Jump to content

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்

காரை துர்க்கா   / 2019 நவம்பர் 12

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும்.  

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும்.  

1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்டும் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவம் புலிகள் போர் என, 1983ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டு காலம், போரால் அழிந்து, சிதைந்து, நொந்து தமிழினம், அமைதி, சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.  

இதேபோல, நான்காம் கட்ட ஈழப்போராக, 2006இல் தொடங்கி 2009 மே 18 முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் துர்ப்பாக்கிய நிலை வரை, வார்த்தைகளில் வடிக்க முடியாத, மனிதம் முழுமையாக மரணித்த பேரவலத்தைக் கண்டு, அதன் பின்னரும் 2015ஆம் ஆண்டு வரை, மூச்சு விடக் கூட மூச்சை அடக்கிய தமிழினம், சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.  

இந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மீது, தமிழ் மக்களது நம்பிக்கைகள் அதிகரித்தமையால் வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், ஒருவித இனம் புரியாத எழுச்சி, தமிழ் மக்களிடையே உணரப்பட்டது.  

அத்துடன், ஏனைய தேர்தல்கள் போலின்றி, 2015 தேர்தலில் தெற்கின் இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தேசிய அரசாங்கம் அமைக்கப் போகின்றன. ஆகவே, இனி இந்நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது என்ற உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது.  

ஆதலால், 2015 ஜனவரி எட்டில் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம், திண்ணமாக இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் கட்டியவைகள் எல்லாமே, வெறும் மணல் கோட்டைகள் என, காலம் உறைக்க உரைத்து விட்டு, அமைதியாகக் கடந்து செல்கின்றது.  

பொதுவாக, இந்நாட்டில் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்களில், பெரும்பான்மை மக்கள் ஒரு கோணத்திலும் சிறுபான்மை மக்கள் பிறிதொரு கோணத்திலும் வாக்களித்து வந்துள்ளார்கள்; வருகின்றார்கள்.  

சம்பள அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, உரத்திலிருந்து உப்பு வரை விலைக் குறைப்பு, தரமான சுகாதார சேவைகள், உயர்வான கல்விச் சேவைகள் எனப் பெரும்பான்மை மக்களின் தேவைப் பட்டியல் தொடர்கின்றது.  பெரும்பான்மை மக்களுக்கு உள்ள அதே அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, நிலஅபகரிப்பும் காணிகள் விடுவிப்பும், கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என முடிவுகள் இன்றி நீட்சி பெறுகின்றன, தமிழ் மக்களின் பிரச்சினைகள்; இவை இனப்பிரச்சினையின் விளைவுகளாகும்.   

ஆகவே, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனப் பெரும்பான்மை மக்கள் எதிர்பார்க்கின்றர். அதேவேளை, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி, தங்களுக்குப்  புதிய வாழ்வையே வழங்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் பாரிய அங்கலாய்ப்புடன் வாக்களித்து வருகின்றார்கள்.  

பிரித்தானியரின் வெளியேற்றத்தோடு, இனப்பிரச்சினை இலங்கையில் உள் நுழைந்தது. ஏனெனில், 1948இல் நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டே விவசாய விரிவாக்கம் எனும் போர்வையில், காணி அபகரிப்புக்கும் குடியேற்றத்துக்கும் அம்பாறையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதன் நீட்சியாக, நாடு 1978ஆம் ஆண்டளவில், இரண்டு இனக் கலவரங்களைக் (1956, 1977) கண்டது.  

இந்நிலையில், 1978ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அன்று, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ், நான்கு தசாப்தங்கள் (41 ஆண்டுகள்) கடந்து, நாடு ஆளப்பட்டு வருகின்றது.  

“ஆணைப் பெண்ணாக்க முடியாது; பெண்னை ஆணாக்க முடியாது; இதனைத் தவிர இது (ஆட்சி முறை), அனைத்தையும் செய்யும்” என, முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறைமையை உருவாக்கியவருமான ஜே. ஆர் ஜெயவர்தன கூறிப் பெருமை கொண்டார்.  

இவ்வாறாக, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பும் ஜனாதிபதி ஆட்சி முறையும் அப்படிப்பட்ட உச்ச அதிகாரங்களை, ஜனாதிபதிக்கு  வழங்கியிருந்தாலும், ஆட்சி புரிந்த எவருமே அதைக் கொண்டு, இனப்பிணக்கைச் சுமூகமாகத் தீர்க்க முயலவில்லை.  

இந்நிலையில், அன்று தொட்டு இன்று வரை, தமிழ் மக்களை வெறும் 12 சதவீதமான சிறுபான்மை மக்களாகவே, பேரினவாதம் பார்த்துப் பழகி விட்டது. மாறாக, வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களை, இன்னமும் பேரினவாதம் பார்க்கவும் இல்லை; பார்க்கப் போதும் இல்லை.  

