Jump to content

“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்


Recommended Posts

“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம்.

download.png

We fear Gotabaya

கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவரது காரணம். அவருக்குப் பேசத் தெரியாது. கடினமான கேள்விகளால் அவர் இலகுவாகக் கொதித்தெழுபவர். அண்ணன் மஹிந்த மாதிரி அவர் இனிக்கப் பேசுபவர் அல்ல. இவ்வளவு காலமும் கட்டியெழுப்பிய அவரது பிம்பத்தின் நிஜம் தெரிந்துவிடக்கூடாது; தேர்தல் முடியும் மட்டும் அவர் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என அவரது மேய்ப்பர்கள் கருதியிருக்கலாம்.

அப்படியிருந்தும் அவரது உண்மையான முகம் அப்பப்போ வெளிவந்து விடுகிறது.

பொலநறுவவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஐ.தே.கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குத் தாவிய வசந்தா சேனநாயக்காவைச் ‘சுடச் சுட’ மேடையேற்ற முயன்றபோது ஊடகக் கமராக்கள் முகத்துக்குள் இருப்பதையும் உதாசீனம் செய்துவிட்டு “அவனைத் தூக்கிலிடுவேன்’ எனக் கத்தியவர் கோதபாய.

கேகாலையில் நடைபெறவிருந்த கூட்டமொன்றிற்கு மக்களை அழைத்துச் சென்ற ஒரு பஸ் வண்டியில் புத்தி பாதிக்கப்பட்ட (Down syndrome) ஒரு இளம் பெண் ஐந்து தடவைகள் வன்புணர்வு செய்யப்பட்டாள். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவோ அல்லது அவளிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறவோ அச்சம் காரணமாகக் காவற்துறை முனையவில்லை. முறைப்பாடு செய்யக்கூடாது என அவளது குடும்பத்துக்கு அழுத்தம் வேறு கொடுக்கப்படுகிறது. இச் சம்பவத்தைப் பற்றி அறிந்த மூன்று கேகாலை காவற்துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ராஜபக்சவின் கூட்டமொன்றில் கலந்துகொள்ள மறுத்தமைக்காக மாத்தளை மாவட்டத்தில் புத்த பிக்கு ஒருவர் பொதுஜன பெரமுன பிரதேச சபைத் தலைவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் 25% வாக்குகள் ராஜபக்சவுக்கே போடப்பட வேண்டுமென நாவலப்பிட்டி பொதுஜன பெரமுன நாட்டாமை மஹிந்தானந்த அளுத்கமகே முஸ்லிம் சமூகத்துக்கு விடும் எச்சரிக்கை காணொளியாக வலம் வருகிறது. “உங்களுக்காக நாங்கள் போராட வேண்டுமானால் எங்களுக்கு முஸ்லிம்களின் 25% வாக்குகள் வேண்டும்” என அவர் முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு எச்சரிப்பதாக அதில் காட்டப்படுகிறது.

வடக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீர் வீதித் தடைகள் மூலமும், இராணுவ மறிப்புகள் மூலமும், வாகாளர்களை எச்சரிப்பது சமீபகால சம்பவங்கள்.

வெள்ளை வான் காலத்து சூழ்நிலை மீளவும் ஒப்புவிக்கப்படுவது தெரிகிறது. கோதபாய வெற்றி பெற்றால் நாடு முழுவதும், சகல இனங்களும், ஒரு புதிய இருளான காலத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்பதற்கு மேற்கூறிய சில உதாரணங்களே போதும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் மூன்று விடயங்கள் உறுதிப்படுத்தப்படும். குடும்ப நிர்வாகம், ஊழல், மிருகத்தனம்.

