Jump to content

இரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு தலைவர் பெறவில்லை என்று சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார்.

“கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோட்டாபயவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, அவரது சட்டத்தரணி பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்திய மறுநாள், தேர்தல்கள் ஆணையாளரே கைவிரித்துள்ளார்.

இதனால், அன்றைய தினம் அலி சப்ரி கூறியவை பொய்யானவை என்றார் பெர்னாண்டோ.

“ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக எந்தவொரு ஆவணமும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை” என்று பெர்னாண்டோ மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும், ஒரு அமெரிக்க குடிமகனை இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றலாமா அல்லது வரவிருக்கும் தேர்தலில் இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் பெர்னாண்டோ கூறினார்.

http://www.pagetamil.com/86682/

Link to comment
Share on other sites

தேர்தலில் கோத்தா வென்றால், உச்ச நீதிமன்றம் வரை சஜித் தரப்போ இல்லை இன்னொருவரோ வழக்கு தொடுப்பர். 

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

“கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அதனால சஜித்துக்கு வாக்களித்து தமிழினம் ஏமாறனும் என்டு நினைக்கிற ஆட்கள் கோத்தபாய பூச்சாண்டி காட்டி செய்ற வாதம் இனி எடுபடாது.

எனவே பயந்தவர்களும் இனி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம். 

Link to comment
Share on other sites

24 minutes ago, Rajesh said:

அதனால சஜித்துக்கு வாக்களித்து தமிழினம் ஏமாறனும் என்டு நினைக்கிற ஆட்கள் கோத்தபாய பூச்சாண்டி காட்டி செய்ற வாதம் இனி எடுபடாது.

எனவே பயந்தவர்களும் இனி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம். 

அமெரிக்க சட்டப்படி, கோத்தபாயவின் பகிரங்கப்படுத்தப்பட்ட Certificate of Loss of Nationality உண்மையானதும் இறுதியானதுமான ஆவணம். 

தேர்தல்ஆணைக்குழு இந்த ஆவணத்தை கோரவும் இல்லை, இது தமக்கு தேவையும் இல்லை என தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் BBC க்கு தெரிவித்துள்ளார்.

ஆகவே, கோத்தபாயவின் ஜனாதிபதி தெரிவை அவரது இரத்து செய்யப்பட்ட அமெரிக்க குடியுரிமை எவ்விதத்திலும் பாதிக்காது. 

ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய வென்றால் என்ன நடக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்?

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

தமிழர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய வென்றால் என்ன நடக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்?

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கம் எண்டாலே பொதுவாக குழப்படிகளும் , பிரச்சினைகளும் , தர்க்கங்களை நிறைந்த இடம். அத்துடன் உதவிக்கு பதவி ஆசை பிடித்து திரியும் அனந்தி. இவர்கள் யாருமே எமக்கு தீர்வை தரப்போவதில்லை.

இருந்தாலும் இருக்கிற இரண்டு பேய்களில் , நல்ல பேய் ஒன்றை தெரிவு செய்வோம் நாடடை ஆள்வதுக்கு. நிச்சயமாக தமிழன் வரப்போவதில்லை. ஒன்று சஜித் அல்லது கோத்தா. 

கோத்தாவின் குடியுரிமை பற்றி எமக்கு சரியாக தெரியாது. எனவே இது தேர்தல்முடிந்த பின்னர் சடட பிரச்சினையாக மாறும். அதுவரைக்கும் எதுவும் கூற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Jude said:

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

பிரபாகரனின் தாயாரை பராமரித்தற்காக காணாமல் போகாதவர் தேர்தலில் நின்றதற்காக போவாரா?! 

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀

2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே?

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது. 

ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

Link to comment
Share on other sites

21 minutes ago, Rajesh said:

ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

அந்த தமிழ் வேட்பாளர், தமிழரையும் தன்னையும் காணாமல் போகச் செய்யப் போபவரை அல்லவா ஜனாதிபதி ஆக்க போகிறார்?

இதனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் தான் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Jude said:

அந்த தமிழ் வேட்பாளர், தமிழரையும் தன்னையும் காணாமல் போகச் செய்யப் போபவரை அல்லவா ஜனாதிபதி ஆக்க போகிறார்?

இதனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் தான் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள்.

நல்ல கற்பனை!

ஆனால் உண்மை, ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

Link to comment
Share on other sites

37 minutes ago, Lara said:

சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀

2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே?

2005 ல் தேர்தலை பகிஷ்கரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம் - முள்ளிவாய்க்கால் கண்டோம்.

2010 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம். சிவாஜிலிங்கம் இன்னமும் இருக்கிறார். இன்னும் சில தமிழரும் தப்பி பிழைத்து இருக்கிறார்கள்.

2019 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து கோத்தபாயாவை வெற்றி பெற வைத்து பார்க்கலாம் என்கிறீர்கள். செய்தால் போகிறது - ஈழத்தமிழரை எவருக்கும் வேண்டாம் என்றாகி விட்டது தானே?

5 minutes ago, Rajesh said:

நல்ல கற்பனை!

ஆனால் உண்மை, ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

போர்க்குற்றங்களை நல்ல கற்பனை என்கிறீர்களா? கோத்தபாயவும் அப்படித்தான் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

1 minute ago, Jude said:

2005 ல் தேர்தலை பகிஷ்கரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம் - முள்ளிவாய்க்கால் கண்டோம்.

2010 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம். சிவாஜிலிங்கம் இன்னமும் இருக்கிறார். இன்னும் சில தமிழரும் தப்பி பிழைத்து இருக்கிறார்கள்.

2019 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து கோத்தபாயாவை வெற்றி பெற வைத்து பார்க்கலாம் என்கிறீர்கள். செய்தால் போகிறது - ஈழத்தமிழரை எவருக்கும் வேண்டாம் என்றாகி விட்டது தானே?

போர்க்குற்றங்களை நல்ல கற்பனை என்கிறீர்களா? கோத்தபாயவும் அப்படித்தான் சொல்கிறார்.

உங்கடை கற்பனைகளும் கோத்தாட கற்பனைகளும் ஒரே லைன்ல தான் இருக்கு!

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

பிரபாகரனின் தாயாரை பராமரித்தற்காக காணாமல் போகாதவர் தேர்தலில் நின்றதற்காக போவாரா?! 

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்கிய பிறகு போர்க்குற்றங்களை பற்றி பேசினால் இவர் எங்கே இருப்பார் என்று இருந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோத்தபாய இன்றுவரை காப்பாற்றப்பட்டது போலவே என்றும் காப்பாற்றபடோணும் என்டால் ஒரேவழி ஐதே.க. ஆட்சி தான். அதான் பலர் சஜித்துக்கு வாக்களிக்கோணும் என்டு ஒற்றைக்காலில நீக்கீனம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.