Jump to content

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால்,  வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியற் தீர்வினைத் தருவேன் என்று கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? இல்லை, அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்றபோது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது, அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/அதிகாரப்-பகிர்வு-வேண்டும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-20190822170034.jpg

 

roflphotos-dot-com-photo-comments-20190815105818.jpg

Link to comment
Share on other sites

42 minutes ago, தமிழ் சிறி said:

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால்,  வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

Image may contain: 1 person, text

Link to comment
Share on other sites

50 minutes ago, Rajesh said:

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் கோத்தபாய ஆட்சி வந்தவுடன் சிவாஜிலிங்கம் காணாமல் போய்விடுவார். 

 சிவாஜிலிங்கம் காணாமல் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஐயா அதிகாரப்பகிர்வுக்கு வாக்களித்து களைத்துவிட்டொம். இனி மக்கள் நிம்மதியாக படுத்து உறங்க எதாவது செய்யுங்கள். எங்களுக்கு அதிகாரம் கிடைக்கமுதல் சோனவன் வன்னியயும் , கிழக்கையும் கொண்டுபோய் விடுவான். பிச்சை வேணாம் நாயை பிடி எண்ட நிலைமைதான் இங்குள்ள தமிழர்களுக்கு. 

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் கோத்தபாய ஆட்சி வந்தவுடன் சிவாஜிலிங்கம் காணாமல் போய்விடுவார். 

 சிவாஜிலிங்கம் காணாமல் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்.

இப்பிடியான பூச்சாண்டிகளை சிறுபிள்ளைத்தனமான மனநிலை உடையவர்கள் நம்பலாம்!

Link to comment
Share on other sites

"ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது." 

 

சுத்த பொய். அதியுச்ச அதிகாரப்பகிர்வாம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 ஆண்டுகளாக மைத்திரிக்கு நல்லாட்சி பத்திரம் வழங்கியும் ரணிலின் ஆட்சிக்கு நீதிமன்றப் படி ஏறியும் சம் சும் மாவை கும்பல் பெற்றுத் தந்த அதிஉச்ச அதிகாரம் என்ன..??!

விகாரை அமைப்புக்களும்.. புதிய வடிவில் காணி அபகரிப்பும்.. காணாமல் போன உறவுகளின் கோரிக்கைகள் மழுங்கடிப்பும்.. அரசியல் கைதிகள் என்போரே இல்லை என்ற அறிவிப்பும்.. தான்.. பெற்றுத்தரப்பட்ட அதிஉச்ச உரிமைகள்.

அதுபோக.. ஒற்றையாட்சி.. ஒருமித்த நாட்டுக்கு விளக்கம் கொடுத்தே 5 வருடம் போய்விட்டது. மேலும் 100 நாளைக்குள் ஜனாதிபதி பதவியையே இல்லாமல் செய்வேன் என்று வந்த மைத்திரி.. ஜனாதிபதி பதவியை இப்போ பத்திரமாகக் காப்பாற்றி.. அடுத்த சிங்களக் கொடுங்கோலர்களின் கையில் தாரைவார்க்க தயாராகி விட்டார்.

போர்க்குற்றவாளிகள் எல்லோரும்.. மறப்போம் மன்னிப்போமுக்குள் அடக்கப்பட்டு விட்டார்கள். சர்வதேச விசாரணை உள்ளூர் விசாரணையாகி.. இப்ப அது இல்லாத விசாரணை ஆகிவிட்டது. 

இவை தான் கூத்தமைப்பு செய்த சாதனைகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.