Jump to content

பத்தொன்பதாம் திருத்தமும் அதன் சாபக்கேடுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

75521816_2594008284018821_6516696158155309056_n.jpg?_nc_cat=107&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQnpw1kNnnphvtpBH62J4bpAGF31XJKkSSDRMD2Ys60trptQIGIE24wlz2gczZYaLZ0&_nc_ht=scontent-lga3-1.xx&oh=c9e091ff4631a1f1c548ff0f55076d33&oe=5E56D4AE

கடந்த 2015ம் ஆண்டு மஹிந்த என்ட் கோவை சிம்மாசனத்திலிருந்து இறக்கி விட்டு மக்களின் அட்மோஸ்ட் நம்பிக்கையோடு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசின் இன்று வரையான செயற்பாடுகளை சற்று ஊன்றி அவதானித்தால் ஒரு விஷயம் புரிபடும். மாத்திரமன்றி கடந்த நல்லாட்சி முழுவதுமாக ஒரு தலையாட்டி பொம்மையைப் போல மைத்திரியை எப்படி ஆட்டி வைக்க முடிந்தது என்பதனையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். 
 
அதற்கெல்லாம் மாஸ்டர் மைன்டாக இருந்த ரணிலின் அதிகார வெறியும் பதவி மோகமும்தான் இதற்கு இந்த நாடு இது வரை கொடுத்த ரொம்ப ரொம்ப என்பதனை விடவும் அதற்கும் மேலான விலை. 
 
மைத்ரி ஜனாதிபதியானதும் ரணில் ஏற்கெனவே தான் போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் முதலாம் அம்சமான அரசியலமைப்புக்கு பத்தொன்பதாம் திருத்தத்தினை ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மை ஆசிர்வாதத்தோடு கொண்டு வந்தார். பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் அது வரைக்கும் இலங்கை ஜனாதிபதிக்கிருந்து வந்த பெரும்பாலான நிறைவேற்றுத் தத்துவ அதிகாரங்களை குறைத்து அவற்றை பிரதமரென்ற பொறுப்பின் கீழ் சுளுவாக எடுத்துக் கொண்டு ஜனாதிபதியை தன் சொல்லுக்கு ஆடுகின்ற பொம்மையாக்கி செல்லாக் காசாக்கினார். 
 
கடந்த நல்லாட்சியின் போது இலங்கையில் மக்கள் விரோத செயற்பாடுகளின் போதும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த முடிந்த அத்தனை இன வன்முறைகளின் போதும் ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தனிப்பட மைத்ரி முடிவெடுக்க முடியாமலும் பிரச்சினைகளின் போது தற்றுணிபினல் தீர்மானம் எடுக்க முடியாமலும் அவரை ஆக்கி வைத்திருந்தார்கள். மைத்ரியை ஒரு பொம்மையாகவும் கையாலாகத ஜனாதிபதியாகவும் மக்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கின்ற இந்த பிம்பத்தை உருவாக்கியது அவரல்ல மாற்றமாக ரணிலும் இந்த பத்தொன்பதாம் திருத்தமுமே. 
 
ஒரு வேளை பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரப்படாமல் மைத்ரி எவரின் தலையீடு இல்லாத தான் மட்டுமே தீர்மானமெடுக்கின்ற தற்றுணிபுள்ள நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தால் நாட்டிலே நடை பெற்ற பல அனர்த்தங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும். 
 
மைத்ரி நல்ல மனுஷன்தான்…ஆனால் பத்தொன்பதாம் திருத்தம்….அதன் மீத வீறு கொண்டெழுந்த ரணில்…அவரைச் சுற்றி சிங்கியடித்த கூட்டம்….. மூலம் தந்திரமாக அவரது கையைக் கட்டிப்போட்டு சதிராட்டம் ஆடியிருக்கின்றார்கள். பாவம் மைத்ரியார்….கடந்த ஆட்சியின் போது முஸ்லீம்களுக்கெதிராக இடம் பெற்ற திகன, அம்பாறை, ஜிந்தோட்டை, மினுவாங்கொட, மற்றும் குருநாகல மெகா சைஸ் இன வன்முறைகளின் போது பத்தொன்பதாம் திருத்தம் மூலம் பவரை தங்கள் பக்கம் எடுத்துக் கொண்ட ரணில் என்ட் கோ நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் மஹிந்த என்ட் கோவே என்ற பழைய பஞ்சாங்களத்தை கூலாக பாடி விட்டு தமது சயன அறைகளில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 
 
முக்கியமான அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மைத்ரி தனியே எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். இதோ இப்போது மறுபடியும் ஸ்டீரியோ டைப் மெலோ டிராமாவை ரணில் என்ட் கொ சஜீதை வைத்து நிகழ்த்த காத்திருக்கின்ற அபத்தம் இந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஆரம்பமாகியிருக்கின்றது. 
 
ஒரு வேளை சஜீத் வெற்றி பெற்று ஜனாதிபதியானாலும் கூட 2015ம் ஆண்டு மைத்ரியை பேருக்கு ஜனாதிபதியாக்கி பத்தொன்பதாம் திருத்தத்தை கொண்டு வந்து அதன் மூலம் எப்படி செல்லாக் காசாக்கி கதகளி ஆடினார்களோ அதே போலத்தான் இப்போதும். சந்தேகமே தேவையில்லை சஜீதை இன்னொரு மைத்ரியாக்கி என்பதனை விடவும், அதுக்கும் மேலேயாக்கி பிரதமராக வருகின்ற ரணிலும் அல்லது ரணிலுக்கு பதிலாக வருகின்ற பாட்டாளி சம்பிக்கவும் (சஜீத் ஜனாதிபதி எனில் ரணில்தான் பிரதமர் என்பது சர்வ நிச்சயம்) குருஷேத்திரம் ஆடுவார்கள். அப்போது நிறைவேற்றுத்தத்துவங்கள் குறைக்கப்பட்ட சஜீதும் மைத்ரி போல தன்னால் எதுவுமே செய்ய முயடிவில்லையே என்று தலையில் கை வைத்துக் கொண்டு கதறுவார். 
 
இது நடக்கும். 
 
பத்தொன்பதாம் திருத்தம் என்பதே நாட்டுக்கு பெருஞ்சாபக்கேடு. அதுவும் ரணில் மாதிரி ஆட்களிடம் அது அகப்படுகின்ற போது அது சர்வ நாசகாரியாக மாறி விடுகின்றது. பத்தொன்பதாம் திருத்தத்தை ஒரு சில அவசிய திருத்தங்களோடு இடத்தை காலி பண்ண வேண்டிய பெருந்தேவை இலங்கைக்கு இருக்கின்றது. இல்லாவிடில் தெமாடரும் இழுபறிகள்….மல்யுத்தங்கள்…..மக்கள் பலிக்கடாக்கள். 
 
கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-12
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.