உலகம் ஜனநாயகத்தை நோக்கி நகரும் வேளையில் கணிசமான எண்ணிக்கையான மக்கள் காடைத் தனத்தால் ஆளப்படுவேண்டுமென்று விரும்பும் நாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெருந்தெருக்களுக்காகவும், துறைமுகங்களுக்காகவும், விமான நிலையங்களுக்காகவும், தாமரைக் கோபுரங்களுக்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை அடகுவைக்க விரும்பும் மக்கள் இந்நாட்டில் மட்டும்தான் வாழமுடியும். நேற்றய வெள்ளை வான் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் தான் இன்றய நாளின் அறிவுசார் கோட்பாட்டாளர்கள்.

இது தேர்தலுக்கு முன்பான கடைசிப் பதிப்பு. வருகிற ஞாயிறு இந் நாட்டின் 7வது நிறைவேற்று ஜனாதிபதி தெரிசெய்யப்பட்டிருப்பார். நவம்பர் 16 ம் திகதி எம் வாசகர்கள் சரியான வகையில் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆசியாவின் மூத்த ஜனநாயகத்தை ஒளிரச் செய்யுங்கள். உண்மையைச் சொல்ல முயற்சிக்கும் இப் பத்திரிகையின் ஊடகவியலாளர்களினதும், நாடெங்கிலுமுள்ள இதர ஊடகவியலாளர்களினதும் உயிர்கள் அச்சுறுத்தப்படாது இருப்பதற்காகவாவது சிந்தித்து வாக்களியுங்கள்.

நவம்பர் 16 தேர்தலில் 35 வேட்பாளர்கள் நிற்கின்றார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் இரண்டு பேர்களுக்கிடையேயான தேர்வு பற்றியது மட்டுமே.

அவர்களில் ஒருவர் எங்களுக்குத் தீராத அச்சத்தைத் தருபவர்.

https://marumoli.com/நாங்கள்-கோதபாயவிற்கு-அஞ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சமூக ஊடகங்களில் கோத்தவுக்கு எதிரான கனோளிகளும் இந்த ஒப்சேர்வர் அறிக்கையும் இனி ஒரு அதிசயம் நடந்தால் தான் கோத்தா வெல்ல முடியும் எனும் நிலைக்கு கொண்டு போயுள்ளது .

Link to comment
Share on other sites

37 minutes ago, பெருமாள் said:

இன்றைய சமூக ஊடகங்களில் கோத்தவுக்கு எதிரான கனோளிகளும் இந்த ஒப்சேர்வர் அறிக்கையும் இனி ஒரு அதிசயம் நடந்தால் தான் கோத்தா வெல்ல முடியும் எனும் நிலைக்கு கொண்டு போயுள்ளது .

சமூக ஊடகங்களை பார்க்காத, பெருமளவு பயன்படுத்தாத பாமர சிங்கள மக்கள தான் மகிந்த அணியின் ஆதரவு தளம். இவர்கள் இவற்றை கணக்கெடுக்காது மகிந்தவிற்கே வாக்களிப்பர்.

இம் முறை வடக்கு மட்டுமே சஜித்துக்கு கை கொடுக்க முயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

சமூக ஊடகங்களை பார்க்காத, பெருமளவு பயன்படுத்தாத பாமர சிங்கள மக்கள தான் மகிந்த அணியின் ஆதரவு தளம். இவர்கள் இவற்றை கணக்கெடுக்காது மகிந்தவிற்கே வாக்களிப்பர்.

இம் முறை வடக்கு மட்டுமே சஜித்துக்கு கை கொடுக்க முயலும்.

அந்த பாமர கூட்டத்தை யாருமே  எக்காலமும் மாற்றியமைக்க முடியாது  ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவுத்தளம் இருக்கும் உதாரணம் mgr தமிழ்நாடு இப்பகூட அசைக்க முடியாத ஆதரவு தளம் ஆனாபாருங்க நாலு எழுத்து படிச்ச்சிட்டம்  நாங்கள் அறிவாளிகள் எனும் கூட்டம் இருக்கே அதுகள் இந்த ஒப்செர்வரை பார்த்து பிரளுங்கள் எங்கள் இனத்திலும் அதேதான் .

