Jump to content

பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.

November 10, 2019

tmk1.png?zoom=3&resize=335%2C112

ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான சந்திப்புகளுக்கான நேர ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை திரு.சுமந்திரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். தபால் மூல வாக்கெடுப்புக்கு மிகக்குறுகிய காலமே இருந்த காரணத்தால் மேற்படி பணிகள் இரண்டும் விரைவாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும் துரதிஷ;ட வசமாக குறித்த பணிகள் உரிய காலத்தில் நடைபெற எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலம் கடத்துவதிலேயே சிலர் கண்ணாக இருந்தார்கள். ஒக்டோபர் 28ந் திகதி ஐந்து கட்சிகளும் கூடிய போது திரு.மாவை சேனாதிராசா அவர்கள் 30ந் திகதிக்கு ஒத்தி வைக்கக்கோரி 30ந் திகதிக்கு ஐந்து கட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒக்டோபர் 28ந் திகதி வரை 13 கோரிக்கைகளை ஆங்கில மொழிக்கு மாற்றக் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

காலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் அன்றிருந்த நிலையையும் தபால்மூல வாக்களிப்பு தொடங்குவதற்கு ஒரு சில தினங்களே இருந்த நிலையையும் கருத்திற்கொண்டு உடனே 13 தமிழ் மூல கோரிக்கைகளை ஆங்கிலத்திற்குத் தாமே மொழிபெயர்த்து மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேரடியாகவே தமது கட்சி சார்ந்த ஒருவரால் கையளித்து குறித்த 13 கோரிக்கைகளையும் பற்றி நேரடியாக வேட்பாளர்களுடன் பேச சந்திப்பை வேண்டியிருந்தார். இருவர் 13 கோரிக்கைகளையும் நிராகரித்து பத்திரிகையில் செய்தி அனுப்பினர்.

மூன்றாமவர் எதுவுமே பேசாதிருந்துவிட்டு பின்னர் 13 கோரிக்கைகளையும் நிராகரிப்பதாகப் பத்திரிகை மூலம் அறிவித்தார். இந்த நிலையில்த் தான் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு சில வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் முயற்சியிலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் துரதிஷ;டவசமானது. எமது கட்சி எல்லா சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றே கடுமையாக உழைத்து வந்தது. இதற்கு ஆதாரமாக திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னைத் தனியாகச் சந்திக்கும்படி இரு தடவைகள் அழைப்பு விடுத்த போதும் கூட எமது கட்சியின் செயலாளர் நாயகம் அதனை நிராகரித்ததுடன் 5 கட்சிகளையும் அழைத்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்படி அவரிடம் கோரியிருந்தார். அத்துடன் பகிரங்கமாக வெளியிட்;ட அவரின் அறிக்கையிலும் எக்காரணம் கொண்டும் தனியாக சந்திக்கப்போவதில்லை எனவும் 5 கட்சிகளும் இணைந்தே சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்துவோம் எனவும் எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.

மேலும் 5 கட்சிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னருங் கூட சில கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடந்த சில அரச, அரசியல் கூட்டங்களில் பங்குபற்றியதும் ஐ.தே.க வேட்பாளரின் தேர்தல் பரப்புரைத் துண்டுப்பிரசுரங்களை ஏந்தியிருந்ததும் தனிப்பட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த பின்னணியில்த்தான் திரு.சுமந்திரன் அவர்கள் தானாகவே வலியவந்து பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்களை செய்யாதிருந்தமை பார்க்கப்பட வேண்டும்.

எது எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணியின் அறிக்கையைப் பல்கலைக்கழக மாணவர்களோடு பகிர முடியாமல் போனதற்குக் காரணம் நேரமின்மையே. அவ்வாறான இக்கட்டுக்குள் நாம் தள்ளப்பட்டோம் என்பதை சூழலை ஒட்டி யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.

மேலும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பக்கச்சார்பற்ற முயற்சி மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் கூட்டணி பாராட்டுகின்றது. அவர்கள் முயற்சி காலத்தின் தேவை கருதி எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எமது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.

ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
யாழ்ப்பாணம்

 

http://globaltamilnews.net/2019/133007/

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் ஐயா படிச்ச, தெளிந்த சிந்தனை உடைய ஆள் என்று நினைச்சுக் கொண்டிருந்த எல்லாருக்கும் பேரிடியாக இருந்தது மாணவர்கள் செய்த முயற்சியை பலவீனப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கை.

முந்திரிக்கொட்டை மாதிரி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டு ஐயா ஒற்றுமையை சிதறிடித்தமை வரலாற்றில் இடம்பெற்றே ஆகும். ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் விக்னேஸ்வரன் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறை தெளிவுபடுத்தியிருந்தனர்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்ற ஆட்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றி பேரினவாதிகளுக்கு முட்டாட்களாக (முட்டு கொடுக்கும் ஆட்கள்), அடிமைகளாக சேவகம் செய்யும் சாக்கடை அரசியலை பல வருடங்களாக செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக காலத்துக்கு காலம் காலை வாரும், ஒற்றுமையைக் குலைக்கும் சாக்கடை அரசியலிவாதிகளில் விக்னேஸ்வரனும் ஒருவர் என்று அவர் இந்த அறிக்கையில் தன்னை நியாயப்படுத்தியதன் மூலம் உறுதிசெய்துள்ளார்.

