Jump to content

பேரழிவைத் தவிர்க்க: ஜூட் பிரகாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று.
 
சந்தோஷத்தை சத்தமாக கொண்டாடமல் அடக்கி வாசித்து விட்டு, அவலத்தை அகிலமெல்லாம் கேட்கத் தக்கத்தாக அழுது ஒப்பாரி வைப்பதும் மற்றுமொரு கெட்ட பழக்கம். எங்களுக்கு எந்த சின்ன நல்லதும் நடந்து விடக் கூடாது, நடந்தால் தப்பாகி விடும் என்ன மனநிலையும் அதில் அடக்கம்.
 
2015 தேர்தலில் மைத்ரி-ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று அலட்டித் திரியும் நாங்கள், மறுவளமாக மகிந்த ஆட்சி பீடமேறியிருந்தால் அரங்கேறியிருக்கக் கூடிய அவலங்களைப் பற்றி கதைக்க மாட்டோம். 
 
உடைந்து போன இதயங்களின் உடன்படிக்கைகள் பற்றியும், நாங்கள் போட்ட உப்பை மறந்தவர்கள் பற்றியும் பேசும் எங்கள் நாக்குகள், 2015 தேர்தலை ஒட்டிய காலங்களில் வலுப்பெறத் தொடங்கியிருந்த மகிந்தவின் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியின் கொடூர கரங்களைப் பற்றி பேசவே பயப்படும்.
 
TNAயுடனான பேச்சுவார்த்தைகளை ஒரு தலைப்பட்சமாக முறித்து, முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களையும் மாவீரர் தின நினைவேந்தலையும் தடுத்து, முஸ்லிம்களிற்கு எதிராக பேருவளையில் இனக்கலவரம் நிகழ்த்தி, சர்வதேசத்தின் நியாயத்திற்கான குரல்களையும் புறந்தள்ளி, அரசியலமைப்பை தமக்கு சாதகமாக மாற்றி, இன்னும் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தங்கள் குடும்பத்தை எந்தக் கொம்பனாலும் ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்ற இறுமாப்பில், தேர்தலிற்கு இரண்டு வருடங்கள் இருக்கத் தக்கதாகவே, தேர்தலை சந்தித்த மகிந்தவின் இருண்ட காலம், 2015 தேர்தலில் அவர்கள் வென்றிருந்தால் இன்றும் தொடர்ந்து கொண்டிருந்திருக்கும்.
 
2015 தேர்தலில் மகிந்த வென்றிருந்தால், எங்கள் மீதான அடக்குமுறையும் ஒடுக்குதலும் இன்னும் வலுவடைந்திருக்கும். அவர்களது தோல்வி, மூச்சு விட எங்களுக்கு கிடைத்த அவகாசமாகவும் பார்க்கப்பட வேண்டும். அதற்கும் மேலாக அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அழிவிற்குள்ளான இனத்தின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதற்கான வாய்ப்பாகவும் நோக்கப்பட வேண்டும். 
 
மூச்சு விட கிடைத்த அந்த ஜந்நாண்டுகளில் விடுவிக்கப்படவே படாது என்று சொல்லப்பட்ட சம்பூர், மயிலிட்டி துறைமுகம் உட்பட பல காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நூறுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வெளியே வந்திருக்கிறார்கள், அதிகாரப் பரவலாகத்தின் அடிப்படையிலான அரசியல் யாப்பின் நகல் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதார செயற்பாடுகள் முளை விடத் தொடங்கியிருக்கின்றன.
 
நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?
 
மகிந்த தோற்று, ரணில் வென்று ஆட்சி நடாத்திய அதே காலப்குதியில், நாங்கள் நடாத்திய வட மாகாண சபையின் சீத்துவம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாராளுமன்றம் சென்றவர்கள் அரசியல் தீர்வை பற்றிப் பேச, வட மாகாண சபை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தீர்க்கும் என்று பார்த்தால், வினைத்தினற்ற நிர்வாகத்தை கொண்டு நடாத்திக் காட்டி தமிழினத்திற்கே அவப்பெயர் தேடித்தந்து விட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
 
மழை விட்டும் தூறல் நிற்காத மாதிரி, வட மாகாண சபையின் ஆட்சி முடிந்தும், தனது அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாட்டால் இன்றும் மகிந்த தரப்பிற்கு மேலும் மேலும் சிங்கள இனவாத வாக்குகளை அள்ளிச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து, எங்களின் அழிவிற்கு விக்னேஸ்வரன் அடித்தளமிட்டுக் கொண்டிருக்கின்றார். 
 
