டு  வேறை ஒராளோடை யோனிப்பொருத்தம் பாத்துக்கொண்டு திரிவினம்.😜

யோனிப்பொருத்தம் பாத்து செய்யிற கலியாணங்கள் விவாகரத்து வரைக்கும் வாறது வலு குறைவு.:cool:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள்?

50-100 வருடம் முன்பு யோனி பொருத்தம் பார்க்காத கலியாணங்கள் விவாகாரத்து ஆக்கிக்கொன்டு இருந்தனவா? 

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள்?

50-100 வருடம் முன்பு யோனி பொருத்தம் பார்க்காத கலியாணங்கள் விவாகாரத்து ஆக்கிக்கொன்டு இருந்தனவா?

 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காதல் உள்ளது. 

காதல் தமிழரின்  மரபு

பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'காதல் வாழ்வை', களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு 'அவர்களின் இல்லற வாழ்வு', கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை சார்ந்த நிகழ்வுகளும், அதன் கதாப்பாத்திரங்களும் அகப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.