அவரது நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ள அவரது விக்னேஸ்வரனின் ஈகோ இடம்கொடுக்காது என்று அவரது இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வாங்கள். விக்னேஸ்வரனும் அப்பிடி ஒரு தவறை செய்துபோட்டாரோ என்று நாங்க எல்லாம் யோசிச்ச வேளையில, இல்ல இல்ல நான் மிக நல்லா திட்டமிட்டுத் தான் காலை வாரினனான் என்று இந்த அறிக்கையில விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார்.

பெரிய மனிதர்கள் தெரியாமல் தவறு செய்திருந்தால் அதற்காக வருந்துவதும், தவறுகளை திருத்த முயற்சிகளை எடுப்பதுவும் அவர்களின் பண்பு. விக்னேஸ்வரனிடம் அந்த உயர்ந்த பண்பு அறவே இல்லை என்று தனது தவறை நியாப்படுத்தியதன் மூலம் விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார்.

அவர் மட்டுமில்லை அவர்றை கொள்கை பரப்பு செயலாளரான அருந்தவபாலன் என்ற சந்தர்ப்பவாதியும் நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் கூறி தன்னிடமும் எந்த நல்ல பண்புகளும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார். உண்மைகளை மறைக்கும் இவர்களது ஏமாற்றல் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மீது மக்கள் வைச்சிருந்த மதிப்பு, மரியாதை குறைஞ்சு கொண்டே போகுது.

இதில பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் விக்னேஸ்வரன் ஐயா தான்.  

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

காலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன.

இப்பொழுதும் யாருக்கும் வாக்களிக்குமாறு மக்களிடம் கோர முடியாது என மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை தமிழ் மக்கள் கூட்டணி தட்டிக் கழித்து விட்டு தானே உள்ளது.

இதை விட கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்கது. என்ன தான் அவர்கள் முன்கூட்டியே சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களை கோர தீர்மானித்திருந்தாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

 

இதில பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் விக்னேஸ்வரன் ஐயா தான்

உண்மைதான். அத்துடன் 13 அம்சக்கோரிக்கைகளை தயாரித்து அவற்றை வேட்பாளர்களுக்கு கையளிக்குமாறு சுமந்திரனிடம் ஒப்படைத்த பேயர்களாகிய பல்கலைக்கழக மாணவர்களும்,  இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

https://yarl.com/forum3/topic/234041-வழிஞ்சோடி-வாக்குகள்-நிலாந்தன்/

Link to comment
Share on other sites

மாணவர்களின் முயற்சி காலத்தின் கடமை. பாராட்டுக்கள். 

கட்சிகள், மக்களின் நலன்களை விடவும் தமது அரசியல் எதிர்காலங்களின் மீது மட்டுமே குறியாக இருக்கும்வரை இல்லை மக்களால் நிராகரிக்கப்படும் வரை இவர்கள் மாறப்போவதும் இல்லை. 

ஆனால், அந்த மாற்றம் ஒருநாள் வந்தே தீரும்,    

Link to comment
Share on other sites

22 hours ago, Gowin said:

அவர் மட்டுமில்லை அவர்றை கொள்கை பரப்பு செயலாளரான அருந்தவபாலன் என்ற சந்தர்ப்பவாதியும் நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் கூறி தன்னிடமும் எந்த நல்ல பண்புகளும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்.

அருந்தவபாலன் மாவையோட ஒரு டீல் செய்திருக்கார் என்டு ஆட்கள் பரவலா சொல்லீனம். விக்கியரை வைச்சு ஏதாவது ஒருதேர்தல்ல வென்று போட்டு, பிறகு எங்க கூட வருமானம் கிடைக்குதோ அங்க தாவுற திட்டத்தில ஆள் இருக்கிறாராம்!

அருந்தவபாலன் எப்பிடியாவது விக்கியரின் தமிழ் மக்கள் கூட்டணியை வலுவிழக்கச் செய்வன் என்டு ஒற்றைக்காலில் நிக்கிறார் போலத் தெரிகிறது.    

 

இதிலையும் விக்கியர் நிறைய்ய பாடம் படிக்க வேண்டி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையும் தமிழரும் என்பது எப்பவுமே ஒத்துவராதவை.  அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்.. இன்று நாம் தமிழீழத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்போமே. 

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

ஒற்றுமையும் தமிழரும் என்பது எப்பவுமே ஒத்துவராதவை.  அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்.. இன்று நாம் தமிழீழத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்போமே. 