2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடித்தது தவறு என்ற உணர்வு எங்கள் மனங்களில் உறங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவை வெளிப்படையாக விமர்சிக்க எங்களுக்கு மனம் வராது. தங்கள் உயிரைக் கொடுத்து எங்களுக்காக போராடியவர்கள் செய்ததில் ஏதாவது நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கை எந்த எதிர்மறையான விமர்சனத்தையும் முறியடித்துவிடும்.
 
“பிரேமதாசவை ஏன் கொன்டவங்கள் என்று தெரியேல்ல.. “ என்ற வினாவும் அதே போலத் தான். ஆழ் மனம் கேட்கும், நண்பர்களுக்குள் கதைபடும், ஆனால் பகிரங்க வெளியில் விமர்சிக்கப்படாது. விடுதலைப் புலிகளை ஆழமாக நேசித்த மக்களின் மனப்போக்கு அது. அப்பா பிரேமதாச தீர்க்காமல் போன பிரச்சினையை மகன் பிரேமதாச தீர்த்து வைக்க மாட்டாரா என்ற ஆதங்கமும் எதிர்பார்ப்பும் மெல்ல மெல்ல எழத்தான் செய்கிறது. 
 
தேர்தல் விஞ்ஞாபனங்களும் வாக்குறுதிகளும் ஆட்சி பீடம் ஏறிய மறு நாளே மறக்கப்பட்டு விடும் என்பது நாமனைவரும் அறிந்த வரலாற்றுப் பாடம். அதே வரலாறே, கோத்தா வந்தால் எப்படி ஆட்சி நடாத்துவார், ராஜபக்‌ஷ குடும்பம் எப்படி ஆட்டம் போடும் என்பதற்கான சான்றுகளையும் தந்து விட்டு சென்றிருக்கிறது. 
 
கோத்தா வந்தால், அவலம் வரும், அவலம் வந்தால் சனம் அழும், சனம் அழுதால் சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் என்று தவறான கணக்கு போட்டு அவல அரசியல் நடாத்த முனையும் தரப்புக்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு சார்பான அறிவிப்பை எதிர்த்து நிற்கின்றன. 
 
பகிஷ்கரிப்பு கோஷமும், எந்த சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு மக்களை கோர முடியாது என்ற பிரகடனமும், மக்களிற்கு அவலத்தை கொடுத்து தாங்கள் அரசியல் பிழைப்பு நடாத்த போடப்பட்ட திட்டங்களின் வெளிப்பாடாயாகும்.
 
சஜித் வந்தால் ஈழம் தரமாட்டார் ஆனால் எல்லாம் தருவார் என்பதல்ல. சஜித்தின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளையும் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவர்கள் தந்த அவலங்கள் மகிந்த தரப்பு தந்த அவலங்களை விட எத்தனையோ மடங்கு குறைவானது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
“இது என்னடா மோட்டுத் தனமா இருக்கு, அவனும் அவலம் தாறான் இவனும் அவலம் தாறான், அப்ப ஏன் அவனுக்கு போடணும்” என்று கேட்டால், எவனுக்கும் அவலத்தை கொடுத்து எங்களது அவலத்தை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் நாங்கள் இருக்கும் பொழுது, எங்களிற்கு எவனொருவன் குறைவான அவலத்தை தருவான் என்று எதிர்பார்க்கிறோமோ அவனுக்கே வாக்குகளை வழங்குவதே நல்லது என்பது பதிலாகும். 
 
இது சிங்களத்தின் தேர்தல்.. நாங்கள் வாக்களிப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை.. நாங்க வேற நாடுடா அவங்க வேறு நாடுடா” என்று பறையும் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். கொழும்பில் நடக்கும் ஆட்சி வடக்கிலும் கிழக்கிலும் வாழும் எங்களின் தலைவிதியை நிர்ணயிக்கவல்லது என்றால் அந்த ஆட்சியை தீர்மானிப்பதில் நாங்களும் பங்குபற்றியே ஆகவேண்டும். எங்களது ஜனநாயக கடமையை நாங்கள் சரியாக செய்வோம். நாங்கள் சரியானதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் எங்களுக்கும் எதிர்காலத்தில் சரியானதே நடக்கும். 
 
2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவனம் முழுவதும் அரசியல் தீர்வை பெறுவதிலேயே இருந்ததால், வடக்கு கிழக்கின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்தப்படாதது ஒரு குறைபாடே.
 
