Jump to content

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்


Recommended Posts

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். 

vlcsnap-1914-08-09-17h28m02s438.png

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். 

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள். ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்த அவர், எந்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது எனவும் வினாவெழுப்பினார். 

எம்மைப் பொறுத்தவரையில் இரு அரசியல் தலைவைர்களும் தராசு போன்றவர்கள். யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68745

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார்

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள்

இந்த நிலை வர பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானதாக தெரிவது தமிழர் அரசியல் தலைமைகள். இன்றும் கூட அந்த துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.  

 

2 hours ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த வரிகள் என்னை, கையாலாகாத ஒரு சக உறவாக,  வெட்கி வேதனைப்படுத்திய வரிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

உங்க‌ளின் வலியும் வேத‌னையும் புரிகிற‌து கிருப‌ன் அண்ணா 😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ரா , த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு , பெரிய‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி அண்ணா ,

வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்தை இப்போது உள்ள‌ சூழ் நிலையில் விரும்ப‌ வில்லை , இளைஞ‌ர்க‌ள் அவ‌ங்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி த‌லைவ‌ரை போராளிக‌ளை நெஞ்சில் சும‌ந்து கொண்டு வாழும் இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் , 

ஒரு உண்மையை சொல்லுறேன் ம‌ன‌ வேத‌னையுட‌ன் , எங்க‌ட‌ ஊரில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நூற்றுக்கு நூறு புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான், எங்க‌ட‌ ஊரை புலியின் கோட்டை என்று தான் சொல்லுவோம் , அந்த‌ ஊரில் இப்போது ட‌க்கிள‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு கூடிட்டு போகுது , இது எங்கை போய் முடியுமோ தெரியாது /

எம‌க்காக‌ போராடுகிறோம் என்று சொன்ன‌ ஆட்க‌ள் ப‌ல‌ர் சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கின‌ம் அண்ணா ,  
இந்த‌ 10வ‌ருட‌ம் எம்ம‌வ‌ர்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ச‌ரி த‌மிழீழ‌த்திலும் ச‌ரி பெரிசா ஒன்றையும் சாதிச்சு கிழிக்க‌ல‌ , சும்மா கால‌த்தை ஓட்டின‌து தான் மிச்ச‌ம் , இன்னும் 10 வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்த‌ நில‌மை இத‌ விட‌ மோச‌மாய் இருக்கும் அண்ணா ,

எவ‌ள‌வு உயிர் தியாக‌ம் , எப்ப‌டி எல்லாம் எம் போராட்ட‌த்துக்கு க‌டின‌மாய் பாடு ப‌ட்டோம் , எல்லாம் க‌ண் இமைக்கும் நொடியில் அழிந்து போய் விட்ட‌து , 

யாழில் ம‌ற்றும் முக‌ நூலில் கிறுக்கி நாம் ஒன்றையும் சாதிக்க‌ முடியாது அண்ணா , 
நாடு போர‌ போக்கை பார்த்த‌ மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீனாய் போயிம்மோ என்ற‌ ம‌ன‌ வேத‌னை தான் வ‌ருது 😐/

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

வெளியில் இவ்வாறு பேச வேண்டிய தேவை இருக்கலாம். 

ஆனால், வாக்கை வேறு யாருக்கும் கூட போடலாம், அதுதான் சனநாயகத்தில் உள்ள ஒரு அதிசயம். 

Link to comment
Share on other sites

இவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா? ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே? கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா?

யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

இவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா? ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே? கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா?

யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

கடந்தாலும் உண்மையான நிலைமை!

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣

கோத்தபாயா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்குப் பிச்சை எடுபவர்கள் மனோநிலையும் "Masochism" மனோநிலைதான்!

Link to comment
Share on other sites

கோத்தா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம், இனவழிப்பு என கூறும் எதிர்த்தரப்பு. சஜித் ஆட்சிக்கு வந்தால் அதி உச்ச அரசியல் பகிர்வு என கூறும் கூட்டமைப்பு. 

உண்மை, இரண்டிற்கும் நடுவே தான் இருக்கும்.  

கோத்தா வந்தால் ,மீண்டும் வெள்ளை வான் கலாச்சாரம் தலை தூக்காது. சஜித் வந்தால் அதி உச்ச அதிகார பகிவும் இல்லை. ஆனால், யார் வந்தாலும் இனவழிப்பு தொடரும். 

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

Link to comment
Share on other sites

6 hours ago, Lara said:

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

முன்னால் போராளிகளுக்கிடையில் கூட இப்படி இரு வேறு கட்சிகளா? அவர்களிடையேயே ஒற்றுமை இல்லையெனில் வேறு எவரிடம் அதை எதிர்பார்க்க முடியும்? கிருபன் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

 

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக அமையும் என்றால் அந்த மகேசனும் பல தடவைகள் தவறிழைத்தவனாகவே ஆகின்றான். ஏனெனில் மக்களின் தீர்ப்பால் உலகில் பல சர்வாதிகாரிகளும், அழிவை ஏற்படுத்துகின்றவர்களும் உருவானதாகவே வரலாறு சொல்கின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக அமையும் என்றால் அந்த மகேசனும் பல தடவைகள் தவறிழைத்தவனாகவே ஆகின்றான். ஏனெனில் மக்களின் தீர்ப்பால் உலகில் பல சர்வாதிகாரிகளும், அழிவை ஏற்படுத்துகின்றவர்களும் உருவானதாகவே வரலாறு சொல்கின்றது.

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

Link to comment
Share on other sites

24 minutes ago, ampanai said:

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? கனடா அரசியலமைப்பில் பிரிவினை கோருவது தவறல்ல என இருக்கும் போது அப்படி தேர்தலில் பிரிவினைக்காக போட்டியிட முடியும். ஆனால் இலங்கை / இந்திய அரசியலமைப்பில் அவ்வாறு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு கொடுப்பதென்பதும் வாக்களிப்பதென்பதும் அவரவர் உரிமை  கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு எனும் போது இவர்களும் ஆவர்களுக்கு கொடுக்கத்தானா வேண்டும் 

யார் வென்றாலும் நமக்கு இருபக்கமும் அடிதான் அந்த அடி வேண்டினவனுக்கும் அதில் இருந்து விடுபட்டவனுக்குமே அதன் வலி புரியும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். 

ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.