Link to comment
Share on other sites

On 11/12/2019 at 11:33 PM, பெருமாள் said:

அந்த பாமர கூட்டத்தை யாருமே  எக்காலமும் மாற்றியமைக்க முடியாது  ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவுத்தளம் இருக்கும் உதாரணம் mgr தமிழ்நாடு இப்பகூட அசைக்க முடியாத ஆதரவு தளம் ஆனாபாருங்க நாலு எழுத்து படிச்ச்சிட்டம்  நாங்கள் அறிவாளிகள் எனும் கூட்டம் இருக்கே அதுகள் இந்த ஒப்செர்வரை பார்த்து பிரளுங்கள் எங்கள் இனத்திலும் அதேதான் .

பாமர மக்கள் என்றுமே பாமர மக்கள்தான். அவர்கள் மாறுவதும் இல்லை எதையும் மாற்றுவதுமில்லை. சிறீலங்காவைப் பொறுத்தமட்டில் பிக்குகள் எங்கு நிற்கிறார்களோ அவர்கள் பயன்படுத்தும் பாமர மக்களும் அங்குதான் நிற்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சினிமா உலகம் எங்கு நிற்கிறதோ அங்குதான் பாமர மக்களும் நிற்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2019 at 9:35 PM, nunavilan said:

 

 

இப்படியான காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சகலருக்கும் கிடைக்க ஆங்கில புலமைசாலிகள் முன்வர வேண்டும்.

இணைப்புக்கு நன்றி நுணா.பச்சை முடிந்தது.

Link to comment
Share on other sites

இன்றைய அதிக இளையவர் கைகளிலும் பல பாமர மக்களின் கைகளிலும் செல்லிடை தொலைபேசி / கணனி உள்ளது.

அதனால் தான் உலகில், கட்சிகள்  உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக, பொய்பிரச்சாரங்கள் மக்களால் மக்களுக்குள் பரப்புரை செய்யப்படுகின்றது.  

கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலில் பல பொட்களை உருசியாவின் பூட்டின் உருவாக்கி அமெரிக்க தலைவரை மட்டுமல்லாது உலக தலைவர்களையே மாற்றி வருகிறார். 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இன்றைய அதிக இளையவர் கைகளிலும் பல பாமர மக்களின் கைகளிலும் செல்லிடை தொலைபேசி / கணனி உள்ளது.

அதனால் தான் உலகில், கட்சிகள்  உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக, பொய்பிரச்சாரங்கள் மக்களால் மக்களுக்குள் பரப்புரை செய்யப்படுகின்றது.  

இலங்கையில் இன்னும் குடிசை வீடுகள் பல உள்ளன. இலங்கையை உலகத்துடன் ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

14 minutes ago, Lara said:

இலங்கையில் இன்னும் குடிசை வீடுகள் பல உள்ளன. இலங்கையை உலகத்துடன் ஒப்பிட முடியாது

உலகத்தின்  பல  குடிசை வீடுகளிலும் இன்று செல்லிடை தொலைபேசி உள்ளது. நிச்சயம் ஒப்பிடலாம்.

Image result for cell phone in rural areas

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

உலகத்தின்  பல  குடிசை வீடுகளிலும் இன்று செல்லிடை தொலைபேசி உள்ளது. நிச்சயம் ஒப்பிடலாம்.

Image result for cell phone in rural areas

இலங்கையில் பல வீடுகளில் மின்சார வசதி கூட இல்லை. A/L, O/L க்கு கூட விளக்கு வெளிச்சத்தில் படித்து பரீட்சை எழுதுபவர்கள் உள்ளார்கள்.

பல மக்களிடம் சிறிய வீடுகள் இருந்தாலும் அவர்களிடம் இணைய வசதிகள் இல்லை.

நீண்ட காலமாக இலங்கையுடன் தொடர்பிலில்லாத உங்களுக்கு இலங்கை நிலை தெரியப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.