முன்னைய ஜனாதிபதிகளான ஜே. ஆர் ஜெயவர்தன, சந்திரிகா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சி புரிந்து உள்ளார்கள். ரணசிங்க பிரேமதாஸ ஒரு முறையும் (ஆட்சி முடியும் முன்னர் அமரராகி விட்டார்) இறுதியாகத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன ஒரு தடைவையும் ஆட்சி புரிந்து உள்ளார்கள்.  

இந்நிலையில், 2015 ஜனாதிபதித் தேர்தலில், தான் தோல்வி அடைந்திருந்தால், காணாமல் போயிருப்பேன் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் என, வெற்றி ஈட்டிய பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

அவ்வகையில், ஜனாதிபதி காணாமல் போகாமலும், சிறையில் அடைக்கப்படாமலும் நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியை அடையவும் அலங்கரிக்கவும் சிறுபான்மை இனத்தவர்களே அனுமதியும் அங்கிகாரமும் வழங்கினார்கள்.  

அக்காலப் பகுதியில், எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிணக்குக்குப் பரிகாரம் காணும் பொருட்டு, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சியாக இல்லாது ஆளும் தரப்பின் ஓர் அங்கமாக இருந்து, பெரும் உதவியும் ஒத்தாசையும் புரிந்தார்கள்.  

உண்மையில் அரசியல்த் தீர்வு விடயங்களை யாருமே புறக்கணிக்க முடியாது. இது, இலங்கையின் முதலாவது பிரதமர் தொடக்கம், இன்றைய ஜனாதிபதி வரை அனைவருக்கும் பொருந்தும்.  

ஆனால், உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், ஜனாதிபதி பெரிதாகக் கவனம் காட்டவில்லை. இன்று புதிய அரசமைப்பு கருவில் கலைந்த விடயமாகப் போய் விட்டதாகவே, தமிழ் மக்கள் கருதுகின்றனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் விடயத்தில் ஒன்றும் செய்யவில்லை எனக் கூற முடியாது. ஆனாலும், யானைப் பசியாக உள்ள தமிழ் மக்களது தேவைகளுக்குச் ‘சோளப்பொரி’ போட்டு விட்டே செல்கின்றார்.  

நாட்டின் ஜனாதிபதி என அவருக்கு இருந்த உச்ச அதிகாரங்களைக் கொண்டு, பறிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, முன்னாள் போராளிகள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விவகாரம், என இன்னும் பல விடயங்களில் (சிறப்பக்) கூடுதல் கவனம் செலுத்தி, கருமங்களை முடித்திருக்கலாம்.  

2015 ஜனவரி எட்டில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ் மக்கள் துடிப்புடன் வாக்களித்தமையால், ஜனாதிபதிக்கு மறுவாழ்வு கிடைத்தது. ஆனால், தனக்கு மறுவாழ்வு வழங்கிய தமிழ் மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவிலேனும், புதுவாழ்வு வழங்க ஜனாதிபதி பின்னடித்து விட்டார் அல்லது முன்வரவில்லை என்றே, தமிழ் மக்கள் வருந்துகின்றார்கள்.  

“நானே யுத்தத்தை முடித்து வைத்தேன்” எனக் கூறுவதில், பெருமையும் புகழும் அடைய முற்படுகின்ற எந்தவொரு பெரும்பான்மையைச் சேர்ந்த நபரும், “நானே, தீராத இனப்பிணக்கைத் தீர்த்து வைத்தேன்” எனப் பெருமை அடைய விரும்பவும் இல்லை; முயலவும் இல்லை.  

இதுவே, இலங்கையின் அரசியல் நிலைவரம். என்னதான், தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருந்தாலும் அவை அநியாயமாக மறுக்கப்படுகின்றன. 2009 வரை காலமும் தமிழ் மக்களது கோரிக்கைகளை, பயங்கரவாதமாகச் சித்திரித்து, சிங்கள மக்களிடம் திரித்துக் கூறினார்கள்.  

இன்று தமிழ் மக்கள், தங்களது நீதியான நியாயமான தேவைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், அவை புலிகளது கோரிக்கைகளைக் காட்டிலும், அதிகமானது எனப் பொய் உரைக்கின்றார்கள்.  

இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாகக் கடமையாற்றிய ஜனாதிபதி, இன்னும் ஐந்து நாள்களில் விடை பெறுகின்றார். “என்னால் விடை அளிக்க முடியும்” என, ஜனாதிபதியால் அன்றைய தேர்தல் பரப்புரைக் காலங்களில் கொட்டப்பட்ட வாக்குறுதிகள், இன்னமும் அவ்வாறாகவே உள்ளன.  

ஆகவே, புதிதாதக இன்னமும் ஐந்து நாள்களில் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா?   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விடை-வழங்கவில்லை-விடை-பெறுகின்றார்/91-240932

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.