 கடந்தாண்டு இறுதியில் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக கிடைத்த கணிசமானளவு நிதியையும், எங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வாழ்வாதார முயற்சிகளில் முதலீடு செய்வதற்கான சரியான திட்டங்களை குறுகிய காலத்தில் வகுப்பதற்கான வளங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இல்லாமல் போனதால் தான், இலகுவில் ஒப்பேற்றக் கூடிய வீதிகள் புனரமைப்பிலும் பாடசாலைக் கட்டிடங்கள் கட்டுவதிலும் செலவிடப்பட வேண்டியதாகி விட்டது போலிருக்கிறது.
 
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசியல் யாப்பு முயற்சிகளைத் தொடர சஜித் வாக்குறுதியளித்திருப்பதாலும், வடக்கையும் கிழக்கையும் மீளக்கட்டியமைக்க சர்வதேச உதவ வழங்கும் நாடுகளின் மாநாட்டைக் கூட்டவும் சஜித் வாக்குறுதியளித்திருப்பதாலும், இரண்டையும் அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், எங்களின் கவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் சமூக பொருளாதார அபிவிருத்தி நோக்கியும் நகர வேண்டும்.
 
புலம் பெயர் ஈழத் தமிழர்கள், தமிழகம், சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் சமூகங்களை ஒன்றிணைத்து, யுத்தத்தால் சிதைந்து போன தமிழர் தாயகப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்த நாங்கள் முனைய வேண்டும். 
 
பின்னடைந்து போயுள்ள எங்கள் கல்வி தரத்தை முன்னேற்றுதல், எங்களூர் விவசாயிகளதும் மீனவர்களதும் அறுவடைகளை சந்தைப்படுத்துதல், தொழில் வாய்ப்புக்களை வழங்கவல்ல சிறிய தொழில்முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று முனைகளில் எங்கள் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், இழந்து போன எங்கள் மண்ணின் மாட்சிமை நிட்சயமாக மீண்டும் மலரும். 
 
எங்கள் மண்ணில் மாட்சிமை மீண்டும் மலர வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்றால் மகிந்தவின் மொட்டு மலரவே கூடாது. கோத்தாவும் சஜித்தும் பேரினவாதப் பிசாசுகள் தான், ஒன்று நாங்கள் நன்கு அறிந்த, எங்கள் இனத்தை கருவறுத்த பூதம், மற்றது வெள்ளையும் சொள்ளையுமாக வந்து நின்று காதல் பாட்டு பாடும் குட்டிப் பிசாசு.
 
பேரழிவுகளைத் தந்த, நாங்கள் அறிந்த பூதம் வேண்டுமா இல்லை குறையான தீமைகளைத் தரவல்ல குட்டிப் பிசாசு வேணுமா என்ற தேர்வுகளே நம்முன் வைக்கப்பட்டுள்ளன. 
 
தேர்வுகளே வேண்டாம் என்று ஓடி ஒளிந்து பேரழிவுகளை தந்த, மீண்டும் தரவல்ல, பூதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்காமல், தொடர்ந்து நாங்கள் மூச்சு விடவும், நமக்காக மரணித்தவர்களிற்கு விளக்கு கொளுத்தவும், நம்மை நாமே மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பை நமதாக்கவும் குட்டிப் பிசாசான சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதே உசிதமானது. 
Link to comment
Share on other sites

Quote

நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?

சுமந்திரன் சொன்னதை பொறுக்கி அடிக்கிறாரோ ஜூட் பிரகாஸ்.
 

Quote

 

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவனம் முழுவதும் அரசியல் தீர்வை பெறுவதிலேயே இருந்ததால், வடக்கு கிழக்கின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்தப்படாதது ஒரு குறைபாடே.


 

மேலே விக்கினேஸ்வரனை விமர்சித்த அளவுக்கு கூட்டமைப்பை விமர்சிக்க இவருக்கு மனம் வராததால் கூட்டமைப்பின் நெருங்கிய சகாவா ஜூட் பிரகாஸ்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மேலே விக்கினேஸ்வரனை விமர்சித்த அளவுக்கு கூட்டமைப்பை விமர்சிக்க இவருக்கு மனம் வராததால் கூட்டமைப்பின் நெருங்கிய சகாவா ஜூட் பிரகாஸ்??

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ...
மகிந்த கால அவலங்களை மறக்காமல் பட்டியல் போடும் பரகாஸ் 
முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஈஸ்டர்  பயங்கரவாத தாக்குதலையும் அது யாருடைய ஆட்ச்சிக்காலத்தில் நடந்தது என்பதையும் வசதியாக மறந்து விட்டார்...மறந்து விட்டாரா மறைத்து விட்டாரா  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.