நீங்க சொன்னமாதிரி கணிசமான தமிழர்டை ஜீன்ல ஒரு பெருங்குறைபாடு இருக்குது!   

நிதானமா எழுதிவைச்சு வாசிக்கும் விக்கியரே மிக நிதானமா ஒற்றுமையைக் குலைப்பதற்கான சூழ்நிலையை தேவையற்ற அறிக்கைகளால் ஏற்படுத்திவிட்டு இப்ப தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் தான் என்டு ஒற்றைக்காலில நிக்கிறார் விக்கியர்.

 

 

Link to comment
Share on other sites

விக்கி ஐயா ஒரு உயர் பதவி வகித்த படித்த பண்புள்ளவர். இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அவருக்கு அரசியல் சரிவராது. இவரை ஒரு பதவியில் அமர்த்தி மக்களுக்கு எதாவது செய்வார் எண்டு எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் அவரோ கேள்வி பதில் எண்டு எழுதிக்கொண்டிருந்தாரே தவிர தனது கடமைகளை செய்யவில்லை. அதிகார துஸ்பிரயோகம் , பிரச்சனைகளை உருவாக்கினார் தவிர வேறு ஒன்றுமே சொல்லும்படியாக செய்யவில்லை.

பிள்ளையான் கிழக்கிலே முதலமைச்சராக இருந்த போது தமிழ் மக்களுக்கு செய்த சேவையில் பத்து வீதமாவது செய்யவில்லை. பிள்ளையானை நல்லவன் என்றோ , வக்காலத்து வாங்கவோ இதை எழுதவில்லை. அவன் படியாதவனாக இருந்தபோதும் அதிகாரிகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு தன்னால் முடிந்தவரியும் சேவை செய்தான். இங்கு எப்போதும் குழப்படிகளும் , அடிதடியும் சண்டையும்தான் நடந்தது.

இறுதியாக விக்கி அவர்களுக்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து அவரது தீர்ப்பு பிழை என்று கூறியது. இது எல்லாம் இவருக்கு தேவையா?

இப்போது அறிக்கைவிட்டு என்ன பிரயோசனம். அதட்கு முதலே பல்கலைக்கழக மாணவர்கள் இவருக்கு கண்டன அறிக்கை விட்டிருக்கிறார்கள். இவர் எங்களுக்கு தெளிவான பதிலை தர வேண்டும். உங்களுக்கு வாக்களித்தால் சமஷடி அல்லது ஈழம் பெற்று தருவீர்களா? அதட்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அதட்கு இன்னுமொரு ஐம்பது வருடம் பொறுத்திருக்க வேண்டுமா? நாட்டின் கள நிவாரங்களை அறிந்தவரையில் இது எல்லாம் இலவு காத்த கிளியின் கதைதான். வடக்கு கிழக்கையே இணைக்க முடியாத நிலைமை. பாவம் மக்கள். எவ்வளவு காலத்துக்குத்தான் ஏமாறப்போகிறார்களோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

On 11/11/2019 at 4:55 PM, கிருபன் said:

உண்மைதான். அத்துடன் 13 அம்சக்கோரிக்கைகளை தயாரித்து அவற்றை வேட்பாளர்களுக்கு கையளிக்குமாறு சுமந்திரனிடம் ஒப்படைத்த பேயர்களாகிய பல்கலைக்கழக மாணவர்களும்,  இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதை முடிவு செய்தது பல்கலைக்கழக மாணவர்கள் இல்லையாம். 5 அரசியல் கட்சிகளும் தானாம். பல்கலைக்கழக மாணவர்கள் 5 கட்சிகள் எடுத்த எந்த முடிவிலும் தலையிடவில்லையாம். மாணவர்கள் சிலர் என்னிடம் கூறியது.

மேலும் நீங்க சொன்னபடி விக்கியரோட தமிழ் மக்களும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

Link to comment
Share on other sites

ஊடகவியலாளர்களைக் கண்டால் மாரித்தவக்கை போலக் கத்தியும், ஊடக அறிக்கைகளை விட்டும் சிற்றின்பம் காணும்  வழக்கத்தை உடைய விக்கினேஸ்வரன் தனது கேவலமான மறுபக்கத்தை அவ்வப்போது காட்டத் தவறுவதில்லை.

இம்முறை ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தனது ஊடக அறிக்கைப் பைத்தியத்தின் மூலம் குலைத்து ஒரு நம்பிக்கைத் துரோகியாக விக்கினேஸ்வரன் தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.  

இது அவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியே  தீரும். அவரது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை யாருமே ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நம்பிக்கைத் துரோகியாக தன்னை வெளிப்படுத்தியுள்ள விக்கினேஸ்வரன் தனது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை நம்பி மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே முடியும்!

Link to comment
Share on other sites

On 11/11/2019 at 4:55 PM, கிருபன் said:

இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

சபாஷ்
சரியா சொன்னீங்க அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.